என் ஓவியங்களில் பெண்குதிரையாக
வாலைச் சுழற்றிக்கொண்டு
கம்பீரமாக நான் நடந்தேன்
டக் டக்
டக் டக்
Category: மொழிபெயர்ப்புக் கவிதை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
என் காதலியின் கண்கள்
சூரியக் கதிர்களாய் ஒளிர்வதில்லை.
அவளின் இதழ்
பவளத்தின் சிவப்பிறகு ஒப்பில்லை..
பழுப்பு நிறமாயிருக்கும் அவள் மார்பகங்களை
வெண்பனியென்று எப்படிக் கூறுவது?
அருந்ததி சுப்ரமணியம் கவிதைகள்
இலேசாக நான் பாவிக்க முடியும் ஒரு வீடு,
நேற்றைய உரையாடல்கள்
அடைக்காத அறைகள், அவற்றில்
பிளவுகளை நிரப்ப என் தன்மை
உப்பத் தேவையின்றி.
போகிற போக்கில் வரும் கேள்விக்கு ஒரு பதில்
ஒலிப்பெருக்கம்;
விரிந்த வெளியும் ஒளியும் கலந்த உணர்வு.
இரவின் தூரங்களை வெளிச்சப்படுத்தும்
இரயிலின் மாபெரும் மஞ்சள் கண்கள்.
குறு முள்எலி,கம்பளிப் பூச்சி,குழி எலி,
சிறு பெரணிகள் எல்லாம் சரிதான்.
ஆனால் எனக்கு வேண்டியது
பூ மரங்கள், நீளும் படர் கொடிகள்,
பரவும் ஒட்டுண்ணிகள்.
சச்சிதானந்தனின் இரு கவிதைகள்
நீ மிகவும் புத்திசாலியானால்
அரைத்தூக்கத்தில் செல்.
எது வேகமாய் இருக்கிறதோ அது வேகமாய்க் களைப்புறும்:
மெல்லச் செல், மெல்ல நிச்சலனம் போல்.
டென்னிசனின் லோடஸ் ஈடர்ஸ்
மனிதன் மட்டும் உழைத்தே தீர வேண்டிய ஒரே உயிரினமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுப்புகிறார்கள். இயற்கையின் பிற உயிரினங்கள் அனைத்தும் ஓய்வெடுக்கவும் சும்மா இருக்கவும் முடிகிறது; ஆனால் மனிதன் மட்டும் எப்போதும் ஒரு விசனத்தில் இருந்து மற்றொன்றுக்கு சுண்டி எறியப் படுவது ஏன் என்று வாதிடுகிறார்கள். அமைதியும் சாந்தமுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியவை என்று மனிதனின் அந்தராத்மா கூறினாலும், மனிதன் வாழ்நாள் முழுவதும் உழைக்கவும் அலையவும் , விதிக்கப் பட்டுள்ளான்.
சிறுபான்மையினரின் பாடல் – நிஸ்ஸிம் இசக்கியல்
என்னறையில்
உருவில்லா விருந்தினருடன்
உரையாடுகிறேன்.
அவர்கள்
விவாதம் எதுவும் செய்வதில்லை.
நான் களைத்துப் போகும்வரை
காத்திருக்கின்றனர்.
பின்பு
உணர்வெதுவும் காட்டா
வென்றது புழு
கடவுளுக்கும் புழுவுக்கும் இடையிலான போரில்
புழு கடவுளை கொன்றுவிட்டது.
உன்னதமான மனிதன்
கடவுளாகவே உணர்ந்து கொள்கிறான்.
தேள் கொட்டிய இரவில் – நிஸ்ஸிம் எஸிகியொல்
‘உன் கடந்த பிறவிப் பாவங்கள்
இன்றிரவு தொலைந்து போய்விடும்’ என்றனர்.
‘இன்று நீ படும் துன்பம்
அடுத்த பிறவியின் துயரை குறைக்கும்’ என்றனர்.
‘நீ அனுபவிக்கும் வலி
இந்த மாய உலகில்
உன் தீய செயல்களுக்கும்
நற் செயல்களுக்கும் இடையேயான
சமன்பாட்டை குறைக்கலாம்.’ என்றனர்.
