ஒரு குளத்தங்கரைப் பகல்

சதா
இறங்கியும் ஏறியும்
ஏறியும் இறங்கியுமாய் வெப்பில் மூச்சிளைக்கும் படிகள்.
வேர்த்து
விறு விறுத்திருக்கும் நீர்க்குளம்.

வயிற்றின் குரல்

அழிக்கப்பட்ட ஆற்றையோ, நிலத்தடி நீர்ச்சூழலையோ மீண்டும் உண்டாக்க எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பது மனதில் பெரும் கேள்விகளை எழுப்பும். அவற்றை மீட்டெடுக்க இயலாத சூழலில் வெவ்வேறு வழிகளில் பணத்தைச் செலவு செய்து தீர்வுகளைத் தேடும் மனிதன் தன் இனத்திற்கே துரோகம் செய்வதை மெதுவாகவே உணர்ந்து கொள்வான்.

வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் -3

இதுவரை, நாம் மேல்வாரியாக, வடிவியல் செயலிகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த கட்டுரையில், இவற்றின் செயலாற்றத்தை, உதாரணங்களோடு ஆராய்வோம். முதலில், சில கேள்விகளை முன் வைப்போம்:
1. இண்டெலின் பெண்டியத்திற்கு சவால் விடும், புதிய செயலிகளா இந்த வடிவியல் செயலிகள்?
2. படிப்படியாக வடிவியல் செயலிகள், பொதுச் செயலிகளின் வேலையை எதிர்காலத்தில் செய்யத் துவங்கிவிடுமா?

எபோலா பரவுதல் தடுக்கக்கூடியதா?

எபோலா காய்ச்சல் என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு கினியா, சியர்ரா லியோன், லைபீரியா நாடுகளில் இதுவரை 900 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். நைஜீரியாவில் இது பரவிய செய்தி ஒரு பீதியை ஏற்படுத்தியபின்னரே உலகம் மெல்ல விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த பீதிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எபோலாவைக் குறித்து கொஞ்சம் அறியலாம்.

தூரயியங்கி – எமக்குத் தொழில் அழித்தொழிப்பது

ஆளில்லா டிரோன்களில் உயிர்ச்சேதம் கிடையவே கிடையாது. அதாவது, தாக்குபவர், தாக்கப்படுவார் என்பதற்கு இடமே கிடையாது. தரைக்கு ஐந்து மைல் மேலே நின்று கொண்டிருக்கும் டிரோன்களை கண்டுகொள்வது வெகு துர்லபம். அதே சமயம் ஒரே இடத்தில் ஸ்திரமாக இருபத்து நான்கு மணி நேரம் கூட நிற்கும் திறமை கொண்டது. மனிதரைப் போல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், காலைக்கடன் கழிக்க வேண்டும் போன்ற உடல் உபாதைகளும் பசியும் கிடையாது.

புகை

முதல் முறை பார்த்த பொழுது அவளுக்கு 35 வயது. ஆனால் 40 வயதை தாண்டியது போல் இருப்பாள். ஒரு எண்ணெய் நிறுவனத்தின், உதிரிபாகப் பிரிவின்ன் சாதாரண விற்பனைப் பிரதிநிதியாய் அவளைச் சந்தித்தான். சீசர்ஸ் பேலஸ் காசினோவில் ப்ளாக்ஜாக் டேபிளில் முதல் நாள் இரவு சந்தித்தாள். மறுநாள் உதிரிபாக கேட்லாக்கை தூக்கிக் கொண்டு அவனை வந்து கான்ஃபரன்ஸில் சந்தித்தாள். ஒரு நல்ல இரவு அமைந்தது.

கணினியியலில் சிந்தனைச்சோதனைகள்

ஒரு டியுரிங் தேர்வு முயற்சியில், 30% நடுவர்கள், தாங்கள் உக்ரைன் நாட்டைச்சேர்ந்த ஒரு பதின்மூன்று வயது  சிறுவனுடன் உரையாடிக்கொண்டு இருப்பதாக நம்பினார்கள் ஆனால் அவர்கள் ஊடாடிக்கொண்டு இருந்ததென்னவோ ஒரு கணினியுடந்தான் என்கிறது. இந்த அறிவிப்பை வைத்துக்கொண்டு டியுரிங் அறுபது ஆண்டுகளுக்கு முன் அமைத்துக்கொடுத்த ஒரு மைல் கல்லை தாண்டி இருக்கிறோம் என்று சொல்லலாம் என்றாலும், இதுவரை இத்தகைய சாதனைகளை புரிய மென்பொறியாளர்கள் பல்வேறு தகிடுதத்தங்களைத்தான் நம்பி இருக்கிறார்களேயொழிய நிஜமாகவே கணினிகள் நம்மைப்போல இன்னும் யோஜனை செய்ய ஆரம்பிக்கவில்லை என்பதுதான் உண்மை.

கைகேயியின் மனமாற்றம்

கூனியோ அம்மாலையைத் தூக்கி எறிகிறாள்; காலால் மிதிக்கிறாள். பின் வெகுண்டு நோக்கி அப் பேதயைப் பித்தி! நீயும் நின் சேயும் துயர்ப் படுக! நான் போகிறேன் உன் மாற்றாளிடத்து என்கிறாள். மேலும், நீ எதற்காக உவக்கிறாய்? கரிய செம்மலான இராமனும் சிவந்த வாய் சீதையும் உவந்து சிங்காசனத்தில் வீற்றி இருக்க, அவந்தனாய் உன் மகன் பரதன் வெறும் நிலத்தில் இருப்பானே.

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை

மலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்கை பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்‌ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” நாவல்.

சுதந்திர தினம் – 1947

இவை 1947ல் எடுத்த புகைப்படங்கள். மவுன்ட்பேட்டனும் இராஜாஜியும் இராஜேந்திர பிரசாத்தும் தென்படுகிறார்கள். மாபெரும் மைதானத்தில் தொலைந்த குழந்தைகளை தன்னுடைய சாரட்டில் ஏற்றிக் கொன்டாராம் நேரு. சின்னஞ்சிறுசுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்த பெற்றோர்களும், அவர்களை நேருவின் காரை வைத்து எளிதில் கண்டுகொண்டார்களாம். அந்தப் புகைப்படங்களும் இந்தத் தொகுப்பில் இருக்கிறது.

குஞ்ஞுண்ணி மாஷ் கவிதைகள்

குஞ்ஞுண்ணி (1927 – 2006) மலையாளக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் சேவாஸ்ரம பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆசிரமவாசியாகவே வாழ்ந்தார். மலையாள மொழியின் நெளிவுகளை விடுகதை/வார்த்தை விளையாட்டு போல பயன்படுத்தி எளிய வாக்குகளில் சின்னஞ்சிறிய கவிதைகள் நிறையப் புணைந்திருக்கிறார். அதனால் கேரளத்தில் குழந்தைக் கவிஞர் என்று பரவலாக அறியப்பட்டாலும், ஆழ்ந்த தத்துவர்த்தமான பொருளுள்ள கவிதைகள் இவருடையது.

மகரந்தம்

மனிதருக்கு 25 வயதிலிருந்தே கடும் கண் நோய். 48 வயதுக்குள் அவருடைய இடது கண்ணில் 800 இல் ஒரு பங்குதான் செயல்பட்டதாம். இன்னொரு கண் 30 இல் ஒரு பங்குதான். அவருடைய கண்ணாடியின் சக்தி +17 இரண்டு கண்ணிலும். பிறர் எழுத்து, கடிதங்களை உருப்பெருக்கும் கண்ணாடி கொண்டுதான் அவரால் படிக்க முடிந்ததாம். வாழ்நாளில் பெரும்பகுதி நோய்வாய்ப்பட்டே காலம் கழித்திருக்கிறார் ஜேம்ஸ் ஜாய்ஸ். 58 வயதில் இறக்கும்போதும் வயிற்றுப் புண்ணால் இறந்திருக்கிறார். இத்தனை பிரச்சினைகளோடு அவர் எழுதியவையோ அசுர சாதனை என்று சொல்லப்படக் கூடிய வகை நாவல்கள், சிறுகதைகள்.

மனித விஞ்ஞானத்தின் பரிணாமம்

மீ-மனிதர்களின் அறிவியலால் விளைந்த பல நன்மைகளை யாரும் மறுக்கவில்லை. ஆயினும், மனித ஆராய்ச்சியாளர்கள் மீது இந்த நிலையின் தாக்கம் வேறு விதமாக இருந்தது. தங்களால் இனி அறிவியலுக்கு எந்த புதிய கண்டுபிடிப்பையும் அளிக்க முடியாது என்று உணர்ந்த அவர்களில் சிலர் ஆராய்ச்சித் துறையை விட்டு விலகினர்.

