ஒலிக்கலைஞனின் உதவியாள்

ஒரு குடை – அதைத் திறந்து மூடினால் பறவையின் சிறகடிப்பு கேட்கும்.
இரு கைகளில் அரைக்கோளத் தேங்காய் ஓட்டு மோதல்கள், விரைந்தோடும் புரவியின் குளம்பொலியாகும்.

அயல்நாட்டுக் கவிதைகள்

தனது வேரிட்ட தோட்டத்தையும், பேரக்குழந்தைகளையும், ஒருகாலத்தில்
அவளுடையவளாயிருந்த ஒருகாலத்தில்
கட்டுக்கடங்காத இளைஞனையும் அவள் நேசித்தாள்.

அயல்நாட்டுக் கவிதை – ஆஸ்டின் ஸ்மித்

மாடிப்படிகளில் தவறி விழுந்தவர்
கீழே வேகமாகச் சரிந்து செல்வது போன்ற ஒலி தரும்
சகிக்க முடியாத பியானோ வாசிப்பும் தவிர
வேறு சப்தமில்லை

"வீடும் வெளியும்"-கவிதைகள்

சத்தம்போடாத மின்விசிறிகள்
இரக்கமற்றவை – உங்கள்
தனிமையைப் பகிர மறுப்பவை.
அறையின் சுவர்களின் வழியே
தண்டவாளங்களின் மீதேறி
வேறு உலகங்களைக் காண
அனுமதிக்காதவை.

எரிமலையில் தொலைந்த காதலன் – இருந்தும், தொலையாத காதல்

ஒவ்வொரு துணுக்கையும்
குளிர்ந்த நீலப் பீங்கான் கிண்ணத்தில் சரித்து
பழச் சாறு குளமாய்த் தேங்க முழுப்பழத்தையும்
அதன் தோலினின்று பிரித்து
அதன் பின்பே அதை உண்பது.
எத்தனை இனிமையான
ஓர் ஒழுங்கு
துல்லியமாய் அர்த்தமற்றதாய்

புதுமைப்பித்தன் கவிதைகள்

“புதுமைப்பித்தன் தன் கிண்டலுக்கும் கேலிக்கும் வாகனமாக, சித்தர் பாடல்களில் ஆதாரம் தேடிய ஒரு செய்யுள் உருவத்தைக் கையாண்டு பார்த்தார். எழுதியுள்ள அளவில் அவர் வெற்றிகண்டார் என்றே சொல்ல வேண்டும். மாகாவியம் என்ற அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம்.” – க.நா.சு

கவிதைகள்

அந்த நாளை
அந்த கணத்துடன்
மடித்து வைத்திருந்தேன்,
ஒரு பாடலுக்குள். – அது
இனிய நினைவுகளைப் போல
பொலிந்துகொண்டிருந்த
ஜன்னலருகே நின்றிருந்தது.

கவிமொழியைக் கைமாற்ற முடியுமா? டெப்ரா ஏய்கர் கவிதையை முன்வைத்து…

கவிதை மொழிபெயர்ப்பு இன்னும் சங்கடமானது. கட்டுரைகளிலும், கதைகளிலும் அதன் படைப்பாளி சொல்ல வருவதை புரிந்துகொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரு விரிவும், பரப்பும், கவிதையில் இல்லை. வெகுசில வரிகளிலேயே சொல்லவருவதை சொல்லியும் சொல்லாமலும் குறிப்பது கவிதை. இதனாலேயே கவிதையை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் சொல்வது இயலாத விஷயம் என்று வாதிடுபவர்கள் உண்டு.

பெட்டிக்கடை நாரணன்

நாரணன் பெட்டிக்கடையின்
நாமமே பரவலாச்சு.
இன்று கடன் இல்லை என்ற
எச்சரிக்கை எதிரே இருக்கும்
என் பேச்சு தேனாய்ச்சொட்டும்
குழைவிலே வாங்குவோர்கள்

கவிதைகள்

கட்டங்களின் நிறம் அழிந்து
வாழ்க்கைச்சதுரங்கம் கனக்க,
சிகப்பு சாயத்தில் குளித்து
கருப்புமல்லாது வெள்ளையுமல்லாது
தனித்து நிற்கிறாள்
சதுரங்க ராணி.

கவிதைகள்

உடலெங்கும் பூத்திருக்க
அறையெங்கும் வீசிக்கிடக்கும்
நாற்றத்துக்குள்ளிருந்து
கடவுள் என்பவன் பேசிய குரலது
எப்போதோ அறிந்திருந்த மொழியென
ஒரு யோசனை

கவிதைகள்

நான் எப்போதும் பேசியே பார்த்திராத
குணசேகரின் தங்கச்சிக்குள்
அம்மன் வந்துவிட
பக்கத்திலிருந்த மாரியின் நாத்திகம்
கரகத்தின் உச்சியில்
உட்கார்ந்திருந்த
பொய்க்கிளிபோலவே
எந்த மத்தளத்தின் கொட்டிற்கோ
அசைந்ததாய்த் தெரிந்தது!

