டென்னிசனின் லோடஸ் ஈடர்ஸ்

மனிதன் மட்டும் உழைத்தே தீர வேண்டிய ஒரே உயிரினமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுப்புகிறார்கள். இயற்கையின் பிற உயிரினங்கள் அனைத்தும் ஓய்வெடுக்கவும் சும்மா இருக்கவும் முடிகிறது; ஆனால் மனிதன் மட்டும் எப்போதும் ஒரு விசனத்தில் இருந்து மற்றொன்றுக்கு சுண்டி எறியப் படுவது ஏன் என்று வாதிடுகிறார்கள். அமைதியும் சாந்தமுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியவை என்று மனிதனின் அந்தராத்மா கூறினாலும், மனிதன் வாழ்நாள் முழுவதும் உழைக்கவும் அலையவும் , விதிக்கப் பட்டுள்ளான்.