ஸார்ஸ் கோவிட்- 2ன் தோற்றம் எவ்விடம்?

கோவிட் போன்ற ஒரு நுண்ணுயிர் கிருமி ஒட்டகங்களைத் தொடர்ந்து தொற்றும்போது தங்கள் மரபணுக்களில் அதற்கேற்ற மாற்றங்களை செய்து கொள்கிறது.

மிளகு

திலீப் ராவ்ஜிக்கு அண்டை அயலில் சிநேகிதர்கள், தூரத்து, பக்கத்து சொந்தக்காரர்கள், ஏன், பழக்கமானவர்கள் என்று பலர் உண்டு. இவர்கள் மதியச் சாப்பாட்டுக்கு உட்காரும் நேரம் அவருக்குத் துல்லியமாகத் தெரியும்.
அதற்கு ஒரு மணி நேரம் முன்பே நலம் விசாரிக்கிற தோரணையில் ராவ்ஜி எப்போதாவது அவர்களின் வீடுகளுக்கு அழைக்காமலேயே போவதுண்டு.

தளும்பல்

அவள் இறந்தபின் உறவினர்கள் விக்னேஸ்வரனிடம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி அறிவுறுத்தினார்கள். அப்படியொரு யோசனை அவருக்குத் தோன்றவே இல்லை. இந்திரவேணி இறந்தபோது, இந்தப் பெண்ணை என் கையில் ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டாயே, என்றுதான் அவர் துக்கப்பட்டார்.

மூன்று கவிதைகள்

அவர்
கடந்து செல்லும் பாதையில்
எட்டுத் திசைகள்
பன்னிரண்டு ராசிகள்
மற்றும் பஞ்ச பூதங்கள்
துவைத்த ஆடைகளாய்
தொங்குகின்றன
கிளைகளில்.

இவர்கள் இல்லையேல் – 3-4

. இத்தகைய பாத்திரங்களை, கடவுள்  கூட, மிகுந்த யோசனைக்குப் பிறகே, தயாரித்துக் கீழே அனுப்பி இருக்கக்கூடும்.  அவனைப் பார்த்தால் நீங்கள் அவனை ‘சித்தம் கலங்கியவன்’ என்று நினைத்துக் கொள்வீர்கள். உண்மையில் நிக்கூ தான் எங்கள் அனைவரின் சித்தத்தையும் கலக்கிக் கொண்டிருந்தான். அவன் அடிக்கடி வீட்டுக்கு வருவான். வீட்டிலுள்ளவர்கள் அவன் பின்னாடியே ‘நிக்கூ, நிக்கூ,’ என்றழைழைத்தவாறே சூழ்ந்து கொள்வார்கள் .வேலை செய்யாமல், அவன் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மாட்டான்.  நான்கு பாத்திரங்களையேனும் கழுவி வைத்துவிட்டுத்தான், என் மாமியார் தருகிற  ரொட்டித் துண்டுகளை காய்கறியுடன் சாப்பிடுவான். வேலை செய்யாமல் சாப்பிடுவதையும், கூலி பெற்றுக் கொள்வதையும் பாவம் என்று சொல்லுவான்.

முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் – பகுதி 2

பாட்டாளி வர்க்கம் மையமாக்கலைத் தோற்கடித்து பொதுமங்களை மீட்கும் என்று மார்க்ஸ் நம்புகிறார். இதைத் திட்டவட்டமாக மறுக்கும் நூலாசிரியர்கள், பொதுச்சொத்து நிர்வாகம் சமூகத் தீர்வு காணலுக்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்கிறார்கள் ஒவ்வொரு மையப்படுத்தப் பட்ட அரசும், கம்யூனிச அமைப்பும் பொதுமக் கொள்கைக்கு எதிரானது என்பது அவர்கள் கருத்து.

நீலம்..நிர்வாணம்…நிதர்சனம்….

பாரிஸின் காலதர்கள், புதுமைக்காக திறந்துவைக்கப்பட்டவையல்ல, புதுமையை வியாபித்தற்பொருட்டு திறக்கப்பட்டவை. பூனை மயிர் உதிர்த்தாற்போன்ற வையலின் அன்ட் தி பிட்சரும் , பியானோ அன்ட் மண்டோலாவும் அபிமானப் பட்டியலை விட்டகல்வதில்லை.

