அசோகமித்திரன் அஞ்சலி

மொழி மயக்கத்தில் கட்டுண்டு, பண்பாட்டுப் பெருமிதங்களில் சிறைப்பட்டு, ஆதாரமற்ற- அதனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப கைக்கொள்ளவும் கைவிடவும் தக்க கருவியாய் பயன்படும் தன்மை கொண்ட – பகைமைகளால் பிளவுபட்டு, இயல்பு நிலை என்னவென்பதை அறியாத காரணத்தால் இலக்கற்ற திசையில் தமிழகம் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் சாதாரண மொழியில் சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை உள்ளபடியே எழுத முற்பட்டவர் அசோகமித்திரன். பெருங்கூட்டமாய் உரத்து ஒலித்த ஆரவார கோஷங்களுக்கு இடையில் சன்னமாய், தனித்து ஒலித்த அவரது குரல் முகமற்ற, நாவற்ற தனி மனிதர்களுக்காக பரிந்துரைத்த குரல், அவர்களுக்குரிய நியாயத்தை எடுத்துரைத்த குரல். எவ்வளவு மென்மையானதாக இருந்தாலும் அவர் முன்வைக்கும் விமரிசனத்தை தமிழகம் எதிர்கொண்டாக வேண்டும் – நீதிக்கான தேவை இருக்கும்வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

எளிய மனிதர்களின் எளிய வாழ்வை அகலாது உற்று நோக்கிய அசோகமித்திரனின் பார்வைக்குரிய தீர்க்கம் அவர் தலைமுறையில் மிகச் சிலருக்கே இருந்திருக்கிறது. இன்று அவரை நாம் இழந்திருக்கிறோம், ஆனால் இனி அவரது அக்கறைகள் நம்மோடிருக்கும், அவரது எழுத்துக்கும் பொருளிருக்கும்.

சொல்வனம் அசோகமித்திரனின் பங்களிப்பை தொடர்ந்து பேசி வந்திருக்கிறது. அதன் நூறாவது இதழை ‘அசோகமித்திரன் சிறப்பிதழ்‘ என்றே கொண்டாடியிருக்கிறது. தொடர்ந்து அவரையும் அவரது பங்களிப்பையும் நினைவுகூர்ந்து சொல்வனம் ஊக்கம் பெறும்.

அமெரிக்க நூலகங்கள்: அன்றும் இன்றும்

அமெரிக்காவின் பல்வேறு நூலகங்களை தாமஸ் ஆர் ஷிஃப் (Thomas R Schiff) என்பவர் படம் பிடிக்கிறார். இது அகல் பரப்புத் தொடர் காட்சியாக விரிகிறது. அந்தக் கால நிறுவனங்கள் முதல் தற்கால கட்டிடங்கள் வரை நம் கண் முன்னே தி கார்டியன் நாளிதழில் பரந்ததோற்றம் காண்கிறது.

மகரந்தம்

விமானியில்லாத விமானங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது இந்த எண்ணம் உதித்து இருக்கிறது: அவற்றை உண்ண ஏற்றவையாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் பேரழிவு தாக்குகிறதோ, எங்கு பசி வாட்டுகிறதோ, எப்பொழுது போர் மூள்கிறதோ, அப்போது இந்த விமானியில்லா விமானம் விண்ணில் செலுத்தப்படும். பஞ்சப் பகுதிகளில் தானாகவே இறங்கும். உடனை அதற்குள் இருப்பதையும் அந்த விமானத்தையும் பிய்த்து பங்கு போட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். இறைச்சியும் தேனடைகளும் உலர் காய்கறிகளும் கொண்டு இந்த விமானம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. களப் பணியாளர்கள் இந்த டிரோன் வெறும் கண்துடைப்பு என்று…

குளக்கரை

மேலை நாடுகள் படிப்படியாகத் தம் வாழ்வுத்தரத்தை இழந்து வருகின்றன என்று சொல்ல இடம் உண்டு. மொத்த நாடுமே தரமிழந்ததா என்பது தெளிவில்லை. ஆனால் அவற்றுக்கும் இதர பல நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு குறைவதால் இப்படித் தெரிகிறதா, உழைக்கும் மக்களும், விவசாயிகளும் அனேகமாகத் தொடர்ந்து சறுக்கு நிலையில் இருக்கிறார்கள். வெள்ளைச் சட்டை உழைப்பாளிகளும் இறங்குமுகம்தான். கல்லூரிகளை விட்டு வெளியே வந்ததும் கிட்டும் வேலைகள் என்னும் ஏணிகளிலோ, படிக்கட்டுகளிலோ தொடர்ந்து ஏறிக் கொண்டு 30 வருட உழைப்புக்குப் பிறகு ஓய்வெடுத்து, முதுமையை நிதானமாக அனுபவிக்கும் ஒரு வாழ்வு என்பதை ’50, ‘60களில் நிச்சயத்தோடும், ’70-’80களில் ஓரளவு உறுதிப்பாட்டோடும் பெறக்கூடிய வாழ்வைப் பெற்றிருந்த மேலை மக்கள், இன்று அத்தகைய உறுதிப்பாடுகள் முதியோருக்கும் இல்லாது, இளைஞருக்கும் இல்லாத வாழ்வையே பெறுகின்றனர். இங்கு கொடுக்கப்படும் செய்திக்கான சுட்டி கனடா நாட்டின் பெரும் நகரான டொராண்டோவைப் பற்றியது…