ஆர்.எஸ். தாமஸ் கவிதைகள்
அவர்களது கைகளை
என் கைகளில் எடுத்துக்கொள்கிறேன்
அழுத்தமான கைகள்
அன்பில்லை அவற்றில்,
வலிய வரவழைக்கப்பட்ட
ஒரு மென்மையைத் தவிர.
கிராமத்தின் பாழுங்குடிசைகளிலிருந்து
வந்து நிற்கும் அற்பமான ஆண்கள்.
ஸியோ ஜங்-ஜூ கொரிய மொழிக் கவிதைகள்
ஒரு வேளை
செவ்வந்தி மலரொன்றைப் பூத்து குலுங்கச் செய்யவே
ஆந்தை ஒன்று வசந்தகாலம் தொட்டு
அலறிக் கொண்டிருந்திருக்க வேண்டும்
ஒருவேளை
செவ்வந்தி மலரொன்றை பூத்துக் குலுங்கச் செய்யவே
கருத்த மேகங்களில் இடி கதறிக் கொண்டிருக்க வேண்டும்
புது ஜோடிச் செருப்புகளை அடக்குவது எப்படி? – கோபால் ஹொன்னல்கரே கவிதை
முதலில் அவற்றை சிறிய தொலைவு நடந்து வர மட்டுமே பயன்படுத்துங்கள்
பிறகு மெதுமெதுவாகத் தூரத்தை அதிகரியுங்கள்
..
இறுக்கமான அவற்றின் வார்களைத் தளர்த்துங்கள்
தாங்கள் வளர்கிறோம் என
அவை குதூகலிக்கட்டும்
ஒஹையோ நெடுஞ்சாலையில் அபோலோ
கடல் காக்கும் ரகசியங்கள் முத்தும் பவழமும் அல்ல, அது கொண்ட உயிர்களும், சிலப்பதிகாரம், டெம்பெஸ்ட், மோபி டிக் என்று நம் இலக்கியங்கள் வரையும் பேரிழப்புகள், உடைந்த கனவுகளின் சித்திரங்களும்தான். கடல் ரகசியங்களின் நினைவுகளைக் கண்ணுறும் வகையில் புலப்படுத்தும் தன்மை கொண்ட விடியல் சாதாரண ஒன்றல்ல, அது சாலையின் (freeway) குறுக்கே விழுந்து கிடக்கிறது என்றால் அதன் பொருளும் அவ்வளவு மகிழ்ச்சிக்கு உரியது அல்ல- கடல் கொண்ட கப்பல்களின் கூடுகள் போல் துருவேறிய, வெறிச்சோடிய உலகில் ஒளி பாய்ச்சுகிறது இந்த விடியல்.
ஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன்
மூன்று சிறிய பறவைகள் ஒரு வரிசையில்
கவனிப்பிலாழ்ந்தபடி அமர்ந்திருந்தன.
ஒரு மனிதன் அந்த இடத்திற்கருகே கடந்து சென்றான்
மூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்
ஆறு கற்கள் : Ao நாகர்கள் வட கிழக்கு இந்தியா நாகலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட பெரும்பான்மை நாகர் இனப் பிரிவு. Ao நாகா தொன்மத்தின் படி அவர்களின் மூதாதையர் (ஆண் -3, பெண் -3) ஆறு கற்களில் இருந்து உதித்தவர்கள். அவர்கள் இயற்கையை வழிபட்டனர்.
நான் விரும்புவது
மழையும், வெயிலும், அவற்றின் பற்றாமையும்
ஓர் அத்திப்பழத்திலோ அல்லது ஆப்பிளிலோ
உறைவது போல்
என் வாழ்க்கை என்னுள் வசிக்கவேண்டுமென
நான் விரும்புகிறேன்
சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள்
பல்லிய இசைக்குழு.
இடியுடன் கூடிய பெருமழை
அவர்கள் வாக்னரின் வரவேற்பிசையை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் மரத்தடி இருக்கைகளை விட்டு எழுந்து
திக்குதல் – கே.சட்சிதானந்தன்
திக்குதல் ஓர் ஊனமல்ல.
