மஷி பேனா

ஆங்கிலமும், வரலாறும் தான் அவர் பாடங்கள். அவர் இந்தியா வரைவது மிக வித்தியாசமாக இருக்கும் கீழே இருக்கும் தெற்குப் பகுதிக்கு ஆங்கிலத்தில் எழுத்தான ஒரு ’வி’ யைப் போடுவார். மேலே இருக்கும் வட இந்தியா ஒரு கெளபாய்த் தொப்பி. அந்த தொப்பியின் ஒரு புறத்தில் இருந்து ஒரு கோடு வரும். அந்த வளைந்த கோட்டில் மிஸோரம், நாகாலந்து, அஸ்ஸாம் மணிப்பூர் எல்லாம் அடங்கிவிடும். மேறகுப் பகுதி அம்போ…

எண்ணெய்ச் சிதறல் – என்ன நடக்கிறது?

விபத்து மூலம் வெளியேறி கடலில் கலந்துவிடும் எண்ணெயினால் ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் ஒன்று: முக்கியமான மீன் வளங்களும், நீர்வாழ் உயிரினங்களும் பெருமளவில் பாதிக்கப்படுதல். குறிப்பாகச் சொல்வதென்றால், மிக நுண்ணிய படிநிலைகளை கொண்ட மீனின் வளர்ச்சிக் காலகட்டங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன. மீனின் முட்டைகளும், லார்வாக்களும் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் – 2

அவன் பிரச்னை நரம்புக் கோளாறு அல்ல, உணர்வுபூர்வமானது. அவனுக்கே இதெல்லாம் தானே பழகிக்கொள்ள நாளெடுக்கும். இப்படித் தடுமாற்றங்களில் அமெரிக்கர்கள் நிறைய வைத்தியச் செலவு செய்கிறார்கள். ஆனால் இந்த உணர்ச்சி அலையெழுச்சிகளுக்கெல்லாம் முழு நிவாரணம் என்பது இல்லை. கொஞ்சமாய் சிறு ஆசுவாசம் கிட்டலாம். திகிலுணர்சசி ரொம்ப உள்ளாழத்தில் ஒளிந்திருக்கிறது, எடுக்கிறது சிரமம். ஆனால் விபரீதப் பொழுதுகளில் சட்டென எழும்பி அது கிடுகிடுவென மேலே வருகிறது.

வாசகர் எதிர்வினை

இதுவரை ராமன் ராஜாவின் கட்டுரைகளை படித்து படித்து மகிழ்ந்து வந்தேன். எனக்கு ராமன்ராஜா அறிமுகம் ஆனதே சொல்வனத்தில்தான். இந்த வார கட்டுரை அவரது நகைச்சுவைத் திறனுக்கும் அவரது அறிவியலை ஜனரஞ்சகமாய் சொல்லும் பாங்குக்கும் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு என்பேன்.

வாசகர் எதிர்வினை

சொல்வனத்தில் டேவிட் ஷெப்பர்ட் பற்றின அஞ்சலி படித்தேன். அருமையான கட்டுரை. போலியான பாவனைகள் இல்லை என்பதே இக்கட்டுரையின் முக்கிய சிறப்பு. அடுத்து ஒரு புன்னகையுடனான மீள்பார்வையாக உள்ளது இதன் உத்தேசம். இழப்பைப் பற்றி பேசுகையில் சமநிலைக்கு இந்த நகைச்சுவை நல்லது. உங்கள் நினைவுகளிலிருந்து ஆரம்பித்து குறிப்பான புறவய தகவல்கள் தந்து அருமையாக ஒருங்கிணைத்துள்ளீர்கள்.

வாசகர் எதிர்வினை

சுகா அவர்களின் கட்டுரை சூப்பர். அவருடைய அக்மார்க் நகைச்சுவை கொண்ட சிறப்பான ஆக்கம். மேலும், சென்ற இதழில் வெளியான ராமன் ராஜா அவர்களின் கட்டுரை மிக அருமை. சுவாரஸ்யமாக எழுதுகிறார். பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பருந்துப் பார்வையை அளிப்பதாக இருந்தது.

வாசகர் எதிர்வினை

இன்றைய சலிப்பின் காரணம், எதையெல்லாம் படிக்கிறோமோ அவற்றிலெல்லாம் நம் பங்கு இருப்பதாய் எண்ணுகிற ஒரு மாயையே. அது தான் எல்லாவற்றையம் மேய்ந்து பார்க்கச்சொல்கிறது.

வாசகர் எதிர்வினை

சாம்.ஜி.நேதனின் கட்டுரைகளை நான் விரும்பிப் படிக்கிறேன். சென்ற இதழில் அவர் கட்டுரை இடம் பெறாமல் போனது ஏமாற்றமளித்தது. தொடர்ந்து நல்ல படைப்புகளை, முக்கியமாக அறிவியல், இசை குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வாருங்கள்.

வாசகர் எதிர்வினை

இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் நேரடி வாசிப்பில் சிறிய புன்னகையையும், தொடர்ந்த யோசிப்பில் வாழ்க்கையின் பெரிய குரூரத்தையும் ஒரு சேர முன்வைத்தன. சொல்வனம் இதழில் திரு.விக்கி எழுதிய இளையராஜாவைக் குறித்த கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது. சாம்.ஜி.நேதன், ராமன்ராஜா இருவரும் ஆழமான கருத்துகளை மிகவும் எளிமையான நடையில் எழுதி வருகிறார்கள்.

வாசகர் எதிர்வினை

நமது பாரம்பரியம், நமது சொத்து என எண்ணாத மக்களிடம் இருக்கும் ஒரு கலை புரவலரின்றி அழியும். அதன் நீட்சியே இன்று நாம் காணும் மல்லர்கள். சென்ற இதழில் வெளியான சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி என்ற திரு வைத்தியநாதனின் கட்டுரை நிதர்சனங்களை முன்வைக்கிறது. நம்மால் ஆகாத காரியத்தை சீனா செய்வதன்மூலம் நமக்குக் கிடைக்கப்போகும் பலன்களை பட்டியலிடுகிறார்.

கிரகர் சோம்சா எனும் கரப்பான்பூச்சி

கவை நிறைய அம்பிருந்தும்
ஏதொன்றையும் பிரயோகிக்க மனம் கூசும் வேடனொருவன்
அம்பினும் கூரிய பசி பாய்ந்து உழன்ற போது…

வாசகர் எதிர்வினை

பொதுவாக இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளை தாண்டிச் செல்லவே நான் விரும்புவேன். அதையே முதல் இரண்டு இதழ்கள் வெளியான போதும் செய்தேன். ஆனால் மூன்றாம் இதழில் அப்படி என்னதான் இருக்கிறது எனப் படிக்க முற்பட்டபோது எவ்வளவு அருமையான கட்டுரைத் தொடரை இழக்க இருந்தேன் எனத்தெரிந்தது.