போதிமரம்

மரங்களில் இருந்து என்ன கற்றுக் கொள்ளலாம் என்று நேஷனல் ஜியாகிரபிக் இங்கே புகைப்படக் கட்டுரையொன்றை வெளியிட்டு இருக்கிறது. மிகப் பழமையான மரம், நம் நினைவில் நீங்கா இடம் பிடித்த மரம், சாமியான மரம், விளையாட்டு ஸ்டம்ப் ஆன மரம் என பலவிதங்களை இங்கே பார்க்கலாம்.

உம்பர்த்தோ எக்கோ பேட்டி

தி பிராக் சிமத்தேரி புத்தகத்தை 2010ல் உம்பர்த்தோ எக்கோ ஆங்கிலத்தில் வெளியிடுகிறார். அந்தப் புத்தகம் மதவெறி, பொல்லாங்கு சொல்லுதல், செமித்திக் இனவெறுப்பு., ஐயவுணர்வு, யூதப்பகைமை, பொய்யாவணம் புனைதல் போன்ற விஷயங்களை ஐரோப்பியச் சூழலில் இத்தாலியில் நடந்த அரசியல் விஷயங்களைக் கொண்டு புனையப்பட்ட நாவல். அது குறித்த பேட்டி:

மகரந்தம்

2016 என்பது உலகம் பூராவுமே கடும் வெப்பம் நிறைந்த வருடமாக இருந்ததாக உலக தட்ப வெப்ப மானிகளைக் கவனிக்கும் அமைப்புகள் சொல்கின்றன. அமெரிக்காவில் பொதுவாக மேற்குக்கரை மாநிலங்களில் சிலவற்றில் நல்ல உஷ்ணம் உள்ள இடங்கள் நிறைய உண்டு. கலிஃபோர்னியா என்னும் மாநிலம் கடந்த சில வருடங்களாக மழை இல்லாது, குளிர் காலத்தில் உயர மலைகளில் பனியும் பொழியாததால் நீர்ப்பஞ்சத்தில் சிக்கி இருந்தது. அதுவும் தென் கலிஃபோர்னியா பகுதிகள் பாலைநிலங்களை விளை நிலங்களாகவும் வசிப்பிடங்களாகவும் ஆக்கிக் கட்டப்பட்ட பகுதிகள். இந்த இடங்களில் வெப்பமும் கூடுதலாக இருந்து, தண்ணீர்ப்பஞ்சமும் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஆனால் 2016 இன் இறுதியில் கலிஃபோர்னியாவில் நல்ல மழை. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில அணைகள் உடைப்பேடுத்துப் பெரும் நிலப்பகுதிகள் ஆபத்தில் சிக்கும் என்றெல்லாம் பயப்படும் அளவு மழை பெய்திருந்தது. ஆனால் இந்த நல்ல திருப்பம் அதிகம் நாள் தாக்குப் பிடிக்காது, மறுபடி கோடை வந்து விடும். கடும் வெப்பம் தாக்கும்

அ முத்துலிங்கம்: நேர்காணல்

எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் முந்தைய பதிவுகள்: அ. முத்துலிங்கம் நேர்காணல் வாசகர் தேவை : அறிவியல் மறந்துவிட்டீர்களா? : வெ.சா. அஞ்சலி கடவுளை ஆச்சரியப்படுத்து : சிறுகதை வெளிச்சம்: சிறுகதை ஆச்சரியம்: சிறுகதை ஆற்றேன் அடியேன் : இலக்கியம் பற்கள் சாபம்: அனுபவம் கடவுளின் காதுகளுக்கு பாகிஸ்தானில் பறந்த “அ முத்துலிங்கம்: நேர்காணல்”

மகரந்தம்

உலகெங்கும் பரவியுள்ள ஒரு மத அமைப்பு இந்தியருக்கு அனேகமாக அதன் இயல்பெயரால் தெரிய வந்திராது. மார்மன் இயக்கம் என்பது தொடர்ந்து அமெரிக்காவில் பரவி வருகிறதோடு, அமெரிக்காவின் பெரும் நிதிநிறுவனங்கள், ஹோட்டல்கள், வங்கிகள் என்று பற்பல தொழில் அமைப்புகளையும் ஆள்கின்றது. இதன் கணக்கு வழக்குகள் சாதாரணருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவின் ஊடகங்களுக்குமே எட்டாத ரகசியங்கள். இதன் சில ரகசியங்கள் இப்போது புலப்படத் துவங்கி உள்ளன. கார்டியன் பத்திரிகை இந்த மார்மன் கிருஸ்தவ இயக்கம் எப்படிப் பல பெருநகரங்களில் ஏராளமான நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறது, அமெரிக்காவின் சில மாநிலங்களில் மார்மன் கிருஸ்தவர்களுக்காகத் தனிநகரங்களையே கட்டத் திட்டமிடுகிறது என்பதை வெளியிட்டுள்ளது. இந்த சர்ச்சுக்கு 2012 ஆம் ஆண்டின் கணக்குப் படி சுமார் 35 பிலியன் டாலர்கள் மதிப்புள்ள கட்டிடங்களும் நிலங்களும் சொந்தமானவையாக இருந்தனவாம். ஆண்டொன்றுக்கு இந்தச் சர்ச்சின் உறுப்பினர்கள் தம் வருட வருமானத்தில் 10% த்தைக் கொடுக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை.

