அந்தச் செடியின் ஜீவன்
வானம் பார்க்கும் இளமிலைகளில்
தீரா நடனமாடிக்கொண்டிருந்தது
குருத்தொன்று தலையில்
பொங்கியெழத் தயாராய்.
Category: கவிதை
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
காடும்..
கூடும்..
பெருந்தேடலானதால்
பறத்தல் மறந்து
போயிருந்தது
நினைவில்
காடுள்ள பறவைக்கு
ஒஹையோ நெடுஞ்சாலையில் அபோலோ
கடல் காக்கும் ரகசியங்கள் முத்தும் பவழமும் அல்ல, அது கொண்ட உயிர்களும், சிலப்பதிகாரம், டெம்பெஸ்ட், மோபி டிக் என்று நம் இலக்கியங்கள் வரையும் பேரிழப்புகள், உடைந்த கனவுகளின் சித்திரங்களும்தான். கடல் ரகசியங்களின் நினைவுகளைக் கண்ணுறும் வகையில் புலப்படுத்தும் தன்மை கொண்ட விடியல் சாதாரண ஒன்றல்ல, அது சாலையின் (freeway) குறுக்கே விழுந்து கிடக்கிறது என்றால் அதன் பொருளும் அவ்வளவு மகிழ்ச்சிக்கு உரியது அல்ல- கடல் கொண்ட கப்பல்களின் கூடுகள் போல் துருவேறிய, வெறிச்சோடிய உலகில் ஒளி பாய்ச்சுகிறது இந்த விடியல்.
பெரும்பாதை
விழிக்கும் போதெல்லாம்
தலைக்கு மேல்
தலைகீழாய் சுழலும்
பழைய முத்தங்களின்
பல்லிச் சத்தம்
லாவண்யா சத்யநாதன் கவிதைகள்
காற்று நெருப்பாகும்
காலமொன்றில்
குட்டையானது குளம்.
முகில்கள் மழைவர மருள
மந்திரம் ஜெபித்தன மீன்கள்.
மலைமேல் பறக்கும் வீடு, பிறந்தநாள் பலூன் & நீரால் நிறைந்தவை
பார்த்திருக்க
நீராய் நிறைந்தெழுந்து
வானம் முழுதும்
நிரம்பிய குளத்திற்க்குள்
அவன்
ஏற்கனவே குதித்திருந்தான்
மூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்
ஆறு கற்கள் : Ao நாகர்கள் வட கிழக்கு இந்தியா நாகலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட பெரும்பான்மை நாகர் இனப் பிரிவு. Ao நாகா தொன்மத்தின் படி அவர்களின் மூதாதையர் (ஆண் -3, பெண் -3) ஆறு கற்களில் இருந்து உதித்தவர்கள். அவர்கள் இயற்கையை வழிபட்டனர்.
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
சாலையில் நடந்த மக்கள்
ஈஷர் ஓவியம் போல்
இங்கும் அங்கும் என
நடந்துகொண்டிருந்தார்கள்
அது எது
எனக்குக் கேட்காத ஒன்று
யாரோ ஒருவர் தனித்து
கேட்டுக்கொண்டிருக்கிறார்
காலம் உறைந்த வீடு & தவறுகளும் ரகசியங்களும்
தவறுகளை
ரகசியங்களாகவே
புதைப்பதற்காக
மறைக்கப்படுகிற உண்மைகள்
பொய்களாகப் பூத்து நிற்க
சொல்லப்படுகிற பொய்களோ
கவிதைகள்
வாழ்நாளில் உங்களுக்கு ஏற்பட்ட துயர சம்பவங்களை மனதில் இருத்தி
ஒரு சொட்டு மாறாமல்
அப்படியே கண்களில் கொண்டு வந்து உட்கார வையுங்களென்றதும்
எல்லாருக்கும் கண்கள் சிவீரென்று ஆனது
என் சிவப்பினை அந்தச் சிவப்புகளோடு ஒப்பு செய்து பார்த்தேன்
சுவை & தொடக்கம்
மலைக்கோயில்
தரிசனம் முடிந்து கீழிறங்கும்
பக்தர்களுக்கென காத்திருக்கின்றன
கொழுத்த கோயில் புறாக்கள்
திக்குதல் – கே.சட்சிதானந்தன்
திக்குதல் ஓர் ஊனமல்ல.
அது ஒரு பேச்சு முறை.
திக்குதல் என்பது சொல்லுக்கும் அதன் பொருளுக்கும்
இடையே வீழும் மௌனம்
நானாகிப் போனது
அப்பாவின் துணையோடு
ததும்பி வழியும் நீரமிலத்தின்
கரைமோதும் ஓசையிரவு.
