என் குழந்தைகளின் புகைப்படங்கள்

‘‘எங்கேதான் இருப்பாங்க அவங்க? ஏன் இவ்வளவு நேரம் ஆகுது? வெளியே போயிட்டா போதும், எப்ப திரும்பி வரணுங்கிறதே அவருக்குத் தெரியாது’ என்று கணவரை மனதுக்குள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் அவள்.  எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி கதவருகே உட்கார்ந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று தன் விழிகளால் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

டோமஸ்  டிரான்ஸ்டிராமரின் ஹைக்கூ கவிதைகள்

கடையிலிருந்து வரும் சப்தமும்  

கண்காணிப்புக் கோபுரத்தின் கனத்த காலடிகளும்

காட்டைக் குழப்புகின்றன

இறுதி சல்யூட்

தங்கள் கிராமத்தைப் பற்றியும், இருவரும் சேர்ந்து விளையாடிய குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் பற்றியும், பள்ளியில் பரிமாறிக் கொண்ட கதைகள் பற்றியும், 6/9 ஜாட் ரெஜிமெண்ட் பற்றி, அதன் தலைமை அதிகாரிகள் பற்றியும், விசித்திரமான பல நகரங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகப் போய் உறவு கொள்ள நேர்ந்த விசித்திரமான பெண்கள் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தான். இடையில் கடுமையான வலியால் பேசுவதை நிறுத்தி உரக்கக் கதறினான்.

அதிரியன் நினைவுகள் -22

This entry is part 22 of 37 in the series அதிரியன் நினைவுகள்

அந்த முகம் அழகானது, அதில் எவ்வித ஒளிவுமறைவுமில்லை, இருந்தும் அதைப் பற்றி நான் இதுவரை எதுவும் சொல்லாததற்கு, முற்றிலுமாக தன்னை  அவனிடம் இழந்திருந்த மனிதனொருவனின் தயக்கமாக இதனை பார்க்கக்கூடாது. எவ்வளவு தீவிரமாக தேடினாலும், நாம் தேடுகின்ற முகங்கள் நமக்குக் கிடைப்பதில்லை, தப்பிவிடுகின்றன, அப்படித் தேடி  அலுத்து கிடைத்த கணமொன்றில் கண்டதே அவனுடைய முகம்: கருத்தடர்ந்த தலைமுடியின் கீழ் சாய்வாக ஒருதலை, அதில் கண்ணிமைகளுக்கு இசைவாக நீண்டும், வளைந்துமிருக்கும் விழிகள், இளம் முகமோ அகன்று, அவ்விழிகளுக்கென்று அமைந்ததுபோலவும் இருக்கும்

ஏங்குதல்

அவளுடன் வெகுகாலம் உரையாடிய போதிலும்
இன்னும் சில காலம் உரையாடிக் கொண்டிருந்திருக்க எனக்கு ஆசை,
ஏற்கெனவே தான் பெருக்கி முடித்திருந்த
வீட்டின் முற்றத்தையும், சுற்றுப் புறத்தையும்
இரண்டு மூன்று முறைகளுக்கும் மேலாய் பாட்டி
பெருக்கிக் கொண்டிருந்ததைப் போல.

என்னையே நான் நேசிக்கத் தொடங்கியபோது

என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
எப்போதும் சரியாக இருப்பதிலிருந்து
வெளிவந்தேன்.
அப்போதிலிருந்து
குறைவான நேரங்களிலே
தவறாக இருந்தேன்.
இப்போது ‘அது தன்னடக்கம் என்று கண்டேன்’.

புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்

புரூரவஸும் அதுபோன்றே ஊர்வசியைத் திரும்ப அடைவதையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு காடு, மலை, நாடு, நகரம், நதி எனச் சுற்றியலைகிறான். அவளுடன் கழித்த இன்ப வாழ்வின் எண்ணங்கள் திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழிக்கின்றன. ஒரு உயர்ந்த பதவியை அடைவதும், கல்வியிலோ, கலையிலோ சாதனைகள் செய்வதும், தான் விரும்பிய பெண்ணுடன் இன்பமாக வாழ்வதும் சமமாகவே நோக்கப்பட வேண்டும். இதைப் பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

அதிரியன் நினைவுகள் -21

This entry is part 21 of 37 in the series அதிரியன் நினைவுகள்

எனது முன்னிரவு நேரங்களை உடுக்களின் வடிவமாறத்தின் மீதான மனிதப்பார்வையின் போக்கிற்கு அடிக்கடி செலவிட்டபோதிலும்,  வானியல்கணிதம் மற்றும் எரிநட்சத்திர பேருடல்கள் தரும் தெளிவற்ற ஆருடங்களில் எனது ஆர்வத்தைக் கூடுதலாக உணர்ந்தேன். ஆனாலிந்த கிரகங்களின் தன்மையிலமைந்த மனிதர் வாழ்க்கையின் இவ்விநோதமான மாற்றுப்பாதை  பிரச்சினை,  எனது உறக்கமற்ற நேரத்தை அடிக்கடி ஆக்கிரமித்திருந்ததால்; வானியல் கணிதத்திலும், எந்த எரிநட்சத்திரங்களின் பேருடல்கள் தெளிவற்ற ஆரூடங்களை முன்வைத்தனவோ

