- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
- மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது
- மிளகு: அத்தியாயம் அறுபது
- மிளகு – அத்தியாயம் 61 & 62
- மிளகு அத்தியாயம் அறுபத்துமூன்று
- மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் அறுபத்தாறு
- மிளகு அத்தியாயம் அறுபத்தேழு
- மிளகு அத்தியாயம் அறுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எழுபது
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று
- மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு
- மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் எழுபத்தாறு
- மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
- மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எண்பது
- மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
- மிளகு – அத்தியாயம் – எண்பத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு
- மிளகு – அத்தியாயம் 85
- மிளகு – அத்தியாயம் 86
- மிளகு – அத்தியாயம் 87
- மிளகு – அத்தியாயம் 88
- மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை
1606 ஹொன்னாவர்

நான் ரோகிணி. இன்னும் இருக்கிறேன். இருப்பேன். ஜெருஸூப்பா அழிந்து போகும். ஆனால் நான் இருப்பேன். சென்னபைரதேவி மண்ணுக்குள் மண்ணாவாள். நான் இருப்பேன். அவளுடைய மிர்ஜான் கோட்டை காலத்தின் வேகத்தில் சிதைந்து போகும். நான் இருப்பேன். சென்னா மகாராணி என்ற மிளகு ராணியின் நாட்டில் மிளகு விளையாமல் போகும். ஆனால் நான் இருப்பேன். அவளுடைய வளர்ப்பு மகன், என் ஆசை நாயகன் நேமிநாதன் செதில் செதிலாகச் சிதைந்து அழுகி மண்ணில் புதைந்து காணாமல் போவான். நான் இன்னும் இன்னும் இன்னும் இருப்பேன். இருக்கிறேன்.
இருப்பை நிலைநிறுத்த நான் எடுத்த நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பலன் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. அஜீரணம் ஏற்பட்டு வயிறு வலிக்க, சுக்கைத் தட்டிப் போட்டு மென்று உடனே பிருஷ்டத்தைப் ஸ்பரிசித்து வாயு பிரிகிறதா என்று சோதிக்கிற அவசரம் எனக்கு இல்லை. நிதிக்குழு என்ற கார்டெலின் நடவடிக்கையைத்தான் கூறுகிறேன்.
நிதிக்குழு அமைந்து லிஸ்பன் மாநகரப் பெரும் வணிகர்கள் நிதி முதலீடு செய்து பங்களிப்பு ஏற்பட்டபோது ஒரே குறிக்கோள் இது. இந்துஸ்தானத்தில் இருந்து, இன்னும் குறிப்பாகச் சொன்னால், ஜெருஸூப்பா மாநிலத்தில் இருந்து மிகத் தரமான மிளகு இறக்குமதி செய்ய ஏகப்பட்ட தங்கம் கைமாற்றுகிறோம். இந்தச் செலவின் நான்கில் ஒரு பகுதி மதிப்பில் நமக்கு இனி மிளகு கிடைக்கவேண்டும்.
குறிக்கோள் சிறந்ததுதான். அதற்கான தீர்வாகக் கைகாட்டியதும் சரியானதுதான் – மிளகு மகாராணி என்ற சென்னபைரதேவியின் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து நம் சொல் கேட்கக் கூடிய அவளுடைய வளர்ப்பு மகன் நேமிநாதனை அரசனாக்க வேண்டும்.
இந்தத் தீர்வுக்கான வழிமுறையாக எடுத்துப் போனது தான் அரைகுறையாக வெற்றி பெற்று இன்னும் நேமிநாதன் அரியணை ஏற முடியவில்லை.
நிதிக்குழு முடக்கிய பணத்தைக் கொண்டு வைதீக மதக் கோவில்களையும், சமண மத ஆலயங்களான பஸதிகளையும் குறிவைத்து தாக்கி மதக் கலவரத்தை உருவாக்கி சென்னா மகாராணி மேல் வெகுஜன வெறுப்பும் கோபமும் ஏற்படுத்தி அவளைப் பதவி துறக்கச் சொல்லலாம் என்ற யோசனை பாதி பலித்தது.