சுகுமாரனின் ‘கோடை காலக் குறிப்புகள்’ வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்
மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் (1995-2000) இலக்கியம் எனக்கு அறிமுகமானது. ஜெயகாந்தனின் சிறுகதைகள் என்னுள் வலுவாக வினையாற்றி ரோடுகளையும் நாய்களையும் பிச்சைக்காரர்களையும் வேசிகளையும் உற்று நோக்கவும் மதிப்புக்கொடுக்கவும் கற்றுக் கொடுத்தன. ஜெயகாந்தனின் நூல்களை வாங்க மீனாட்சி புத்தக நிலையத்தைத் தேடி அலைந்தேன். அதன் பயனாக சர்வோதய “சுகுமாரனின் ‘கோடை காலக் குறிப்புகள்’ வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்”
தெருப் பையன்…
நேற்றைய நாள்
கடந்து,
இன்றும் அதே போல்,
ஏக அவசரத்தில் அவரவர்.
புனலாடுதல்
மலைக்கருவில் உதித்த
நதிப்பெண்கள் மகிழ்வோடு
நடனமாடிக்கொண்டு
புனலாட செல்கின்றன
கடல்நீரில்…
ராம்கரூவின் வாரிசுகள்
துன்புறுவது மடமை என்று
களித்திருக்கும் மக்களே!
துக்கித்திருப்பது
ராம்கரூசியர்களின் உரிமை.
அதை மறுக்காதீர்.
லாவண்யா சத்யநாதன் கவிதைகள்
காகங்களுக்கு
சோறு வைத்தேன்.
புறாக்கள் புசித்தன.
காகங்களுக்கு
சோறு வைத்தேன்
மைனாக்கள் உண்டன.
காகங்களுக்கு
சோறு வைத்தேன்.
அணில்கள் தின்றன.
ப. ஆனந்த் கவிதைகள்
இருபுறமும் புரண்டு ஆடிக்கொண்டு
பால்புட்டியை தானே எடுத்து குடித்தபடியே இருந்தவன்
தூங்கும்வரை கடந்த
அமைதியான சில நிமிடங்கள்
அம்மாவாய் இருந்தான்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
பறந்து வந்த பறவை
அமர்ந்த கிளைக்கு
கணத்தில் உயிர் வந்து போனது
இலைகளுக்கும் முட்களுக்கும்
நடுவில் பூத்த ரோஜா
அதனை சமன் செய்தது
கவிப்ரியா கவிதைகள்
பாகானாய் மாறி ஏறிக் கொள்கிறாள் செல்ல மகள்
கையால் அடித்து யானையை நகர செய்கிறாய்
ஒவ்வொரு அடியிலும் இதம் பெறுகிறான்
பெற்றவன் என்பதற்காக…
செவ்வரத்தை
ஆரம்பத்தில் முற்றத்தில்
எந்தப்பூவும் பூத்திருக்கவில்லை
வெறிச்சோடியிருந்த முற்றத்தில்
நாள் பார்த்து, வளர்பிறை காலமொன்றில்
அவள்தான்
கவி வாழ்வு
மழையில் நடுங்கியபடி நாம் நின்றுகொண்டிருந்த காலத்தில்
தொட்டுக்கொள்ள முடியாத ஜிமிக்கிகள்
அழகாகப் பேசிக் கொண்டிருந்தன
குமார் சேகரன் கவிதைகள்
விருப்பு வெறுப்பு
கலந்த சொற்களை
மெளன பெட்டிக்குள் போட்டு
தாழிட்டு பூட்டொன்றால்
பூட்டி வைத்தேன்
ஓர் அபூர்வ விலங்கு
அதோடு
வாடிக்கையாக வந்து செல்பவர்கள்
போலிஸுடன்
உடன்கட்டை ஏறுதலும்
போலிஸ் சிலரோடு
உடன்போக்கு செல்லுதலுமான
கயமைகளை
ஆழ்ந்தவதானித்துக்கொண்டு
வறியயுண்ணியாகவும்
மிரட்டுண்ணியாகவும்
நிறை
ஒவ்வொரு குறையும்
மிகச்சரியாய் இருக்கிறது
அவன் அவனைப்
பொருத்தி நிரப்பும்
சிறுபள்ளமென.
எழுத்து, மனிதன், நாய்
நான் அந்த எழுத்துக்களின்
மீது அடர்த்தியான இலைகள்
கொண்ட ஒரு மரத்தை வைக்கிறேன்
பிறகு ஒரு தெருவை வைக்கிறேன்
….