தேடலும் மறத்தலும்

அட்சுததாவுக்குப் பல காதல்கள் இருந்ததாக “யமாதோவின் கதைகள்” குறிப்பிடுகிறது. இந்தப் பெண்ணின் வரவால் பழைய நினைவுகள் மனதைவிட்டு அகன்றுவிட்டன என்று மட்டுமே பாடலில் இருப்பதால் உரையாசிரியர்கள் இருவிதமாகப் பொருள் கொள்கிறார்கள். முந்தைய காதல்கள் யாவும் மறக்கப்பட்டுவிட்டன என்றும் இவர்போன்ற ஒரு பெண்ணைச் சந்திக்கக் காத்திருந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்களை இக்காதல் மறக்கச் செய்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

காதல்வலி விதைக்கும் வெறுப்பு

இப்பாடலின் வரிகளைக் கொண்டு காதலர்கள் இருவருக்கும் சந்திப்பு நிகழ்ந்ததா இல்லையா என உறுதியாகக் கூற இயலவில்லை. சில உரையாசிரியர்கள் சந்தித்தபின் பிரிவு ஏற்பட்டதால் உண்டான வலி என்றும் சிலர் சந்திக்க முயன்றும் இயலாததால் ஏற்பட்ட வலி என்றும் பொருள்கொள்கிறார்கள். ஆனால் எல்லா உரையாசிரியர்களும் ஒப்புக்கொள்ளும் பொதுவான கருத்து, காதலர்களின் துன்பத்துக்குக் காரணம் அவர்கள் மிகவும் எதிர்நோக்கியிருக்கும் சந்திப்புதான்

தனிமையின் பிடியில் புரூரவஸ்

ஒருவர்மீது எல்லையற்ற காதல் கொண்டுவிட்டால் ஒருவன் எத்தகைய பலவானானாலும், அவனுடைய புகழ், பதவி எதுவுமே அவனுக்கு ஒரு பொருட்டல்ல எனக் காண்கிறது. இத்தனைக்கும் அவனை திலோத்தமை முதலிலேயே எச்சரிக்கை செய்துள்ளாள். காதல் அவன் சிந்தனையைக் குருடாக்கி விட்டதே!

அதிரியன் நினைவுகள் -20

This entry is part 20 of 37 in the series அதிரியன் நினைவுகள்

நான் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான், போரில் வாகைசூடிய நம்முடைய ஆறாவது படையணி பிரிட்டிஷ் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே இங்கிருந்த நம்முடைய ஒன்பதாவது படைப்பிரிவு வீரர்களில் அனேகர்,  பார்த்தியர்களோடு நாம் யுத்தத்தில் இருந்த முகாந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு வெடித்த கலவரத்தில் கலிடோனியர்களால்  வெட்டுண்டு மடிந்து அவல்நிலையில் இருக்க, இவர்கள் இடத்தில் ஆறாவது படையணி. இத்தகைய அசம்பாவிதங்கள்  மீண்டும் நிகழாமல் தடுக்க இரண்டு நடவடிக்கைகள் தேவைப்பட்டன.

 இலையுதிர் காலம் இன்னும் ஆழமாகிறது

சப்தத்துடன் அவள் தன் ‘ஓபி’-யை*
அவிழ்த்தபடியே சொன்னாள்
‘இதன் மீது ஒரு ஹைக்கூ எழுதிக் கொடு’, என

மறவேன் பிரியேன் என்றவளே!

காதலியால் கைவிடப்பட்ட ஆணொருவனின் சார்பாக எழுதப்பட்டதாக ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஜப்பானின் தற்போதைய மியாகி மாகாணத்தில் தகாஜோ நகரில் சுவேனோ மட்சுயமா என்றொரு மலை இருக்கிறது. இது ஜப்பானின் மிக உயரமான மலைகளில் ஒன்று. எப்பேர்ப்பட்ட சுனாமியும் அதனை மூழ்கடிக்க முடியாது. எனவே இது நடக்கவியலாத நிகழ்வுகளுக்கு உவமையாக ஜப்பானிய இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!

இடையில் இங்கு ‘அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!’ எனும் முரண்தொடையான (oxymoronic) ஒரு பிரயோகத்தை அரவிந்தர் அறிமுகப்படுத்துகிறார். தெய்வங்களுக்குமே அழகின் உச்சமான ஒரு பொருள் – இங்கு ஊர்வசி – அவர்களது பேரதிர்ஷ்டமாகக் கொள்ளப்படுகிறது! அதனால் அவளுடைய பிரிவை, இனிமேலும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் சுவர்க்கத்தில் இல்லாத நாட்கள் துரதிர்ஷ்டம் வாய்ந்தவை என் உணர்கின்றனர் சுவர்க்கவாசிகள்!

