ஐஎஸ் பிடியில் இருக்கும் யசிதி இனப்பெண்கள் படும் கொடுமைகளைத்தவிர. குர்துகள் குறித்து சமீபத்தில் செய்திகள் எதையும் படித்திருக்க மாட்டோம், ஏனெனில் குர்திஸ்தானின் பெஷ்மெர்கா படைகள், ஐஎஸ் படைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். அவர்களின் பகுதிக்குள் (குர்திஸ்தான்) நுழைய முயலும் எந்த ஐஸ் படையும் சுத்தமாக அழிக்கப்படுகிறது. ஐஎஸ் செய்த அத்தனை கொடூரங்களையும் பெஷ்மெர்காவும் தன்னிடம் சிக்கும் ஐஎஸ் படைகளுக்குச் செய்கிறது. அதனால், குர்திஸ்தானை ஒட்டிய பகுதிகளில் எந்த புது நிலப்பகுதியும் இழக்கப்படவில்லை. ஓரளவுக்கு ஈராக்கின் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன பெஷ்மெர்கா படைகள்.
Category: உலக அரசியல்
ஈராக் விவசாயம் – போருக்குப் பின்
உலகிற்கே நாகரிகத்தையும், விவசாயத்தையும் கற்றுக்கொடுத்த மெசபடோமியா நாகரிகம் இன்றைக்கு உணவுக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமாய் இறக்குமதி செய்கிறது. இன்று ஈராக்கின் விவசாய நிலங்களாக இருப்பவை சுமேரியர்கள் உருவாக்கியது. ஒருகாலத்தில் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அறுபது சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தனர். இன்றைக்கு நிச்சயம் ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாய் இருக்கும் என்றே நினைக்கிறேன். சரியான கணக்கு ஏதும் அரசால் எடுக்கப்படவில்லை.
ஈராக் எனும் குருக்ஷேத்திரம்
ஈராக்கில் ஆபத்துக்கு அஞ்சாமல் அங்கு மிகச் சமீபகாலம் வரை தொடர்ந்து பணியாற்றியவர் ஜெயக்குமார். இக்கட்டுரை அவரின் நேரடி அனுபவங்களையும், கிட்டிய தகவல்களையும் சார்ந்து எழுதப்படுகிறது. இனி கட்டுரையின் ஒரு பகுதி: ‘உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத எண்ணம் கொண்டோர் அனைவரும் அணி அணியாக தங்களை ஐ எஸ் ஐ எஸ்ஸில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். இந்தக்கூட்டத்தில் சேர்பவர்கள் உலகின் இந்தப் பகுதியில்தான் என்றில்லாமல் உலகம் முழுக்க இருந்து வந்து சேர்கிறார்கள். இந்தியாவிலிருந்தும்கூட ஆட்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். மும்பை கல்யானைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இந்த வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது, இனி இந்தியாவுக்கு திரும்பப்போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார்.’
லீ குவான் இயூவுக்கு அஞ்சலி
சிங்கப்பூரில் அப்போது எவருமே அதிகபட்சம் சில தலைமுறைகளாகத்தான் அங்கே வசித்துவருகின்றனர். அதுவும் இன்றைய மலேசியாவோடு சேர்ந்த மலாயாவின் ஒரு பகுதியாக இருப்பதை நம்பித்தான். இவர்கள் அல்லது இவர்களது முன்னோர்கள் ஆயிரமாயிரமாண்டுகள் வரலாறுள்ள தங்கள் தோற்றுவாய் நாடுகளைக் கைவிட்டு இங்கு இடம்பெயரக்காரணம் தாங்களாகப் பெரும்பொருளீட்டிவிடும் ஆசையினாலோ அல்லது பிரிட்டிஷார் கொடுத்த (பொய்யான) உத்தரவாதத்தின் பேரிலோதான். ஒருவேளை குறுகியகாலத்தில் சிங்கப்பூர் சொந்தக்காலில் நின்று சமாளித்துப் பொருளாதார ரீதியில் வளரத்தொடங்காவிட்டால் இவர்கள் நேரத்தை வீணடிக்காமல் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு புறப்பட்ட இடங்களுக்கே போய்ச்சேர …
குளக்கரை
அதே நேரம் இஸ்ரேலில் என்னவென்று பார்த்தால், அங்கு ஆட்சி புரிந்த வலது சாரி அரசுடைய அரசியலை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் சொல்கிறார், பயத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தை வெல்லும் அரசியலை ஒழித்துக் கட்டி, மக்கள் சுதந்திரமாக உலவும் அரசியலைப் பீடமேற்றுவோம் என்று குரல் கொடுக்கிறார். அதாவது இஸ்ரேலைப் பயங்கரவாதிகளுக்கும், இஸ்லாமிசத்தின் யூத வெறுப்பு அரசியலுக்கும் தாரை வார்ப்போம் என்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.
