கதவை மூடு
தெருநாற்றம்
உள்ளே வரும்
கதவைத் திற
அறைநாற்றம்
வெளியேபோகும்
கதவைத் திறக்காதே
கதவை மூடாதே
Category: கவிதை
ஒலிக்கலைஞனின் உதவியாள்
ஒரு குடை – அதைத் திறந்து மூடினால் பறவையின் சிறகடிப்பு கேட்கும்.
இரு கைகளில் அரைக்கோளத் தேங்காய் ஓட்டு மோதல்கள், விரைந்தோடும் புரவியின் குளம்பொலியாகும்.
கவிதைகள் – எம்.ராஜா
குதிரை ஒரு வினோத விலங்கு.
ஆட்டத்தை வென்ற களிப்பில்
சதுரங்கப் பலகையை விட்டு
கனைத்து வெளியேறுகிறேன்.
கவிதைகள் – கு. அழகர்சாமி
காடும் நிலா விளக்கைக்
கூடத் தூக்கிக் கொண்டு
முன் விரையும்.
அயல்நாட்டுக் கவிதைகள்
தனது வேரிட்ட தோட்டத்தையும், பேரக்குழந்தைகளையும், ஒருகாலத்தில்
அவளுடையவளாயிருந்த ஒருகாலத்தில்
கட்டுக்கடங்காத இளைஞனையும் அவள் நேசித்தாள்.
இந்தியக் கவிதைகள் – நேபாளி
கனவுகளின் தொடர்ச்சி
இரவு முழுவதும்
அவற்றை
தலையணைக்கடியில் புதைத்து விட்டு
எழுகிறேன்
அயல்நாட்டுக் கவிதை – ஆஸ்டின் ஸ்மித்
மாடிப்படிகளில் தவறி விழுந்தவர்
கீழே வேகமாகச் சரிந்து செல்வது போன்ற ஒலி தரும்
சகிக்க முடியாத பியானோ வாசிப்பும் தவிர
வேறு சப்தமில்லை
"வீடும் வெளியும்"-கவிதைகள்
சத்தம்போடாத மின்விசிறிகள்
இரக்கமற்றவை – உங்கள்
தனிமையைப் பகிர மறுப்பவை.
அறையின் சுவர்களின் வழியே
தண்டவாளங்களின் மீதேறி
வேறு உலகங்களைக் காண
அனுமதிக்காதவை.
கவிதைகள்
நிற்க தேவையற்ற நிலையத்தை
ரயில் பெட்டி
எத்தனை எளிதாக கடக்கிறது?
கவிதைகள்
ஆலமரத்திலிருந்தன
ஆயிரம் பறவைகள்
ஒன்றைச் சுட்டான் குறவன்
எஞ்சியவைகளை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
எரிமலையில் தொலைந்த காதலன் – இருந்தும், தொலையாத காதல்
ஒவ்வொரு துணுக்கையும்
குளிர்ந்த நீலப் பீங்கான் கிண்ணத்தில் சரித்து
பழச் சாறு குளமாய்த் தேங்க முழுப்பழத்தையும்
அதன் தோலினின்று பிரித்து
அதன் பின்பே அதை உண்பது.
எத்தனை இனிமையான
ஓர் ஒழுங்கு
துல்லியமாய் அர்த்தமற்றதாய்
கவிதைகள்
எதிலும்-
முளைத்தெழ
மழைக்காக
காத்திருக்கும் விதையென
அடிநெஞ்சில் உறங்கும்
உன் விழிகள்.
கவிதைகள்
நகரக் கோப்பையினுள்
தளும்பாமல் நிறையுமிருள்.
