வேணு வேட்ராயன் கவிதை

உயிர்களில் உன்னதம்
மலர் என்றேன்.
உனைநான்
சொல்லாமல் நீங்கினேன்.

நாஞ்சில் நாடன் கவிதைகள்

பத்தொன்பதாவது பிரபஞ்ச மூத்தமொழிச் சம்மேளனம்
செவ்வாய்க் கோளில் நடத்தத் திட்டம்
அரசியல்வாதிகள் அவரடியார்கள்
தம்மின அறிஞர் துதிப் பேராசிரியர்
கூத்தாட்டு மன்றம் பிரசங்கியர்
பாதுகை சுமக்கும் பாவலர் பங்கேற்பர்
கலந்து கொண்டு கட்டுரை படிப்போர்
ஆய்வுச் சுருக்கம் அறுபத்தேழு சொற்களில்
அனுப்பி வைக்கவும்

நா. சந்திரசேகரன் கவிதை

அலைகளின் இடைவெளியில்
விரைந்து வளைபுகும் சிறுநண்டுகள்.
அப்போதுதான் உணர்ந்தேன்
அலை கொணரும் வரிகள்
வேறு வேறென!
ஆமென்று ஆர்ப்பரித்து
ஆடை நனைத்துச் சென்றது ஓரலை

ச. சக்தி அழகு – கவிதைகள்

அரசமர நிழல்
தனிமையில்
விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தையின் நிழல்
ஆசைகளற்ற ஒரு புத்தனின் சாயல்

ஆர். வத்ஸலா கவிதைகள்

என்ன சாக்கு சொல்வது
எண்ணெய்க் குப்பியுடன்
எனக்கு அம்மாவாகி
எதிரில் நிற்கும்
எனது ஐம்பது வயது ‌மகளிடம்

தமிழ்மணி கவிதைகள்

பட்டினியான நாட்களை அடிக்கடி
கடந்து விரைபவன் அவன்
அன்றைக்குத்தான் புதிதாக பசியை உணர்ந்த ஒருவர் கைகளை நீட்டினார்
தற்போதைக்கு பசியாற்றும் தேநீரை
வாங்கிக்கொண்டு வந்தவனைப் பார்த்து
உன்னைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் தம்பி
இந்த உலகம்
அழகாய் இருக்கிறது என்றார்

சுஜய் ரகு கவிதைகள்

கதவைத் திறந்த போது
அரூபம் நின்று
புரட்டுவதைப்போல
திறந்தும் மூடியுமிருந்தது
மேசை மீதிருந்த
புத்தகத் தாள்கள்

பாரிய காதல்

மகிழ்ந்த பொழுதின்
நினைவுகளின்
சாரம் தின்று
உடற்க்கூட்டில்
உயிரென ஒன்று
வாழ்ந்து.
ஒவ்வொரு முறை
வீடு மாற்றும்போதும்
ஒடித்து
உருவாக்கிய
ஒற்றைச்
செம்பருத்தி செடி
உருமாற்றிவிட்டது

சோழன் கவிதைகள்

காரிகை
வேழாழி மணலில்
தன் பாதங்களை எடுத்து
தொட்டு தொட்டு
அலைகளிடம் சென்றாள்
கருமை நிறம் கொண்ட
மணிகள் நனைந்தன

மௌனம்

எத்தனை ஆண்டுகளுக்குப் பின்
சந்திக்கிறோம் நாம்
முதன்முறையாக பார்த்தது போல
அதே பட்டாம்பூச்சி
காலம் கொஞ்சம் கனிந்திருக்கலாம்
இரங்கி வந்து தணிந்திருக்கலாம்

ஆற்றுப்படுதலின் குளிர்மையும் சூடேற்றிவிடும் சொற்களும்

கீறலில்
பீறிடும் வார்த்தைகள்
சிதைக்கும்
தருணத்தில்
பழைய
களிம்பைத்தான் தடவுகிறீர்கள்
தவறுகள்
என்னுடையதென.