குளக்கரை

எப்படி செஞ்சீனாவின் எழுச்சியில் உலகம் தாய்வானை அலட்சியம் செய்வதோடு, அந்தத் தீவுகள் ஒரு நாடாக இருப்பது கூட சாத்தியம் இல்லை என்று கருதவும் துவங்கி இருக்கிறது என்று வருத்தப்படுகிறார். தாய்வானின் மீது பற்பல நாட்டினர் தொடுத்த தாக்குதல்கள், படையெடுப்புகள் எப்படி அந்த வரலாற்றை மறுபடி மறுபடி அழித்து எழுதின என்றும் சுட்டுகிறார். குறுந்தேசியம், பெருந்தேசியம், பன்னாட்டியம், உலக ஏகாதிபத்தியம் ஆகியனவற்றின் இழுபறிப் போர்களில் சிக்கி மடிபவர் சாதாரணர் என்பதையும் அங்கீகரிக்கிறார். இவரது கட்டுரைக்கு ஒரு மாற்றாக வாசகர்கள் எழுதிய பதில்கள் அமைகின்றன. அவற்றில் இருவர் மிகச் சரியாகவே தாய்வானியர் என்று இன்று கருதப்படுவோரே அத்தீவுகளில் நெடுங்காலமாக வசித்து வந்த பழங்குடியினரை அழித்து ஒடுக்கித்தான் ஆட்சி செய்யத் துவங்கினர், அம்மக்களின் விடுவிப்பையும், அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கும் உரிமைகள் கொடுப்பதையும் கருதிப் பேசாத தாய்வானிய வரலாற்று விவரிப்பு முழுமை பெறாதது என்று சுட்டுகிறார்கள்.

குதிரைலாட வளைவு

அலெக்ஸ் வாங் (Alex Wong) என்பவர் புகைப்படக் கலைஞர். நகரும் எதையும் ஆர்வமாக ஒளிப்படமாக்குபவர். காளைகளை அடக்கும் பந்தயம் ஆகட்டும்; வேகமாக கார் ஓட்டும் போட்டி ஆகட்டும். அவர் இருப்பார். தன் கேமிராவில் படங்களாக சுட்டுத் தள்ளுவார். இத்தனையும் அச்சில் வர ஆசைப்படுகிறார். சென்ற வருடத்தில் மட்டும் இரண்டு “குதிரைலாட வளைவு”

வாசகர் மறுவினை

இந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும். நாடன் அவர்கள் புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் மற்றும் பல துரை சார் வல்லுநர்கள் கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.

மகரந்தம்

சில ஓவியங்களைக் காட்டி ஆங்கிலம், பிரஞ்சு இரு மொழிகளிலும் அவற்றைக் கதைப்படுத்தச் சொல்லப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட கதைகளில் பெண்கள் சாதனையாளர்களாய் இருந்தார்கள், வன்முறை மிகுந்திருந்தது, பெற்றோர் வசை பாடப்பட்டார்கள், குற்றவுணர்வு தவிர்க்கப்பட்டது; பிரஞ்சு மொழிக் கதைகளில், மூத்தவர்கள் அதிகாரம் செலுத்தினார்கள், குற்றவுணர்வு நிறைந்திருந்தது, சமவயதினர் வையப்பட்டனர். இதே போன்ற ஒரு ஆய்வை இதே ஆய்வாளர் பின்னர் ஜப்பானிய அமெரிக்கர்களிடம் மேற்கொள்கிறார். “என் விருப்பங்கள் என் குடும்பத்தினரின் விருப்பங்களுடன் முரண்படும்போது…” என்ற வாக்கியத்தை ஜப்பானிய மொழியில் நிறைவு செய்தவர்கள், “மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது,” என்றும், ஆங்கில மொழியில் நிறைவு செய்தவர்கள், “நான் நினைத்ததைச் செய்கிறேன்,” என்றும் முடித்தார்களாம்!