சென்னா மகாராணி அந்த வெகுஜனக் கோபத்தைத் திசை திருப்ப புதியதாகக் கோவில்களையும் பஸதிகளையும் கட்டுவேன் என்று செலவுக் கணக்கு தொடங்கியது யாரும் எதிர்பாராதது.
சென்னபைரதேவி மகாராணி மேல், கோவிலும் பசதியுமாகக் கட்ட வாரி இறைத்து கஜானாவை காலியாக்குகிறதாக வெகுஜனக் கோபம் இருக்கிறது. அது நேமிநாதனுக்கு ஆதரவாக மாறவில்லை என்பதே உண்மை. இதைச் சொன்னால் கார்டெல் சும்பன்கள் கவனிக்காமல் என் கையிடுக்கு வியர்வை ஈரத்தில் ஒற்றி முத்தமிட காமம் மிகுந்து உதடு சுழிக்கிறார்கள். அல்வாரீஸ் தடியன், நேமி நாசக்காரன் பார்க்காதபோது, என் முலைகளைக் கசக்குவேன் என்று கண்ணடித்து சைகை காட்டுகிறான். காமத்தில் சுழலும் உலகம் இது. போர்த்துகீஸோ இந்துஸ்தானியோ உடம்பு பசித்தவர்கள் எல்லா ஆண்களும்.
என் கொங்கைகள் மதர்த்து இருக்கட்டும். என் சொந்தக் கொள்கை வழிமாறியதா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்வேன். இல்லை என்றும் புகல்வேன். இது அரசியல். சரித்திரம் நிகழும்போதே திருத்தப்படுகிறது.
மிளகு ராணி வம்சத்தை நிர்மூலப்படுத்த மனதில் வரிந்தபோது அந்த வம்சம் இனி இல்லாமல் செய்வேனென சூளுரை செய்தது நிஜம். வம்சம் என்றால் நேமிநாதனும் அடக்கம். அவனை அடக்கம் பண்ண வழி தேடாமல் அவன் பிருஷ்டம் சிம்மாசனம் ஏற அண்டக் கொடுத்துத் தாங்குவதும் என்கைதான்.
அது மட்டுமில்லை, அவன் விரல் சுண்டிய பொழுதெல்லாம் உடுப்பு களைந்து முயங்கிக் கிடந்ததும், கிடந்ததும் என்ன, கிடப்பதும் நான் தான். அதற்காக என்ன எல்லாம் செய்கிறேன்.
சென்னாக் கிழவி உறங்கும்போது அவளுடைய முடிக்கற்றை ஒன்றையோ நகத்துணுக்கை வெட்டியோ கொண்டு வந்தால் சீன மந்திரவாதம் செய்து அவள் சீக்கிரம் செத்தொழிய வழிசெய்கிறேன் என்றான் ஆப்பிரிக்க மந்திரவாதி வெகுமுன்பு. மயிருக்காக ராத்திரி கோட்டைச் சுவரேறிக் குதிக்க ஆளைப் போட்டு காசு கொடுத்து கோட்டைக்குள் அனுப்பினோம். மயிர் பெறாத வேலை அது. கிழவி தூங்காமல் எழுந்து உட்கார்ந்து கெடுத்தாள். ஆப்பிரிக்க ஆண்குறிகள் கள்ளத்தனமாக ஊடுருவும் பெண்குறிகளுக்குள் அப்படியே அவற்றை இறுகிப் பிடித்துச் சிறை வைக்க மந்திரம் போடும் அந்த மந்திரவாதி மூதாட்டி தலைமுடியை பிடுங்க முடியாமல் திரும்பிப் போனான்.
நேமிநாதனுக்கு ஆலிங்கனத்துக்கு நடுவே அரசாட்சி பற்றியும், கலவிக்கு அப்புறம் கல்வியாக அடிப்படைப் பொருளாதாரமும் கற்றுக் கொடுக்க முயற்சி செய்வது முடிவடைவதாகத் தெரியவில்லை. நான் சொன்னபடி பேசி நடந்து, பில்ஜி அரசன் திம்மராஜுவிடமும், கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கரிடமும் சென்னாவுக்கு எதிரான நிலை எடுக்க ஆதரவு வாங்கி வந்தான் நேமி. என் தலையணை மந்திர உபதேசம் எல்லாவற்றுக்கும் காரணம்.