குமார சம்பவம் மஹா காவ்யம்

ஈசனின் பிரிய பத்னியாக அவருடைய மடியில் அமர ஏதுவாக இருக்கவே என்பது போல இடை பாகமும் பின்னழகும் விளங்கின. அடுத்து அழகிய நாபியும், அதைச் சுற்றி ரோம ராசியும், மேகலையில் பதித்த மணி போலவும், வளித்ரயம் என்ற கோடுகள், அழகிய ஸ்தனங்கள், உத்பலம் போன்ற கண்கள் என  ஒவ்வொரு அங்கமும் யௌவனம் வந்து விட்டதை பறை சாற்றின போலும்

தலை துண்டிக்கப்பட்ட புத்தர்

சப்தமில்லாததால்
நிசப்தமாய் இருக்கும்
நிசப்தமாய்
இல்லாது
நிசப்தமாய் இருக்கிறதால்
நிசப்தமாய் இருக்கிற
நிசப்தத்துக்குள்
என்னிரு விழிகள் செவிமடுக்க-
மேனியுலர்ந்து
பழுத்துக் கொண்டே இருக்கும்

தாத்தா

வளர்ந்தாலும்
எப்போதும்
தனது குழந்தையென
தாத்தாவின் காலடிகளை
நெஞ்சில் சுமக்கிறாள்
பூமித்தாய்

துக்காராம் கவிதைகள்

எல்லா மனிதர்களும்
எனக்கு கடவுளைப் போன்ற
கடவுளர்கள்!
இனியும் என் கண்களுக்கு
தெரியாது குற்றமும் தவறும்.
இத் துயரமான உலகில் வாழ்க்கை இப்போது முடிவில்லா மகிழ்ச்சி;

சக்தியின் கவிதைகள்

கோடை வெயிலின் தாக்கத்தால்
தன்னுள் பொதிந்து
பாதுகாத்து அடைகாக்கிறது
மழை நீரால் உயிர்பெற்ற
ஆற்று மணல்

சுகந்தம் கூட்டும் சொற்குவியல்

உருகித் திளைக்கும்
காதல் வரிகளில்
உள்ளம் பூரிக்கிறது
நேசத்தில்
நெகிழும் நெஞ்சத்தை
ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுது
உன்னோடு

கோடைக் கவிதைகள்

இக்கணம்,
விழுகிறான் சூரியன்.
பெரிய சிவப்பு உருண்டை.
பகல் கனிந்த இனிப்புடன்,
மென்காற்றின் இதத்துடன்.

குறுங்கவிதைகள்- கு.அழகர்சாமி

மற்ற தெருக்கள் முறையிட்டும்
ஒரு தெரு வழியே தான்
நிதம் நடை செல்கிறேன்-
ஆனால்
ஒருவர் கூட
இன்னும்
சிநேகிதமாகாமல்

இரா. இராகுலன் கவிதைகள்

உடல் உள்ளத்தைப் பார்த்துக்கொள்வதற்கு
அது இங்கிங்கு இருக்க வேண்டும்
அதற்கு இதிது வேண்டுமென
எதையெதையோ செய்கிறேன்
உடல் உள்ளத்தைச் சுற்றி
இவரிவர்கள் இதிது
இருக்க வேண்டுமென

சந்திரசேகர் கவிதைகள்

தீராக் கனவின் பச்சையை
எங்கே வைப்பது
இன்னொரு கனவில்
கனவுகளை வேண்டி
கண்களை மூட
பகல் தீராமல் வதைக்கிறது
இரவுகள் தொலைந்து
கனவுகள் தீரும் நாளில்

லாவண்யா சத்யநாதன் கவிதைகள்

படித்ததை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தால்
அறிவு வளர்ந்த அறிகுறிகளாகக் கருதலாம்
அறிகுறிகள் எளிதில் தென்படுவதில்லை
பிறகு புத்தகங்கள் படிப்பதால் என்ன நன்மை?

கு.அழகர்சாமி கவிதைகள்

கண்ணிமைக்காமல்-
கண்டு கொண்டே இருக்கிறேன்
இன்னும் பறந்து போகாது
கொத்திக் கொண்டே இருப்பதை-

வெளிமானின் வெளிப்பாடு

பறவையின் வருகையும்
குழந்தையின் வருகையும்
சில பொழுது ஒன்று போல் இருந்தாலும்
ஓர் அழகைத் திறக்க சாவிகளற்ற கைகள் தேவைப்படுகின்றன.

ஐந்து கவிதைகள் – கு.அழகர்சாமி

தளைகளெல்லாம்
ஒழுங்காய் அழகாயிருக்கும்
அபாயம் அறிந்தேன்.
தளைகளை உடைத்து
வெளிவந்து விடப் பார்த்தேன்.
அப்போது தான் தெரிந்தது-
எத்தனையோ சதுரங்கள்
எத்தனையோ வட்டங்கள்
எத்தனையோ செவ்வகங்கள்
என்னைக் கட்டம் போடக்
காத்திருப்பது.

