மாணாக்கன்

“அவர்கள் யேசுவை முதன்மை மதகுருவின் முன்னிலையில் கேள்விகள் கேட்கத் துவங்கினர். அந்த சமயத்தில் முற்றத்தில் வேலைக்காரர்கள் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டினர். அவர்களுக்கு அருகில் நின்றிருந்த பீட்டரும் கைகளை நீட்டி குளிர் காய்ந்தார். அப்போது, அங்கிருந்த ஓர் பெண்மணி, பீட்டரைக் கண்டு “இவரும் யேசுவுடன் இருந்தார்” என்றார்.  அதாவது, பீட்டரையும் இழுத்து சென்று கேள்வி கேட்க வேண்டும் என்று அர்த்தத்தில் கூறினாள். 

வைரஸ்

உத்ரன், கைகளை ஆட்டி கத்தினான், “ இந்த ஆள் ஒரு கூலிக்காரன். நேத்துதான் தெலுங்கானாவல இருந்து ஊர் திரும்பியிருக்கான். 18 நாட்கள் தனிமையில் இருந்திருக்கணும். அரசாங்கம் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியிருக்கு. ஆனா, இவன் ரயிலிருந்து குதிச்சி தப்பியோடியிருக்கான். வீட்டுக்கு போற அவசரத்துல… வேற எதுக்கு? “ ஏளனமாக உறுமினான்.

நன்றி இந்தியா, நல்லிரவு (ப்ரிஸ்பேனிலிருந்து)

அஜிங்க்ய ரஹாணேயின் புன்னகைக்கு நன்றி. இந்த தொடரின் ஆன்மாவுடன் ஒன்றிணைந்த புன்னகை அது. ஆட்ட வர்ணணையாளர்கள் இடத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷத்தையும் முரட்டுத்தனத்தையும் குறித்து உரக்க குரல்கள் எழுந்துகொண்டிருந்த போது ரஹாணே புன்னகைக்க மட்டுமே செய்தார். பின் வென்றார்.

அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம்

இத்தனை கடுமையான எதிர் கொள்ளவேண்டியிருக்கும் சவால்களுக்கு, சோதனைகளுக்கு மத்தியில் காந்தி போன்ற ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு உண்டு, முக்கியமாகச் சுய எள்ளல் உண்டு என்பதே முதலில் ஆச்சரியமான விஷயம். ஆனால் சற்று யோசித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பது புரியும்.

ம்ருத்யோ மா

“க்ளிங்” – சற்றே வேகமாக மதுக் கோப்பைகள் இடித்துக்கொண்டது போலத்தான் சத்தம் கேட்டது. வரிசையின் முன்னே எட்டிப்பார்த்தேன். பெர்லின் செல்லும் இந்த விமான கேட்டின்முன் உருவாகியிருக்கும் வரிசையில் இரண்டாவதாக நின்றுகொண்டிருந்த தாத்தாவின் கையிலிருந்த டியுடி ஃப்ரி ஷாப் பையிலியிருந்து தரையெங்கும் இரத்தச்சிவப்பு உற்சாகமாக எல்லா திசைகளிலும் பரவியது. அவர் “ம்ருத்யோ மா”

கைச்சிட்டா – 3

This entry is part 3 of 8 in the series கைச்சிட்டா

அ) A Case of Exploding Mangoes ராஜ்ஜியங்களின் தலைவர்கள் கொல்லப்படுவது என்பது எண்பதுகளில் சர்வ சாதாரணம். எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதத் 1981இல் தீர்த்துக் கட்டப்பட்டார். அதே ஆண்டில் பங்களாதேஷ் நாட்டின் ஜனாதிபதி ஜியா உர் ரெஹ்மான் அரசியல் காரணங்களுக்காக ஆட்கொலை செய்யப்பட்டார். 1984ல் இந்திரா “கைச்சிட்டா – 3”

முதல் காலடி

பயணக்குழுவில் சாஹிப்புகளைத் தவிர, என் ஷெர்பா அணியில் இருந்து ப்யு தார்கே, டா நாம்க்யால், அஜ்பா, டோர்ஜி மற்றும் நோர்பு……அன்று மட்டும் கிட்டதட்ட எட்டு மணி நேரங்கள் ஏறியிருப்போம்.
25,680 அடிகள் உயரமான நெப்ட்ஸ்ஸின் சிகரம் (nuptse) இப்போது எங்களுக்குப் பின்னால் இருந்தது. நாங்கள் அதற்கு சரிக்கு சரியான உயரத்தில் இருந்தோம். ….சூரிய ஒளி சுருங்கிக்கொண்டே வந்தது, குளிர் மேலும் கடுமையாக எங்களை போர்த்திக்கொண்டு இறுக்கி அணைத்துக்கொண்டிருந்தது. சற்று நேரம் சிரமப்பட்டுக்கொண்டு வந்த நோர்பும் டோர்ஜாவும் திடீரென நின்றார்கள்.