இப்பொழுது அந்த தெருவில்
நடந்து சென்ற அந்த மனிதர்கள்
அந்த இரவிலும்
அதற்கு முன் அந்த இருளிலும்
…
திடீரென மழை வரவே
எல்லோரும் நனைந்தார்கள்
எழுதிய காகிதத்தில்
இருந்தவர்களும் நனைந்தார்கள்
ரயிலோடு நீந்திப் போனவன்
பல வருடங்களுக்குப் பிறகு
பார்க்கச் சுருங்கியிருக்கிறது
நான் வளர்ந்த வீடு
நான் முடிவில்லாமல்
தவழ்ந்த அறை
இப்போது எனக்கு மட்டும்
படுக்கக் கொள்கிறது
மொழியின் ரகசியம் – கவிதைகள்
உலகத்தில் ஒருவனாக
நான் சுவாசிக்கும் காற்று
பிரபஞ்சம் எனக்களித்த உணவு
என் துயரம் என்னை
ஒரு மரம் போல்
ஆழமாக வேரூன்றச் செய்தது
தரிசனம் – கவிதைகள்
கடவுளின் வேண்டுதல்
பொதுவாகத்தானிருக்கிறது
கோவிலுக்கு வெளியே
கையேந்துபவர்களைப் பொறுத்து…
ஈமக்காற்றின் துமி- கவிதைகள்
அவர் படுத்துறங்கிய இடம்
சமாதியைப்போல் சற்று
மேடுதட்டுகிறது
அரவமின்றி ஆடிக்கொண்டிருக்கும்
சாளரத்தின் வழி
மின்சாரமற்ற புழுக்கத்தை தணிப்பதுபோல்
குமிழிகள் சுமக்கும் பால்யம்
எல்லோரும்
எல்லாமும் இருக்குமிடத்தில்
தனியாய்
தனிமையாய்
இருப்பதென்பது
பெரிய கொடுமை
அலைகள்
நிச்சலனமாய்
ஏந்திக்கொள்கிறது
நீண்ட மடி
பெருந்துயரென
வழிவிட்டு வழிவிட்டு
வருகிறது
கரைதட்டி எழவியலா
அலைகள்
வ. அதியமான் கவிதைகள்
ஒளிவிடும்
சின்னஞ்சிறு
கூழாங்கல்லும்
இருள் விழுங்கும்
பெருங்குன்றும்
குளிரக் குளிர
புனலாடி
அமர்ந்திருப்பது
ஒரே கரையில் தான்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அந்த அறையில் இருந்தவனை
புத்தகத்தின் வழியே
வெளி உலகிற்கு
அழைத்துச் சென்ற அது
அவனை மீண்டும்
அவ்வறைக்கே அழைத்து வந்து
எழுதச் சொல்லியது
திரை விலகிய அறையின் அதிசயங்கள்
கண்ணாடி இழைகளின் நெடுஞ்சாலைகளில்
முட்டி மோதிக்கொண்டு
முடிவற்று அலைந்த
பதில் வரப்பெறாத
அஞ்சல்களின் சமிக்ஞைகள்,
உருவம் பெற்று
பேச ஆரம்பித்து விட்டன
ஒலிபெருக்கியில்.
சரவணன் அபி கவிதைகள்
சலசலத்து விரையும் ஆற்றின் போக்கில்
ஓரிடம் சிக்குண்டு
மேனியுரு மாறும் கல்லின்
போக்கற்ற தீர்வில்
அமைந்திருக்கிறது
நகர்ந்து செல்வதும்
நிலைகொண்டு எதிர்நிற்பதற்குமான
தெளிவு
கை தவறிய மூக்குக் கண்ணாடியின் ஞானோபதேசம்
கார்த்திகையின் பெருக்கில்
தாவிக் குதிக்கும்
கெண்டையாக,
குளத்து நீரில்
நழுவிச் செல்லும்
அர்த்தங்கள்.
வேணு தயாநிதி கவிதைகள்
பனி பூத்து
பனி கொழித்து
உப்பளம் போல்
நிறைந்து விட்ட
நடைபாதையை தாண்டி
சாலையின் ஓரத்தில்
தியானித்து நிற்கும்,
பிடுங்கி
தலைகீழாய் நட்டது போல்
இலையின்றி நிற்கும்
பிர்ச் மரம்.