அதிரியன் நினைவுகள் -19

This entry is part 19 of 37 in the series அதிரியன் நினைவுகள்

அளவிற்பெரிய இச்சிற்பங்கள் ஒரு முகத்தை மிக அருகில் சென்று பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும்.  நீள அகலத்தில்  கூடுதலாகவும்; தனித்த தன்மையுடனும்; கொடுங்கனவில் வருகிற காட்சிகளாகவும், தோற்றங்களாகவும்; உறக்கம் கலைந்தபின்னும் நினைவில் நிற்கும். வடிக்கின்ற உருத் தோற்றங்களில் அப்பழுக்கற்ற பரிபூரணத்தை வேண்டினேன்; சுருங்கச் சொல்வதெனில்,  இருபது வயதில் அகால மரணமடைந்த ஒருவனை அவனுக்கு வேண்டியவர்கள் எந்த அளவில் நேசிப்பார்களோ அந்த அளவில் கடவுளுக்கு நிகரான பரிபூரணம்

அதிரியன் நினைவுகள் -18

This entry is part 18 of 37 in the series அதிரியன் நினைவுகள்

பலனாக, புத்தம்புது மனிதனாக, பிரம்மச்சாரியாக, ஒரு மிகத்தீவிர பிரம்மச்சர்ய உல்லிஸ்(Ulysse)1 ஆக, குழந்தைப்பேறின்றி, மூதாதையரென்று எவருமின்றி, எனக்குள் ஒர் இத்தாக்கியனாக(Ithaque) இருப்பதன்றி வேறு எதையுமே விரும்பாமல் இருப்பதன் நன்மையையும் அப்போதுதான் உணர்ந்தேன். அடுத்து, எந்தவொரு ஊரையும் முழுமையாக நான் சொந்தம் கொண்டாடியதுண்டா என்றால், இல்லை. அத்தகைய உணர்வுக்கு நான் என்றுமே ஆளானதில்லை

காளான்கள் வளர்கின்றன: டகாஹாமா க்யோஷி: ஹைக்கூ

இந்த ஹைக்கூ, ‘கொரோமோ’ நகரத்தின் (Koromo city) மக்களுக்கான ஒரு பிரியாவிடை அஞ்சலிக் கவிதையாக இயற்றப்பட்டது. அந்த நகரத்தின் மக்கள் க்யோஷி அவர்களுக்கு காளான்களைப் பிரியாவிடைப் பரிசாக அளித்தார்கள். போரின் விமானத் தாக்குதல்களிலிருந்து தப்பித்து, க்யோஷி, கொரோமோ-வில், மூன்று வருடங்கள் வாழ்ந்தார். ‘பகல் நட்சத்திரம்’ என்பது சூரியனைக் குறிக்கும் எனவும், காளான் என்பது ‘பூஞ்சை’ (fungus) என்பதும் யாருக்கும் உடனே புரியும்.

காற்றினும் கடியது அலர்

மறைத்தாலும் மறையாதது காதல் என்பதால் அதனால் அலர் எழுந்துவிடுகிறது. ஆமாம், அந்தக் காலத்தில் காதலை ஏன் மறைக்க இத்தனை மெனக்கெடுகிறார்கள்? இசேவின் கதைகள் தொகுப்பும் கென்ஜியின் கதைகள் தொகுப்பும் இதற்குத் தரும் விடை காதலர்களுக்கு இடையேயான பதவி வேறுபாடு. காதலர்களில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருக்கும்போது அவரைக் காதலிக்கப் பலர் போட்டியிடுவதுண்டு. அதில் ஏதும் சிக்கல் எழாமலிருக்க மறைத்து வைக்கவேண்டியது அவசியப்படுகிறது. 

இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்

காளிதாசனின் ‘விக்ரமோர்வசீயம்’ நாடகமானதால் நாடகத்தின் அவசியம் கருதி பல பாத்திரங்கள் இதில் படைக்கப்பட்டுள்ளனர். பலபேர் உள்ள மேடை ஒன்றுதான்  சுவாரசியமானதாக இருக்கும் அல்லவா? மன்னன் புரூரவஸுடன் ஒரு விதூஷகன் –  ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் உள்ளதுபோல ஒரு Jester.  அரசிக்கு ஒரு தோழி. யாரிடமாவது இவர்கள் (பாத்திரங்கள்) உரையாடினால்தானே இவர்கள் “இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்”

கேள்வி கேட்கும் பெண் குரல்கள்

திருதராஷ்டிரா,
அந்த மங்கலான விழிகளில்
அவன் சாபத்தை நீ சுமக்கிறாய்.
உன் தாய்
அவனிடமிருந்து அந்த இரவில்
துணுக்குற்று விலகினாள்.
அவன் சுவாசம்
வேர்களின் வாசமாயிருந்தது.
அவன் மார்பு வெளிறியிருந்தது.
அவன் காதலன் என்பதைக் காட்டிலும்
அரக்கனென்று தோன்றியது.