குளக்கரை

பறவைகளைக் கொன்று உண்பதற்கான பிராணிகள் என்றோ, அழகு என்று பார்த்துப் படமெடுக்க உதவுவன என்றோ, ரொமாண்டிக் பாடல்கள்/ இரக்கவுணர்வுப் பாடல்கள் என்பனவற்றை எழுத உதவுவன என்றோ மனிதர் பல வகைகளில் அவற்றைப் பார்க்கிறார்கள்… வனவிலங்குகளை அழிப்பதைப் பெரும் சாதனையாகக் கருதிய மூடர்கள் அமெரிக்க அதிபர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மொத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே இப்படிப் பல கண்டங்களில் வன விலங்குகளின் பேரழிவுக்கு வழி செய்த ஆட்சியாகத் திகழ்ந்திருக்கிறது. … விமானங்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல உருப்பெருத்து பிரும்மாண்டமான உலோகக் கூண்டுகளாக மாறி வருகின்றன. இவை மேலெழவும், கீழிறங்கவும் ஏராளமான நிலப்பரப்பு தேவைப்படுவதோடு, அந்த நிலப்பரப்பில் மரங்கள் செடிகொடிகள் ஆகியன அழிக்கப்பட்டு பறவைகளுக்கு இருக்கும் இருப்பிடங்களும், அவை உணவு தேடும் நிலங்களும் இல்லாமல் ஆக்கப்படுகின்றன.

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்ட இஸ்ரோ பெண்மணிகள்

இந்தக் காணொளியை வாசகர்களுக்குக் கொடுப்பதில் சொல்வனம் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது. இந்தியா செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய விண்கலம் 2014 இல் செவ்வாய் கிரகத்தை அடைந்து அந்தக் கிரகத்தைச் சுற்றி சுழற்சியில் அமர்ந்தது. இதன் சிறப்பு- இது இன்னொரு கிரகத்தைச் சுற்றி வர ஒரு கலத்தை அனுப்புவதில் இந்தியாவின் “செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்ட இஸ்ரோ பெண்மணிகள்”

கோட்பாட்டு மோதல்

தீவிரவாதத்தினால் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுதல் நிலவுகிறது. தொழில்நுட்ப மாற்றங்களினால் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கின்றனர். ஓரிடத்தில் இருந்து மற்றொரு பிரதேசத்திற்கு வரலாறு காணாத அளவிற்கு மக்கள் குடிபெயர்கின்றனர். இது இப்போது அல்ல. 1914ஆம் வருடம். உலகப் போர் மூள்கிறது. பொருளாதார சித்தாந்தங்களை எல்லோரும் குறைகூற ஆரம்பிக்கின்றனர். அரசாங்கத்திற்கு முழு அதிகாரமும் “கோட்பாட்டு மோதல்”

2016இல் மறைந்த இலக்கியவாதிகள்

தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் கடந்த வருடத்தில் யாரெல்லாம் மறைந்தார்கள்? ஞானக்கூத்தன், வே.சபாநாயகம், குமரகுருபரன், கே.ஏ.குணசேகரன்… இங்கே மேற்கத்திய உலகின் ஜாம்பவான்களைப் பட்டியலிடுகிறார்கள். 2016ல் சொல்வனம் இதழில் அஞ்சலி செலுத்தப்பட்டவர்கள்: எழுத்தாளர் உம்பர்த்தோ எக்கோ நாடகாசிரியர் சோ கவிஞர் ஞானக் கூத்தன்  

குளக்கரை

ஆறு வருடங்களாக ஆடிய ஆட்டம் முடிவுக்கு வருவது போலொரு தோற்றத்தோடு நாம் 2017இல் அடியெடுத்து வைத்திருக்கிறோம். துருக்கி, சிரியா, ரஷ்யா, இரான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஐஸ்ஐஸ் தீவிரவாதிகளோடு நடத்தும் போர் அதிகாரப்பூர்வமான நிறுத்தத்தில் வந்திருக்கிறது. ஆலப்போ நகர் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்த நிலையில் இன்னும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான தீவிரவாதிகள் அந்த இயக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

அன்புள்ள வாசகர்களுக்கு…

சொல்வனம் இணைய இதழில் எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் சில கட்டுரைகள் வரவிருக்கின்றன. சொல்வனம் அ. முத்துலிங்கம் சிறப்பிதழ் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் வரலாம். அ. முத்துலிங்கம் அவர்களைப் பற்றியும், அவரது எழுத்து பற்றியும் நீங்கள் ஒரு கட்டுரை எழுத முடியுமா?

புதிருக்கு விடை தெரியுமா?

பூமியின் தாவரங்களும் விலங்குகளும் மெள்ள மெள்ள அழிந்துகொண்டிருக்கின்றன அல்லது நசிந்துகொண்டிருக்கின்றன என அறிவோம். ஆனால், நம் காடுகள் எந்தப் பகுதியில் அழிக்கப்படுகின்றன என்றும் எந்த நாடுகள் அவற்றை பாதுகாக்கப் போராடுகின்றன என்றும் உங்களுக்குத் தெரியுமா? உங்களின் அறிவை பரிசோதித்துப் பார்க்க ஸ்பீகல் அழைக்கிறது. எடுத்துக்காட்டுக்கு முதல் கேள்வி: கானழிப்பு: “புதிருக்கு விடை தெரியுமா?”