குளக்கரை
இப்போது யூரோப்பில் பரவலாகத் தெரிய வரும் சொல் – பாகனியம். எப்போதோ கிருஸ்தவம் தன் இரும்பு ஆணி கொண்ட காலணிகளால் நசுக்கிக் கொன்றுவிட்ட ஒரு இசம் இது. ஆனால் குற்றுயிரும் குலையுயிருமாகப் பல மூலைகளில் இருந்திருக்கிறது. சமீபத்து ஹாலிவுட் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களின் உபயமா அல்லது உலகில் பெரும் பணபலத்துடன் பரப்பப்படும் எவாஞ்சலியக் கிருஸ்தவத்துக்கு ஒரு எதிர் வினையா என்று சொல்ல முடியவில்லை. ஐஸ்லாந்தில் மறுபடி பழைய பாகன் தெய்வமான தோர் என்பாருக்குப் பெரும் செலவில் ஆலயம் ஒன்று கட்டப் போகிறார்கள்.
துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு – ஜாரேட் டயமண்ட் : மிகச் சுருக்கமான அறிமுகம்
அக்காலத்தில் அமெரிக்க கண்டத்தில் நிலவிய இன்கா, அஸ்டெக் பேரரசுகள் பெருநிலப்பரப்பை ஆண்டாலும் பழமையான கருவிகளைக் கொண்டிருந்தன. ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விவசாயப் பழங்குடிகளாகவும், வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடித் தன்மை கொண்டவர்களாகவும் இருந்தார்கள். இந்த தொழில்நுட்ப, அரசியல் வேறுபாடுதான் ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு அடித்தளமிட்டது; இன்றைய சர்வதேச சமத்துவமின்மைக்கும் காரணமாக அமைந்தது. ஆனால் இவ்வேறுபாடு எப்படி ஏற்பட்டது?
அமைதிக்கான நோபல் பரிசு
அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும் அரச வன்முறைக்கு எதிராக வன்முறையற்ற வகையில் பாடுபட்டதற்காகவும் 1964 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மார்ட்டின் லூதர் கிங்குக்கு வழங்கப்பட்டது. அந்தப் பேச்சு இங்கே: ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களுக்கு அமெரிக்காவில் வாக்குரிமைகள் இருந்தும், அவர்களால் வாக்களிக்க முடியாத நிலை அமெரிக்காவில் நிலவியது. அந்த இழிநிலையை “அமைதிக்கான நோபல் பரிசு”
தூரயியங்கி – எமக்குத் தொழில் அழித்தொழிப்பது
ஆளில்லா டிரோன்களில் உயிர்ச்சேதம் கிடையவே கிடையாது. அதாவது, தாக்குபவர், தாக்கப்படுவார் என்பதற்கு இடமே கிடையாது. தரைக்கு ஐந்து மைல் மேலே நின்று கொண்டிருக்கும் டிரோன்களை கண்டுகொள்வது வெகு துர்லபம். அதே சமயம் ஒரே இடத்தில் ஸ்திரமாக இருபத்து நான்கு மணி நேரம் கூட நிற்கும் திறமை கொண்டது. மனிதரைப் போல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், காலைக்கடன் கழிக்க வேண்டும் போன்ற உடல் உபாதைகளும் பசியும் கிடையாது.
ஹாங்காங் கைமாறியபோது…
ஒரு கலவையான சூழ்நிலையில்தான் ஹாங்காங் 1997 ஜூலை முதல் தேதியன்று இங்கிலாந்திடமிருந்து சீனாவிற்கு கை மாறிற்று. வரலாற்றுப்படி, 19ம் நூற்றாண்டில் முதலாம் அபின் போருக்குப் பின், சீனா பல பிரதேசங்களை இங்கிலாந்திடம் இழந்தது. 1898 ம் ஆண்டு ஹாங்காங் தீவுகள் இங்கிலாந்திடம் 100 வருட குத்தகையில் அளிக்கப்பட்டு, ஹாங்காங் இங்கிலாந்தின் காலனிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது.1984ல் சீனாவும் இங்கிலாந்தும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்தக் குத்தகை முடியும் தருவாயில், 1997 ம் ஆண்டு ஜூலை முதல் தேதி இங்கிலாந்து ஹாங்காங்கை திருப்பித் தந்தது.
