வட்டமும் மையமும்

அந்தப் பறவை
வட்டமிட்டு
வட்டத்தை முடிப்பதற்குள்
வட்டமும் மையமும்
குவியும் ஒரு புள்ளியாய்
மோனத்தில்
மிக உயரத்தில்
சலனமின்றி
சிறகுகள் விரித்தபடி
பறக்கிறது

மொழி பெயர்ப்புக் கவிதைகள்- கு அழகர்சாமி

தொலைந்த உன் நினைவுகளை
கண்டுபிடித்த இரவு
அவற்றைக் கூட்டிச் சேர்க்கிறது உள்ளே-
வறண்ட குறுங்காட்டின் மீது
வசந்தம் கரவாய்க்
கீழிறங்கியது போல்,

கு. அழகர்சாமி கவிதைகள்

கைகள்
என் முகங் காட்டுவது போல்
கண்ணாடி
என் முகங் காட்டுவதில்லை-
ஏனென்றால்
முகங் காட்ட,
வருடிக் கைகள்
என் முகத்தை ஸ்பரிசிப்பது போல்
கண்ணாடி ஸ்பரிசப்பதில்லை.

இரயில் பயணத்தில்

நான் இறங்கிய இரயிலடியில்
இறங்கியது அதுவும்.
தங்குவதற்கு நான்
நுழைந்த அறைக்குள்
அதுவும் நுழைய
எனக்கு அது
தேவையோ
அல்லது
அதற்கு நான்
தேவையோ என்று
முடிவு செய்ய
முடியாதது போல் தோன்றிற்று.

பாட்ரிசியா  கவாலி கவிதைகள்

இழக்கப்பட்டது திருப்பியளிக்கப்பட்டு விட்டது எனக்கு
தொலைவாயுள்ளது எனக்கருகில் உள்ளது இன்று.
இங்கிருக்கிறாயா நீ, எப்படி இருந்தாலும் நீ,
எனக்கு பொருட்டல்ல இன்று.
இன்று சப்தங்களின் பொங்கும் சுருள்களைத்
தணிவித்துக் கலந்திடும்
இனிமையான கவிகை மாடத்திற்குள்
பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.

கு.அழகர்சாமி கவிதைகள்

அவசரப்படுத்தும் இரவுக்கு
அந்தி வழி விட-
பறவைகள் வீடு திரும்ப
அதைக் கண்டு நான்
வீடு திரும்ப-
எதற்கோ ஓர் இரட்டைவால் குருவி
என்னைக் கூப்பிடுவதாய்த்
திரும்பிப் பார்க்க
திரும்பிய கணத்தில்
மின்னலடித்து
உள்ளுணர்ந்தேன்

கு.அழகர்சாமி கவிதைகள்

சாய்த்துத் தான்
வைக்கப்பட்டிருந்தது அது.
ஆனால் வேறெதுவும்
சாய்த்து வைக்கப்பட்டிருப்பது
போலில்லை அது.
சுட்டு விடுவது போல்
ஓர விழியில் என்னைப் பார்க்கிறது.

காண்பதில்லா குழந்தைகளின் உலகில் காட்சியாகி

குனிந்தவுடன்
தன் தோளின் மீது
கழுத்தைக் கட்டிக் கொண்ட
குழந்தையைத் தூக்கி
குழந்தையைத் தூக்காமல்
இலேசாய் நடப்பதை விட
இலேசாய் நடப்பதாய்
நடந்து செல்கிறான்
நெகிழ்ச்சியில்
தந்தை!

குளக்கரையில்- சில குறிப்புகள்

குளத்தில் மிதக்கிறது
முன்பு எப்போதோ
கடைசியாய்ப் பார்த்து
மலங்கலாய் நினைவுபடுத்திக் கொள்கிற
ஒரு பால்ய சிநேகிதியின்
முகம் போல்
முழுநிலவு.

குறுங்கவிதைகள்- கு. அழகர்சாமி

அடுத்தடுத்த
இரு கணங்களுக்கிடையேயுள்ள
இடைவெளியில்
எப்படியாவது நுழைந்து
நிலைபெற்று விடப் பார்க்கிறேனே
என் சாசுவதத்திற்கு
நான் !

கு. அழகர்சாமி கவிதைகள்

அந்த
மாமலையை
நெருங்க நெருங்க
என் அகத்துள்
ஆழ்ந்து ஆழ்ந்து
ஓங்கும்
மெளனத்தை மறைத்தது
மால்நிற மாமலை.

கு.அழகர்சாமி கவிதைகள்

யார் முந்தி
யார் பிந்தி
என்றெல்லாம் இல்லை.
பறவைகள் தமக்குள்
போட்டி போட்டுக் கொண்டா
பறக்கின்றன?

