அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

சில மொழிகளின், சில சொற்களுக்குச் சரியான  சொல், பிற மொழிகளில் கிடைப்பதில்லை எனத் தோன்றுகிறது. ‘சைதன்யம்’ என்பதை, ‘கான்சியஸ்னெஸ்’. ‘உணர்வு’ என்றெல்லாம் சொல்கையில், சைதன்யத்தின் முழுப் பொருளும் விளங்குகிறதா என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு நிரடும் கேள்வியே. சைதன்யம். முடிவற்றது, எல்லையில்லாதது, வானைப் போன்றது,

நாஞ்சில் நாடன் கவிதைகள்

பத்தொன்பதாவது பிரபஞ்ச மூத்தமொழிச் சம்மேளனம்
செவ்வாய்க் கோளில் நடத்தத் திட்டம்
அரசியல்வாதிகள் அவரடியார்கள்
தம்மின அறிஞர் துதிப் பேராசிரியர்
கூத்தாட்டு மன்றம் பிரசங்கியர்
பாதுகை சுமக்கும் பாவலர் பங்கேற்பர்
கலந்து கொண்டு கட்டுரை படிப்போர்
ஆய்வுச் சுருக்கம் அறுபத்தேழு சொற்களில்
அனுப்பி வைக்கவும்

கற் கோவில்கள், கொலைக் களங்கள்

மனித மனம் ஆக்கத்தின் உச்சத்தைத் தொட்ட இடம் அங்கோர் வாட் என்றால் அது கீழிறிங்கி தீவினை எனும் அதல பாதாளம் சேர்ந்த இடம் அங்கிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாட்டம்பாங் (Battambang) பகுதியில் ஒரு சிறு மலையில் உள்ள குகை தான் அது. அதன் உள்ளளவு சிறியது தான். ஆனால், அதன் கூரை நம் தலைக்கு ஏறக்குறைய 100 அடி மேலே குடை போல விரிந்திருக்கிறது. குகையின் விதானத்தின் நடுவில் ஒரு பெரும் துவாரம்.

இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது

இந்தியக்கடலில் க்ரீன்ஹவுஸை சுற்றி மட்டுமே நாங்கள் இருபது பண்ணைகள் வைத்திருந்தோம். ஒவ்வொன்றிலும் நாற்பதுக்கும் மேலான மிதவைக் காற்றாலைகள். அங்கிருந்து வரும் தகவல்களை சேகரித்துத்தரும் நிரலியை ஆய்வது மட்டுமே என் வேலை. அலைமின்பெருக்கி அசுர வேகத்தில் சுற்றத் தயாராக இருந்ததை என் திரை ஓரப்பச்சை சக்கரம் காட்டியது. மாலைக்குள் அன்றைய மின்னணு கொள்முதலை மையக்கட்டுப்பாட்டு செயலகம் இருக்கும் முப்பந்தலுக்கு அனுப்ப வேண்டும்

சாம்பல் நிற கூழாங்கல்

மாயா என்ற பெண்ணைச் சுற்றி ஒரு கதை அருமையாக நெய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் அவளின் வட்டத்தில் செயல்படுபவர்கள். இதில் பல ஜோடிகள் வருகிறார்கள், மாயா & ஸ்காட், மாயா &ஜெஃப், மாயா & எரிக், ஜெஃப் & நான்சி, மாயா & யாகோ, யாகோ & டான், டான் & மெரிடித், பெக்& லார்ரி, நேட் & கே, கே & பில், ஜெஃப்பின் பெற்றோர்கள், எரிக்கின் பெற்றோர்கள், கே & மாயாவின் தந்தை. இத்தனை நபர்கள் இடம் பெறும் நாவலில் எந்தப் பாத்திரமும் மற்றவரை நகலெடுத்தது போல் இல்லை என்பதுதான் இதன் வெற்றி.

மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று

ராத்திரி பூரா அவனை என்ன எல்லாம் செய்ய வைச்சேன்னு சொன்னேன்னா, நான் அவனை கோலுக்கு ஆடும் குரங்கு போல் எப்படி எல்லாம் செஞ்சு வச்சிருக்கேன்னு புரியும். நீயும் மிளகுக் கிழவியும் நாசமாகப் போங்க. உன் வீட்டுக்காரனை அதிவிரைவில் ஒண்ணுமில்லாதவனாக்கி கோமணத்தோட அது கூட இல்லாம நாற்சந்தியிலே என் காலடியிலே சுருண்டு கிடக்க வைக்கப் போறேன். பாரு. கூடவே நீயும் வந்து கிட.

எங்கிருந்து வந்தோம்? நாம் யார்? நாம் எங்கு செல்கிறோம்?

This entry is part 6 of 14 in the series குடாகாயம்

2019-க் கனடாவின் தலைநகர் ஆட்டவா-வில்  “இளம் தஹித்தியப் பெண்ணுடன் அவருடைய தொடர்பு” என்று தலைப்பிட்ட ஓவியம்”13-14 வயது தஹித்திய சிறுமியுடன் அவர் தொடர்பு” என்று வெளிப்படையாக மாற்றித் தலைப்பிடப்பட்டது.  தொடர்ந்து அவருடைய ஓவிய மேதைமைக்கு அப்பால், ஒரு காலணியாதிக்க வெள்ளையராக அவருக்கு இருந்த அதிகார நிலையை அவர் தன்னுடைய சுயதேவைகளுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார் என்பதையும் சேர்த்தே சொல்லவேண்டும் என்கிறார்கள். 