சோ

அரசியல் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள், துறை வல்லுனர்கள் முதலியவர்களுக்கு இடையில் சாதாரண மக்கள் மத்தியில் இருந்து கருத்துருவாக்குகிறவர்களாக, அவர்களை வழிநடத்துபவர்களாக சிலர் தோன்றுகிறார்கள். அவர்கள் பின்னால் இயக்கங்களோ, ஸ்தாபனங்களோ, பண/ஜாதி/இன பலங்களோ இருப்பதில்லை . எனக்கு முந்தைய தலைமுறையிலிருந்து, இன்றைய தலைமுறை வரை அரசியல் சமுதாய நிலைப்பாடுகளில் எவை நல்லவை என்று உடனடியாகவும், தெளிவாகவும் சுட்டி வழி நடத்திய, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் சோ முதன்மையானவர்

எழுத்தாளர் எப்படி உருவாகிறார்?

பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் உலகெங்கும் பிரபல்யம் பெற்றிருந்தனர். ஆனால் யூரோப்பில் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் தெரிய வந்த அளவுக்கு, யூரோப்பிய எழுத்தாளர்கள் பிரிட்டனில் தெரிய வந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. யூரோப்பிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஒரு குளிர்ப்போர் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. தீவுகளுக்கே ஓரளவு தனிப்படக் கிடக்கும் “எழுத்தாளர் எப்படி உருவாகிறார்?”

குளக்கரை

நமது வண்டியை அளவிட்ட வேகத்தைவிட அதிகமாக ஓட்டி மாட்டிக்கொண்டு ஃபைன் கட்டுகிறோம்; வருடாந்திர வரியைத் தாமதமாகக் கட்டுவதால் கூடுதலாகக் கட்டுகிறோம்; தவறுதலாக மகனின் ரயில் கார்டைக்கொண்டு பயணம் செய்து மாட்டிக்கொள்கிறோம்; இணையம் வழியாக நிறைய தடைசெய்யப்பட்ட/புரட்சியாளர்களின் புத்தகங்களை வாங்குகிறோம் – இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை பெற்றாலும், இந்த பலதரப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து உங்களது ‘குற்றப்பட்டியல்’ தயார் செய்யப்பட்டு அதன் மூலம் சமூகத்தில் நீங்கள் எந்தளவு கெட்டவர் எனக் கணக்கிட முடியுமானால் அது எத்தனை …

மகரந்தம்

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 130 மில்லியன் ஹெக்டர் காடுகள் இந்தோனேஷியாவில் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் எட்டு புட்பால் திடல் அளவுக்கான காடு சாம்பலாகிறது. கிடைத்த ஒவ்வொரு சதுர அடியும் புது நகரங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் உருவாகியுள்ளன. காட்டுத்தீயை உருவாக்குவதே மிகச் சுலபமாக தரிசு நிலங்களாகவும், கட்டிடங்களாகவும் மாற்றுவதற்கான சுலபமான வழி எனக் கண்டுகொண்டிருக்கும் அரசும் தனியார் மையங்களும் காட்டுத்தீயில் குளிர்காய்கிறார்கள்.

வாசகர் மறுவினை

வெறும் பணி சம்பந்தமான அனுபவம் பற்றி மட்டுமோ அல்லது சுற்றுலாவில் பார்த்த விஷயங்களைப்பற்றி மட்டுமோ எழுதாமல், பலமுனைகளில் இருந்து ஸிவிட்ஜெர்லாந்தை பார்த்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி. உங்கள் பதிவுகள் அனைத்தும் என் பயணங்களின்போது அங்கே நான் கவனித்ததில் இருந்து இம்மி பிசகாமல் இருந்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது. ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா தனது பல படங்களை இன்டர்லாக்கன் ஊரைச்சுற்றி எடுத்து அந்தப் பகுதியை பிரபலப்படுத்தி இருப்பதால், இப்போதெல்லாம் அங்கே இந்திய சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் ஜெனீவாவில் உள்ள செர்னில் …

ஹயாவ் மியாசகியின் சினிமா: மனிதத்தின் சாரம்

கார்ட்டூன் சினிமா என்றால் எலியும் பூனையும் துரத்திக் கொண்டிருக்கும் படங்கள் என்றோ, தூங்கும் ராஜகுமாரியை ஒரு ராஜகுமாரன் எழுப்பி மணம் புரியும் கதை என்றோ நினைத்துக் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது. இன்று எந்தத் துறையும் நூறு உள்பிரிவுகளைக் கொண்டு விளங்குகிறது. சில சமயம் ஒரு சிறு உப “ஹயாவ் மியாசகியின் சினிமா: மனிதத்தின் சாரம்”

போர்க்கள நடிப்பு

பத்திரிகையாளருக்கு அழகு என்பது நேரடியாகக் களத்தில் இறங்கி, சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து உரையாடி, இரு பக்கமும் சென்று, தன் சொந்தக் கண்ணால் கண்டதை தத்ரூபமாக விவரிப்பது. ஆனால், வருங்காலத்தில் அதற்கு தேவை இராது. உங்கள் கண்ணில் ஒரு கருவியை அணிந்துகொண்டால், எங்கே போக வேண்டுமோ, அங்கே போகலாம். எவருடன் பேச “போர்க்கள நடிப்பு”