பத்து வயது ஆகையில்

ஆனால் இப்போதெல்லாம் அதிகமாக
சன்னல் அருகே இருக்கிறேன்
பின்மதிய வெளிச்சத்தைக் கவனித்தபடி.
அத்துணை அழுத்தமாக அது விழுவதில்லை
எனது மர வீட்டின் பக்கவாட்டில்,
வாகனக் கூடத்தின் மேல்
இன்றைக்குப் போல் என்றைக்குமே
எனது மிதிவண்டி சாய்ந்து நின்றதில்லை
அனைத்து ஆழ் நீல வேகமும் வடிந்து போய்.

டகாஹாமா க்யோஷி: இலையுதிர் காலம் இன்னும் ஆழமாகிறது

ஜப்பானிய ஹைக்கூவின் ஒரு அம்சம் அதன் விளக்கத்தை அதன் வாசகர்களுக்கு சமர்ப்பிப்பதாகும். ஹைக்கூ அதன் வாசகர்களை அதன் அர்த்தத்தை பல்வேறு வழிகளில் விளக்க அனுமதிக்கிறது. எனவே, ஜப்பானிய மூலத்திலிருந்து வேறொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஹைக்கூவில் அத்தகைய அம்சத்தைப் கிடைக்கச் செய்வது சற்று கடினம். மிகவும் தர்க்கரீதியான மொழிபெயர்ப்பு அசலின் அழகையும் உணர்வையும் மீட்டவோ மீட்கவோ கூட முடியாமல் தவிக்கும்.

காதல் மறைத்தாலும் மறையாதது

நேரடியாகப் பொருள்தரும் இப்பாடலைக் கி.பி 946 முதல் 967 வரை அரசராக இருந்த முராகமியின் வேண்டுகோளுக்கேற்ப 960ல் இயற்றியிருக்கலாம் எனக் கருதுகிறார்கள். அந்தக்காலத்தில் நம் சங்கப்பலகை போன்று அரசவையில் தரப்பட்ட தலைப்பில் செய்யுள் இயற்றும் போட்டிகள் அவ்வப்போது நடப்பது வழக்கம். பேரரசர் முராகமியின் அரசவையில் புலவர்கள் அழைக்கப்பட்டு அரசருக்கு இடமும் வலமும் வரிசையாக அமரவைக்கப்பட்டு ஒவ்வோர் இணையாக ஒரே தலைப்பில் பாடல் புனையக்கூறி இரண்டில் சிறந்த பாடலைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்துவந்தது.

‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’

இரு காதலர்களின் பிரிவு அவர்கள் உள்ளங்களிலும் வாழ்விலும் ஏற்படுத்தும் வெறுமை, தனிமை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு, சலிப்பு, பற்றின்மை என அனைத்தும் இத்தனை நுட்பமாக, பொறுமையாக வேறெந்தக் கவிஞனாலும் விவரிக்கப்பட்டுள்ளதா என நான் அறியேன். முன்பே கூறியபடி, கம்பன் அழகாக சீதை, இராமன் இவர்களின் தாபத்தையும், சேக்கிழார் பெருமான்

அதிரியன் நினைவுகள் -17

This entry is part 17 of 37 in the series அதிரியன் நினைவுகள்

நமது வணிகர்கள் சில சமயங்களில் சிறந்த புவியியலாளர்களாகவும்,  சிறந்த வானியலாளர்களாகவும், நன்கு  கற்றறிந்த இயற்கை ஆர்வலர்களாகவும் இருக்கின்றனர். அதுபோல  மனிதர்களைப் புரிந்து நடக்கும் மனிதர் கூட்டத்தில் வங்கியாளர்களையும் நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்படியான தனித் திறமைகள் எங்கிருந்தாலும் அவற்றை நான் பயபடுத்திக்கொள்வேன். ஆக்ரமிப்புகளுக்கு அல்லது அத்துமீறல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த  சக்தியையும் திரட்டிப் போராடியுள்ளேன். கப்பல் உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு காரணமாக வெளி நாடுகளுடனான கட்டுப்பாடுகள் தளர்ந்து பரிவர்த்தனை பெருகியது

ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!

மூலத்தில் காண்பதுபோல் ஸ்ரீ அரவிந்தரின் கவிதையில் தேர்ப்பாகன் இல்லை; புரூரவஸே தேரைச் செலுத்துகிறான். வெளிப்படையாக பாகனைப் பற்றிய பேச்சில்லை! அவனைக் கண்ட கேசி, தான் வெல்லப்படுவோம் என உணர்ந்து, ஊர்வசியைப் பனியின்மீது போட்டுவிட்டு ஓடோடி மறைகிறான். உணர்விழந்து கிடக்கும் அவளை அள்ளியெடுத்துத் தேரில் இருத்திக்கொண்டு புரூரவஸ் விரைகிறான். அத்தனை பேரழகை அருகாமையில் கண்டவனின் உள்ளம்…

அதிரியன் நினைவுகள் – 16

This entry is part 16 of 37 in the series அதிரியன் நினைவுகள்

வெயில் காயும் நேரத்தில், வீதியொன்றின் திருப்பத்தில் நின்று கிரேக்கர்களின் மலைக்கோட்டையைக் காணும்போதெல்லாம், மிகக் கச்சித்தமாகவும் நேர்த்தியாகவும் அதனுள் கட்டி எழுப்பப்பட்ட   நகரம்  ஒரு பூத்த மலர்போலவும், அந்நகரத்துடன் இணைந்திருக்கும் மலை தண்டுடன் கூடிய புல்லிவட்டம் போலவும் தோற்றம் தரும். இழப்பீடற்ற அச் செடியை வரையறுக்க ‘ பூரணம்’ என்ற வார்த்தைமட்டுமே பொருத்தமானது. அப்பழுக்கற்ற  அவ்வடிவம் பெருவெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், கால அளவின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தில்…

பேசுகிறான் ஆப்பிரிக்க அமெரிக்கன் நதிகளைப் பற்றி

அறிவேன் நான் நதிகளை:
அறிவேன் நான் நதிகளை இவ்வுலகைப் போன்று பழமை வாய்ந்த, மனித நரம்புகளில் மனித இரத்தத்தின் பாய்ச்சலை விடவும் வயதானவற்றை.
எனது ஆன்மா வளர்ந்துள்ளது ஆழமாக அந்நதிகளைப் போன்று.
யூஃப்ரேட்டிஸ் நதியில் குளித்திருக்கிறேன் அதிகாலைப் பொழுதுகளில்.
எனது குடிசையை காங்கோ நதிக்கரையில் கட்டியிருக்கிறேன், நதி என்னைத் தாலாட்டித் தூங்கச் செய்துள்ளது.

சொல்லாத காதல் எல்லாம்

உயர்ந்து வளர்ந்த மூங்கில் காட்டினிடையே வளரும் களைகள் எளிதாக மறைந்து கொள்வதைப் போன்றதன்று காதல். யாரிடமும் சொல்லாவிட்டாலும் காதலர் மீதான அன்பின் மிகுதியால் வெட்கம் அல்லது பசலை ஆகியவற்றால் எப்படியாவது வெளிப்பட்டுவிடுகிறது. எனக்கு ஏன் உன்மீது இத்தனை காதல் பொங்கி வழிகிறது?

‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’

காளிதாசனின் விக்ரமோர்வசீயம் எனும் படைப்பு புரூரவஸ்- ஊர்வசி ஆகியோரது காதல்கதையைக் கூறுவதாக அமைந்தது. அதற்கு ஏன் காளிதாசன் விக்ரம- ஊர்வசீயம் எனப் பெயரிட்டான் என்பதற்குக் காரணங்கள் கூறப்படுகின்றன. அது இங்கே இப்போது நமக்குத் தேவையில்லை. விக்ரமன் என்பது புரூரவஸின் மற்றொரு பெயர் எனும் கூற்றை மட்டும் நினைவில் கொள்ளலாம். “‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’”

பார்வையற்றவனின் பார்வை

என் கெடுவாய்ப்பின் துன்பத்தை
பெருமூச்சு விட்டு
நீங்கள் வருந்துவது
பலமுறை என் செவிகளில் விழுகிறது.
ஆனால்
எப்போதும் என்னால் அறிய முடியா
இழப்பை
நிச்சயமாய் பொறுமை கொண்டு சுமப்பேன்

அதிரியன் நினைவுகள் -15

This entry is part 15 of 37 in the series அதிரியன் நினைவுகள்

தங்கள் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்பதால் மகிழ்ச்சியுற்ற ஒவ்வொருவரும் இறந்தவர்களை விரைவாக மறந்தார்கள். எனது இரக்கக் குணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது, காரணம் ஒவ்வொருநாளும் வன்போக்கு என்கிற எனது இயல்பான குணத்திலிருந்து விலகி, விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் மென்போக்கை நான் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை  புரிந்துகொண்டிருந்தார்கள். எனது எளிமையைப் பாராட்டிய அதேவேளை, அதற்கென்று  ஒரு கணக்கீடு இருப்பதாகவும்  நினைத்தார்கள். இறந்த மன்னர் திராயானுடைய பெரும்பாலான  நற்பண்புகள் அடக்கமானவை; என்னுடையவையோ  பலரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தன; கூடுதலாக பலரும் எனது குற்றத்தில்  ஒருவித செய் நேர்த்தியைப் பார்த்தனர். 

இறை நின்று கொல்லுமோ?

மறக்கப்பட்டாலும் காதலன் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் அகப்பாடல். தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் கைகூடியபோது ஒருவரை ஒருவர் மறக்கமாட்டோம் எனக் கடவுளின்முன் உறுதியேற்கின்றனர். பின்னர்க் காலப்போக்கில் காதலன் காதலியை மறந்துவிடுகிறான். காதலன் தன்னை மறந்துவிட்டான் என்ற கவலையைவிடக் கடவுளின் கோபம் உறுதிமொழியை மீறீய காதலனுக்கு ஏதாவது தீங்கு விளைவித்துவிடுமோ எனக் கவலைப்படுகிறாள் காதலி.

என் மனதில் நிற்கும் மதியம்

அவை என் பொறுமையை உரித்தெடுக்கும்
பற்ற வைக்கப்பட்ட வெடித் திரியைப் போன்றவை.
ஆயின் பாயும் என் நினைவுகளின் கால்வாயில்
கொத்தாக அடைத்து நிற்பவற்றை உருக வைப்பவை.

