- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
- மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது
- மிளகு: அத்தியாயம் அறுபது
- மிளகு – அத்தியாயம் 61 & 62
- மிளகு அத்தியாயம் அறுபத்துமூன்று
- மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் அறுபத்தாறு
- மிளகு அத்தியாயம் அறுபத்தேழு
- மிளகு அத்தியாயம் அறுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எழுபது
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று
- மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு
- மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் எழுபத்தாறு
- மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
- மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எண்பது
- மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
- மிளகு – அத்தியாயம் – எண்பத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு
- மிளகு – அத்தியாயம் 85
- மிளகு – அத்தியாயம் 86
- மிளகு – அத்தியாயம் 87
- மிளகு – அத்தியாயம் 88
- மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை
1606 கெருஸொப்பா

சதுர்முக பஸதியின் வெளித் திண்ணைகள் நான்கு பக்கக் கதவுகளையும் ஒட்டி உயரமும் தாழ்வுமாக சாய்ந்து நிறுவப்பட்டிருந்தன. கதவை உள்ளே இருந்து திறந்ததும் வலமும் இடமும் நிற்கும் திண்ணைகள் இவை.
வழிப்போக்கர்கள் வாசலுக்கு வந்து, கதவு அடைத்திருந்தாலும் திண்ணையில் நீட்டிப் படுத்து ஓய்வு கொள்ளலாம். கதவுக்கு வலமும் இடமும் திண்ணை இருப்பதால் இரண்டு வழிப்போக்கர்கள் ஒவ்வொரு கதவையும் ஒட்டிப் படுத்துக் கிடந்து ஓய்வு கொள்ள முடியும்.
ஓய்வு எடுப்பவர்கள் படுக்க மெல்லிய துணி போல் வழுவழுவென்ற தரை வாய்த்தவை திண்ணைகள். படுத்திருந்து துயில் கொள்ள வருகிறவர்களுக்கு இலவம்பஞ்சுத் தலையணை தர முடியாவிட்டாலும், காரையும் செங்கலும் கருங்கல்லும் பளிங்குக் கல்லும் வைத்துத் திண்ணை உருவாக்கியபோதே தலைமாட்டிலும் கால்மாட்டிலும் தலையணைபோல் உருவாக்கி வைத்த கட்டடக் கலைஞர்களைப் படுத்து ஓய்வெடுக்க வருகிறவர்கள் சிலாகித்து நன்றியும் சொல்லிப் போவதுண்டு.
அந்தத் திண்ணை ஒன்றில் ஒரு சிறுவன், வயது ஐந்து காணும், சந்திரனைப் போன்ற முகவிலாசம், மலர்த்திய கண்களையும் கடந்து தெரிய நித்திரை போயிருக்கிறான். சற்றே களைப்பு தென்பட்டாலும் ஆழ்ந்து உறங்கும் சிறுவன் சிறு மலர் உதிர்ந்து நந்தவனத்தில் யார் காலும் படாமல் கிடப்பது போல் ஆழ்ந்த துயிலில் இருக்கிறான்.
அவனுக்கு எதிர்த் திண்ணையில் ஒரு பெரிய வாழை இலையை இடுப்புக்குக் கீழே போர்த்தி சமண திகம்பர முனிவர் துயில் கொண்டிருக்கிறார். நிர்மல முனிவர் அவர். சிறுவன் மஞ்சுநாத்.
வெகு அண்மையில் சதுர்முக பஸதி வாசலில் நூறு இருநூறு பேர் வந்து உள்ளே புக முயன்றதன் மௌன சாட்சிகளாகத் தரையில் செருப்புக் கால்களில் ஒட்டி வந்த களிமண்ணும் பஸதித் தோட்டத்தில் வீழ்ந்து கிடந்த கொழிந்த இலைச் சருகுகளும் அங்கே இங்கே காற்றுக்குப் புரண்டு கொடுத்துக்கொண்டு கிடக்கின்றன.
இரண்டு நாட்டுச் சாராய போத்தல்கள் தக்கை மூடித் திண்ணையில் முனிவருக்கு அருகே நின்று கொண்டுள்ளன. பஸதி உள்ளே அமைதியும் தூய்மையும் ஒளி சிதறிப் பிரதிபலிக்கின்றன. சுவரில் நகராமல் பார்த்துக் கொண்டிருக்கும் மரப்பல்லியைத் தவிர உள்ளே உயிர் அடையாளமில்லை.
