ஹயாவோ மியாசகி – இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரம்

எல்லாக் குழந்தைகளைப் போலவே பால்யத்தில் நானும் சிறுவர் படக்கதைகள் வழியாகத்தான் கதைகளின் உலகிற்குள் போனேன். அந்தப் படக்கதைகள் தந்த பரவசம் நினைவின் அடியாழத்தில் தேங்கிப் போய் விட்டிருக்கிறது. மீண்டும் இத்தனை வருடங்கள் கழித்து மியாசகி வழியாகத்தான் அப்பரவசங்கள் மெல்ல மேலெழுந்து வந்தன. மியாசகியின் ஒவ்வொரு திரைப்படமும் என் பால்யத்தை மீட்டுத் தருகிறது. மிகப்பெரும் கனவு வெளியை, கிளைகளாய் பெருகும் கதைகளை, இயற்கையின் மீதான நேசத்தை இத்திரைப்படங்கள் என்னுள் விதைக்கின்றன.