முதலியத்தை எதிர்க்கும் பொதுமம்

நீரும் காற்றும் தாராளமாகக் கிடைக்கின்ற வற்றாத வளங்களாக இருப்பதால் அவை பொது நுகர் பொருளாக நீடிக்கின்றன என்று காலங்காலமாக நினைத்திருந்தோம். ஆனால் பிரத்யேகமான கொள்கலனில் இருக்கும்போதுதான் தண்ணீர் தனியார் சொத்தாக முடியும் என்கிறார் ஹியூகோ டே க்ரோட். அதாவது பாட்டிலில் அடைக்கப் பட்ட கனிம நீர் வருகைக்கு நுகர்வோரே காரணம் என்கிறார்.