அறிந்திடாத பெருநகர விதைகள்

எல்லோருக்குமே
தெரிந்தவர்கள்
அழைக்க வந்திருந்தால்
எத்தனை இனிமையானதாக மாறியிருக்கும்
யாவும்.

தனிப்படர்மிகுதி

எந்த செயலிக்கும்
என் அலைபேசியில் இடமில்லை
மீன் இல்லா குளத்திற்கு
தூண்டில் எதற்கு.
இப்படியான
எந்த ஒரு பாசாங்குமற்று
என் மேஜைக்கு வரும் ரசீதை
நான் எழாமல்
எனக்கு முன்பே பெற்றுக்கொள்ளும்
அவளிடம் மட்டுமே
வெளிப்படையாக அறிவித்தேன்
என் வறுமையை…

சந்திரசேகர் கவிதைகள்

கடல் முன்னமர்ந்து
கொந்தளித்துக் கொண்டிருந்தேன்
எனக்கு எதிர்கரையில்
யாரோ அமர்ந்திருந்தார்
நலமா என்றேன்
நலமே என்றார்
இடம் மாறிக் கொள்ள
நீந்த வேண்டியிருக்கிறது

எட்டு கவிதைகள்

மேகம் மறைப்பதனால்
மேரு இல்லையென்றாகிடுமா?
காகம் கரைவதொன்றே
கானமழை என்றிடவோ?

காணாமல் போன ஐந்து நாட்கள்

பால்கனி தொட்டிச் செடியில்
புதிதாய் டேபிள் ரோஸ்
இரண்டு சாம்பல்
ஒரு கருப்பு நிற குட்டியை
ஈன்ற தாய்ப் பூனை
உக்கிரம் குறைந்த வெயில்
பைனலுக்கு முன்னேறிய கிரிக்கெட் அணி

காலத்தைக் கைப்பிடித்து கண் விழிக்கும் புதைநிலம்

என்றிருந்தோ
ஒரு தொந்தம்?
இன்றில்லா முன்னோர்
எவர் எவருடனோ
ஒரு பந்தம்?
தொல்புதைவின்
தொன்றிருந்தா
என் தொடர்ச்சி?
வென்று விடத் தான்
பார்க்கிறேன் காலத்தை

வேணு தயாநிதி கவிதைகள்

குழந்தையை எரித்த தீ
பயிர்களைக் காயவிட்டு 
புயலாகி 
கரையைக் கடந்த பருவமழை
கொலைகாரனின் மனம்
துரோகியின் சுவாசம், பிணம்
ஆகியவற்றை ஆராய்பவன்

என்னுடைய கடவுள் – கவிதைகள்

பேனாதான் எழுதுகிறதென்றெண்ணி
அதைப் பற்றிப் பெருமைப்பட்டோம்
ஆனாலும் அஃதொரு கருவி மட்டும்தானென ஐயமற அறிந்தற்பால்
வீணான உபசாரமின்றி
விருப்பு வெறுப்புமின்றி

லாவண்யா கவிதைகள்

ஒருவன் பொரியிறைக்க
ஒருவன் சங்கூத
இருவர் பறையடிக்க
மூவர் வழிநெடுக பூவிறைக்க
நால்வர் ஆட்டம்போட
ஐவர் கம்பு சுற்ற
ஒருவன் வெண்ணீறு பூசி
செத்த பிணத்தை சுமந்து செல்லும்
சொர்க்கரதத்தின் முன்னே செல்ல

நாஞ்சில் நாடன் கவிதைகள்

பெண் மக்கள் பேறற்ற
அமைச்சரை நாடாளுமன்ற
சட்டமன்ற உறுப்பினரை
எண்ணி இரங்குவீர் எம்மனாரே

பிரார்த்தனைகள்

கடலலைகளாக
புரளும் மனம்
உருண்டோடி உன் பாதக்கரையை
அடைந்த தருணம்,
என் தலைமீது மாற்றினாய்
அழகிய உன் பிறை நிலவை.

