பாங்சி (Banksy) யார்?

இரண்டாம் பிரிவினர் விசித்திரமானவர்கள் , மர்மமானவர்கள். இப்பிரிவினர் எக்காரணத்திற்கும் தங்கள் நிஜ அறிமுகத்தைக் கொடுக்கமாட்டார்கள். தங்கள் தனிமைக்கும் ஆக்க சுதந்திரத்திற்கும் சுய அறிமுகம் பாதமாக அமைந்துவிடக்கூடாதென நினைப்பவர்கள். புகழின் பின் விளைவுகளை முற்றிலும் தவிர்க்கவோ அல்லது அதை வரம்பிக்க விரும்புவார்கள். பிரபல தமிழ் இலக்கிய ஆளுமை ‘பேயோன்’ , “நான் பப்ளிக் ஃபிகராக இருப்பதை விட வெறும் ஃபிகராக இருக்கவே விரும்புகிறேன்” எனச் சொல்வதில் வாசகர்களுடன் கண்ணாமூச்சி ஆடுவதில்  விருப்பமில்லாதவர் என்பது தெளிவாகிறது.