ஈரானில் நிலைகளைப் பற்றி முப்பதாண்டுகளாக மேம்போக்காவே செய்திகளைக் கொடுத்து வந்த மேலை நாட்டுப் பத்திரிகைகள், டெஹ்ரானில் இன்று ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு என்ன வழிகளில் எழுந்தது என்று கவனிக்கத் தவறி விட்டன. கடந்த ஜுன் மாதம் நடந்த தேர்தலில் மோசடி நடந்து விட்டது என்பதற்காக ஈரானியர்கள் தம் உயிரையும் உடலையும் பேராபத்துக்கு ஆளாக்கி எழுச்சியை நடத்தவில்லை, முப்பதாண்டுகளாகச் சந்தித்த மிருகத்தனம், அவமதிப்பு, மேலும் பெரும் அவலங்கள் ஆகியவற்றுக்கு எதிராகவே போராடுகிறார்கள் என்று எழுதுகிறார் ஈரானியப் பெண்ணியக்க வாதியும், பேராசிரியருமான ஹைதெ தரகாஹி.