கவிதைகள்
இரவும் அல்லாத பகலும் அல்லாததொரு வெளியிலிருந்து
மெள்ள மெள்ள அவிழ்ந்து கொண்டிருக்கிறேன்
புதுமைப்பித்தன் கவிதைகள்
“புதுமைப்பித்தன் தன் கிண்டலுக்கும் கேலிக்கும் வாகனமாக, சித்தர் பாடல்களில் ஆதாரம் தேடிய ஒரு செய்யுள் உருவத்தைக் கையாண்டு பார்த்தார். எழுதியுள்ள அளவில் அவர் வெற்றிகண்டார் என்றே சொல்ல வேண்டும். மாகாவியம் என்ற அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம்.” – க.நா.சு
கவிதைகள்
இரவு இறங்கியிருக்கும்
இந்தப் பூங்காவில்
எத்தனையோ மரங்களில்
எந்த மரம் சலித்திருக்கும்?
கவிதைகள்
இடி மின்னலை கற்பனை செய்யும்போது எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
இறுதியாக மழை உங்கள் கண்களின் வழியாகத்தான் பெய்யும்
கவிதைகள்
அந்த நாளை
அந்த கணத்துடன்
மடித்து வைத்திருந்தேன்,
ஒரு பாடலுக்குள். – அது
இனிய நினைவுகளைப் போல
பொலிந்துகொண்டிருந்த
ஜன்னலருகே நின்றிருந்தது.
கவிமொழியைக் கைமாற்ற முடியுமா? டெப்ரா ஏய்கர் கவிதையை முன்வைத்து…
கவிதை மொழிபெயர்ப்பு இன்னும் சங்கடமானது. கட்டுரைகளிலும், கதைகளிலும் அதன் படைப்பாளி சொல்ல வருவதை புரிந்துகொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரு விரிவும், பரப்பும், கவிதையில் இல்லை. வெகுசில வரிகளிலேயே சொல்லவருவதை சொல்லியும் சொல்லாமலும் குறிப்பது கவிதை. இதனாலேயே கவிதையை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் சொல்வது இயலாத விஷயம் என்று வாதிடுபவர்கள் உண்டு.
கவிதைகள்
கால்களும் நிழல்களும்
வலை பின்னி
பந்துதைத்துத் திரிய
நான் மட்டும்
அசைந்தேன், நடந்தேன், ஓடித் தவித்தேன்.
கவிதைகள்
எழுதி முடித்ததும்
எனக்காக உன் முகவரியைத்
திருப்பினாய்.
அதுவரை,
நாம் பேசிக்கொண்டிருந்தோம்,
நினைவிருக்கிறதா?
உன் தலைகீழ்
முகவரியில்.
பெட்டிக்கடை நாரணன்
நாரணன் பெட்டிக்கடையின்
நாமமே பரவலாச்சு.
இன்று கடன் இல்லை என்ற
எச்சரிக்கை எதிரே இருக்கும்
என் பேச்சு தேனாய்ச்சொட்டும்
குழைவிலே வாங்குவோர்கள்
இரவின் திவலைகள்
இதோ உடன் நடக்கும் உன் முகம்
நான் முன்பு அறியாதது,
இப்பாதையில் என்னுடன்
எது வரையிலும்
உடன்வருவாய் என்றும் தெரியாது
கவிதைகள்
கட்டங்களின் நிறம் அழிந்து
வாழ்க்கைச்சதுரங்கம் கனக்க,
சிகப்பு சாயத்தில் குளித்து
கருப்புமல்லாது வெள்ளையுமல்லாது
தனித்து நிற்கிறாள்
சதுரங்க ராணி.
கவிதைகள்
உடலெங்கும் பூத்திருக்க
அறையெங்கும் வீசிக்கிடக்கும்
நாற்றத்துக்குள்ளிருந்து
கடவுள் என்பவன் பேசிய குரலது
எப்போதோ அறிந்திருந்த மொழியென
ஒரு யோசனை
கவிதைகள்
நான் எப்போதும் பேசியே பார்த்திராத
குணசேகரின் தங்கச்சிக்குள்
அம்மன் வந்துவிட
பக்கத்திலிருந்த மாரியின் நாத்திகம்
கரகத்தின் உச்சியில்
உட்கார்ந்திருந்த
பொய்க்கிளிபோலவே
எந்த மத்தளத்தின் கொட்டிற்கோ
அசைந்ததாய்த் தெரிந்தது!