களியோடை

This entry is part 12 of 48 in the series நூறு நூல்கள்

கொடிய கோடையில், ஏரிகள் நீரின்றி வரள, பறவைகள் தங்க இடமின்றிச் செல்ல, இந்த வெப்பம் மிகுதியான சூழ்நிலையில், குளங்கள் நிறையுமாறு ஓர் அதிகாலையில் பெய்த மழையால் ஊர் மக்களுக்குள்ளும் பெய்த உவகை எல்லாம் ஒரு சேர என்னுள் பெய்ததது போலிருந்தது என்று அந்த பாடல் சொல்கிறது.

வாசகர் கடிதம்

இறகுப் பந்து எனப்படும் ஷட்டில் பாட்மின்ட்டனின் பெரும் நுணுக்கங்களை வாசகன் மீது விட்டெறிந்து அவனைத் தெறித்து ஓடச் செய்யாமலும், பந்தடிப்பிலிருந்து அதிகம் விலகிச் சென்று தனி மனித அவலங்களில் – புலம் பெயர்ந்தவர்களின் அவலங்களில் உழன்று விடாமலும் நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள புனைவு.

அலகுடைய விளையாட்டு

அந்த முதல் வெற்றியை, நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே கவனித்து கொண்டிருந்த, மறக்கவே முடியாத கணங்களை அன்றிரவு வீடு திரும்பும்போது அசை போட்டேன். கை குலுக்கியபின் திரும்பிய டோடியாவின் தளர்வான நடையை, ஸ்கோரை மைக்கிடம் சொன்ன போது மைக்கின் கண்களின் ஆச்சரியத்தை, அன்றிரவு வீடு திரும்பி காரை அணைத்த பின்பும் ரேடியாவை அணைக்காமல் pink-கின் million dreams பாடல் முடியும் வரை கேட்டுக்கொண்டிருந்ததை, காரிலிருந்து இறங்கிக் கடும் குளிர் காற்றிலும் வானத்தின் மூன்று நேர்கோட்டுத் தாரகைகளைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்ததை…அடுத்த நாள் அலுவலகப் பயணத்திலும் அசை போட்டேன். மாலை, இரவு என்று அந்த வாரம் முழுவதும் யோசித்ததை நினைத்துச் சிரிப்பாக வந்தது.

வெளிச்சமும் வெயிலும் – சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்

சிவா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயர் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் இணையதளம் மூலம் அறிமுகமானது. அவரது ஒரிரு கதைகளை இணைய இதழ்களில் முன்பே வாசித்ததும் உண்டு. 2019-ம் ஆண்டின் மே மாதத்தில் ஜெயமோகன் அவர்களின் தளத்தில், “லண்டன் தமிழ் இலக்கிய குழுமம்” துவக்கவிழா குறித்த அழைப்பிதழைக் கண்டேன். அதிலே, ராய் “வெளிச்சமும் வெயிலும் – சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்”

யார் பாதிக்கப்பட்டவர்கள்?

சிறையிலிருந்து/சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளி வந்தவனை சமூகத்தில் அனுமதிக்கலாமா? அவன் திருந்திவிட்டான் என்பது என்ன நிச்சயம் என்ற ஆரம்பக்கேள்விகளிலிருந்து அவனது இந்த நிலைக்கு, இளம் வயதில், கொடூரனாக, கொலைகாரனாக மாறியதற்கு யார் முதற் காரணம் என்ற அடிப்படை கேள்விகளுக்கான முகாந்திரங்களும் இருக்கின்றன.
கடைசி அத்தியாயத்தின் ஆரம்பத்தில், க்ரேய்க், எடி ஜே டர்னர் அல்ல என்று அன்னாவின் நம்பகமான நபர் தெரிவித்தவுடன் அவள் அதிர்ந்து போகிறாள்.