தாலிபான் பின்புலத்தில் இரண்டு ஆஃப்கன் நாவல்கள்
செப்டம்பர் 11-க்கு முன் மத்தியக் கிழக்கு நாடுகளின் இலக்கியங்கள் மிகக் குறைவாகவே ஆங்கிலத்தில் மாற்றப்பட்டன. ஆனால் அபுனைவுகள் அதிகமாக எழுதப்பட்டன. முக்கியமானவையாக அகமத் ரஷீதின் ‘தாலிபான்’. பெர்னார்ட் லூயிஸ், எட்வர்ட் சயீத் போன்றோரின் புத்தகங்களும் உண்டு. ஆனால் பொது மக்களிடம் இத்தகைய புத்தகங்களைத் தேடிச்சென்று படிக்கும் பழக்கம் செப்-11-க்குப் பிறகு அதிகரித்தது. ஒரு கட்டுரையின்படி 1997-ல் 793 மத்தியக்கிழக்கு சம்பந்தமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் வந்தன என்றால் 2004-ல் 1304 புத்தகங்களாக உயர்ந்தன. லியொன் வைஸெல்டியெர் (Leon Wieseltier) கூறியபடி, ’செப். 10 2001 வரை மேற்குலகமக்களுக்கு இஸ்லாம் என்றால் அவ்வளவாகத் தெரியாது. செப்.12 2001 அன்று அதே மக்களுக்கு இஸ்லாம் பற்றி எல்லாம் தெரிந்துவிட்டது’.
சீறும் சீனத்து டிராகன்
சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் வரை சென்று தாக்கும் திறனுள்ள சீனாவின் இந்த குறிப்பிட்ட ஏவுகணை சற்று மாறுபட்டது. இதில் அணுகுண்டிற்கு பதிலாக கடலில் உலாவும் விமானந்தாங்கிகளை துல்லியமாகத் தேடி அழிக்கும் திறன் படைத்த குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. யாருமே யோசிக்காத மிகவும் சிக்கலான இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்டு இந்தப் புதியவகை ஏவுகணையை உருவாக்கியதன் மூலம் கடற்போரின் அடிப்படைகளையே சீனா மாற்றிவிட்டதாக கடற்போர் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும்
ஒரு நிருபர் பென்யா நியதோவிடம் அவரது வாழ்வை மாற்றிய மூன்று புத்தகங்களைக் குறிப்பிடும்படி கேட்டார். அவருடைய தடுமாற்றமான பதில், பின்னால் யு ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது, முள் முனையில் நிற்பது போன்ற துன்பம் தரும் நான்கு நிமிடங்கள் நீடித்தது. முதலில், அவர் தனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி குழறினார், ஆனால் அவற்றின் தலைப்புகள் அவருக்கு நினைவில்லை. அவர் மொத்த பைபிளையும் படித்ததில்லை என்ற போதும், அதில் சில பத்திகள் அவரது இளம்பருவத்தில் மிக நம்பிக்கையூட்டுவதாக இருந்தன என்று யோசித்துச் சொன்னார்.
அமெரிக்க-பாகிஸ்தான் உறவு – எங்கே செல்லும் இந்தப்பாதை?
சொல்லப்போனால், நல்ல அரசாக இருப்பதற்காக அல்ல, பயங்கரவாத அரசாக இருக்காமலிருக்க தொடர்ந்து பில்லியன் கணக்கில் டாலர்களைக்கொட்டு என்று மிரட்டி கப்பம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் ஆகியிருக்கிறது. இது உண்மையில் அமெரிக்க ஆதிக்கத்தின் வீழ்ச்சியையே சுட்டுகிறது. அமெரிக்காவிற்கு எதிராக பல சக்திகளைத் திரட்டி அமெரிக்காவைத் தடுமாற்றத்திலேயே வைத்திருப்பதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று வருகிறதென்றால் அதற்குக்காரணம் கடந்த பத்தாண்டுகளில் அடிவாங்கியிருக்கும் அமெரிக்கப்பொருளாதாரமும், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களால் அயர்ச்சியடைந்திருக்கும் அமெரிக்க மனோநிலையும்தான்.