ஒரு பகல் முழுவதும் அடங்கிக் கீழிருந்து புணர்ந்து அவன் மனதில் துணிச்சலை உருவாக்கி, சென்னாவிடம் பாதி மாநிலம் அரசாளக் கேட்க ஆள் அனுப்ப வைத்தேன். கிழவி கொடுப்பாள் என்று நம்பிக்கை இல்லை என்றாலும் நேமியை ஒரு சுக்கும் மதிப்பில்லாத சாதுப் பிராணியான பாச்சைப் பூச்சியாகக் காலால் புறந்தள்ள முடியாது இனி.
அந்தக் கோரிக்கையோடு நடந்த நேமியின் பிரதிநிதியான உப பிரதானி வகுளாபரணன் சென்னாவின் பிடிவாதத்தால் வெறுப்புற்று யுத்தம் வரும், ஆட்சி மாறும் என்று பிரகடனப்படுத்தி வந்தது நான் எதிர்பார்த்தபடிதான்.
யுத்தத்தில் ஜெயித்தால் நேமிநாதன் என்னை அரசியாக்குவதாக ஆரம்பத்திலேயே வாக்குறுதி செய்திருக்கிறான். தோற்றாலோ, இருக்கவே இருக்கிறது என் மாற்றுத் திட்டம் –
ஜெருஸூப்பா மாநிலத்துக்கு நான் தொழில் முதலாகக் கொண்டு வந்த, அது பல்கிப் பெருகி பெருந்தனமான ஸ்தாவர ஜங்கம சொத்துகள் எல்லாவற்றையும், அல்லது கூடிய மட்டும் எல்லாவற்றையும், இங்கிருந்து எடுத்துக் கொண்டு வெளியேறுவது நிறைய யோசித்து உருவாக்கிய மாற்றுதிட்டம். அந்த சொத்துக்களை பசும்பொன் ஆக மாற்றி எடுத்துப் போவதே உத்தேசம்.
பொன்னாக மாற்ற முடியாத வெள்ளிப் பாத்திரங்கள், செம்பு, வெங்கலம், கடைசி நேரத்தில் பொன்னாக்கி எடுத்துப் போக முடியாத தங்கம் எல்லாம் பின்னொருநாள் மீண்டும் வரும்போது மீட்டெடுக்க இங்கே ஜாக்கிரதையாகப் புதைத்து வைத்து விட்டுப் போவதும் திட்டத்தில் அடக்கம். ஆழக்குழி தோண்டி உள்ளே இட்டுப் புதைத்த வெள்ளியை, வெங்கலத்தை, கொஞ்சம் போல் தங்கத்தை பூடகமான வரைபடங்கள் மூலம் மறுபடி தோண்டி எடுக்கலாம். அதாவது நேமியின் படையினர் வெற்றி பெறாவிட்டால் ஏழெட்டு வருடம் சென்று அமளிதுமளி முடிந்தபிறகு , புதைத்ததை மறுபடி அகழ்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
சொத்துக்களை விற்றுத் தங்கம் வாங்கிச் சேகரிப்பது செய்ய வேண்டிய காரியமாக நாடு முழுவதும் பரவியதும் ஜனங்கள் அவரவர் ஆஸ்தியை தங்கமாக்கப் பரபரத்து ஜெருஸோப்பாவின் நிதிநிலைமை ஆட்டம் கண்டது உண்மை. நான் எதிர்பார்க்காது கார்டெலுக்கும் எனக்கும் கிடைத்த வெற்றி.
ஜெர்ஸோப்பாவில் வீடுகளை இடித்து வெள்ளி, வெங்கலம், செம்பு, கொஞ்சம் தங்கம் புதைத்து பேய் மிளகு விதைப்பதை நிறைவேற்ற கிட்டத்தட்ட முழுநகரமுமே காத்திருக்கிறது. யுத்தம் வரட்டும்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் கூடிய சீக்கிரம் மாற்றுத் திட்டத்தை நடப்பாக வேண்டியிருக்கலாம். தங்கமாக்குதல் கிட்டத்தட்ட நடந்திருக்கிறது.