நெரிசல்

ஒரு நொடிக்குள்
யுகத்தை அடைத்து வைத்து-
ஒன்றுமில்லையில்
முடிவிலியை
அடைத்து வைத்து-
புறப்படும் புள்ளியில்
இலக்கினை
அடைத்து வைத்து-
ஒரே
நெரிசல்!

தலை துண்டிக்கப்பட்ட புத்தர்

சப்தமில்லாததால்
நிசப்தமாய் இருக்கும்
நிசப்தமாய்
இல்லாது
நிசப்தமாய் இருக்கிறதால்
நிசப்தமாய் இருக்கிற
நிசப்தத்துக்குள்
என்னிரு விழிகள் செவிமடுக்க-
மேனியுலர்ந்து
பழுத்துக் கொண்டே இருக்கும்

கு.அழகர்சாமி கவிதைகள்

கண்ணிமைக்காமல்-
கண்டு கொண்டே இருக்கிறேன்
இன்னும் பறந்து போகாது
கொத்திக் கொண்டே இருப்பதை-

ஐந்து கவிதைகள் – கு.அழகர்சாமி

தளைகளெல்லாம்
ஒழுங்காய் அழகாயிருக்கும்
அபாயம் அறிந்தேன்.
தளைகளை உடைத்து
வெளிவந்து விடப் பார்த்தேன்.
அப்போது தான் தெரிந்தது-
எத்தனையோ சதுரங்கள்
எத்தனையோ வட்டங்கள்
எத்தனையோ செவ்வகங்கள்
என்னைக் கட்டம் போடக்
காத்திருப்பது.

சிசிபஸ்

இன்னொரு முறை
இழுத்துப் போனேன் நிழலை
மலையுச்சிக்கு.
முன்பு போல்
நிழலோடு உருண்டது தான் மிச்சம்.
திருப்பித் திருப்பி
இப்படியே.
என்ன அபத்தம்?
இனியொரு முறை
ஒரு கைபார்த்து விடலாம்.
இம் முறை
யார் வேதாளம்
யார் விக்கிரமாதித்யனென்று
தெரியவில்லை.

காலத்தைக் கைப்பிடித்து கண் விழிக்கும் புதைநிலம்

என்றிருந்தோ
ஒரு தொந்தம்?
இன்றில்லா முன்னோர்
எவர் எவருடனோ
ஒரு பந்தம்?
தொல்புதைவின்
தொன்றிருந்தா
என் தொடர்ச்சி?
வென்று விடத் தான்
பார்க்கிறேன் காலத்தை

டோமஸ்  டிரான்ஸ்டிராமரின் ஹைக்கூ கவிதைகள்

கடையிலிருந்து வரும் சப்தமும்  

கண்காணிப்புக் கோபுரத்தின் கனத்த காலடிகளும்

காட்டைக் குழப்புகின்றன

குறுங்கவிதைகள்- கு.அழகர்சாமி

எவ்வளவோ சாதுவாய் என்னை நான் உணர்கிறேன்
என்னோடு நான் உருட்டிக் கொண்டு வரும் சைக்கிள்
என்னை உருட்டிக் கொண்டு வரும் போது-

கு.அழகர்சாமி கவிதைகள்

பிறந்த தேதி, ஊர்,
பெற்றோரின் பெயர்கள்,
என் பெயர், மொழி,
நிறம், இனம்
என்றெல்லாம்
என்னைப் பற்றிய
எத்தனையோ விவரங்கள்
பகிர உள்ளன-
ஒன்றைத் தவிர-
என் இறந்த தேதி

கேள்வி கேட்கும் பெண் குரல்கள்

திருதராஷ்டிரா,
அந்த மங்கலான விழிகளில்
அவன் சாபத்தை நீ சுமக்கிறாய்.
உன் தாய்
அவனிடமிருந்து அந்த இரவில்
துணுக்குற்று விலகினாள்.
அவன் சுவாசம்
வேர்களின் வாசமாயிருந்தது.
அவன் மார்பு வெளிறியிருந்தது.
அவன் காதலன் என்பதைக் காட்டிலும்
அரக்கனென்று தோன்றியது.

ஜூலை பாடல்கள்

இமைகளைக்
காவல் வைத்தேன்.
ஆனாலும்
என் விழிகளுக்கு தெரியாத
என் விழிகள்
எனக்குத் தெரியாது
என்னைக் கண்காணிப்பது

குறுங்கவிதைகள்

விழித்து நோக்கும்
எறும்பின் விழிகளுக்குள்
முறிந்து விழுந்து
தெரிந்திருக்குமோ
நெடுமரம்?