ஆர்.எஸ். தாமஸ் கவிதைகள்

அவர்களது கைகளை
என் கைகளில் எடுத்துக்கொள்கிறேன்
அழுத்தமான கைகள்
அன்பில்லை அவற்றில்,
வலிய வரவழைக்கப்பட்ட
ஒரு மென்மையைத் தவிர.
கிராமத்தின் பாழுங்குடிசைகளிலிருந்து
வந்து நிற்கும் அற்பமான ஆண்கள்.

புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3

This entry is part 3 of 23 in the series புவிச் சூடேற்றம்

நதிகளின் வண்டல்படிவுகள் (sediment deposits) , பயிர்கள் செழிக்க மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அணைகள், நீர்பாசனத்திற்கு உதவினாலும், அதன் மிகப் பெரிய பின்விளைவு வண்டல்படிவுகளில் கை வைப்பதுதான்.

குன்றிமணி – கொல்லும் அழகு

வங்காளத்திற்கான அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேஜர் ராம்ஸே 1881 இல் வெளியிட்ட, அவரது பணிக்கால விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ’’குற்ற விசாரணை தடயங்கள்’’ என்னும் நூலில், அவர் நடத்திய ஒரு விசாரணையில், கால்நடைகளைக் கொன்றதற்கும், ஆறு கொலை வழக்குகளுக்கும் தொடர்புடைய ஒரு கைதி தெரிவித்த சுதாரியைத் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றிய விவரங்களை விளக்கமாக எழுதியிருக்கிறார்.

பெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம்

‘அப்பா டாக்டர். பேரு சடகோபன். வெறும் எம்.பி.பி.எஸ்.தான், ஆனால் நல்ல ப்ராக்டிஸ். அவர்கிட்ட ரெகுலரா வைத்தியம் பண்ணிண்டவா இன்னும்கூட சிலபேர் இருக்கா. க்ளினிக் வெராண்டாவில்தான். நோயாளிகள் இல்லாதபோது இங்க வந்து வாசிச்சிண்டிருப்பார். அவர் போனபிறகு இந்த லைப்ரரிக்கு வாசகர் கிடையாது. எனக்கு வாசிக்கும் பழக்கம் ரொம்ப குறைவு. ஆனா மாசம் ஒரு தடவை தூசிதட்டி சுத்தம் பண்றோம்.’

ஸியோ ஜங்-ஜூ கொரிய மொழிக் கவிதைகள்

ஒரு வேளை
செவ்வந்தி மலரொன்றைப் பூத்து குலுங்கச் செய்யவே
ஆந்தை ஒன்று வசந்தகாலம் தொட்டு
அலறிக் கொண்டிருந்திருக்க வேண்டும்
ஒருவேளை
செவ்வந்தி மலரொன்றை பூத்துக் குலுங்கச் செய்யவே
கருத்த மேகங்களில் இடி கதறிக் கொண்டிருக்க வேண்டும்

வலைப்புறா

தீவிரவாத அச்சுறுத்தும் சக்திகளும், வெள்ளாட்டுக் கூட்டத்தில் கலந்து மறையும் மறி ஆடுகளைப் போல, கண்காணிப்பிலிருந்து தப்பி விடுகிறார்கள். அரசு தனக்கு இதில் அதிக ஈடுபாடுகளில்லை எனக் காட்டப் பார்த்தாலும், அதை நம்ப ஆட்களில்லை.

கோழிக் குஞ்சுகள்

This entry is part 15 of 17 in the series 20xx கதைகள்

தாத்தாவின் கையைப் பிடித்து அழைத்துப் போகிறான். வீட்டிற்குப் பின்னால் காலியாக இருந்த மனை கொல்லையாக மாறியிருந்தது.
“பட்டணத்தில இத்தினி பெரிய நிலம். அதிருஷ்டம் தான்.”
“கோழி வளர்க்கிறோம்” என்று தாத்தாவின் கவனத்தைத் திருப்புகிறான்.

ரசம்

முகத்தில் ஒரு புன்னகை வரவழைத்துக்கொண்டு அரைக் கண்ணை மூடிக்கொண்டு ரசிப்பது போல தூங்க முயற்சி செய்தேன். ஆனால் மூக்கை மூட முடியவில்லை. வடைதான், அதுவும் இங்கே கர்னாடகாவில் அம்போடே என்று வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மெதுவாகவும் இருக்கும் அருமையான வடை செய்வார்கள்.

நோவு

“வாளப் பளம்தான். உனக்குத்தான். சாப்பிடு” என்றார் அதனிடம்.
நாய் தோலியுடன் பழத்தைக் கடித்துச் சாப்பிட்டது. அவரைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டது.