ஆஸ்கார் விருதுக்கு கருதப்பட வேண்டிய 16 படங்கள்

ஹாலிவுட் படங்களில் கருப்பர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் தருவதில்லை; அப்படியே ஆப்பிரிக்க அமெரிக்கர்களை நாயகர்களாகக் காட்டினாலும், எதிர்மறை கதாபாத்திரங்கள் மட்டுமே தருகிறார்கள் என்பது சென்ற வருட ஆஸ்கார் விருதுகளின் போது முக்கியமான நடைமுறை சிக்கலாக முன்னிறுத்தப்பட்டது. அதன் மூலம் சிறுபான்மையினரையும் பெண்களையும் தற்பால்விரும்பிகளையும் நடுநாயகமாகக் கொண்ட படங்களை எடுப்பதில் எல்லோரும் “ஆஸ்கார் விருதுக்கு கருதப்பட வேண்டிய 16 படங்கள்”

மகரந்தம்

புகைப்படங்களில் வேண்டிய பலவிதமான மாற்றங்களை செய்ய மென்பொருட்களுக்குக் குறைவில்லை. அதேபோல காணொளிகளில் எடிட்டிங் செய்து மாற்றங்களை உருவாக்க முடியும். கைப்பேசியில் கூட இந்த மாற்றங்களைச் செய்ய முடிவதால் பொழுதுபோக்குக்காக பலரும் படங்களை எடிட் செய்து வலைத்தளங்களில் பகிர்வதை பார்த்து வருகிறோம். ஆனால், ஒலித் துண்டுகளை எடிட் செய்து கொலாஜ் போல ஒன்று உருவாக்குவது சவாலாகவே இருந்துவந்தது. இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சில ஒலித்துண்டுகளை மாற்றம் செய்யலாம் ஆனால் மொழிக்கும் ஒலிக்கும் இருக்கும் தொடர்பை எடிட் செய்யமுடியாது. அடோபி எனும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் பிராஜெக்ட் வோக்கோ எனும் மென்பொருள் வழியில் ஒலிக்கும் மொழிக்கும் …

குற்ற நீதியொறுத்தல் முறை

அமெரிக்க நீதி முறை எத்தனை பயங்கரம் என்பது தெரியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் இந்தியர்களும்/ தமிழர்களும். பழுப்புத் தோலுக்குக் கீழே பல நிறங்களில் மேலும் பல இனக் குழுவினர் காவல் துறையின் கடுமையான பார்வைக்கும், இழி நோக்குக்கும் ஆளாக இருக்கக் கிட்டுவதால், இந்தியரும் சீனரும் இது “குற்ற நீதியொறுத்தல் முறை”

காட்டு விலங்குகள்

”பிணையுண்ட வாழ்வு” என்னும் தலைப்பிடப்பட்ட இந்தப் படம் 2016ஆம் வருடத்தின் சிறந்த காட்டுயிர் புகைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மனிதரின் உயரம் 1.8 மீட்டர் என்றால், இந்த ஒராங்குட்டான் முப்பது மீட்டர் உயரத்தை ஏற்கனவே கடந்து ஏறிக்கொண்டிருக்கிறது. கீழே அதன் வீடான கானகத்தைக் காணலாம்: நன்றி: 2016 wildlife photographer “காட்டு விலங்குகள்”

வாசகர்களுக்கு சொல்வனத்தின் தீபாவளி நல் வாழ்த்துகள்

தீபாவளி நன்மைகளின் எழுச்சியைக் கொண்டாடும் திருவிழா. இந்திய கலாச்சார ஒற்றுமையின் சின்னங்களில் ஒன்று.
வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

குழப்பவாதக் குரங்குகள் கட்டுரை – மறுவினைகள்

வீட்டில் யாருமில்லையென்றால், ரெண்டு பீர் பாட்டிலுடன், ஒரு நல்ல திரைப்படத்தை டி.வி.டியில் பார்த்தபின் அதனைக்க்குறித்து சிந்தனை செய்யும்போது குழப்பவாதக் குரங்குகள் மனதுள் குதித்து ஆர்ப்பரிக்கும் பாருங்கள். அப்போதும் இது போன்ற உணர்வுகள் சாத்தியம்.. குதர்க்கமாகவோ, கிண்டலாகவோ சொல்லவில்லை. சாத்திய இழைகளை சிந்திக்கிறேன். … சிலிக்கான் பள்ளத்தாக்கின் மீது சிலருக்கு ஒரு காட்டம் இருக்கும். எப்படி, மும்பையிலிருந்து அமெரிக்கா செல்ல விசா கிட்டாதவர், ஊராய்யா அது? என்று பேசுவது போல,

மகரந்தம்

உலக பலவான்களான வளர்ந்த நாடுகள் , முன்னெப்போதுமில்லாத வன்முறையையும் அழிவையும் உருவாக்கி இருப்பதாக இந்தக் கட்டுரை ஆசிரியர் குற்றம் சாட்டுகிறார். இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. கடந்த நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் பெரிய ஆக்கிரமிப்புகள் மற்றும் கலவரங்களுக்கு மத்தியில் ஓரளவு தனது சுயத்தைத் தக்கவைத்து பிரிவினைவாதிகள் ஊடுருவ முடியாத நிலமாகவே சிரியா இருந்து வந்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஆதிக்க சக்திக்கு பலப்பரிட்சைக் களமாக இருந்துவரும் சிரியா உள்நாட்டு கலவரங்களால 2011 ஆம் ஆண்டு முதல் பேரழிவை சந்தித்துவருகிறது.