அது ஒரு பேச்சு முறை.
திக்குதல் என்பது சொல்லுக்கும் அதன் பொருளுக்கும்
இடையே வீழும் மௌனம்
ராம்கரூவின் வாரிசுகள்
துன்புறுவது மடமை என்று
களித்திருக்கும் மக்களே!
துக்கித்திருப்பது
ராம்கரூசியர்களின் உரிமை.
அதை மறுக்காதீர்.
மகத்தான மங்கை
நான் அப்படியொன்றும் அழகியல்ல
நாகரிக யுவதிகளைப் போல
அளவெடுத்த அங்கங்கள் வாய்த்தவளல்ல
எனும் மெய்யுரைத்தால்,
நான் பொய்யுரைக்கிறேன் என்றே புறந்தள்ளுகிறார்.
பாப்லோ நெருடா ஸ்பானிஷ் கவிதைகள்
1964_ஆம் வருடமே நோபல் பரிசுக்காக இவர் பெயர் பரிசீலிக்கப் பட்டு, பல எதிர்ப்புகளின் காரணமாக வேறொருவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 1971_ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டதாயினும், அதுவும் அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. தேர்வுக் குழுவில் இருந்த பலர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்கினை பாப்லோ நெருடா புகழ்ந்ததை மறக்கவில்லை. ஆனால் நெருடாவின் ஸ்வீடன் மொழிபெயர்ப்பாளரான ஆர்டுர் லன்ட்க்விஸ்ட் என்பவரின் முயற்சியால் நோபல் பரிசு கிட்டியது. நோபல் பரிசுக்கான ஏற்புரையில் ‘ஒரு கவிஞன் ஒரே நேரத்தில் ஒற்றுமைக்கும் தனிமைக்கும் உந்து சக்தியாகத் திகழ்கிறான்’ எனக் குறிப்பிட்டார் பாப்லோ நெருடா.
ஷாங்க்யா கோஷ் கவிதைகள்
தலையில்
மின்மினிப்பூச்சிகள் சூடி.
உயரே
ஓரியனின் வாள்
போர் முடிந்து
காலம்
அமைதிக்கு திரும்பிவிட்டது
சக்தி சட்டோபாத்யாய் கவிதைகள்
தன் முப்பதாண்டு படைப்பு வாழ்க்கையில் இவர் எழுதிக் குவித்த கவிதைகள் ஏராளம். கணக்கு வழக்கில்லை. 45 தொகுப்புகள், சுமார் 2500 கவிதைகள் என்று ஒரு கணிப்பு.(poemhunter.com). 10000 கவிதைகளுக்கு குறையாமல் தேறும் என்று இன்னொரு கணிப்பு….இவரோடு 38 வருடங்களாகப் பழகிய சமீர் சென்குப்தா( Samir Sengupta) தன் நினைவோடையில், சக்தி சட்டோபாத்யாய் தான் எழுதியவை எவ்வளவு, என்னென்ன என்று கூட கவனிக்காதவரென்றும், இவரைப் போல் தன் படைப்புகளின் மேல் பற்றற்றவராக யாரும் இருக்க முடியாதென்றும் பதிவு செய்கிறார்.
ஜீபனானந்தா தாஸ் கவிதைகள்
ஒரு பனிக்கால அந்தியில்,
பரிச்சயமானவரின் மரணப்படுக்கைக்கு அருகே
குளிர்ந்த கமலாப்பழத்தின் மிருதுவான சுளையாக
வருவேனா.
கிருஷ்ணா பாஸு கவிதைகள்
அம்மா, நீங்களாவது என்னிடம் சொல்லுங்கள்
என்னுடைய வீடு என்பது எங்கே?
பெண்கள் தங்களுடையது என்று ஒரு வீட்டை
எங்கேனும் கோர முடியுமா?
கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை
ஹெரால்டு பிண்ட்டர் தனது நோபெல் உரையை இப்படித் தொடங்குகிறார்: ”எது நிஜம் எது நிஜமில்லை என்பவற்றுக்கு இடையில் உறுதியான வித்தியாசங்கள் இல்லை. அதேபோல் எது உண்மை எது பொய்மை என்பவற்றுக்கு இடையேயும் இல்லை. உண்மை, பொய்மை என்ற இரண்டில் ஒன்றாகத்தான், ஒன்று இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது உண்மை பொய்மை என்ற இரண்டாகவும் இருக்கலாம்.”
ஹையரில் அன்வார் கவிதைகள்
இதுதான் வாழ்வு ஆனால்
அது
தோல்வியை தள்ளிப்போடுவது
இளமையினுடைய கட்டுப்பாடற்ற காதலிலிருந்து
உருவாகித் தழைத்த ”அந்நியமாதல்”
மனக்கோட்டை – லூயீஸ் க்ளிக் கவிதை
அதுவே ஓர் துவக்கம்தான்.
ஒவ்வொரு நாளும் அடக்கத் தலத்தில்,
புதிய விதவைகள் பிறக்கிறார்கள்
புதிய அனாதைகளும். அவர்கள்
கைகள் கட்டி அமர்கிறார்கள்,
இந்தப் புதிய வாழ்வைப் பற்றி யோசிக்க.
இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு
மற்ற படுக்கைகளில் மூச்சு விடும் அந்த மனிதர்கள்
அரிதாகவே புரிந்து கொள்ள முடியும்.
திரையினூடே இரா வானில்
நிலவு தேய்வதையும் வளர்வதையும் கவனித்தேன்.
ஒரு புனிதப் பணிக்கு நான் பிறப்பெடுத்தேன்:
மகத்தான மர்மங்களுக்கு
சாட்சியாய் இருக்க.
இப்போது நான்
பிறப்பு இறப்பு, இரண்டையும் கண்டிருக்கிறேன்.
இருண்ட இயல்புக்கு
இவை ஆதாரங்கள்
மர்மங்களல்ல என்றறிகிறேன்.
இந்தோநேசியக் கவிஞர்-சபார்டி ஜோகோ தமனோ
பருவகாலங்கள் என்னுடைய கண் இமைகளில்
சாம்பலாகப் படிகின்றன
வானத்தின் குறுக்கே முடிவில்லாத
அலைகளின் தெறிப்பைக் கேட்கிறேன்
இங்குதான் தீராத இச்சையும்
ஒளிவு மறைவற்ற உணர்வுகளும் இருக்கின்றன
நட்சத்திரங்கள் ஓய்ச்சலின்றித் தழைக்கின்றன
கல்யாணி ராஜன் கவிதைகள்
நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுடன் கலந்து
புது சூத்திரங்களைப் படைக்கிறது
அது ஓடியபடி இடையிடையே நிறுத்தங்களை உண்டாக்குகிறது.
அகவயமாக புறவயப் பார்வையைச் சிந்தவைக்கிறது
குறைந்த அளவு மின்தேக்கி மூலம் அதிக அளவு சக்தியை
அது உந்த முயலும்போது
அதன் குறிக்கோள்கள் தடுக்கிவிழத்தான் செய்கின்றன.
ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்
1. அன்றாடப் பணி காரண காரியம் உருப்பெருவதன் வழி ஒரு சாய்சதுரம் அசைவது போல் நிகழ்கிறது, என் அன்றாடப் பணி அற்புதமான ஒரு சூரிய அஸ்மதனதிற்கு எதிரே துப்பறிவாளனைப் போன்ற துணிகரமான பார்வை. இனி நிகழப்போகும், என்னால் காணமுடியாத ஓர் இனிய நாளின்மீது உடனடியாக எழுதப்படும் வேகமாக “ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்”
சுனிதா ஜெயின் -இரு கவிதைகள்
கோடை முடிகையில்
அப்பறவைகள் இணங்கியோ பிரிந்தோ
பறக்கும் வலிமை பெற்ற இளங்குஞ்சுகள் சூழ
பறந்து போயின .