கவிதைகள்
சில நிமிடங்களின் பின்
மழை மேகம் தாள்களின் எல்லா இடத்திலும் தாவி விட்டது
வெய்யிலை எழுத கொஞ்சமும் இடமில்லை.
தாள்கள் முழுவதும் ஈரமாகின
‘வானம் கரைந்து ஊத்துண்ணுது’ என்று
கவிதையின் கடைசி வரியை வாசித்துக்கொண்டு செல்கிறான்
எனக்குள் இருந்த வாசகன்
கவிதைகள்
அவன் பழத்தை கையில் எடுப்பதும்
வாயில் வைத்துக் கடிப்பதுமாக அக் காட்சி
குயிலின் கனவில் தோன்றிற்று
மறு நாள் அதிகாலை
தான் கண்ட கனவை விபரமாக கூறுகிறது குயில்
குயில் கூவுகிறது என்று எல்லோரும் ஏன் சொல்கிறீர்கள்
கவிதைகள்
உதைத்தும் உடையாத
சாளரக் கண்ணாடி மீது
ஊர்ந்து வழிகிறது
ஒரு கறுப்புக் கண்ணீர்த் துளி.
கவிதைகள்
அந்த வளையம் ,
அழுத்தமாகத் தாழிடத்
தோதாக -தன்னை
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காகவே
காற்றில் அசைந்து அசைந்து
முனகுகிறது.
கவிதைகள்
கூர் கொண்டு
காத்திருப்பவை
பாறை விளிம்புகளா?
புலியின் நகங்களா?
கவிதைகள்
அதிக சக்தி கொண்டவர்
ஆளும் அரசியாக
அரியணைக் குடும்பமே
கட்டிக் காக்கப்பட வேண்டிய
ராஜாதி ராஜவாக.
கவிதைகள்
அவள் கைகளில் இருக்கும் ஐந்து விரல்களையும்
ஒன்றிணைத்து என் கையில் வைக்கிறாள்
அது என் வலக்கரம்
என் வலக்கரத்தில் ஈச்சை மரம் ஒன்று பழங்களுடன்
நிற்பதைக் காணுகின்றேன்
கவிதைகள்
கண்ணீர்த் தவிர வேறெதுவுமில்லாத
இரவிலிருந்து வெளிப்படும்
வன்மத்தை எரிக்க
ஓராயிரம் காடுகளை
தீயிட வேண்டும்
கடற்குதிரை
பழக்கூழாலோ,கண்ணாடிக் குழம்பை ஊதியோ வடிவமைத்த
சதுரங்கக் குதிரைகளா?
குமுறும் ஆழியில்
பக்கவாட்டில் மட்டுமே தெரியும்
தன்னிரக்கக் கோமாளிகள்.
கவிதைகள்
தழல் பரவ பரவ
என்னுடலும் தழலானது
அக்னியின் கோபத்தில்
என்னுடல் கிளர்ந்தபோது
அக்னிக்கும் எனக்குமான
சிறிய இடைவெளியும் அற்றுப்போனது
கவிதைகள்
மொட்டைமாடியில், இரவு
கரும்பூனைகளென
பதுங்கியிருக்கும்.
இரு கவிதைகள்
விரல்களை விரித்து எண்ணியது.
பின், விரல்களை மடித்து மூடியது.
மீண்டும்,
வெயிலில் நின்று
எறும்புகள் கோடாக
நகர்வதை பார்க்கத்
தொடங்கியது.
நான்கு கவிதைகள்
உதடு துடிக்க
உற்றுப் பார்க்கின்றன
திறக்கப்படாத புத்தகங்கள்.