கு. அழகர்சாமி கவிதைகள்

இலக்கை
நெருங்குவது குறுக
தனிமை சூழ்வதும் அதிகரிக்கிறது.
தொடக்கத்தில்
இவ்வளவு தொலைவுக்கா
தயாரானோம் என்று
தெரியவில்லை.
தொலைவின் இது வரை
கடந்து வந்தது
இவ்வளவு தொலைவா
என்று ஆச்சரியமாயுள்ளது.

முதுமை

ஒற்றைத் தென்னை:
என் மீது அமர்ந்து செல்லும் பறவைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறேன் பகலில்.
என் மீது மினுங்கும் நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருக்கிறேன் இரவில்.

கு.அழகர்சாமியின் குறுங்கவிதைகள்

உற்று நோக்குமென்னை
உற்று நோக்கி
கடுகு விழிகளை
உருட்டி
வளைத்த கம்பியாய்
வாலை நிமிர்த்தி
ஓடாது நிலைக்கும்
ஓணானின் எதிர்ப்பில்
தெரிந்தது

ஆறு கவிதைகள்

சட்டெனக் குதிக்கிறது
சிறுகுருவி
சிறுநொடியின் மீது- ஒரு
சிறுகிளை மீதமர்ந்து
சிறிது குலுங்குவது போல்
தெரிகிறது அது
எனக்கு.

நான்கு கவிதைகள்

வியப்பில் உச்சியை அண்ணாந்து நோக்கி
முதலடி எடுத்து வைத்ததுமென்னைச்
சிறுகுழந்தையைத் தூக்குவது போல்
தூக்கிக் கொண்ட மலை, மேல்
செல்லச் செல்ல, மெல்ல மெல்லத் தூக்கி,
கடைசி அடி எடுத்து வைத்ததும்
தன் தோள் மீது உயர்த்தியென்னை இருத்தி
வைத்துக் கொள்வதற்குள் நேரமாகிக் களைத்துப்
போதும் போதுமென்றாகி விட்டது எனக்கு.

பூனை- வித்தியாசமான பார்வைகளில்

இறத்தல்- நீ அதை ஒரு பூனையிடம் செய்யக் கூடாது.
ஏனெனில், ஒரு காலி அடுக்குமாடி வீட்டில்
ஒரு பூனை என்ன செய்ய முடியும்?
சுவர்களின் மேல் ஏறுவதா?
மேசை நாற்காலிகளை உரசுவதா?
இங்கு எதுவும் வித்தியாசமாய்த் தோன்றவில்லை.
ஆனால் எதுவும் ஒரே மாதிரியாயில்லை.
எதுவும் நகர்த்தப்பட்டிருக்கவில்லை.
ஆனால் அதிக இடமிருக்கிறது.
இரவு நேரத்தில் விளக்குகளும் ஏற்றப்படவில்லை.

குழந்தைகளின் உலகம்

குழந்தையின் கையில்
பொம்மையாகி
அதைச் சிரிக்க வைக்கும்
ஆசையில்
பொம்மையானேன்.
குழந்தை என்
கையை முறுக்கியது.
காலைத் திருப்பியது.
உடலை வளைத்தது.
தலையைத் திருகியது.
விழிகளைப் பிதுக்கியது.
சிரித்துக் கொண்டே இருந்தேன்.
பொசுக்கென்று தூக்கிப் போட்டது
பொம்மையென்னை
குழந்தை- பொம்மை
அழவில்லையென்று.

காடு

நனைந்தபோது தான்,
நனைந்ததையே மழை
திருப்பித் திருப்பி நனைப்பதில்
நனைந்தது நனையவில்லையாய்
நனையாதாகிறதென்று
காட்டுக்குப் புரிந்தது
எனக்குப் புரிந்தது.

அழகர்சாமி கவிதைகள்

காலி செய்து சாமான்களை
வாகனத்தில் ஏற்றினேன்.
தமக்குள் அனுசரித்து
உட்கார்ந்து கொண்டன
சாமான்கள்.
விடுவதாயில்லை
’வசித்த வீடு’.
கூட்டிப் போகச் சொல்லும்.
சித்தத்திருத்தி
சூதானமாய்க் கூட்டிப் போனேன்

நான்கு கவிதைகள்- கு.அழகர்சாமி

உண்ண வெறுமையும்
தின்னத் தனிமையும்
கேட்க மவுனமும்
நோக்க அத்துவானமும்
நினைக்க நோய்மையும்
சுகிக்க சூன்யமும்…

சச்சிதானந்தனின் இரு கவிதைகள்

நீ மிகவும் புத்திசாலியானால்
அரைத்தூக்கத்தில் செல்.
எது வேகமாய் இருக்கிறதோ அது வேகமாய்க் களைப்புறும்:
மெல்லச் செல், மெல்ல நிச்சலனம் போல்.