வ. அதியமான் கவிதைகள்
ஒவ்வொரு
அதிகாலையிலும்
அதிசுத்தமாய்
கழுவி முடிக்கும்
என் கப்பரைக்கு
ஒவ்வொரு
அதிகாலையிலும்
எங்கோ ஓர் உலை
கொதிக்கிறது
இருப்பு
வார்த்தையற்ற மெளனமும்
காட்சியற்ற சூன்யமும்
முற்றிலும் என்னை நிறைத்திருக்க
நினைவற்ற நிலை அது.
அங்கே காலம் ஒரு பொருட்டல்ல.
யுகம் யுகமாய் நானங்கே
இருந்திருக்கிறேன்.
ஆனந்த் குமார் கவிதைகள்
ஒழுங்குபடுத்தினேன்
ஒவ்வொரு பொருளையும்
அதனதன் இடத்தில்.
சிறு இடைவெளி போதும்
ஒவ்வொன்றும்
அதனதன் தனிமையில்.
சரியான இடத்தில் அமர்ந்தவுடன்
ஒவ்வொரு பொருளும்
அமைதி கொள்கிறது.
ஷாங்க்யா கோஷ் கவிதைகள்
தலையில்
மின்மினிப்பூச்சிகள் சூடி.
உயரே
ஓரியனின் வாள்
போர் முடிந்து
காலம்
அமைதிக்கு திரும்பிவிட்டது
சுகாந்தொ பட்டாச்சார்யா கவிதைகள்
அக்குழந்தையின் நம்பிக்கையூட்டும் வரும் காலத்தின் அறிகுறிகளை
என்னால் பார்க்க முடிகிறது.
புதிய குழந்தை வந்து சேர்ந்திருக்கிறாள்.
நாம் அவளுக்கான இடத்தைத் தயார் செய்ய வேண்டும்;
பின் இந்தப் பழம்பூமியின்
சிதைந்தழிந்த தரிசு நிலத்துக்குள் நகர்ந்து விட வேண்டும்.
மூன்று கவிதைகள்
ஒரு கிராமம் நதிக்குள்ளாக ஒரு கல்லைப்போல விழுகிறது
மேலும் நதி தனது திசையை மாற்றிக்கொள்கிறது
அந்நேரத்திலிருந்து அங்கே குன்றிலிருந்து வழியும் நீரினால் உருவான நீரோடை ஒன்று என் வீடிருந்த இடத்தை பிடித்துக்கொண்டது
நான் மூழ்கவில்லை
யசோதராவின் புன்னகை
என்னையறியாமலே அனிச்சையாய் எழுந்த என் முகத்தின் கேள்விக்குறியைக் கண்டுகொண்ட அந்த சுட்டிப்பெண் சொன்னாள்: “ஆன்ட்டி! எனக்கு எட்டு வயசாக இருக்கும்போது எங்கப்பா திடீர்னு வீட்டை விட்டுப்போய் சன்யாசம் வாங்கிண்டுட்டார். என் தங்கைக்கு அப்போ ஆறு வயசு. அவர் இப்போ எங்கே என்று யாருக்கும் தெரியாது.”
படைப்பின் தருணம்
அண்டை விலங்குகளின் மெல்லிய உரையாடல் முயற்சிகள்
பூந்தொட்டியிலிருக்கும் பூவின் அர்த்தமற்ற இளிப்பு—
மெல்ல மீண்டு, வடிவம் கொண்டு, வாழ்வை மீட்டெடுப்பது போல்;
அனைத்தும் ஒன்றாக — கருஞ்சிவப்பு மலர்களும், ரகசிய புழுக்களும்
சாத்தியமற்ற அனைத்தும்.
என்றும் புதிய புதுமையான தாகூரின் நித்திய ஒளி!
தாகூர் விரிவாகச் சொல்கிறார்: “நம்முடைய ஆன்மாவின் வளர்ச்சி என்பது கச்சிதமான ஒரு கவிதையைப் போன்றது. அது எல்லையற்ற கருத்துருக்களைக் கொண்டிருக்கிறது; இது ஒருமுறை உணரப்படும்போது, அனைத்து இயக்கங்களையும் அர்த்தமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக்குகிறது.”
ஜீபனானந்தா தாஸ் கவிதைகள்
ஒரு பனிக்கால அந்தியில்,
பரிச்சயமானவரின் மரணப்படுக்கைக்கு அருகே
குளிர்ந்த கமலாப்பழத்தின் மிருதுவான சுளையாக
வருவேனா.
நவநீதா தேவ் சென்: ஐந்து கவிதைகள்
என் வனவாசம் முடிந்துவிட்டது, தாயே
வனம்
இப்போது
எனக்குள் வாழ்கிறது.