மார்க் தெரு கொலைகள் -3

This entry is part 3 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

அந்த நாளிதழின் மாலைப் பதிப்பு, அங்கே இன்னமும் இனம் புரியாத பரபரப்பு நிலவியதாகச் சொன்னது. அந்த வளாகம் மீண்டும் கவனத்துடன் ஆராயப்பட்டது. சாட்சிகளை மீள் விசாரணை செய்தார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. அதில் ஒரு பின் குறிப்பாக, அடோல்ப் லெ பான், (adolphe le bon) கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார் என்றும், முன்னர் சொன்ன விவரங்களை விட மேலதிகமாக அவரை இக் கொலைகளில் தொடர்பு  படுத்த காரணிகள் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் சொன்னது.

மார்க் தெரு கொலைகள் -2

This entry is part 2 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

இங்கே மேடம் லிஸ்பனேயைப் பற்றி எந்தச் சுவடுமில்லை. புகைக்கரி அதிகமாக மண்டியிருந்து கணப்படுப்பில். புகை போக்கியை ஆராய்ந்ததில் (சொல்வதற்கே அச்சம் தரும் ஒன்று) தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த மகளின் உடல் தென்பட்டது. அது கீழே இழுக்கப்பட்டது. அந்தச் சிறிய துவாரத்தில் குறிப்பிடத்தகுந்த நீளத்திற்கு அந்த உடல் பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தார்கள். அந்த உடலைப் பார்வையிடுகையில் அதன் தோல் உரிந்து இருந்ததும், வன்முறையாக அந்த உடல் உந்தி மேலே தள்ளப்பட்டிருந்ததும், துண்டிக்கப்பட்டதுமான கோரக் காட்சியைக் கண்டார்கள்

அதிரியன் நினைவுகள் – 13

This entry is part 13 of 37 in the series அதிரியன் நினைவுகள்

பேரரசர் இறுதியாக ஹத்ராவின்(Hatra) முற்றுகையை நிறுத்திக்கொண்டு, யூப்ரடீஸ் நதியைத் திரும்பக் கடக்க முடிவு செய்தார்,  அது நிறைவேறாமலேயே போனது. ஏற்கனவே சுட்டெரிக்கும் வெப்பம், இதனுடன் பார்த்தீனிய வில்லாளர்களின் உபத்திரவமும் சேர்ந்துகொள்ள அவர்கள் திரும்பிய  பயணம் பெரும்சோதனையாக இருந்துள்ளது. ஒரு சுட்டெரிக்கும் மே மாத மாலையில், நான் நகரத்தின் நுழை வாயில்களுக்கு வெளியே, ஓரோண்டஸ்  நதிக்ரையில் நலிவுற்ற நிலையில் பேரரசர், அட்டியானுஸ்,  மற்றும் அரசகுடும்ப பெண்கள் என்கிற  சிறு கூட்டம்  காய்ச்சல், பதற்றம், சோர்வு ஆகியவற்றால் பாதித்திருக்க கண்டேன். மன்னர் திராயான் அரண்மனைக்குத் தான்  குதிரையில் திரும்பவேண்டுமென தெரிவித்தபோதும், அதற்குரிய உடல்நிலையில் அவரில்லை

ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை

பறவை என்பது ஆத்மாவின் அடையாளம் அன்றி வேறொன்றல்ல! பெரும்பான்மையான பொழுதுகளில் இவை மனோ-சக்தியையும் ஆத்ம சக்தியையும் குறிக்கின்றன. இங்கிவை ஸ்ரீ அரவிந்தரின் எழுச்சியடைந்த ஆன்மீக அறிவை வெள்ளிய நீலநிறம் கொண்ட தீயினால் உருவகித்து உலகிற்கு உணர்த்துகின்றன. அது ஒரு மரத்திலமர்ந்துள்ள பறவை போன்றது; சந்திரனிலிருந்து ஒழுகும் சோமரசம் குளிப்பாட்டும் சோமா எனும் செடி; அலைகளுடன் கொந்தளிக்கும் கடல்; அபரிமிதமான பலம்கொண்டவனும், தான் செய்யும் காரியங்களில் வெகு சாமர்த்தியமானவனுமான ஒருவன் தனது வாயில் நெருப்பை ஏந்திக்கொண்டு வேகமாகச் செல்வது போன்றதாம். வேறு உவமைகள் இன்னும் தேவையா? பிரமிக்கிறோம்.

உள்ளும் வெளியும்

கே ஃபாரஸ்ட் ஒரு நாள் அம்மாவுடன் அமர்ந்திருக்க வந்தாள், அன்று ஹாம்பிள்டனின் அங்காடிக்கு ஜில்லியால் போக முடிந்தது, அப்போது பில்லி வைஸ்லரின் பட்டறை வழியே போனாள், அவரிடம், பொழுது போக்காக ஏதும் பொருள் செய்ய, என்ன வகைக் களிமண்ணை வாங்கலாம் என்று கேட்டாள். நம்ப முடியாதபடி கனமாக இருந்த சிறு காகிதப் பையை பில் அவளிடம் கொடுத்தார், அதில் உலர்ந்த சன்னமான பொடி மண் இருந்தது. களிமண்ணுக்கான இரண்டு கத்திகளையும், ஒரு பழைய சுழல் மேடையையும் கொடுத்தார், அவள் எது செய்தாலும் அதை அவருடைய சூளையில் சுட்டுக் கொள்ளலாம் என்றார், அவர் அதை ‘சுளை’ என்று உச்சரித்ததை அவள் கவனித்தாள், ஆனால் தடிமனான உருக்களின் உள்புறத்தைச் சுரண்டி வெறும் இடமாக்க வேண்டும், இல்லையேல் அவை சூளையின் வெப்பத்தில் வெடித்துச் சிதறும் என்றும் சொல்லிக் கொடுத்தார்

அதிரியன் நினைவுகள் – 12

This entry is part 12 of 37 in the series அதிரியன் நினைவுகள்

மத்தியகிழக்கு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு எல்லா இடங்களிலும் திடீரென ஒரேநேரத்தில் பரவியது. யூதவணிகர்கள் செலூசியா(Séluicie)வில் வரி செலுத்த மறுத்தனர். சைரீன்(Cyrène) மக்களும் கிளர்ச்சியில் இறங்கினர்.  விளைவாக கிழைக்கூறுகள் கிரேக்க கூறுகளை துவம்சம் செய்தன. எங்கள் படைதுருப்புகள் முகாமிட்டிருந்த பகுதிவரை எகிப்து கோதுமையைக் கொண்டுவர சாலைகள் இருந்தன, அவற்றை ஜெருசலத்தைச் சேர்ந்த ஜெலட்ஸ்(Zélotes) என்ற கும்பல் துண்டித்தனர்.  சைப்ரஸில் குடியிருந்த  கிரேக்க மற்றும் உரோமானிய குடிகள் பாமர யூதர்களின் பிடிக்குள் சிக்கி, கிளாடியேட்டர் சண்டைகளில் ஒருவரையொருவர் வெட்டிமடியவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.

கஞ்சுகம்

அதாகப்பட்டது நீங்கள் வனத்துள் 
மடுப்படுக்க விரும்புகிறீர்கள். பைன்மர முட்கள்
விலங்குகளின் கூர்மையான ரோமத்தைப் போல்.
ஏரி ஒன்று மரங்களின் பொய்த்தோற்ற 
சுரங்கப் பாதையின் முடிவில். 
மீன்கள் துள்ளுகின்றன ஆனந்தமாக
நீரின் அகன்ற மேற்பரப்பில். 
அந்த மலைப்பூனை மற்றும் கரடி.

கோடைநிலா எங்கே?

இயற்கையைப் போற்றும் இன்னோர் எளிய பாடல். கோடைகால இரவுகள் எப்போதும் குறுகியவை. மாலை வந்துவிட்டதே என்று மகிழ்வதற்குள் விடிந்துவிட்டதே என்ற குறிப்பால் நீண்ட நேரம் இரவின் இதத்தை அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வெளிப்படுத்தப்படுகிறது. இதனுள் ஓர் அழகியலாக அவ்விரவை அழகாக்கிய நிலவை விடியலின்போது காணமுடியாமல் போவதை, அதற்குள் மேல்வானில் சென்று மறைந்திருக்க இயலாதே!

மனித மனமும் மலர் மணமும்

மனித மனத்தின் மாறும் தன்மையையும் மலர் மணத்தின் மாறாத் தன்மையையும் ஒப்பிடும் ஒரு புறப்பாடல். இப்பாடலுக்கு ஒரு சுவையான பின்னணி கூறப்படுகிறது. முன்பு ஒரு காலத்தில் இப்பாடலாசிரியர் ஒரு குறிப்பிட்ட விடுதியில் அடிக்கடி சென்று தங்கி வந்துள்ளார். பின்னர் நெடுநாட்கள் அங்குச் செல்லவே இல்லை. மீண்டும் ஒருநாள் சென்றபோது அந்த விடுதியின் மேலாளர், இந்த விடுதி எப்போதும் மாறாமல் தங்களுக்காக ஓர் அறையை வைத்துக்கொண்டுள்ளது. நீங்கள்தான் மாறிவிட்டீர்கள் என்றாராம். இத்தனை கால இடைவெளியிலும் எப்படி வழியை நினைவு வைத்திருந்தீர்கள் என்று கேட்டார். உடனே அதற்குப் பதிலளிக்கும் விதமாக, மனிதர்கள் மனம் மாறுவார்களா எனத் தெரியாது.

அதிரியன்  நினைவுகள் – 10

This entry is part 10 of 37 in the series அதிரியன் நினைவுகள்

ஈரப்பதமான கோடையைத் தொடர்ந்து, பனிமூட்டத்துடன் ஓர் இலையுதிர் காலம், பின்னர் கடுங் குளிர்காலம்.  எனக்கு மருத்துவம் பற்றிய அறிவு தேவைப்பட்டது, முதலில் என்னை நானே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லையோரங்களில் நான் வாழ்ந்த வாழ்க்கை மெல்லமெல்ல  என்னை சார்மேத்தியினர் நிலைக்கு கொண்டு வந்தது: கிரேக்க தத்துவஞானிக்குரிய  குறுந்தாடி, காட்டுவாசிகள் தலைவன் ஒருவனின்  குறுந்தாடியாக மாறியது. டேசியர்களுடன் சண்டையிட்ட நாட்களில் என்னவெல்லாம் கண்டேனோ அவற்றைத் திரும்பவும் நானே வெறுக்கின்ற அளவிற்கு திரும்பக்  காண நேர்ந்தது. நம்முடைய எதிரிகள் தங்கள் கைதிகளை உயிரோடு எரித்தனர்; 

காலை பிரார்த்தனைப் பாடல்

என் இருப்பினுள் வாழும்
ஆன்மாவை நான் கவனித்துப் பார்க்கிறேன்.
உலகத்தைப் படைத்தவர் நகருகிறார்
சூரிய ஓளியிலும் ஆன்ம-ஒளியிலும்
பரந்த உலகில் இல்லாதும்
இங்கே ஆன்மாவின் ஆழத்தில் இருந்தும்.

நீண்ட வாழ்வே சாபமோ?

ஜப்பானிய இலக்கியங்களில் ஊசியிலை (பைன்) மரம் நீண்ட வாழ்வுக்கு உவமையாகப் பல இடங்களில் கூறப்படுகிறது. ஜப்பானின் மிக வயதான ஊசியிலை மரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தது எனக் கணித்திருக்கிறார்கள். கொக்கின்ஷூ தொகுப்பில் பல இடங்களில் வயதான ஆண் மற்றும் பெண் ஊசியிலை மரங்கள் இணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டுக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருந்தாலும் குறையாத அன்பைக் கொண்டிருப்பவை என விதந்தோதப்படுகின்றன. ஆனால் இப்பாடலில் சோகத்தைக் கூட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதிரியன் நினைவுகள் – 9

This entry is part 9 of 37 in the series அதிரியன் நினைவுகள்

இவ்விவகாரத்தில் வேறு சில விஷயங்களும் இருக்கின்றன:   நானும் தக்க தருணத்திற்கென்று திரைமறைவில் காத்திருக்கும் (நாடக) நடிகன் போல,  முன்பின் தெரியாத ஒரு நபர் உள்ளே பரபரப்புடன் தெரிவிக்கும் சங்கதிகளை,  குறிப்பாக சலசலவென்று பேசுகிற பெண்களின் குரல்களை, வெடிக்கும் கோபத்தை அல்லது சிரிப்பை, சொந்த வாழ்க்கையின் முணுமுணுப்புகளை, மொத்தத்தில் நானிருக்கிறேன் என்பது தெரியவந்த மறுகணம்  அடங்கிப்போகும் ஒலிகளை ஆர்வத்துடன் ஒட்டுக்கேட்பதுண்டு. குழந்தைகள், ஆடைகுறித்த தீராத பிரச்சனைகள்,  பணத்தைப் பற்றிய கவலைகளென, நான் இல்லாத நேரத்தில் பேசப்படும் பொருள் எதுவென்றாலும்  எனக்குத் தெரியக்கூடாத முக்கியமானதொரு விஷயம்

மித்ரோ மர்ஜானி – 9

This entry is part 9 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தாயின் புலம்பலை கேட்ட மித்ரோவுக்கு இனம் புரியாத பயம் ஏற்பட்டது. அந்தக் காரிருளில், மூடி கிடந்த ஜன்னல்களையும் வெறிச்சோடி கிடந்த வீட்டையும் பார்த்த மித்ரோவின் கண்களில் மின்னல் ஓடியது போன்ற பிரமை ஏற்பட்டது. வெறிச்சோடிக் கிடந்த வீடு, பூதங்கள் வாழும் மயானத்தைப் போலவும், அழுது புலம்பும் தாய், பசி தாகத்தால் தவிக்கும் ராட்சசியைப் போலவும் அவளுக்குத் தோன்றியது.

பட்டுப்புழு மற்றும் தானியத்தின் கதைப்பாடல்

டு ஃபுவின் ஆகச் சிறந்த படைப்புகள்  கொய்ஜோவ் நகரில் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை. 400 கவிதைகள் வரையிலும் எழுதியுள்ளார். பெரும்பாலான கவிதைகள் இயற்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. அற்புதமான கவிதைகளை படைத்தவர். வாழ்ந்த காலத்தில் அதிகம் அறியப்படாமல் போனார். பரவலாகப் படைப்புகளை கொண்டு சேர்க்க இயலாமல் போனதும் ஒரு காரணமாகும். இவர் காலமான பிறகே இவரது கவிதைகள் பிரபலமாகி கொண்டாடப்பட்டன. இன்று வரையிலும் அவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வருகின்றன. சிறந்த கவிஞர் என்றும், இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது என்றும் உலகம் போற்றுகிறது.