குறுங்கவிதைகள்- கு.அழகர்சாமி

எவ்வளவோ சாதுவாய் என்னை நான் உணர்கிறேன்
என்னோடு நான் உருட்டிக் கொண்டு வரும் சைக்கிள்
என்னை உருட்டிக் கொண்டு வரும் போது-

ஏங்குதல்

அவளுடன் வெகுகாலம் உரையாடிய போதிலும்
இன்னும் சில காலம் உரையாடிக் கொண்டிருந்திருக்க எனக்கு ஆசை,
ஏற்கெனவே தான் பெருக்கி முடித்திருந்த
வீட்டின் முற்றத்தையும், சுற்றுப் புறத்தையும்
இரண்டு மூன்று முறைகளுக்கும் மேலாய் பாட்டி
பெருக்கிக் கொண்டிருந்ததைப் போல.

கு.அழகர்சாமி கவிதைகள்

பிறந்த தேதி, ஊர்,
பெற்றோரின் பெயர்கள்,
என் பெயர், மொழி,
நிறம், இனம்
என்றெல்லாம்
என்னைப் பற்றிய
எத்தனையோ விவரங்கள்
பகிர உள்ளன-
ஒன்றைத் தவிர-
என் இறந்த தேதி

மூன்று கவிதைகள்

மங்கலான அகல் வெளிச்சத்தில்
திருப்புகழ் படித்துக் கொண்டிருந்தாள்..

காலனெனை அணுகாமல் உனதிரு
காலில் வழிபட அருள்வாயே

எங்கே போனாய் இவ்வளவு நேரம்?

கேட்டுவிட்டு படிக்கலானாள்..

கே.சட்சிதானந்தன் கவிதைகள்

நாம் சிலதைப் பெறுகிறோம்
நாம் சிலதைக் கொடுக்கிறோம்.
‘சாவு நிதிநிலை அறிக்கை தயாரிக்கிறது’
சொர்க்கம் என்பது ஒரு பொய் , ஆனால்
நரகம் ,ஆமாம், உளதாயிருக்கிறது.

இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்

காளிதாசனின் ‘விக்ரமோர்வசீயம்’ நாடகமானதால் நாடகத்தின் அவசியம் கருதி பல பாத்திரங்கள் இதில் படைக்கப்பட்டுள்ளனர். பலபேர் உள்ள மேடை ஒன்றுதான்  சுவாரசியமானதாக இருக்கும் அல்லவா? மன்னன் புரூரவஸுடன் ஒரு விதூஷகன் –  ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் உள்ளதுபோல ஒரு Jester.  அரசிக்கு ஒரு தோழி. யாரிடமாவது இவர்கள் (பாத்திரங்கள்) உரையாடினால்தானே இவர்கள் “இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்”

பிரிவு

கறை படிந்த நம் கரங்களை
அழுத்தி துடைத்துவிட்டு
மீண்டும் ஒரு புது உலகம்
வரைந்திருக்கலாம்
ஆனால் வேறு ஒன்றாக
நிகழ்ந்துவிட்டது
ஒரு கனவைப்போல.

‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’

இரு காதலர்களின் பிரிவு அவர்கள் உள்ளங்களிலும் வாழ்விலும் ஏற்படுத்தும் வெறுமை, தனிமை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு, சலிப்பு, பற்றின்மை என அனைத்தும் இத்தனை நுட்பமாக, பொறுமையாக வேறெந்தக் கவிஞனாலும் விவரிக்கப்பட்டுள்ளதா என நான் அறியேன். முன்பே கூறியபடி, கம்பன் அழகாக சீதை, இராமன் இவர்களின் தாபத்தையும், சேக்கிழார் பெருமான்

ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!

மூலத்தில் காண்பதுபோல் ஸ்ரீ அரவிந்தரின் கவிதையில் தேர்ப்பாகன் இல்லை; புரூரவஸே தேரைச் செலுத்துகிறான். வெளிப்படையாக பாகனைப் பற்றிய பேச்சில்லை! அவனைக் கண்ட கேசி, தான் வெல்லப்படுவோம் என உணர்ந்து, ஊர்வசியைப் பனியின்மீது போட்டுவிட்டு ஓடோடி மறைகிறான். உணர்விழந்து கிடக்கும் அவளை அள்ளியெடுத்துத் தேரில் இருத்திக்கொண்டு புரூரவஸ் விரைகிறான். அத்தனை பேரழகை அருகாமையில் கண்டவனின் உள்ளம்…

லாவண்யா கவிதைகள்

செய்தித்தாள் படிக்கும் பாவனையில்
இரவரும் அருகமர்ந்து உரசிக்கொண்டு
அருந்தும் காபியின் சுவை, மணம்
தனியளாய் இருக்கையில் தெரியவில்லை.
மஞ்சள் மாலை கருக்கும் சமயம்