கெருஸொப்பாவை ஆக்கிரமித்த கெலடி சாம்ராஜ்யத்தின் மன்னர் வெங்கடப்ப நாயக்கரின் படைப் பிரிவு அவருடைய புத்திரன் வெங்கடலட்சுமணன் தலைமையில் சூறையாடியபோது அவர்கள் கோவில்களிலும் பிரார்த்தனைக் கூடங்களிலும் கடந்து வந்து கொள்ளை அடித்துச் சுருட்டி எடுத்துத் திரும்பும் உத்தேசத்தோடுதான் வந்தார்கள்.
நடு ராத்திரிக்கு வீட்டுக்குத் திரும்பிய சாராய வியாபாரியைப் பிடித்து கடையை வலுக்கட்டாயமாகத் திறக்க வைத்து உள்ளே இருந்த வெகு சொற்பமான சாராயத்தைப் பறித்து ஓவென்று குரலெழுப்பிச் சாத்தானின் மக்களாக அந்தப் படை வரும் என்று எதிர்பார்த்து சாராயக்கடையில் நூறு போத்தல் சாராயம் மட்டும் வைத்திருந்தது.
மீதி? இரண்டு நாள் முன்னே கெருஸொப்பா குடிமக்கள் எல்லோரும் மலிவு விலைக்கு வாங்கிக் குடித்துத் தீர்த்தாகி விட்டது.
தெருவிளக்குகள் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை எரிய முடியாமல் திரி வைக்கும் முனைகளிலும், எண்ணெய் நிற்கும் விளக்குக் குமிழ்களிலும் கவனமாகப் பிளந்து வைக்கப்பட்டிருந்த மாடங்கள் கெலடிப் படை நகர்வதைப் பாதித்தன.
எஜமான்.
கெலடிப் படையில் வந்த ஒருத்தன் சவக்கு சவக்கு என்று வெல்லம் தின்றபடி வெங்கடலட்சுமணனிடம் உரிமையோடு அழைத்தான்.
என்னவே. அதென்னவே வாயில் அருவதா சருவதா ஏதாவது அரைபோட்டுக்கிட்டிருக்கீர்? வெங்கட லட்சுமணன் விசாரித்தான்.
போன தெருவில் வெல்ல வியாபாரி வீட்டில் ஓலைப் பாயில் காய வைத்திருந்த வெல்லத்தை வழித்து எடுத்து வாயில் போட்டது இன்னும் கரைய மாட்டேன் எங்குது என்று பின்னும் வேகமாக மென்றான்.
கூப்பிட்டேரே, என்ன வேண்டியது?
எந்த வீட்டிலும் தங்கமும் வெள்ளியும் கிடைக்கிற மாதிரி தெரியவில்லை. பேசாமல் மைதானத்தில் கிடந்து உறங்கிக் காலையில் கெலடி போய்விடலாமே. நேரமும் நள்ளிரவாகி விட்டதே.
அவன் கரிசனமாகச் சொன்னான்.
தெருமுனையில் பெரிய வீடு இடிபாடுகளுக்கு நடுவே நிற்பதைக் கண்டு முன்னால் கையில் கடப்பாரையோடு ஓடியவன் சற்று நிதானித்து இந்த வீட்டில் ஏதாவது கிடைக்கும் என்று ராப்பிச்சைக்காரன் போல் சொல்லி அங்கே நூறுபேர் இருந்த அவன் அணியை நடத்திப் போனான்.
வாசலில் பேய்மிளகுக் கொடி இல்லாமல் வாசல் படிகளில் மரக்கட்டைகள் இரண்டு கிடந்தன. அவற்றைக் கடந்து வாசல் முற்றத்துக்கு அவன் நடந்தபோதுதான் கவனித்தான், படியின் குறுக்கே அந்த மரக்கட்டைகள் வலிந்து செருகப்பட்டிருந்ததை.
நகர வேணாம் என்று கையை மேலே தூக்கி எச்சரித்தபடி மேல்படிக்குத் தாவிக்குதித்தபோது கீழ்ப்படியில் சுமாரான சத்தத்தோடு வெடி வெடித்த ஒலி. படிக்கட்டுகளே தனியாகி நகர, கீழே வைத்திருந்த பழைய மரப்பெட்டியில் இருந்து தேள்கள் வெளியேறி ஊர்ந்தது அந்த அரையிருட்டில் பூதாகாரமாகத் தெரிய அந்தப் பெரிய வீட்டை விட்டு, அந்தத் தெருவையே விட்டு விலகி ஓடினார்கள் சூறையாட வந்த கெலடிப் படையினர்.
அடுத்த தெருவில் தேளோ பாம்போ தட்டுப்படும் முன்னால் மரக்கட்டைகளும் கயிறுகளும் மரப்பெட்டிகளும் இல்லாததை அவசரமாகச் சோதித்தார்கள். திண்ணையில் நின்று கதவை உடைக்கும்போது ஏற்கனவே திறந்திருந்த கதவு வழியாக உள்ளே இருந்து வவ்வால்களும் ஆந்தை ஒன்றும் நான்கு மெலிந்த பாம்புகளும் அவசரமாக வெளியே வந்தன.