பொறாமை எனும் விஷம்
இன வாதக் கோட்பாடு, தங்களைக் குறித்து சந்தேகமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டிருந்த பலவீனமான ஜெர்மானியர்களை, தாங்கள் ஒரு வலுவான மற்றும் உயர்ந்த அறிவுஜீவிகளாகக் கற்பனை செய்துகொள்ளும் கூட்டத்தினராக மாற்றியது. இனவாதம் என்பது பலவீனத்தால் உந்தப்பட்டு மந்தைக்குள் சென்று சேர்வதன்றி வேறல்ல.
தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது… – இறுதிப் பகுதி
நான் இதை முன்பும் சொல்லி இருக்கிறென்: எனக்கு உலகைப் பற்றிய மேம்பட்ட புரிதல் இல்லை. மேம்பட்ட புரிதலை விடுங்கள், நிஜத்தில் எனக்கு இந்த உலகம் புரிபடவில்லை. நான் புரிந்தவளல்ல. எனக்குப் புரியவில்லை என்பதினால்தான் நான் எழுதுகிறேன். அதற்கான விலையைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், அது எதற்கும் ஈடில்லை. ஒருவரின் துன்பம், வாழ்க்கை என்பதே, இருப்பதிலேயே மிக்க மதிப்புள்ளது.
தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது…
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மையும், அந்த உலகத்துடன் ஒரு தனி உறவும் கொண்டவரென நான் நம்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் இப்படியே. மேலும் நாம் செய்யும் எதையும் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக செய்கிறோம். ஏனெனில் நமக்கு வேறு வழிகளில்லை.
அரபு நாடுகளில் புரட்சி – ஜனநாயகம் சாத்தியமா?
பேரரசின் மிகப்பெரிய பலமும் பலவீனமும் மன்னன் என்கிற ஒற்றைப் பேரதிகார மையம்தான் என்பதையும் வரலாறு நமக்குக் காட்டிக்கொண்டே வந்திருக்கிறது. சர்வாதிகார அமைப்பில் இரக்கம் மிகுந்த சர்வாதிகாரி இருக்கும்வரை படகு நன்றாகச் செல்லலாம். ஆனால் அது எளிதில் கவிழ்க்கப்படக்கூடிய நிலையற்ற ஒரு அமைப்பு. மட்டுமன்றி, பல சர்வாதிகாரிகளுக்கு மக்களின் அதிருப்தி தெரிவிக்கப்படும் ஊடகப் பாதைகள் மூடப்பட்டு விடுகின்றன. எனவே தவறான பாதையில் படகு சென்றாலும் சரியான நேரத்தில் சரியான வழியில் திருத்திச்செலுத்துவது கடினமாகிறது. அவசர நிலைக்குப்பிறகு நடந்த தேர்தலில் இந்திரா தோற்றவுடன், தனது நண்பர் குஷ்வந்த் சிங்கிடம் “இவ்வளவு கொடுமைகளும் துஷ்பிரயோகங்களும் நடக்கின்றன என்று ஏன் என்னிடம் ஒருவருமே சொல்லவில்லை?” என்று கேட்டதற்கு, குஷ்வந்த் சிங் சொன்ன பதில் “சொல்லக்கூடிய அத்தனை வாய்களையும்தான் நீங்கள் அடைத்து விட்டிருந்தீர்களே?”
பீடுநடை போடும் கியூபாவின் புரட்சி
1959க்கு முன்னால், கியூபா உலத்திலேயே மிக அதிக அளவு சர்க்கரை ஏற்றுமதி செய்யும் விவசாய நாடாக இருந்தது. ஆனால், தற்போது 80 சதவீத உணவு இறக்குமதி செய்யப்படுகிறது. இத்தனைக்கும் கியூபாவில் 30 சதவீத நிலங்கள் விவசாய நிலங்கள். நாட்டில் ஐந்தில் ஒரு பங்கு குடிமக்கள் விவசாயத்திலேயே ஈடுபடுத்தப்படுகிறார்கள். இருப்பினும் விளைச்சல் போதுமானதாக இல்லை. அனைத்து அரசாங்க நிலங்களில் வேலை செய்யும் மக்கள் உல்லாசமாக பொழுது போக்குவதால் விளைச்சல் எப்படி இருக்கும்?
அரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும்
எகிப்தின் புரட்சி படிப்படியாக அத்தனை சர்வாதிகார அரபு நாடுகளையும் கவிழ்த்து விடும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல. வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என்று இஸ்லாமிய/அரேபிய பகுதிகள் சொல்லப்பட்டாலும். வட ஆப்பிரிக்காவிற்கும் மத்திய கிழக்கிற்கும் (அதாவது எகிப்திற்கு கிழக்கே, எகிப்திற்கு மேற்கே எனலாம்) அவற்றின் சமூக, அரசியல் வரலாற்றை ஒட்டி பல வேறுபாடுகள் உள்ளன. எகிப்திற்கு கிழக்கில் மத்திய கிழக்கில் புகுந்து போகப்போக இது போன்ற புரட்சிகள் எளிதாக வெற்றி பெறுவது கஷ்டம்.
மூடிய அரசுகளைத் திறக்கும் தொழில்நுட்பங்கள்
மக்கள் தொகை என்று எடுத்துக்கொண்டால் இன்றைய அராபியச்சமூகம் மிகவும் இளமையான ஒன்று. மூன்றில் ஒரு பங்கு ஜனத்தொகை 15-இலிருந்து 29-க்குள் உள்ள இளைஞர் கூட்டம். எகிப்து போன்ற நாடுகளில் இவர்கள் படித்த ஆனால் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள். அராபிய நாடுகளின் ஃபேஸ்புக் பயனாளர்களில் 22% எகிப்தில் உள்ளனர். பிற அராபிய நாடுகள் போல அரசாங்கம் வலைத்தளங்களை கடுமையாய்க் கட்டுப்படுத்துவதும் எகிப்தில் கிடையாது. இந்த சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பங்கெடுப்பது 15-லிருந்து 29-க்குள் இருக்கும் இளைஞர்களே.
லீ ஜியாபெள – அமைதியின்மை தந்த அமைதிப்பரிசு
இந்த வருடம் நோபல் அமைதிப்பரிசு லீ ஜியாபெள என்ற சீனருக்குக் கிடைத்திருக்கிறது. யார் இந்த லீ ஜியாபெள? பரிசு பெறும்விதமாக இவர் என்ன செய்தார்? உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றைப் பெற்ற இவரை சீன அரசாங்கம் சிறையில் அடைத்திருக்கிறது. இவருக்கு நோபல் பரிசு கொடுத்ததையும் கடுமையாக எதிர்க்கிறது. நோபல் பரிசு குறித்த அறிவிப்பு சீனாவில் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. பரிசு அறிவிப்பு செய்த BBC, CNN போன்றவை உடனடியாக முடக்கப்பட்டன. ஏன்? இதிலிருந்து நாம் சீன அரசைக் குறித்து என்ன தெரிந்து கொள்ள முடிகிறது? நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?
வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – இறுதிப் பகுதி
விக்கிலீக்ஸின் கசிவினால் அமெரிக்காவின் பாக்கிஸ்தான் கொள்கைகளில் பெருத்த மாற்றமோ விளைவுகளோ ஏற்படாவிட்டாலும் கூட இந்த கசிவு ஒரு புதிய விவாதத்தை குறைந்த அளவிலேனும் துவக்கி உள்ளது ஒரு வரவேற்கத்தகுந்த மாற்றமே. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் கூட விஸில் ப்ளோயர்கள் பலரும் கொல்லப் படுகிறார்கள் அல்லது அரசாங்கத்தினால் கைது செய்து சித்ரவதை செய்யப் படுகிறார்கள்.
வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 3
விக்கிலீக்ஸ்ஸீன் கசிவுகள் அமெரிக்காவில் பெரும் மாற்றத்தையும், அரசின் கொள்கைகளில் பெரும் மாறுதலையும், ஒரு பெரும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று நம்பிக் கொண்டிருந்த ஜூலியன் அசாங்கேயின் எண்ணத்தில் மண் விழுந்ததும் இல்லாமல், அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் வேறு பாய்ந்திருக்கிறது. கற்பழிப்புக் குற்றச்சாட்டில் அவரைப் பிடித்து உள்ளே வைப்பதும் வெளியில் விடுவதுமாக ஸ்வீடன் அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. ”நான் நம்பிய நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் அரசின் சார்பாக அடக்கி வாசித்து மக்களை வஞ்சித்து விட்டார்கள் நாங்கள் மோசம் போய் விட்டோம்” என்று விக்கிலீக்கினர் தனியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 2
எந்த பாகிஸ்தான் மக்களின் நலனுக்காக அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் தானமாக வழங்கி வருகிறதோ, எந்த பாகிஸ்தானின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கி வருகிறதோ, அதே பாகிஸ்தான் ஒருபுறம் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை வாங்கி முழுங்கிவிட்டு, யாரைப் பிடிப்பதற்காக அமெரிக்கா அந்த நிதியை வழங்கியதோ அதே பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தானம் கொடுத்த அமெரிக்காவின் அடி மடியிலேயே கை வைக்கிறது என்பதுதான் அமெரிக்க அரசின் பல்வேறு அமைப்புகள் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்த உண்மைகள்.
வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ்
ஜூலை 25ல் இருந்து விக்கி லீக்ஸ் என்ற பெயரே இணையத்தில் அதிக அளவு தேடப் பட்ட ஒரு சொல்லாக, அமெரிக்க தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் அனைத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு பெயராக இருந்தது. அதே வேகத்தில் ஒரு வார காலத்திற்குள்ளாகவே அந்தப் பெயர் மீடியாக்களின் கவனத்தில் இருந்து திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டும் விட்டது. ‘விக்கி லீக்’ யார், அவர்கள் எதை வெளியிட்டார்கள்? ஏன் வெளியிட்டார்கள்? அமெரிக்காவில் அதன் தாக்கம் என்ன? இந்தியாவுக்கு அந்தக் கசிவினால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன? அதன் முக்கியத்துவம் ஏன் அமெரிக்க அரசால் அமுக்கப் படுகிறது?
சீனா – கடலில் விரியும் அதிகார வலை
சீனா கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் பத்து சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக அதன் சமூகம் மிகுந்த துடிப்புடனும், ஆரோக்கியத்துடனும் திகழ்கிறது. ஒரு நாடு வளர வளரத் தனக்கான புதிய தேவைகளை உருவாக்கிக் கொள்ளும். இந்தத் தேவைகள் தம்மைப் பல வடிவங்களில் விரிவாக்கிக் கொள்ளத் துடிக்கும். கடந்த 30 வருடங்களாக தன்னுடைய எல்லைக்குள் தன் ஆளுமையை பலப்படுத்திக் கொண்ட சீனா, தற்போது உலகளவில் தனக்கான ஆளுமையை நிறுவ எத்தனிக்கிறது. இதன் முதல் கட்டமாக தன்னை முழுதாக தொகுத்துக் கொண்டு, தன் பார்வையை மொத்த உலகத்தின் மீதும் திருப்பியிருக்கிறது.
பூச்சுகளற்ற எதார்த்தம், இடரில் நகைப்பு- போலிஷ் கவிதைகள்
இவருடைய பல கவிதைத் தொகுப்புகளும், படித்தவர் மனதில் ஸ்டாலினிய காலத்து அடக்கு முறை ஆட்சியில் மக்கள் பட்ட பெருந்துன்பங்களையும், யூரோப்பின் இருண்டகாலம் எனப்படும் அந்த வருடங்களையும் ஒருக்காலும் மறக்க் முடியாமல் பதிப்பன எனச் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் பரபரப்பான முழக்கங்கள் நிறைந்த, ஆரவாரிப்புகள் உள்ள கவிதைகள் அல்ல இவருடையவை. அவை அரசியல் கவிதைகளே அல்ல, கவனமான உளவியல் பார்வை கொண்டவை.
ஈரானில் குடிமக்கள் இதழியல்
ஈரானில் நிலைகளைப் பற்றி முப்பதாண்டுகளாக மேம்போக்காவே செய்திகளைக் கொடுத்து வந்த மேலை நாட்டுப் பத்திரிகைகள், டெஹ்ரானில் இன்று ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு என்ன வழிகளில் எழுந்தது என்று கவனிக்கத் தவறி விட்டன. கடந்த ஜுன் மாதம் நடந்த தேர்தலில் மோசடி நடந்து விட்டது என்பதற்காக ஈரானியர்கள் தம் உயிரையும் உடலையும் பேராபத்துக்கு ஆளாக்கி எழுச்சியை நடத்தவில்லை, முப்பதாண்டுகளாகச் சந்தித்த மிருகத்தனம், அவமதிப்பு, மேலும் பெரும் அவலங்கள் ஆகியவற்றுக்கு எதிராகவே போராடுகிறார்கள் என்று எழுதுகிறார் ஈரானியப் பெண்ணியக்க வாதியும், பேராசிரியருமான ஹைதெ தரகாஹி.