அதிரியன் நினைவுகள் – 38

This entry is part 37 of 48 in the series அதிரியன் நினைவுகள்

ஒரு சராசரி மனிதனாக இருந்த காலத்தில்,  சேபைன்ஸ்(Sabines) மலைகளின் அடிவாரத்தில், நீர்க்கரையோரம் பரந்துகிடக்கும் இந்நிலங்களை ஒன்றன் பின்னொன்றாக வாங்கிச் சேர்த்தேன்,  விவசாயி ஒருவன் தளராத பொறுமையுடன் தனது திராட்சைத் தோட்டத்திற்கு வேண்டிய நிலத்தை வாங்கி முடித்ததுபோல; பின்னர், இராச்சிய விவகாரங்கள் தொடர்பான  இரு பயணங்களுக்கிடையில் கொத்தனார்கள்,  கட்டிடக்கலைஞர்கள் ஆகியோர் பிடியில் சிக்கி இச்சிறியகாட்டில் நான் தங்க நேர்ந்தது; ஆசியக் கண்டத்தின் அனைத்துவகையான மூடநம்பிக்கைகளிலும் திளைத்திருந்த ஓர் இளைஞன்  பயபக்தியுடன், மரங்களைக் காப்பாற்றக் கேட்டுக்கொண்டான்.

பிரமோபதேசம்

அம்மாவும் நானும் முதன்முதலில் சந்தித்தபோது எங்களுக்கு பதினாறு வயது. புன்சிரிப்புகளும், எப்போதாவது பேசிய ஒருசில வாக்கியங்களும் சிறுவர்கள் விளையாட்டு. இருபத்திநான்கு வயதில் சம்மதம் கேட்டு அம்மாவுக்கு நான் கடிதம் எழுதியது நான் வயதுக்குவந்த தருணம். வீட்டுக்கு பக்கத்தில் ஒரு முக்கோணப் பூங்கா. கடிதத்தின் பதிலை எதிர்பார்த்து அதைச் சுற்றி நடந்தபோது தீவிர யோசனை. மாணவ வாழ்க்கையில் திருமணம் என்கிற பொறுப்பை என்னால் ஏற்கமுடியுமா? இருவரும் எப்படி எங்கே வாழப்போகிறோம்?” 

நம்பிக்கையா அல்லது ஆறுதலா? – சஸ்கியா ஹாமில்டன் 

லோவல் கடிதங்களின் பதிப்பாசிரியராக இருந்த, மறைந்த அமெரிக்க கவிஞர் சஸ்கியா ஹாமில்டனின் இறுதி தொகுப்பான “அனைத்து ஆன்மாக்கள்” நூலில் துல்லியம், விவரித்தல், நிரந்திரமின்மை என்றே அதே பாடுபொருளை (அல்லது) கவலைகளை கையாண்டிருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஹாமில்டன் தன்னுடைய கடைசி கவிதையில், லோவலின் “நிறைவுரை”  கவிதையை மேற்கோள் காட்டியிருக்கிறார். லோவெலின் கடைசி கவிதை தொகுப்பை போலவே, ஹாமில்டன் இறந்த பின்பே அவருடைய கவிதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

இடம்பெயரும் புள்ளினங்காள்!

புதினத்தின் நாயகன் கென்ஜி, சுமா என்னும் ஊரில் தங்கியிருக்கும்போது கடற்பறவைகள் இரைதேடிக் கிளம்பும் ஒலியைக்கேட்டுத் துயிலெழுவார். இப்பாடலும் புதினமும் சமகாலத்தவை. 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்ட பல இலக்கியங்களில் கென்ஜியின் கதையில் வரும் நிகழ்வுகள் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கின்றன

நவதீப்

“உங்களுக்கு எந்த ஊர் தம்பி?” என்று கேட்டுக் களத்தில் புகுந்தாள் என் அக்கா. அவளுக்குக் கேள்வி கேட்கும் கெட்டப் பழக்கம் உண்டு. “எந்த ஊர்? எந்த ஜாதி? திருமணம் ஆயிற்றா? எத்தனை குழந்தைகள்? உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்?    அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தது வந்தவரை வாட்டுவது அவள் வழக்கம். எல்லோர் வீடுகளுக்கும் சென்று அவர்களின் விவரங்களைச் சேகரித்து அறிவுரை கூறி வருவாள். அப்படிச் செய்யாதே என்று சொன்னால் கேட்கமாட்டாள்.

நா. சந்திரசேகரன் கவிதை

அலைகளின் இடைவெளியில்
விரைந்து வளைபுகும் சிறுநண்டுகள்.
அப்போதுதான் உணர்ந்தேன்
அலை கொணரும் வரிகள்
வேறு வேறென!
ஆமென்று ஆர்ப்பரித்து
ஆடை நனைத்துச் சென்றது ஓரலை

குமார சம்பவம் மஹா காவ்யம் – 5

அவர் முன் ஒரு சமயம் உன்னை அலட்சியப் படுத்தியதாக கேள்வி.  இருந்தும் அவரை விரும்புவதாகச் சொல்கிறாய். எனக்கு சந்தேகம் – அமங்களமான தோற்றம்.  காமனை எரித்தவர் என்பதால் கோபம் அதிகம் உடையவர் என்று தெரிகிறது.  மேலும் அவர் சம்பந்தப் பட்ட சில விஷயங்கள் அமங்களமே.  மிகவும் துச்சமாக நினைக்கும் விஷயங்கள் அவரிடம் உள்ளன. எப்படி நீ அவரை சகிப்பாய்?