சுனிதா ஜெயின் -கவிதை
நீ பதினேழு வயதினள். மேலும் கன்னிமை இழந்தவள்
அவர்கள் உனக்குப் பயண ஏற்பாடு செய்கிறார்கள்,
வேறு நாட்டிலுள்ள உன் சொந்த ஊருக்கு.
அங்கே உன் உண்மையான ஆரம்பங்களின்
வேர்களை அறிந்து கொள்ளக் கூடும்.
புல்
இன்னொரு அதிர்ஷ்டப் புல்
எப்பொழுதாவது கிடைத்தால்
அதை அப்படியே விட்டுவிடுவேன்.
அல்லது அதை என்
சகோதரனுக்கு கொடுத்து விடுவேன்.
என்னை அடிமை மண்ணில் புதைத்துவிடாதீர்
இனிய நண்பர்களே , செல்வச் செருக்கினர் தனியொரு மனிதனின்
உயிராம் உரிமை பறிக்கா இடத்தில் உறங்குவேன்;
சக மனிதன் அடிமை என்போர் இல்லாத இடத்தில்
அமையும் கல்லறையில் என் ஒய்வு அமைதியாய்க் கழியும்.
விஜயா சிங் கவிதைகள்
எங்கேயோ கை வளையலில்
கணீரென ஒலித்தது
மூக்குத்தியில் மினுங்கியது.
மஞ்சள் வெயில் பட்டு
புத்தரின் காதணியில் ஊஞ்சலாடியது
வார் செருப்பின் மென் நடையில் கரணமடித்தது .
விஜயா சிங் கவிதைகள்- மொழி பெயர்ப்பு
மீட்டெடுக்கும் துணுக்குகளில்
மக்களையோ
சரியாகப் பொருத்திய
முழுமையையோ பற்றவியலாது
எவராலும்
இத்தனை விரிசல்கள் தெரிகையில்
காத்திரமாக மீள்வது ஏதுமிராது
மனித நுட்பம் – மிரொஸ்லாஃப் ஹோலுப்
மனிதனுக்கு இம்மாண்புகளில்லை.
ஆகவே
அறிவியல் ஆய்வு நாடுகிறான் அவன்.
கதையொன்று காட்டுமிதன் கோலத்தை.
செக் நாட்டு கவிதைகள்- ஹோலுப், ப்ரிலட்ஸ்கி
அருமை மூக்கு
கால் கட்டை விரலுக்கிடையில்
திணிக்கப்பட்டிருந்தால்
உன் காலையல்லவா
நீ முகரவேண்டும்!
மொழிபெயர்ப்பு கவிதை – குண்டர் க்ராஸ்
சிறு பிராயத்தில்
திரும்பிய பக்கங்களிலெல்லாம்
‘கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்’
என்ற அறிவிப்பில் உறைந்துபோனேன்
நீலப்பறவை
என் இதயத்துள் இருக்கிறது
வெளியேற விரும்பும் நீலப்பறவையொன்று
ஆனால் அவனால் சமாளிக்க முடியாத அளவுக்கு
கடுமையானவனாக இருக்கிறேன்,
நான் சொல்கிறேன்,
உள்ளேயே கிட, நீ எனக்குக் குழப்பம்
விளைவிக்க விரும்புகிறாயா?
பறக்கும் தட்டுக்கள் – ஸீபால்ட் கவிதைகள்
அது வெல்ஷ் இளவரசனின் ஆவியோ
இட்வால் ஏரியின் அருகில்
தன் சகோதரனால் கொல்லப்பட்ட பிறகு
அந்த ஏரியின் மீது
எந்த பறவையும்
இதுவரை பறக்கவில்லை
திலகம்- கவிதை
அதில் மீதமாக அதிக இனிப்பில்லை
மனிதர்களின் அருகே வசிக்க விரும்புகிறேன்
தன் தவறுகளுக்காகச் சிரிக்கத் தெரிந்த,
யதார்த்தமான, உண்மையான
தன் வெற்றிப் பெருமிதத்தில் மிதக்காதவரிடையே
தன் செயல்களுக்குப் பொறுப்பேற்வரிடையே
வாழ நினைக்கிறேன்