எத்தியோப்பியாவின் பழங்குடியினர்

தி கார்டியன் புகைப்படத் தொகுப்பு: எத்தியோப்பிய நாட்டின் பழங்குடியினர் பற்றிய குறிப்புகளும் படங்களும்

மகரந்தம்

சிதார் மேதை ரவிஷங்கரின் மற்றொரு ஆபரா வெளியீடு அடுத்த வருடம் லெஸ்டர் நகரில் அரங்கேற்றமாகும் எனும் விவரத்தைக் குறிப்பிடும் இந்தக் கட்டுரை அவரது முதல் ஆபரா நிகழ்வு 2012 ஆம் வருடம் ராயல் ஃபெஸ்டிவல் ஹால் என்று வழங்கப்படும் லண்டனின் இடதுகரை வளாகத்தில் நிகழ்ந்ததைக் குறிப்பிடத் தவறியிருக்கிறது. அந்த நிகழ்வை நாம் சொல்வனத்திலும் கட்டுரையாக வெளியிட்டோம்.

குளக்கரை

உலக புரட்சி இயக்கம் எனும் கனவை விதைத்து உருவாகிய அமைப்புகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய்கிறது. பெரும் புரட்சிகள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் அழிவுப் பாதைக்குக் கொண்டு சேர்க்கும் என்பதை உணர்ந்தாலும் விட்டில் பூச்சிகளாக புரட்சி இயக்கங்களுக்கு உண்டான மயக்கங்கள் இன்றளவும் சாத்தியம் ஆகின்றன. இதை தோற்ற மயக்கம் எனச் சொல்வதா அல்லது நமது தலைவிதி எனக்கொள்வதா? ஆனாலும், அழிவுக்குச் செல்லும் பாதை எப்படி தேன் தடவிய வார்த்தைகளாலும் மாய்மாலங்களாலும் போடப்பட்டிருக்கிறது என்பதைப் படிக்கும்போது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும் சித்திரம் படிகிறது

மகரந்தம்

இன்றைய காலகட்டத்தில் நோய்க் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆன்டிபயாடிக் உட்கொண்டாலும் உங்கள் உடம்பை சாதாரணமாக்க முடிவதில்லை. நுண்ணியிரிகள் அவற்றை எளிமையாக எதிர்கொண்டு, தாக்குப்பிடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டன. நோய் எதிர்ப்புத் திறன் இல்லாமல் வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி சமயத்தில்தான் மக்கள் தாவரத்தொடர்பியில் விஞ்ஞானியைக் குறித்த இந்தக் கட்டுரை வெளியாகிறது. இவர் இயற்கையை நாடுகிறார். பழங்கால வைத்திய முறைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்கிறார். வெறும் வேதியியல் கொண்டு, இரசாயனவியல் கலவைகளைக் கண்டுபிடிப்பதை விட தொன்றுதொட்ட பழக்கங்களை வைத்து நோய்களை குணமாக்கும் வைத்தியத்தை விளக்குகிறார்

குளக்கரை

அறுபதுகளிலும், எழுபதுகளிலும் பாஸ்பேட் வளம் மிக்க நிலமாக இருந்த காலங்களில் அத்தீவின் மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். அது காலியான பின் நௌரூ தன் வருமானத்திற்காக வரி ஏய்ப்பதற்கும், ஹவாலா பணம் மோசடி செய்வதற்கும் ஒரு இடமாக தன்னை மாற்றிக் கொண்டது. இப்போது ஆஸ்திரேலியா, அவர்களுக்கு கொடுக்கப்படும் உதவித் தொகைக்காக தன்னுடைய அகதி சிறைச்சாலையை நௌரூவில் கட்டமைத்து அவர்களைக் கொண்டே நடத்துகிறது. அவுஸ்த்ரேலியாவில் தஞ்சம் புகுவதற்காக படகுகளில் வரும் அகதிகளையும், விசா இருந்தும் குற்றங்களுக்காக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட காத்திருப்பவர்களையும் தன் நாட்டு சிறைகளில், தன் சட்டத்தின் மேற்பார்வையில் வைக்காமல் நௌரூவின் சிறைக்குள் அனுப்பி விடுகிறது. அந்த சிறை மதில்களுக்குள் நடக்கும் கொடுமை…

பாராலிம்பிக் வீரர்கள்

மனித உடலின் சாத்தியங்கள்தான் எத்தனை, எத்தனை? உடல் குறைகள் ஆர்வமும் ஊக்கமும் நிறைந்து ததும்பும் உள்ளத்தை அடக்கிவிட முடியாது என்பதற்கு ரியோவில் நடந்த பாராஒலிம்ப்க்ஸ் ஓர் உதாரணம். செயற்கை காலுடன் எத்தனை வேகமாக ஓடுகிறார், ஒற்றைக் கை இல்லாமல் கடுமையான நீச்சல் போட்டி, ஒற்றைக்காலால் உயரம் தாண்டுகிறார். சக்கர “பாராலிம்பிக் வீரர்கள்”

ஆட்பிடியன்

அமேசான் காடுகளில் வாழும் ஊர்வன ஜந்துக்களையும் நீர் மற்றும் நிலம் என இரண்டிலும் இயங்கவல்ல உயிரினங்களையும் அவதானிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மார்க் கொவன் (Mark Cowan) சென்றிருக்கிறார். அங்கேதான் இந்தக் காட்சியைக் காண்கிறார். முதலையின் தலை முழுக்க பட்டாம்பூச்சிகள் அமர்ந்திருக்கின்றன. முதலையின் முகத்தின் மேல் இருக்கும் உப்பை உண்பதற்காக “ஆட்பிடியன்”

குளக்கரை

தென் சீன கடல் பகுதிகளில் தான் கோரும் உரிமை செல்லுபடியாகாது என ஹேக் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்து சீனா பல கோணங்களில் எதிர்வினை ஆற்றி வருகிறது. ஒருபுறம் எப்போதும் போல அந்த தீர்ப்பைக் குறித்த வலைதளங்களை முடக்கியது. அடுத்ததாக அந்த தீர்ப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால எதுவும் மாறப் போவதில்லை என்றும் அறிக்கை விட்டது. பிறகு தென் சீன கடலின் செயற்கை தீவுகளின் கட்டுமானத்தை துரிதப்படுத்தி அதை பிரகடனப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தன்னுடைய பொருளாதார, வர்த்தக குடையின் கீழ் உள்ள நாடுகள் இந்த தீர்ப்பை ஒட்டி எதிர்ப்புக் குரல் எழுப்பாதவாறு பல நடவடிக்கைகளை எடுக்கிறது.

பொறியியல் போதனையாளருடன் ஒரு உரையாடல்

சார்ந்திருப்பதிலிருந்து விடுதலை பெற்று சுயமாகச் செயல்பட முனையும்போது துவக்கத்தில் பல குறைபாடுகள் எழும். ஜப்பானியரின் உதாரணம் ஒன்றையோ, தாய்வானியரின் அனுபவங்களையோ, ஏன் சீனர்களின் அனுபவங்களையோ கூட நாம் எடுத்து நோக்கலாம். அந்த நாட்டு உற்பத்தித் துறைகளின் விளை பொருட்கள் முதல் பத்து ஆண்டுகள், ஏன் பதினைந்தாண்டுகள் வரையிலும் கூட மேலைப் பொருட்களோடு ஒப்பிட்டால் கீழ்த்தரமானவையாகவும், மலினமான தொழில் திறன் உள்ளனவாகவும் தெரிய வந்திருந்தன. மேற்கு நாடுகளுக்குத் தொடர்ந்து பொருட்களைக் கொடுக்கத் துவங்கிய போது அவர்கள் மேற்கின் அளவைகளைத் தம் பொருட்கள் ஈடுகொடுத்து நிற்க வேண்டும் என்ற அவதிக்கு உட்பட்ட போது தர மேம்படுதல் அவசியமாயிற்று. ஜப்பானியர் மேற்கின் உற்பத்தித் தொழில் நுட்பங்களைத் தம் சமூகக் குழுவினரின் பழக்க வழக்கங்களோடும், பண்பாட்டுத் தேர்வுகளோடும் பொருத்தி…

மகரந்தம்

இது அறிவுலகத்தை நோக்கிய விமர்சனம். தற்போது இணையத்திலும் தமிழ் இலக்கிய கலை பண்பாட்டு சூழலிலும் புழங்கும் பெரும்பான்மையான சிந்தனையாளர்கள் படிக்க வேண்டிய சிறு கட்டுரை. விமர்சனமாக எடுத்துக்கொள்ளும் சிந்தனையாளர்கள் மறுப்புத் தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கும் தோறும் இந்த கட்டுரைக்கு வலு சேர்க்கும்படியாக அமைந்துவிடும் என்பதுதான் நிதர்சனம்.

சென்ற வருடத்தில் மட்டும் ஆறரைக் கோடி அகதிகள்

ஐ.நா. அறிக்கையின் படி சென்ற வருடம் மட்டும், 65.3 மில்லியன் பேர்கள் தங்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார்கள் இது இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகைக்கு சமமாகும். ஃபிரான்ஸில் ஒரு குண்டு வெடித்தால், உலக ஊடகங்கள் அனைத்தும் அதை பதிவாக்கி விவரிக்கிறது. ஆனால், ஃபிரான்ஸ் நாட்டின் ஜனத்தொகைக்கு சமமானவர்கள் தங்களின் “சென்ற வருடத்தில் மட்டும் ஆறரைக் கோடி அகதிகள்”