பெருந்தொற்றின் பாடுகள்

காலம்
இரவும் பகலுமாய் ஊரும்
குருட்டு நத்தை.
….
குறைந்தபட்சமாய் வாழ்வதில்
உடற் சுமையைத் தவிர
கூடுதல் சுமையில்லை.

பூனை

சாமர்த்தியமாய்ப்
பதுங்குவதிலும்,
சட்டென்று
பாய்வதிலும்
சன்னமாய் உள்
ஒலிப்பதிலும்,
சுற்றி வளைய வளைய
வருவதிலும்
நினைவுகள்
பூனையிடமிருந்து
வித்தியாசமானவையல்ல-

கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை

ஹெரால்டு பிண்ட்டர் தனது நோபெல் உரையை இப்படித் தொடங்குகிறார்: ”எது நிஜம் எது நிஜமில்லை என்பவற்றுக்கு இடையில் உறுதியான வித்தியாசங்கள் இல்லை. அதேபோல் எது உண்மை எது பொய்மை என்பவற்றுக்கு இடையேயும் இல்லை. உண்மை, பொய்மை என்ற இரண்டில் ஒன்றாகத்தான், ஒன்று இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது உண்மை பொய்மை என்ற இரண்டாகவும் இருக்கலாம்.”

பிணி; தீ; விசுவாசம்- கவிதைகள்

நீரில்
நனைந்ததால்
தலை துவட்டும்
என்னைப் பார்த்து
நீரில்
நனையாதாயினும்
வெயிலில்
நனைந்ததாய்த்
தலை துவட்டும்
என்
நிழலின்
விசுவாசத்தில்

இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு

மற்ற படுக்கைகளில் மூச்சு விடும் அந்த மனிதர்கள்
அரிதாகவே புரிந்து கொள்ள முடியும்.
திரையினூடே இரா வானில்
நிலவு தேய்வதையும் வளர்வதையும் கவனித்தேன்.
ஒரு புனிதப் பணிக்கு நான் பிறப்பெடுத்தேன்:
மகத்தான மர்மங்களுக்கு
சாட்சியாய் இருக்க.
இப்போது நான்
பிறப்பு இறப்பு, இரண்டையும் கண்டிருக்கிறேன்.
இருண்ட இயல்புக்கு
இவை ஆதாரங்கள்
மர்மங்களல்ல என்றறிகிறேன்.

கூடு, அதிகாலை & (அ)சாத்தியம்

தானே ’புன்னகையாய்’
’புன்னகை’ அதற்கு அதுவே புன்னகைப்பதில்லையாய்ப்
புதிராய்ப் புன்னகைக்கிறார்

இது
போதும்—
ஆசையில் வறண்ட என்
அகங் குளிர
நிறைவாய்ப்
புன்னகைக்கிறார்

கேதார்நாத் சிங் கவிதைகள்

தரை மேல் என் காலை அப்போது தான் தூக்கியிருந்தேன்
குறுஞ்சிறு வார்த்தையொன்று
குருதியில் குளித்து
எங்குமில்லாததிலிருந்து
என்னை நோக்கி மூச்சிரைக்க
ஓடி வந்து உரைத்தது-
”வா, உன்னை நான் அழைத்துச் செல்கிறேன் வீட்டுக்கு ”

கவிதைகள்- கு.அழகர்சாமி

ஒன்று பலவாய், பல ஒன்றாய், உருவருவாய்
ஒன்றில்லா ஒன்றாய், ஓயா இயக்கமாய்
ஆணிப்பொன் அம்பலத்தாடு ஆனந்தக்கூத்தா!

மலையின் நினைவுகளில்

எதையும் தேடாதிருக்க, தவம்
தேடி வந்த காற் தடங்கள் புதைந்திருக்கின்றன
கற்பாறைகளுக்குள்.
அவர்கள் விட்டுப் போன மூச்சு
விட்டுப் போகாமல் கலந்து வீசும் மென்காற்றில்
பேரமைதியின் சுகந்தம் மணக்கிறது.
காட்டு முல்லைகளும் கசக்கிய எலுமிச்சைப் புற்களும் மணக்கின்றன.

கவிதைகள்

பாதங்களைத் தவிர வீட்டுடன் அதிகமாகப் பேச
வேறு யார் இருக்கிறார்கள்.
வெகுநாளைக்குப் பிறகு
தூசியைத் துடைக்க வருகிறவன்
கதவுகளைத் திறக்கும் போது
பாதங்களை மட்டுமே பார்க்கிறது வீடு.