விருதேற்பு உரை

எழுத்தில் எது உண்மை எது போலி என்று பாகுபடுத்துவது எளிதான காரியம் இல்லை. மேலும், உண்மை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பதுதானா? என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ”உண்மைகளை”ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த “உண்மை”யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும், உணர்வுகளை இலக்கியமாக்குகிறது.

வரலாறும் பொறுப்புணர்வும்

இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஜெர்மனி இழைத்த கொடுமைகள், உக்ரெய்ன் எதிர்கொண்ட கொடூரங்கள், இவற்றின் பின்னணியில் உள்ள
யூரோப்பிய கொள்கைகள், கோட்பாடுகள்- இவை நமக்கு ஏன் முக்கியமாக இருக்க வேண்டும்? யூரோப்பிய மோதல்களின் வரலாற்றை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? ஜெர்மனியின் பாராளுமன்றத்தில் திமோதி ஸ்னைடர் 20.6.2017 அன்று ‘Germans must remember the truth about Ukraine – for their own sake‘ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் உக்ரெய்ன் விஷயத்தில் ஜெர்மனியின் வரலாற்றுப் பொறுப்பு பற்றி அவர் பேசுகிறார். வரலாற்றுப் பொறுப்பை ஏன் பேச வேண்டும், அதிலும் குறிப்பாக ஜெர்மனிய வரலாற்றுப் பொறுப்புணர்வை ஏன் பேச வேண்டும், என்ற கேள்வியை எதிர்கொள்ளும் ஸ்னைடர் முதலில் ஒரு பொதுப் பார்வையை முன்வைக்கிறார்.

பட்டதாரி

இது கல்லூரி பட்டமளிப்பு விழாக்காலம். வாழ்க்கையில் முதல் அடி எடுத்து வைப்பதை வைபவமாகக் கொண்டாடும் காலம். பட்டதாரிகளின் படிப்பு முடிந்து புதிய பாதை துவங்குவதை வரவேற்கும் காலம். இங்கே விவேகானந்த் விமல் பேசுகிறார். பிராண்டெயிஸ் பல்கலையில் நரம்பு இயங்கியல் துறையில் ஆராய்ச்சியை முடித்து பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார். கொஞ்சம் “பட்டதாரி”

இந்திய அமெரிக்கரின் விதூஷக ராஜாங்கம்

9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை ‘ஒசாமா’ என்று அழைப்பது; பைபிள் பெல்ட் என்று அழைக்கப்படும் நடுப்பகுதியில் உள்ள தெற்கு மாகாணங்களில் இன்றைக்கும் நிலவும் வெள்ளையின உயர் பெருமிதத்தின் எச்சங்கள்; பள்ளியில் பெரும்பான்மையினர் இடையே சிறுபான்மையினராக உலா வரும்போது தோன்றும் இருப்பியல் அபிலாஷைகள் – என்று கலந்து கட்டி தன் வரலாற்றைச் சொல்கிறார் ஹஸன். நடுநடுவே இந்தியக் குடும்பங்களின் பண்பு; படிப்பில் காட்டும் சிரத்தை; திறந்த வெளியாக எதைப் பற்றியும் பேசாத இந்தியக் குடும்பங்களின் சூழல்; சமூகமும் சமயமும் சாராமல் திருமணம் செய்து கொள்வதில் இந்தியர்களுக்கு நிலவும் சிக்கல்கள் என்று பல இடங்களில் கோர்வையாகத் தாவுகிறார்… நகைச்சுவையாகவும் பேசி சிரிக்க வைக்க வேண்டும். வெறுமனே கேலியாக இல்லாமல் அந்தப் பேச்சில் வாதத் திறனும் இருக்க வேண்டும். வெறும் வாதமாக இருந்துவிடாமல் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களையும் கோர்க்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளாக இருக்கட்டும்; அரசியல் சிக்கல்களாக இருக்கட்டும் – ஏன் இந்த முடிவிற்கு நீங்கள் வர வேண்டும் என்பதை சுயவரலாற்றுடனும் சிரிப்புடனும் சொல்ல ஹஸன் மினாஜிற்கு தெரிந்திருக்கிறது.

