கனவு மழை

This entry is part 54 of 72 in the series நூறு நூல்கள்

நாஞ்சில்நாடன்

அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது. மொழி சம்பவம், உரையாடல், உணர்ச்சி, புனைவு என்பன சார்ந்து எவ்வகை ஆடம்பரம்,  ஆரவாரம், கம்பலை எதுவும் இல்லை அவர் மொழிதலில்.

கொள்கை, கோட்பாடு, தத்துவம் என்று எதையும் எவருக்கும் நிறுவ வேண்டிய எந்த நெருக்கடியும் இன்றி இயல்பாகக் கதை சொல்லிப் போகும் வ.ஸ்ரீ.யின் பாணி சமகால இலக்கியச் சூழலில் காண்பதற்கு அரிது.

சுஜாதா சஞ்சீவி

கதைகளில் மனித சுபாவம், எண்ணங்களின் விசித்திரங்கள், கைவிடப்பட்ட வாழ்க்கை என பல சரடுகள் கோர்க்கப்பட்டு வாழ்க்கையில் பல வர்ணஜாலங்களை காட்டுகின்றன. 

அவரது சிந்தனை முதிர்ச்சி, அகமனப் பார்வை, எண்ண ஓட்டங்கள், உலகநோக்கு எல்லாம் சிறப்பாகப் பதிவாகியுள்ளன. 

ந. ஶ்ரீராம்.

தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் 21 கதைகளும் வாழ்வினை தரிசிக்கும் 21 சாளரங்களாக நமக்குத் திறந்து விடப்படுகின்றன.

வ. ஶ்ரீநிவாசன்

ஒவ்வொரு மனிதரும் ‘பல கோடி நூறாயிரம்’ கதைகள். பெரும்பாலும் நினைவில் தங்காதவை;  கவனிப்புப் பெறாதவை; சொல்லப் படாதவை.

இந்த எல்லையற்ற கதைக் கடலின், ஓரலையின், ஒரு நுரையின், ஒரு குமிழி இக்கதைகள்.

நூல்: கனவு மழை
கணையாழி, சொல்வனம் இதழ்களில் வெளிவந்தவை.
நூலாசிரியர்: வ.ஸ்ரீநிவாசன்
வகை: சிறுகதைகள்
பதிப்பாளர்: சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு
பக்கங்கள்:166
விலை: ரூ 180/-
(தபால் செலவு +40)

தொடர்புக்கு
ஜி.ஆர்.பிரகாஷ்
9940985920 (Whatsapp)
8778924880 (Gpay)

நூறு நூல்கள்

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம் அயல் சுவை

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.