இந்த வீட்டையும் நிராகரித்து கெலடிப் படையினர் வெளிவந்தபோது எதிர்வீடு ஒரு கல்லோ மண்ணோ இல்லாமல் இருந்ததைப் பார்த்து இங்கே இருந்து அங்கே நாய் மாதிரி ஓடினார்கள். கதவைத் திறக்க முயல அது திறப்பேனா என்று மூடியே கிடந்த்து.
ஆனால் நிலையில் இடித்தபோது உத்திரத்தில் அது பிரதிபலித்து, உத்திரத்தில் இருந்து பேய்மிளகு ஒரு பெரிய கொடியாகத் தரைக்கு அங்கிருந்து தழைந்து வந்து இடித்த வீரனின் தலையில் அப்பிக்கொண்டது.
இது வெறும் பேய்மிளகு இல்லை, நிசமாகவே பேய் பிடிச்ச சமாச்சாரம் தான் என்று கூக்குரலிட்டபடி அந்த வீட்டையும் விட்டுப் போகத் திரும்பினார்கள்.
நிமிடத்துக்கு நிமிடம் சூறையாட எதுவும் கிட்டாத கெலடி படையின் கோபமும் வெறுப்பும் பயமும் கூடிக்கொண்டு வரும்போதுதான் கெருஸொப்பாவின் முக்கியமான சாராய வியாபாரி விதிவசத்தால் அவர்களிடம் மாட்டிக்கொண்டு நூறு போத்தல் சாராயத்தைக் கொடுத்துத் தொலைத்தார்.
போன வாரம் முழுக்க கெருஸொப்பாவே தோற்கும் துக்கத்தில் இருந்ததால் ஒருத்தர் முகத்தில் சிரிப்பில்லை. அவர்களை ஆறுதல் படுத்த அத்தனை சாராயத்தையும் வாங்கிக் குடித்துத் தீர்த்து விட்டதால் மிச்சம் இவ்வளவுதான் என்று விவரிக்கப்பட்டதை கெலடிப் படை நம்பாவிட்டாலும் பெரிய பாட்டில் நூறு சாராயம் மணக்க மணக்கக் கிடைத்தது அவர்களுக்கு சந்தோஷம் கொடுத்தது.
வெங்கடலட்சுமணனிடம் சாராயத்தைக் கொடுத்துத் தெரு வர்த்தமானமெல்லாம் சொன்னபோது அவன் இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற முகத்தை வைத்துக்கொண்டு சொன்னது –
அட முட்டாள்களா, பேய் மிளகு விதைத்த வீடு என்றால் கவனமாக இருக்க வேண்டியது தான். ஆனால் தேளும் பாம்பும் அடைத்த வீட்டிலிருந்து ஏனடா ஓடிவந்தீர்கள்? ஒரு முறை தேள்கள் வெளியே வந்திருந்தால் அவை மறுபடி மரப் பெட்டிக்குள் போகுமோ? மறுபடி அந்த வீட்டுக்குப் போயிருந்தால் மகராஜர்கள் நீங்கள் வரப்போவதை எதிர்பார்த்து சோறோ ரொட்டியோ வைத்து விட்டுப் போனது கிட்டியிருக்குமே என்று பாதி கிண்டலும் மீதி வெறுப்புமாகக் கேட்டான்.
அவர்கள் திரும்பப் போகிறேன் என்று கிளம்ப, கெலடி இளவரசர் கூறியது-
போன தெருவில் மீண்டும் போக இனி நேரம் இல்லை. விடிந்ததும் கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் கெருஸொப்பாவின் தற்போதைய நிலையைப் பார்வையிட வருகிறார். கொஞ்சம் உறங்கிக் காலையில் அணிவகுத்து நில்லுங்கள்.
சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் எதிரே மைதானத்து மையத்தில் சதுர்முக பஸதி அவர்கள் கண்ணில் பட்டது.
வடக்குவாடி சாமியார் மடம் போல இருக்கு. உத்திரணிக் கரண்டி கூட தங்கத்திலே செய்து வச்சிருப்பாங்க.
உற்சாகமாக அந்தப் படை சதுர்முக பஸதிக்குப் போக அதன் நான்கு கதவுகளும் உள்ளிருந்து இறுக அடைத்துக் கொண்டன. நூறு பேர் வாசல் கதவைத் தட்ட நான்கு கதவுகளின் அருகே நின்றாலும் திண்ணைகள் இருப்பது அவர்கள் கண்ணில் இருந்து மறைந்திருந்தது.