இயற்கையே என் மாற்றுத் திட்டத்துக்கு ஆதரவு தருகிறது என்று தோன்றுகிறது. கிறுக்கு பிடித்த, ஓய்வு பெற்ற போர்த்துகல் தூதரும், ஓய்வு பெற்ற அரைக் கிறுக்கன் விக்ஞானியும் மிளகுக் கொடி திருடி நலுங்காமல் குலுங்காமல் போர்த்துகல் கொண்டு போய் அங்கே பதியன் போட்டு வளர்க்கிறேன் பேர்வழி என்று கிளம்பினார்கள். எங்கேயோ தூக்கத்தில் யுகக் கணக்காக காட்டுத் தாவரமாக, பாறைச் செடியாக மறைந்து அசந்து கிடந்த பேய் மிளகுக் கொடியை நாட்டுக்குள் வரவழைத்து விட்டார்கள்.
ஒரு நிலத்தில் அல்லது வீட்டு முகப்பில் காலை ஆறு மணிக்கு ஒரு சிறு துணுக்கு, வேர் இருந்தால் சரிதான், இல்லையென்றாலும் சரிதான், அங்கே போட்டுவிட்டுப் போனால் சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டு முகப்பை அடைத்துக்கொண்டு பேய் மிளகு வளர்ந்து உள்ளே போக ஆரம்பித்திருக்குமாம்.
மனுஷர்களை காலைக் கட்டி இறுக்குவது மூலம் கொல்லக் கூடிய பேய் மிளகை குழந்தைகள் தொட்டால் விரலை இறுக்கி இற்று விழ வைத்து விடும்.
அவ்வளவு பயங்கரமான இந்தப் பேய் மிளகுக்கொடியை விருதுபட்டி சனியனை விலைகொடுத்து வாங்கிவந்த மாதிரி தேசமே அங்கே இங்கே என்று எங்கும் பரவ விட்டுக்கொண்டு கிடக்கிறது. ஒரு விதத்தில் பேய் மிளகு நல்ல விஷயம் தான். வீட்டை எல்லாம் இடித்து வைத்து விட்டு நகர் நீங்கும்போது இடிபாடுகள் மேல் பேய் மிளகை இட்டுப் போனால், நாளைக்கு ஜெயித்து வரும் படை உள்ளே நுழைய யோசிக்கும் என்பதை தொண்டு கிழவிகள் கூடச் சொல்வார்கள்.
பேய் மிளகு ஆட்கொல்லியாக மாறினாலும் அது காவல் இருக்கப் போகும் சிதிலமான கட்டிடங்களில் தரைக்குக் கீழே கூடுதல் பாதுகாப்போடு புதையல் இருக்கும். முழு விவரம் தெரிந்தவர் வெல்லுவர். என்னைப் போல.
யார் வெற்றி பெறுவர்? சென்னாவுக்கு போர்த்துகல் ஆதரவு கிடைக்கலாம். அப்பக்காவின் உள்ளால் அரசு ஆதரவு தரலாம். நேமிக்கு கூட பில்ஜி படையும். கெலாடி அரசுப் படையும் நிற்கும். கெலாடி படையிடம் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் உண்டு.
ஜெருஸோப்பாவின் மிளகு வளத்தைப் பார்த்து நேமி வென்றாலும் தோற்றாலும் பில்ஜியும் கெலாடியும் இங்கே அரசுரிமையைப் பறித்துக் கொள்ள முனையலாம். ஜெயித்தாலும் தோற்கும் வினோத நிலைமை அது.
ஆக மாற்றுத் திட்டத்தை யுத்தம் வந்து அன்றைய தினமே நடப்பாக்க பெரிய சாரட்டை தயார் நிலையில் வைத்து மாலை மங்கிய பிறகு தங்கத்தை வண்டிக்கு ஒரு பகுதியாக ஏற்றி உடுப்பி, தமிழ் பூமி போய்விட வேண்டும். போன பௌர்ணமிக்கு பெரிய சாரட் செய்து வாங்கியது இதை உத்தேசித்துத்தான்.
