- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- இறை நின்று கொல்லுமோ?
- காணும் பேறைத் தாரீரோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை
- நெஞ்சம் மறப்பதில்லை
- நிலவினும் நெடிது!
- இடம் மாறினும் மணம் மாறுமா?
- காவலும் தாண்டுவது காதல்
- பனிவிலகலில் அக்கரை வெண்மை
- எனக்கெனவே மலர்ந்தாயோ?
- விழியிலிருந்து நினைவுக்கு
- உள்ளும் புறத்தும் தனிமையே!
- காதல்மொழிகள் கடலலை போலே!
- கேட்டதும் கிடைத்ததும்
- துள்ளிவரும் வெள்ளலையே!
- இடம்பெயரும் புள்ளினங்காள்!
- மைக்குழற் செறிவன்ன காதல்
- துயரறுத்தலே துயரமோ?
- உள்ளத்தில் உள்ளேனா?
- தூவானமும் வெண்வானமும்
- ரகசியமானது காதல்
- உடைகளும் சுமையடி தனிமையிலே!
- காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!
- துன்பம் போக்குவதே தூயப்பணி
- எரிதழல் உள்ளம்
- துயர்சூழ் உலகில் தனிமை

மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
あふことの
たえてしなくは
なかなかに
人をも身をも
恨みざらまし
கனா எழுத்துருக்களில்
あふことの
たえてしなくば
なかなかに
ひとをもみをも
うらみざらまし
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: புலவர் அசாததா
காலம்: கி.பி. 910-966.
இத்தொடரின் 25வது பாடலான “கொடிவழிச் செய்தி”யை இயற்றிய புலவர் சதாகத்தாவின் 5வது மகன் இவர். இவர் வாழ்ந்த காலத்தில் சிறந்த கவிஞராகப் பாராட்டப்பட்டார். ஆனால் ஏனோ தெரியவில்லை, இவர் இறப்புக்குப் பின்னர் நாளடைவில் இவரது புகழ் மங்கிக்கொண்டு வந்தது என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 21 பாடல்கள் இவரது தனிப்பாடல் திரட்டாக இடம்பெற்றுள்ளன. காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருப்பவர். கவிஞர் மட்டுமின்றிப் புல்லாங்குழல் வித்தகரும்கூட.
பாடுபொருள்: காதலின் வலியால் பிறரை வெறுப்பது.
பாடலின் பொருள்: உன்னை இனி நான் சந்திக்கும் வாய்ப்பே ஏற்படப்போவதில்லை என்பது தெரிந்திருந்தால் என்னையும் என்னைச் சுற்றியுள்ளவர்களையும் வெறுக்கத் தொடங்கியிருக்க மாட்டேன்.
இத்தொடரின் பாடல்கள் 40, 41 போல இதுவும் பேரரசர் முராகமி அரசவையில் நடத்திய அதே போட்டியில் பாடியது. இவரது இணையாகப் போட்டிப்பாடல் பாடியவர் ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த மொத்தோஜானே. 40, 41வது பாடல்கள் காதல் வயப்பட்டிருக்கும் நிலையில் பாடப்பட்டவை. இது கைகூடாத காதலின் வலியைப் பாடியது.
இப்பாடலின் வரிகளைக் கொண்டு காதலர்கள் இருவருக்கும் சந்திப்பு நிகழ்ந்ததா இல்லையா என உறுதியாகக் கூற இயலவில்லை. சில உரையாசிரியர்கள் சந்தித்தபின் பிரிவு ஏற்பட்டதால் உண்டான வலி என்றும் சிலர் சந்திக்க முயன்றும் இயலாததால் ஏற்பட்ட வலி என்றும் பொருள்கொள்கிறார்கள். ஆனால் எல்லா உரையாசிரியர்களும் ஒப்புக்கொள்ளும் பொதுவான கருத்து, காதலர்களின் துன்பத்துக்குக் காரணம் அவர்கள் மிகவும் எதிர்நோக்கியிருக்கும் சந்திப்புதான். சந்தித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் சிலரும் மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைக்காதா எனப் பலரும் துன்பப்படுகிறார்கள் என்பதுதான்.
கொக்கின்ஷூ, கொசென்ஷூ போன்று அவற்றின் சமகாலத்தில் தொகுக்கப்பட்ட ஹச்சிதாய்ஷோ என்ற தொகுப்பிலும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. அதில் காதலின் படிநிலைகள் வரிசையில் பாடல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் இப்பாடல் பெற்றிருக்கும் இடத்தை வைத்துப் பார்க்கும்போது சந்தித்தபின் ஏற்பட்ட வலி என வகைப்படுத்தி இருக்கிறார்கள்.
வெண்பா:
காதல் வலியது அன்பினில் நேர்ந்ததே சாதல் கடுமையும் தீர்க்கவும் - வேதனை கூட்டவும் தாழ்த்தவும் ஆக்கும் உனது பிரிவால் விளையும் வெறுப்பு
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