'இந்திய அறிதல் முறைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு

வெளியிட்டவர் – ரவிஷங்கர் உரை
பெற்றுக்கொண்டவர் – முனைவர் உத்ரா துரைராஜன் (இயற்பியல் துறை முதல்வர், DGV கல்லூரி) உரை
பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்) உரை
சாந்தினிதேவி ராமசாமி ஏற்புரை
அரவிந்தன் நீலகண்டன் ஏற்புரை

யஸிதி இனப்பெண்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உரை

ஐ எஸ் ஸின் கொடூரம் ஏதோ வாய்ப்பு கிட்டியதால் நடந்த ஒரு நிகழ்வல்ல. . ஐ எஸ் ஸை சேர்ந்தவர்கள் இவ்வாறான கொடூரங்களை அரங்கேற்ற முன் திட்டமிட்டே வந்திருந்தனர். கற்பழிப்புகள், கட்டாயமாகச் சிறுவர்களைத் தம் படையில் சேர்த்தல், அவர்கள் கைப்பற்றிய புனித்தலங்களை தரைமட்டமாக்கி அழித்தல், குறிப்பாக யாஸிதி பெண்களையும், சிறுமிகளையும் கற்பழிப்பு மூலம் சிதைத்து அழித்து அவர்கள் ஒருபோதும் சாதாரணமான, இயல்பான வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் ஆக்குவது ஆகிய வன்முறைச் செயல்கள் மூலம் யாஸிதி இனமக்களின் அடையாளத்தைச் சுத்தமாக ஒழிப்பதே அவர்கள் திட்டம்.

கம்பனின் இரணியன்

பிரகலாதனையும் விபீஷணனையும் துரோகிகள் என்று தமிழில் வலிந்து வலிந்து எழுதப் பட்டிருக்கிறது. பாரதிதாசன் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்று நாடகம் ஒன்று எழுதியிருக்கிறார். நாடகத்தைப் பார்க்கவில்லை. படித்திருக்கிறேன். படித்தால் தமிழ்த் துரோகியாக மாறிவிடலாமா என்ற சபலம் உங்களுக்குத் தோன்றலாம். சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் நரசிம்மர் வதைக்கப்படுகிறார். இரணியன் கதாநாயகியை மணக்கிறான் என்று ஞாபகம். இவற்றைப் போன்ற படைப்புகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றினால் அது புரட்சி அல்லது புதுமை என்ற மூட நம்பிக்கையில் விளைந்தவை. இவற்றையெல்லாம் சர்க்கஸில் கோமாளி கைகளால் நடந்து வருவதைப் பார்த்து கைதட்டி சிரித்து விட்டு மறந்து விடுவதைப் போல மக்கள் மறந்து போய் விடுவார்கள்.

வாதங்களும் விவாதங்களும்: வெசா ஏற்புரை

வெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1950 களில் “எழுத்து” இதழ் மூலமாக தமிழ் கலை-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்த வெ.சா. அவர்களின் அறுபதாண்டு கால எழுத்துக்களை இன்று திரும்பிப் பார்க்கும்போது, தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழல் மீதான அவரது செயற்பாட்டுக் களம் “வாதங்களும் விவாதங்களும்: வெசா ஏற்புரை”

'திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி'ல் ஓர் உரை

அந்தக் ‘கொள்கலன்’ மிகவும் பெரியது. அதில் மிகப் பெரிய இடத்தை அடைத்துக் கொள்ளும் தன் முனைப்பு என்பகிற பொருளும் வேறு அடைத்துக் கொண்டிருக்கவில்லை. தகவல்கள், தமிழ், கிரஹிப்பு மட்டுமல்ல அந்தக் கொள்கலன் மிகப் பெரியதாய் இருப்பதால்தான் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், வாசகர்கள் என்கிற மிகப் பெரிய எண்ணிக்கையிலான மனிதர்களையும் அது கொள்கிறது. அதனால்தான் எல்லோருக்கும் ஒதுக்க நேரமும், கொடுக்க இடமும் அவரிடம் இருக்கிறது. அது ஒரு கனிந்த பரந்த தமிழ் இதயம்.
இவ்வளவு வாசகர்கள் இருந்த போதிலும் அவரது முதல் வாசகன், முதன்மை வாசகன் நான்தான். என்னடா இது இப்போதுதான் அகந்தையை, தன்முனைப்பைத் தாக்கி விட்டு இவ்வளவு தன் முனைப்பு கொப்புளிக்கும் ஒரு கூற்று என்று நீங்கள் நினைக்கலாம். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். சொல்வனத்துக்கு அவர் எழுதுபவற்றின் கையெழுத்துப் பிரதியை முதலில் வாசிப்பது நான்தான். பின்னர்தான் அவை தட்டச்சு செய்யப் பட்டு பிரசுரமாகும். ஆக ஒரு சில எழுத்துக்களுக்காவது நான் முதல் வாசகன். இந்த மாதிரி ‘ ப்ரொடெக்டிவ் க்ளாஸஸ்’ ‘டிஸ்க்ளெய்மர்ஸ்’ இல்லாமல் அவரது முதன்மை வாசகன் நான் தான். ஏன் என்று இதோ சொல்கிறேன்.

நேற்று நினைத்தேன் – ஜெயகாந்தன்

நேற்று நான் நினைத்தேன்; இந்தக் காற்று மண்டலமான பூமியிலேயே ஒரு நாள் என் சுவாசத்துக்குக் காற்றில்லாமல் நான் மரித்துப் போவேன். அப்போது புயற்காற்று என் உடலைப் புரட்டி அலைக்கழித்தாலும் எனது சுவாசகோசங்களை இயக்க முடியாதே !

ஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன – 2?

ஆகவே மனிதனை நேசிப்பதற்கும், மனிதனில் கடவுளை காண்பதற்கும், காலம் தோறும் துணை செய்வதற்கும், வேதம் என்று பெயர். இந்த காலத்தில் அது பொதுமை செய்யப்பட்டிருக்கிறது. அதை செய்தவர் பாரதி. தமிழில் எல்லாவற்றையும் அறிந்து கொண்டீர்கள் என்றால் பொதுமையாக இருக்கிறது. எதை அறிந்து கொள்வது தமிழிலே? தமிழில் தானே எல்லாம் இருக்கிறது, எதை அறிந்து கொள்வது?

ஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன?

வேதம் என்று எது எதெற்கெல்லாம் பெயர் நான்மறை என்பது நாமெல்லாம் பொதுவாக சொல்லுகிற வேதம். விவிலியத்திற்கும் பெயர் வேதம் தான். குரானுக்கும் பெயர் வேதம் தான்.திருக்குறளுக்கு பெயர் கூட வேதம் தான். இந்த வேதம் என்ற பொருள் ஒன்றிற்கு ஏன் வருகிறது என்றால் அது காலம் தோறும் மனிதனுக்கேற்ப புதுப்பிக்கப்பட்டு புரிந்துக்கொள்ள படுவதால் தான். அது சிரஞ்ஜீவியானது.எது எது சிரஞ்சீவியானதோ, அது காலம் தோறும் புதுமையுறும்.

அசோகமித்திரனின் கதையுலகில் பெற்றோரும் பிள்ளைகளும்

அசோகமித்திரன் அதிகாரமுடைய ஆளுமைகளை மையப்படுத்தி அதிகம் எழுதியதில்லை. இதுவும் அவருடைய புனைவுலகில் குறிப்பிடத்தக்க அம்சம். விதிவிலக்காக, ’கரைந்த நிழல்கள்’ நாவலில் ஒரு பாத்திரமான ஸ்டூடியோ அதிபர் ராம ஐயங்கார். நாவலின் ஒரு அத்தியாயத்தில் ராம ஐயங்கார் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் தன் பங்களாவில் தன்னிடமிருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கும் தன் மகனைச் சந்திக்கச் செல்கிறார். தன் உடல்நிலை சீர்கெட்டுக்கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.

பாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி

பொதுவாக க.நா.சு பாரதியைக் குறித்துப் பேசியதோ, எழுதியதோ இல்லை என்றொரு கருத்து நிலவுகிறது. க.நா.சு கட்டுரைகள் என்ற தொகுப்பில் பாரதியைக் குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று இக்கட்டுரை. இது அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரை.