கோணங்கியின் உரைநடை தனித்துவமானது. கனவு, கானல் நீர், ரசாயன மயக்கம், கட்புலனுக்கிடையே எச்சரிக்கையின்றி சுமூகமாகத் தாவும் வரிகள். புனைவு எழுதுபவர்கள் பொதுவாக காட்சிச் சிந்தனையாளர்களாக இருப்பது அரிது. ஆனால் அந்த அரிய பகுப்பைச் சேர்ந்தவர் கோணங்கி. வண்ணதாசன் படைக்கும் பாத்திரங்களைக் காட்டிலும் கோணங்கியின் பாத்திரங்கள் நிலையற்று காணப்படுகின்றன.
Author: ஆர். சீனிவாசன்
டி எஸ் எலியட்டின் – The Wasteland – ஓர் கண்ணோட்டம்
அவள் அமர்ந்த இருக்கை, மெருகேற்றிய சிம்மாசனத்தைப்போல்
மின்னியது பளிங்கில், நெளியும் கொடி சூழ் கண்ணாடி
விளிம்பிலிருந்து இரண்டு குபிட் சிசுக்கள் எட்டி பார்க்க
ஏழு இதழ் மெழுகு விளக்கின் ஒளியை ரெட்டித்து
அவள் அணிந்த ஆபரணங்களுக்கு ஒத்த,
மேஜையில் வீசியது விளக்கின் ஒளியை.
இணை சினிமா – ஓர் கண்ணோட்டம்
முதலாவதாக, குறைந்த முதலீட்டில் எடுக்கப்படுபவை என்பதால் வர்த்தக முயற்சிகளை விட குறைந்த வெகுமதியே கிடைக்கும் என்பதற்காக. இரண்டாவது, குறைவாக விநியோகிப்பாளர்களும், திரையரங்குகளும் கிடைக்கும் நிலையில், அதிக ஓட்டம் காணாது என்பதாலும். மூன்றாவதாக (முக்கியமாக), கலை திரைப்படங்களில் நடிக்கும் நாயகர்களுக்கு ஒரு முத்திரை குத்தப்பட்டுவிடும் என்பதாலும் இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக , இணை திரைப்படங்களில் நடிப்பதற்கென்றே திறமையான கலைஞர்கள் வரிசை இருப்பதும் உண்மை.
பாங்சி (Banksy) யார்?
இரண்டாம் பிரிவினர் விசித்திரமானவர்கள் , மர்மமானவர்கள். இப்பிரிவினர் எக்காரணத்திற்கும் தங்கள் நிஜ அறிமுகத்தைக் கொடுக்கமாட்டார்கள். தங்கள் தனிமைக்கும் ஆக்க சுதந்திரத்திற்கும் சுய அறிமுகம் பாதமாக அமைந்துவிடக்கூடாதென நினைப்பவர்கள். புகழின் பின் விளைவுகளை முற்றிலும் தவிர்க்கவோ அல்லது அதை வரம்பிக்க விரும்புவார்கள். பிரபல தமிழ் இலக்கிய ஆளுமை ‘பேயோன்’ , “நான் பப்ளிக் ஃபிகராக இருப்பதை விட வெறும் ஃபிகராக இருக்கவே விரும்புகிறேன்” எனச் சொல்வதில் வாசகர்களுடன் கண்ணாமூச்சி ஆடுவதில் விருப்பமில்லாதவர் என்பது தெளிவாகிறது.
டாப் கியர் (Top Gear) – வாகன ப்ரேமிகளின் உயிர்த்துடிப்பு
கார்களை மையப்படுத்தி ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புவது மிகக் கடுமையான விஷயம். சராசரி மனிதன் கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஒரு இடத்திலிருந்து இன்னொன்றிற்குப் போக உதவும் இயந்திரமாகத்தான் அறிவான். இன்ஜின் மற்றும் ஆயிரக்கணக்கான உபகரணங்களின் தேவை, வடிவமைப்பு, செயல்படும் கோட்பாடு, தேர்வு போன்ற நுட்பம் சம்பந்தமான கேள்விகளை நூற்றில் தொன்னூற்றி ஒன்பது பேர் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.
டேவிட் லிஞ்ச் (David Lynch) – ஆழ்மன நினைவுகள்
இரு பெண் கதாபாத்திரங்களை முன் வைத்து எடுக்கப்பட்ட பெர்சோனா, அவர்களிடையே நடக்கும் உளவியல் ரீதியான போராட்டத்தைத் திரைக் காவியமாக்கியது. பெர்சோனா தீவிர உளவியல் தேடல். இரு பாத்திரங்களில் ஒருவர் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் திடீரெனப் பேச்சுத்திறன் இழந்தவர் இன்னொருவர் அவருக்குப் பேணுகை செய்யவந்த பெண் செவிலியர். இவர்களுக்குள் ஒரு தீவில் நடக்கும் கலந்துரையாடல், செயல்கள், சிந்தனைகள் போன்றைவையே கதை. இரு பாத்திரங்களை மட்டும் ஒரு கண்ணாடிக்கூண்டில் அடைத்துக் கேமரா மூலம் புலன்விசாரணை கோணலிலிருந்து உருவாக்கப்பட்டது பெர்சோனா.
நகைப்பாடம் – பார்கின்சனின் விதி
பணம் படைத்தவர்கள் எல்லோராலும் ‘பணக்காரன்’ என்ற பட்டத்தை அடைந்துவிட முடியாது. ‘பணக்காரன்’ என்பது ஒரு தனித்துவ வட்டத்தின் உறுப்பினர்களுடைய பெயர், அதில் இடம் பிடிப்பது கடினம் என்கிறார் பார்கின்சன். ஒரு சீன கோடீஸ்வரரை சந்தித்த போது அந்த சீனர், “கூலிக்காரன் பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் ஒரு பணக்காரனால்தான் பணக்காரனைப்போல வாழ முடியும்” என விளக்கங்கள் கொடுக்காமல் சொல்கிறார்
நினைவோடையின் படிமம் – ஜெயந்த மஹாபாத்ரா
வறுமையில் தவிக்கும் தகப்பன் தன் சொந்த பெண்ணையே விற்பதற்கு தள்ளப்பட்ட நிலைமையை விளக்க “வெறும் நுரையைத்தான் சுரண்டியது அவன் பழைய வலை” என்பதிலும் பனங்கீற்று குடுசையில் காற்று நுழைவதுபோல அந்த குடுசைக்குள் பல பேர் நுழைந்திருக்கிறார்கள் என்பதிலும் ஜெயந்தாவின் மெல்லிய உணர்ச்சி பார்வை வெளிவருகிறது
பசிப்புலவர்கள் (Hungryalist Generation) – வங்காள இலக்கிய இயக்கம்
பசிப் புலவர்கள் இயக்கம் அமெரிக்க பீட் இயக்கத்தின் ப்ரபாவத்தில் உருவானது என்பது ஒரு பரவலான கருத்து. பீட் இயக்கத்தின் குரு என கருதப்படும் அலன் கின்ஸ்பேர்க் (Allen Ginsberg) கல்கத்தாவுக்கு 1962 ல் வந்து பசிப் புலவர்கள் இயக்கத்தினருடன் உரையாடல்களில் ஈடுபட்டார். சுமார் பதினான்கு மாதங்கள் இந்தியாவில் வசித்த அலன் பசிப் புலவர்களின் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அமேரிக்காவில் வெளியிட உதவினார்.
இரு முனைக் கத்தி – அருண் கோலட்கர்
இருள்-ஒளி, அறியாமை-பகுத்தறிவு இருமையை அருணின் எளிய நடை வெளிக் கொண்டுவருகிறது. மேலோட்டத்தில் நாத்திகம் போல அமைந்திருப்பினும் உள்நோக்கத்தில் அருணின் சமுதாய அர்த்தத் தேடலைப் பிரதிபலிக்கிறது. அறிவு எனும் ஒளியை கையில் கொடுத்தும் அறியாமையில் துயிலும் பூசாரியை உதாசீனப்படுத்தும் விதம் கடைசி இரு வரிகள் அமைகின்றன.
நேர்கோணல் – மர்ஸல்துஷா (Marcel Duchamp)
உண்மையான கலைப் படைப்புகள் நேரடியாக சிந்தைக்கே பேசக்கூடியவை என்பதால் அக்கால ஓவியப் படைப்புக்களை “ரெட்டினல் ” (“Retinal “, கண் சார்ந்த) என நிராகரித்தார். ஒரு கலைப் படைப்பின் மகத்துவம் அது நேயர்களிடம் எற்படுத்தும் கேள்விகளிலும், சர்ச்சையிலும் உள்ளது. கேள்விகளே எழுப்பாத ஓவியங்கள் தொங்கும் சுவருடன் சுவராகி மறைந்து போகிறது.
கலைத்தீவிரவாதி – ஓவியர் ஃப்ரான்சிஸ் நியூட்டன் சூசா (Francis Newton Souza)
தெய்வீகமும், ஒழுக்கமும் சூசாவின் இயல்பில் இல்லை. கிறிஸ்துவப் பள்ளியின் ஒழுங்குமுறையும், கட்டுப்படும் அவருக்கு கசப்பான அனுபவமாக இருந்தது. ஆபாசப் படங்களைக் கழிவறையில் வரைந்ததிற்காகப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பதினாறாம் வயதில் கலைக்கல்லூரியில் சேர்ந்த சூசா, “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கெடுத்தற்காக மீண்டும் வெளியேற்றப்பட்டார். அதே தினம் தன் முதல் ஓவியத்தைக் காய்கறி நறுக்கும் பலகையின் மேல் நீல நிறத்தில் வரைகத்தியினால் தீட்டினர்.
வெந்து தணியாத காயம் – ஓவியர் ஃப்ரான்சிஸ் பேகன் (Francis Bacon)
பார்க்கும் பார்வை சிந்தைக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தின் (impression) அடிப்படையில் வரைய தொடங்கினர் சில ஓவியர்கள். வடிவமைப்பிற்கு, தத்ரூபத்திற்கு, உணர்ச்சிகளுக்கு இரண்டாம் இடத்தை கொடுத்து, நிறங்களுக்கும் , நிறங்களினால் ஏற்படும் உணர்ச்சிகளுக்கும், சாமானிய சூழல்களுக்கும், தூரிகை அசைவுகளும் முதலிடம் கொடுத்தனர் இந்த இயக்கத்தினர். இந்த இயக்கத்திற்கு இம்ப்ரெஷசனிசம் (impressionism) என பெயர் சூட்டினர் கலை விமர்சகர்கள்.
மெட்ரோ மோஹினி
அப்போதுதான் தலையில் பல்பு எரிந்தது. கடந்த இரண்டு வாரங்களாக காலை நேரங்களில் மெட்ரோவில் மூன்று தற்கொலைகள். போலீசாரால் இறந்தவர்கள் எதற்காக தன்னையே மாய்த்துக்கொண்டனர் எனச் சரியாகக் கூறமுடியவில்லை. இதனால்தானோ அதிகம் கூட்டமில்லை?