எப்படியும் யுத்தம் வர படைகள் நடந்து வந்து முற்றுகை இட ஏற்பாடு செய்து இரண்டு நாளாவது ஆகலாம். அதற்குள் சாரட், சாரதிகள், எடுத்துப் போக தங்கம் என்று தயார் செய்து விடலாம். புதைத்து வைக்கவும் கொத்தரை அழைத்து தயாராக இருக்கச் சொல்லலாம்.
ஹொன்னாவரிலும், ஜெருஸோப்பாவிலும் கடை சிப்பந்திகளுக்கு ஓர் ஆண்டு சம்பளமும் கொஞ்சம் வெள்ளியும் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். இரண்டு நாளில் அதை எப்போது தரலாம் என்று முடிவு செய்துவிடலாம்.
மஞ்சுநாதனை என்ன பண்ணுவது? என் குழந்தை தான். ஆனால் என் பிரம்மாண்டமான திட்டத்தை நிறைவேற்றுவதில் இடையூறாவானோ. அவனை இங்கே கொஞ்சம் உணவும், பணமுமாக உறங்க வைத்து தப்பி விடலாம் என்று கார்டெல் யோசனை சொன்னது. மனது கேட்க மாட்டேன் என்கிறது. கிறுக்கன் பரமன் இருந்தால் அவனிடம் குழந்தையை ஒப்படைத்து விடலாம். பரமனை இனிமேல் கொலை செய்து என்ன சாதிக்கப் போகிறேன்?
மஞ்சுநாத்தை என்னோடு கூட்டிப் போனால் என்ன சிக்கல்? எப்படியும் கூடிய சீக்கிரம் சொத்தை மாற்றி எடுத்த தங்கத்தோடு லிஸ்பன் போக வேண்டியது தான். மால்பெ துறைமுகத்தில் இருந்து புறப்படுவது சரியாக இருக்கும். அங்கிருந்து கோவா பஞ்சிம். அங்கிருந்து லிஸ்பன் போகும் பயணிக்கப்பல். கிட்டத்தட்ட ஒரு மாதம் கடல் காற்றை சுவாசித்து, கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டு. கடல் நாரைகளின் வினோத சத்தம் பழகிப் போய் போலி செய்து லிஸ்பன் போனதும் எதாவது செய்து மஞ்சுவுக்குக் குடியுரிமை வாங்க வேண்டும்.
பதினைந்து வருடம் கழித்து அவன் லிஸ்பன்னில் சிறந்த வர்த்தகனாக இருக்கும்போது அதற்காக நான் செய்யத் தயாராக இருக்கிற கீழ்மைச் செயலை யாரும் அவனிடம் சொல்லவோ நினைவுபடுத்தவோ போவதில்லை. நான் சீக்கு பிடித்து கிடந்தாலும், இருப்பேன்.
ஆமாம், இவ்வளவு நாள் உறுதுணையாக இருந்து யுத்தத்தில் கொண்டு விட்டுவிட்டு நாடு நீங்கிப் போனால் என்ன நினைப்பான் நேமி? என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். அதைச் சொல்ல அவன் உயிரோடு இருப்பானா?
பரமன் என்ன செய்வான்? கடையும் இல்லை. சமணக்கோவில் பிரசாதமும் யுத்தகாலத்தில் கிடைக்காது. எப்படியாவது சமாளித்து விடுவான். இத்தனை வருஷம் இருந்தவனுக்கு வாழ்க்கை ஒரு நேர்செய்யப்பட்ட நாட்டிய நிகழ்ச்சிதானே. அவனுக்கும் ஓராண்டு சம்பளமும் கொஞ்சம் பொன்னும் கொடுத்து தீர்க்கலாமா? காசுக்கு வாங்கிய கணவனாகட்டும் கிழவன். அல்லது அவன் நாக்பூருக்கும் தில்லிக்கும் அப்புறம் எங்கே ஆமாம், பம்பாய்க்கும் திரும்ப போய்விட்டிருப்பான். ஜயவிஜயிபவ.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