குட்டி ரேவதி சந்திப்பு – பிரிவினை கோஷங்களும் முற்போக்கு அரசியலும்

லண்டன், பெர்லின் போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் இந்திய மூலப்பண்பாடு பற்றிய அவதூறு கோஷங்களை மட்டுமே எழுப்பும் இப்படிப்பட்ட கூட்டங்களினால் குழம்பிப்போகிறார்கள். ஐரோப்பிய நாகரிகத்தையும் தழுவிக்கொள்ள முடியாது எனும் நிதர்சனம் ஒரு புறம், சொந்தப் பண்பாடு பற்றி அறிவிலிக் கருத்துரைகள் மறுபுறம் என கொஞ்சம் கலை இலக்கிய ஆர்வம் இருப்பவர்களையும் இப்படிப்பட்ட கூட்டங்கள் துரத்திவிடுகின்றன.

எனக்கு சாந்தியைத் தெரியாது!

வறட்சியின் பிடியிலும், வறுமையின் கொடுமையிலும் சிக்கித்தவிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கத்தக்குறிச்சியை சேர்ந்த சாந்தியின் வறுமையை விளக்க வேண்டுமானால் ஒரு நிகழ்ச்சியை கூறினால் போதும்.சாந்தியின் வெற்றியை பற்றி அவர் நண்பர் கேட்டபோது, “எங்கப்பா செங்கச்சூலையில் வேலை பார்க்கிறார். தினமும் ஏழு கிலோமீட்டர் வேலைக்கு ஓடி சென்று உழைத்துத்தான் எங்களை காப்பாற்றினார். எனக்கு பிறகு இருக்கின்ற மூன்று தங்கைகளையும் என்னையும் காப்பாற்ற என் அப்பா ஓடுவதை நிறுத்த வேண்டுமானால், நான் வேகமாக ஓடவேண்டும்.

ராக நிழல்

அவர் பெயர் குணசீலன். தொழில் தாண்டி அவரின் இசை ஆர்வத்தின் வேர் பல பாடல்களின் அடியில் பரந்து படர்ந்திருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தார் அவர். தலையணை அளவில் இருக்கும் மூன்று தடித்த புத்தகங்களில் அவரிடம் இருக்கும் பாடல்கள் பற்றிய தகவல்கள் அழகான கையெழுத்தில், பதிவு செய்ய வருவோர் பார்த்து செலக்ட் செய்ய வைக்கப்பட்டிருந்தன. அதன் மூலப்பிரதி அவராகவே இருந்தார்.

இழந்த பின்னும் இருக்கும் உலகம்

‘சிறப்பு கணிதத் தேர்வு’ பற்றிய சுற்றறிக்கை வருகிறது. அடுத்த பள்ளி நாளில், கணித வகுப்பு நடக்கும்போது மாணவர்களில் சிலர் பாக்ஸ் இல்லாததால் முட்டி போடுகிறார்கள். இந்தத் தண்டனையில் இருக்கும் பொழுது தங்கசாமியையும், உடன் முட்டி போட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு பையனையும் சமூகவியல் ஆசிரியர் அழைப்பதாக ஒரு மாணவன் வந்து கணித ஆசிரியரிடம் முறையிடுகிறான். இருவரும் சமூக ஆசிரியர் வகுப்பெடுக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள். “டேய் பசங்களா… உங்க டெஸ்ட் பேப்பர நான் திருத்திட்டேன். சாயந்தரமா வீட்டுக்கு வந்து மத்தவங்களோட பேப்பர திருத்திடுங்கடா…” என்கிறார்.

ஆவாரங்காடு

மெல்ல எழுந்து சேலையை உடுத்திக்கொண்டாள்.தெருவில் இறங்க தெருவிளக்கு வெட்டிக்கொண்டிருந்தது.ஊளையிட்டு சென்ற நாய் திரும்பி நின்று குரைத்தது.அதோடு இன்னுமிரண்டு நாய்கள் சேர்ந்து கொண்டன.ச்சீசீ என்ற அதட்டலுடன் வடக்கு நோக்கினாள். அடர்கருப்பாய் இருந்தது சாலை.டார்ச்சை அடித்தவாறு நகர்ந்தாள்.அடி வயிறு இளகிவிட்டிருந்தது.இருட்டு மெல்ல விழுங்கிக்கொண்டது.