ஒற்றைக் கண் பறவையின் வானம்

ஐம்பொன் விக்கிரகம் தீர்த்தமாடும்
சமுத்திரம்
ஒவ்வொரு காலடியாக எடுத்து வைத்து
குழந்தையைப்போல மணல் பரப்பில்
தவழ்ந்து விளையாடி,
உப்பு நீரில் பாதம் எடுத்து வைக்கையில்;
சமுத்திரத்தை ஒழித்த நிலவின் வெளிச்சத்தில்;

போலியுடல்கள்

ஓம் வடிவ பட்டமரத்தில்
கந்தப்பிரகாசமுடைய
வேல் முகமாக
தளிர் விட்டிருந்தது ஒற்றை இலை
உடலெல்லாம் பச்சை வேலால்
அலகு குத்திய ஆயிரம் மரங்களுக்கு இல்லாத அழகு அதற்கு

அந்தியின் ஆன்மா

ஒரு துளியும் மீதமின்றி
உறிஞ்சப்படும் நீலத்துக்காக
காத்திருக்கும் வௌவால்கள்
பெரிய மேகங்களுக்கு அடியில்
அரற்றி விரிக்கின்றன இறக்கைகளை

வேதிப் போராயுதம்

துணி காயப்போடும் கயிறுகளின் முடிச்சிலும்
துரு பிடித்த அதன் வளையங்களிலும்
மெல்லிய சட்டையைக் கிழிக்கும்
கோரமான முனைகளாலான
இரும்பு கிளிப்களிலும்
இவற்றையெல்லாம்
ஆட்டுவித்து நகர்த்த
எண்ணிக்கொண்டே இருக்கும்

நினைவோடையின் படிமம் –  ஜெயந்த மஹாபாத்ரா

வறுமையில் தவிக்கும் தகப்பன் தன் சொந்த பெண்ணையே விற்பதற்கு தள்ளப்பட்ட நிலைமையை விளக்க “வெறும் நுரையைத்தான் சுரண்டியது அவன் பழைய வலை” என்பதிலும் பனங்கீற்று குடுசையில் காற்று நுழைவதுபோல அந்த குடுசைக்குள் பல பேர் நுழைந்திருக்கிறார்கள் என்பதிலும் ஜெயந்தாவின் மெல்லிய உணர்ச்சி பார்வை வெளிவருகிறது

குளக்கரையில்- சில குறிப்புகள்

குளத்தில் மிதக்கிறது
முன்பு எப்போதோ
கடைசியாய்ப் பார்த்து
மலங்கலாய் நினைவுபடுத்திக் கொள்கிற
ஒரு பால்ய சிநேகிதியின்
முகம் போல்
முழுநிலவு.

சிசிபஸ்

இன்னொரு முறை
இழுத்துப் போனேன் நிழலை
மலையுச்சிக்கு.
முன்பு போல்
நிழலோடு உருண்டது தான் மிச்சம்.
திருப்பித் திருப்பி
இப்படியே.
என்ன அபத்தம்?
இனியொரு முறை
ஒரு கைபார்த்து விடலாம்.
இம் முறை
யார் வேதாளம்
யார் விக்கிரமாதித்யனென்று
தெரியவில்லை.

ஜம் என்று இருக்க வேண்டும்

தினச் சம்பளத்தின்
கசங்கிய தாள்களை அம்மாவிடமும்
கசங்காத தாள்களை என்னிடமும் பார்க்கலாம்
வீடடைய நடுச்சாமம் ஆகுமென்பதால்
சோறெடுத்துச் செல்லும்
வயர்கூடையில் டார்ச்லைட் இருக்கும்
எடுத்துப்போக மறந்துவிட்டேனென்று

இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்

காளிதாசனின் ‘விக்ரமோர்வசீயம்’ நாடகமானதால் நாடகத்தின் அவசியம் கருதி பல பாத்திரங்கள் இதில் படைக்கப்பட்டுள்ளனர். பலபேர் உள்ள மேடை ஒன்றுதான்  சுவாரசியமானதாக இருக்கும் அல்லவா? மன்னன் புரூரவஸுடன் ஒரு விதூஷகன் –  ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் உள்ளதுபோல ஒரு Jester.  அரசிக்கு ஒரு தோழி. யாரிடமாவது இவர்கள் (பாத்திரங்கள்) உரையாடினால்தானே இவர்கள் “இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்”

ஃபிலிப் லார்கின்: சாதாரண உன்னதம்

லார்கின் படைப்புகளில் இரு நிலையான சரடுகளைக் காண முடிகிறது, அவற்றுக்கு இடையிலான முரணியக்கம், அவரது கவிதைகளுக்கு ஒரு தனிச்சுவை அளிக்கிறது: ஹார்டிய “இங்கேயே இப்போதே” என்ற இருப்பும், யேட்ஸ்சிய காலாதீதத்தன்மை என்ற இரண்டும் அவரது முதிர்ந்த கவிதைகளிலும்கூட தொடர்ந்து தென்படுகின்றன.