திண்ணையில் களைத்து உறங்கிய மஞ்சுநாத்தையும் கண்மூடி மௌனமான தியானத்தில் கல் படுக்கைக்கு ஒரு அங்குலம் உயர மிதந்தபடி இருந்த நிர்மல முனிவரையும் அவர்கள் பார்க்கவில்லை.
நக்னதை மறைத்த வாழை இலையை இடுப்பில் போர்த்திப் புலன்களைக் கூர்மையாக்கி கதவுகள் திறக்காமல் தடுத்தபடி நிர்மல முனிவர் மிதந்து கொண்டிருந்தார்.
ஏமாற்றத்தோடு நடு ராத்திரியில் மைதானத்துக்குத் திரும்பிய கெலடிப் படையினர் மைதானத்தை அடுத்த கோவில் தெருவில் பெரிய வீட்டில் விளக்கு ஒளியும் மனுஷ நடமாட்டமும் இருப்பதைக் கவனித்து அங்கே போக முற்பட்டார்கள்.
மஞ்சு மஞ்சு என்று கூவியபடி வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த ரோகிணி ஓட்டமும் நடையுமாக ஒவ்வொரு அறையிலும் மஞ்சுநாத்தைத் தேடினாள்.
அவனுக்குத் தெரிந்த இடம் என்பதால் வேறு எங்கேயும் யாரும் தட்டுப்படவில்லை என்றால் இங்கே தான் வந்திருப்பான் என்ற அவளுடைய அனுமானம் தவறிப் போக வெளியே தெரு முனையில் கெலடிப் படை வரும் சத்தம்.
பேய்மிளகைக் கையில் அறுக்காமல் தூவிக்கொண்டு தன் கோச்சு வண்டியில் தாவி ஏறி வேகமாகக் குதிரைகளை இருட்டு கவ்விய பாதையில் செலுத்திக்கொண்டு விரைந்தாள்.
துறைமுகம் நோக்கி சீரான வேகத்தோடு சென்று கொண்டிருந்த கோச் அதுவரை பின் தொடர்ந்தவர்களை உதறிவிட்டு குண்டும் குழியுமான பாதையில் அச்சு கடகடக்கப் போய்க் கொண்டிருந்தது.
நங்கூரம் பிணைப்பு அகற்றிப் பயணப்படத் தயாராக இருந்த சிறு கப்பல் அவளுக்காகக் காத்திருந்தது. கெருஸொப்பாவில் இருந்து பனாஜி, அங்கிருந்து சூரத், சூரத்தில் இருந்து லிஸ்பன் போக ஒவ்வொரு கட்டம் பயணமும் திட்டமிட்டிருந்தாள் ரோகிணி.
மஞ்சுநாத் காணாமல் போனதுதான் எதிர்பார்க்காத துக்கமாக அவளைப் பீடித்தது. நடு இரவில் கவனத்தைக் கவராமல் சிறு கப்பலில் கெருஸொப்பா துறைமுகத்தில் இருந்து புறப்படும் முன் அவளுக்கு நப்பாசை. மஞ்சு வீடு திரும்பியிருப்பானா என்று. ஓடோடி வந்து அவனைத் தேடி ஏமாற்றம் மனதை முழுவதுமாக ஆக்கிரமிக்க அவள் சிறு கப்பல் கரையோடு தொட்டு நிற்கும் கடல் பாலத்தில் நடந்து கப்பல் நுழைவுவெளியில் நின்றாள்.
அவள் பெட்டிகள் ஒவ்வொன்றாகக் கப்பலில் ஏற்றப்பட கப்பல் தரையில் சாய்ந்து படுத்து வானத்தை நோக்கினாள். நட்சத்திரம் ஏதுமின்றி வெளிர் சாம்பலும் கறுப்புமாக இருந்தது ஆகாயப் பரப்பு.
நேமிநாதன், பரமன், பெத்ரோ, சென்னபைராதேவி, திம்மராஜு என்று முகங்களின் அணிவகுப்பு. நேமிநாதன் ஆவியாக மிதந்து வந்தான்.
உடை உடுத்திய ஆவி. ரோகிணி மகன் மஞ்சுநாத்தைத் தேடினாள். கூட்டத்தில் அவன் இல்லை. தேடிக் களைத்து அவள் கிடந்தபடி பாட ஆரம்பித்தாள் ஆராரோ ஆரிரரோ ஆரடிச்சார் சொல்லியழு. மஞ்சுநாத் அப்பா அப்பா என்று கூப்பிடும் குரல் அலைகளின் வெற்று ஆரவாரத்தில் மங்கி மறையக் கப்பல் நகர்ந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