கவிதைகள்

சில நிமிடங்களின் பின்
மழை மேகம் தாள்களின் எல்லா இடத்திலும் தாவி விட்டது
வெய்யிலை எழுத கொஞ்சமும் இடமில்லை.
தாள்கள் முழுவதும் ஈரமாகின
‘வானம் கரைந்து ஊத்துண்ணுது’ என்று
கவிதையின் கடைசி வரியை வாசித்துக்கொண்டு செல்கிறான்
எனக்குள் இருந்த வாசகன்

கவிதைகள்

அவன் பழத்தை கையில் எடுப்பதும்
வாயில் வைத்துக் கடிப்பதுமாக அக் காட்சி
குயிலின் கனவில் தோன்றிற்று
மறு நாள் அதிகாலை
தான் கண்ட கனவை விபரமாக கூறுகிறது குயில்
குயில் கூவுகிறது என்று எல்லோரும் ஏன் சொல்கிறீர்கள்

கவிதைகள்

அவள் கைகளில் இருக்கும் ஐந்து விரல்களையும்
ஒன்றிணைத்து என் கையில் வைக்கிறாள்
அது என் வலக்கரம்
என் வலக்கரத்தில் ஈச்சை மரம் ஒன்று பழங்களுடன்
நிற்பதைக் காணுகின்றேன்

கடற்குதிரை

பழக்கூழாலோ,கண்ணாடிக் குழம்பை ஊதியோ வடிவமைத்த
சதுரங்கக் குதிரைகளா?
குமுறும் ஆழியில்
பக்கவாட்டில் மட்டுமே தெரியும்
தன்னிரக்கக் கோமாளிகள்.

இரண்டு குளங்கள் மற்றும் சில கவிதைகள்

பிரக்ஞையற்ற பொழுதுகளில்
பறந்து போகிறது
ஒரு சொல்
அல்லது
ஒரு செய்கை.
சிறகால் வருடலாம்
நகங்கொண்டும் கீறலாமெனில்
கூடுகிறது கவனம்
பிரசவித்த பொறுப்பிற்காக.

மூன்று கவிதைகள்

என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக்கூத்தனும்
பேசிக்கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்

வெளியே, வெட்டவெளியில்

அந்தி ஆகவிருக்கிறது.நீ இப்போது போகவேண்டும்,
மீண்டும் உன் வழித்தடங்களைக் கண்டுகொண்டு: வயலில் கிடக்கும் துருபிடித்தக் கருவிகள்
மற்றும் ஏரிக்கு அந்த பக்கம் இருக்கும் வீடு, செம்பழுப்பாக,
சதுரமாக சரக்குபெட்டி போல திடமானதாக.

அனைத்தையும் கடந்ததைப் பற்ற நினைக்கும் கவிஞர்- டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர்

2011 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசை ஸ்வீடன் நாட்டுக் கவிஞரான டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமருக்கு வழங்கி இருப்பதாகச் சமீபத்தில் செய்தி கிட்டியதும், உலகெங்கும் இலக்கியவாதிகள் நடுவே வழக்கமாக எழும் சலசலப்பு எழுந்தது. இந்தியாவில், தமிழில் இவர் குறித்து ஏதும் அதுவரை பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் மேற்கில் கவிதைகளைப் படிப்பவர் நடுவே ட்ரான்ஸ்ட்ரமர் பற்றி நல்ல தகவலறிவு இருந்ததாகத் தெரிய வந்தது. இதர இலக்கிய வகைகளைப் படிப்பவர்களுக்கு இவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்பதைச் சுட்ட வேண்டும்.

வெர்மீயர்

காதுகளில் ர்ர்ர் என்ற ரீங்காரம்.ஆழமா? உயரமா?
அது அந்த சுவருக்கப்பாலிருந்து வரும் அழுத்தம்,
யதார்த்தத்தை மிதக்க வைத்து,
தூரிகையை நிலைக்க வைக்கும் அழுத்தம்.

சுற்றம்

முதல் நாளிரவு சாப்பாட்டில் திருப்தியின்மை கண்களில் தெரிய தெருக்கோடி முதலியார்
இன்னும் சில வருடங்களில் விபத்தில் உடல் சிதறப்போகிற சபாரி சூட் பழனி சித்தப்பா
குருப் போட்டோவிலும் கால் வீக்கம் தெரியும் வில்லுக்குறி அத்தை