வெயிலில்
தனிப் பனையின்
சொற்ப நிழல்.
அது
போதும்;
ஆடு சுகம் காணும்.
Author: கு.அழகர்சாமி
என்ன நடக்கிறது ஹெராக்ளிட்டஸ் நதியில்?
ஓடும் நதியோடு கூடப் போகாது கரையில் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு என்ன செய்கிறது இந்த மரம்?
எதை அறியக்
கடுந்தவம் நோற்கிறது?
தன்னை அறியவா?
தான் இருக்கும் விதம் ஓடும் நதியில் தேடித் தேடி இன்னும் தெளிவாகவில்லையா?
மூன்று கவிதைகள்
பாதை என
தனியாக ஒன்று
எங்குமில்லை..
என் ஒவ்வொரு காலடிக்கும்
முன்பு கைப்பிடி கருங்கற்களை
நானே நிரப்பியப்படி செல்கிறேன்
சிரியாவே தன் துயரத்தைச் சொல்லும் கவிதை
புதுச்சேரியில் பிப்ரவரி 2016-ல் நடைபெற்ற பன்னாட்டு ஆவணக் குறும்பட விழாவில் திரையிடப்பட்ட அலெப்போவை அலைக்கழிக்கும் கொலைப் போரையும் பேரழிவையும் பேசும் Young Syrian Lenses என்ற ஆவணப்படத்தைப் பார்த்த யாரும் அதிர்ந்து போகாமல் இல்லை. மக்கள் வாழும் பகுதிகளில் வீழும் குண்டுகளின் பொழிவு, தரைமட்டமாகும் கட்டிடங்கள், அழிவின் அச்சுறுத்தலிலும் மரணத்தோடு விளையாடுவது போல் விளையாடும் சிறார்கள், அமர்ந்து மரணத்தை ஒரு மிடக்கு அருந்துவது போல் தேநீர் அருந்தும் மனிதர்களரென்று அலெப்போவின் போர்த் துயரத்தைப் பதிவு செய்கிறது இந்த ஆவணப் படம்.
குழந்தைகளோடு ஒரு புகைப்படம், நீர்ம உருண்டை
ஒரு குழந்தை ஒரு திசையை நோக்கியிருக்கும்.
அதைச் சரி செய்வதற்குள் இன்னொரு குழந்தை இன்னொரு திசையை நோக்கிய படி இருக்கும்.
சிநேகிதம்
ஒன்றும் சொல்வதற்கில்லை ஊரில் நிலவரம்.
நிலவும்
சங்கடமான அமைதியைக் குலைக்க ஓர் அலறல் போதும்.
பிணம் தூக்கிப் போன பின்
நான்கு கவிதைகள்
பறவை மூழ்க
பரந்த வானம் மூழ்கும்.
வானம் மூழ்க
மூழ்காமல் முழுநிலா மட்டும் தத்தளிக்கும் ஒளிப் பந்தாய்
இருள் சூழ் உலகைக் காப்பாற்ற.
மெலிதான மர்மம் & மழை – சில குறிப்புகள்
இந்த அடை மழையிலும் துயிலும் அவன் கனவில்
மழை பெய்கிறதா?
எந்த மழை நிஜம் அவனுக்கு?
கவிதைகள்
உனக்கும்
எனக்கும்
கயிறு
அரவாகக் காட்சியாகலாம்.
அரவு
கயிறாகக் காட்சியாகலாம்.
கவிதைகள்
அந்த வளையம் ,
அழுத்தமாகத் தாழிடத்
தோதாக -தன்னை
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காகவே
காற்றில் அசைந்து அசைந்து
முனகுகிறது.
கவிதைகள்
கூர் கொண்டு
காத்திருப்பவை
பாறை விளிம்புகளா?
புலியின் நகங்களா?