மூடிய புத்தகங்களின் மௌனம்
காந்தப்புலமாய் கவர்ந்திழுக்கிறது.
மரம் மெல்ல பறக்கும்
ஒரு
அற்புதத்துளி போதும்
வேர்களை விடுவிக்க
பெருங்கருணைமுன்
ஆயிரங்கரமுயர்த்தி
மன்றாடும் மரம்.
இரண்டு குளங்கள் மற்றும் சில கவிதைகள்
பிரக்ஞையற்ற பொழுதுகளில்
பறந்து போகிறது
ஒரு சொல்
அல்லது
ஒரு செய்கை.
சிறகால் வருடலாம்
நகங்கொண்டும் கீறலாமெனில்
கூடுகிறது கவனம்
பிரசவித்த பொறுப்பிற்காக.
நெரிசல்
தினமும் பல்கிப்பெருகும் போக்குவரத்தால்
பந்தயமாய் மருவிய பயணத்தில்
நொந்து வெந்து புழுவாய் ஊர்கையில்
ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறான்..,
மூன்று கவிதைகள்
என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக்கூத்தனும்
பேசிக்கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்
மழை – கவிதைகள்
சத்தம் மழையென பெய்யும்போது
நானும் வீடென நனைகிறேன்.
வெளியே, வெட்டவெளியில்
அந்தி ஆகவிருக்கிறது.நீ இப்போது போகவேண்டும்,
மீண்டும் உன் வழித்தடங்களைக் கண்டுகொண்டு: வயலில் கிடக்கும் துருபிடித்தக் கருவிகள்
மற்றும் ஏரிக்கு அந்த பக்கம் இருக்கும் வீடு, செம்பழுப்பாக,
சதுரமாக சரக்குபெட்டி போல திடமானதாக.
அனைத்தையும் கடந்ததைப் பற்ற நினைக்கும் கவிஞர்- டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர்
2011 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசை ஸ்வீடன் நாட்டுக் கவிஞரான டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமருக்கு வழங்கி இருப்பதாகச் சமீபத்தில் செய்தி கிட்டியதும், உலகெங்கும் இலக்கியவாதிகள் நடுவே வழக்கமாக எழும் சலசலப்பு எழுந்தது. இந்தியாவில், தமிழில் இவர் குறித்து ஏதும் அதுவரை பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் மேற்கில் கவிதைகளைப் படிப்பவர் நடுவே ட்ரான்ஸ்ட்ரமர் பற்றி நல்ல தகவலறிவு இருந்ததாகத் தெரிய வந்தது. இதர இலக்கிய வகைகளைப் படிப்பவர்களுக்கு இவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்பதைச் சுட்ட வேண்டும்.
மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)
விரி சிரிப்பை, சுக ஒளியைப்
பரப்பி வரும் சிறு குழந்தை
மழைப் பூக்கள்; பூ மழைகள்.
வெர்மீயர்
காதுகளில் ர்ர்ர் என்ற ரீங்காரம்.ஆழமா? உயரமா?
அது அந்த சுவருக்கப்பாலிருந்து வரும் அழுத்தம்,
யதார்த்தத்தை மிதக்க வைத்து,
தூரிகையை நிலைக்க வைக்கும் அழுத்தம்.
சுற்றம்
முதல் நாளிரவு சாப்பாட்டில் திருப்தியின்மை கண்களில் தெரிய தெருக்கோடி முதலியார்
இன்னும் சில வருடங்களில் விபத்தில் உடல் சிதறப்போகிற சபாரி சூட் பழனி சித்தப்பா
குருப் போட்டோவிலும் கால் வீக்கம் தெரியும் வில்லுக்குறி அத்தை
கொடைக்கானல்
தண்ணீர்ப் பூக்களின்
பரஸ்பர பரிமாறல்களுடன்
கூச்சலிடும் குழந்தைகளின்
குதூகலத்தை ரசித்தபடி
தள்ளாத வயது படகோட்டி.
