டால்கம் பவுடர் – பகுதி 2

This entry is part 24 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

வழக்கம்போல, தன்னுடைய தயாரிப்பிற்கும் புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாய்மார்களை என்றும் நாங்கள் கைவிடமாட்டோம். அதுவும், சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்றை ஜா & ஜா என்றுமே தயாரிக்காது என்று ஒரேடியாக மறுத்தது.

டால்கம் பவுடர்

This entry is part 23 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

டால்க் (talc) என்பது மெக்னிஷியம் சிலிகேட் கலந்த களிமண்ணாக இயற்கையில் கிடைக்கிறது. (அட, களிமண்ணையா முகத்தில் இத்தனை நாள் பூசி அழகுபார்த்தோம்?) அத்துடன், சோளப் பொடியையும் கலந்து டால்க் உருவாகிறது.

விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்

This entry is part 22 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

ஆறு வகையான கனிமப் பொருள்களுக்குப் பொதுவான பெயர் ஆஸ்பெஸ்டாஸ். அதிக நார்கள்கொண்ட சிலிகேட்டினால் (silicates) உருவானவை இவை. ஆஸ்பெஸ்டாஸ், மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தாது. இதனால், பல நூறு ஆண்டுகளாக ஆஸ்பெஸ்டாஸ் ஒரு கட்டுமானப் பொருளாக வெற்றிநடை போட்டது உண்மை.

விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து

This entry is part 21 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

டிடிடி எப்படி வேலை செய்கிறது? தெளிக்கப்பட்ட பூச்சியின் மூளையில் உள்ள நரம்பணுவின் சோடியம் சானல்களை, சகட்டு மேனிக்குத் திறந்துவிடும். இதனால், பூச்சியின் பல கோடி நரம்பணுக்கள் ஒரே சமயத்தில் இயங்கத் தொடங்க, அதன் விளைவாக வலிப்பு ஏற்பட்டுப் பூச்சி இறந்துவிடும்.

மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2

This entry is part 20 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

மிக முக்கியமான இன்னொரு விஷயம், சிகரெட் எப்படி ஒருவரை அடிமைப்படுத்துகிறதோ, அதே அளவிற்கு மின் சிகரெட்டும் அடிமைப்படுத்துகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கத்திலிருந்து நுகர்வோரை விடுவிக்கிறேன் என்று முழங்கி, சந்தைக்கு வந்த மின் சிகரெட்டுகள் இன்னும் அதிக நிகோடினை உடலில் சேர்த்து, மேலும் நுகர்வோரை அடிமைப்படுத்துகிறது.

மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1

This entry is part 19 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

அதாவது, இவருடைய பார்வையில் சிகரெட்டில் உள்ள நிகோடின் தேவை. ஆனால், சிகரெட்டின் ஏனைய ரசாயனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த மற்ற ரசாயனங்கள் நுரையீரல் புற்றுநோய் விளைவிப்பதால், அவற்றிலிருந்து விடுபடவேண்டும். ஹானின் 2001 புரிதலே, இந்த மின் சிகரெட்டின் உருவாக்கப் பின்னணி.

சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4

This entry is part 18 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

1990–ல், அமெரிக்க நீதிபதி சரோகின், சிகரெட் தொழில் மீதுள்ள வழக்கின் முடிவில் மிக அழகாக இவ்வாறு கூறினார் (இதைக் கல்வெட்டாக ஒவ்வொரு ஊரிலும் பதிக்கவேண்டும்):
“நுகர்வோரின் உடல் நலனா அல்லது லாபமா என்ற கேள்வி எழும்போது, சிகரெட் தொழில், மிகத் தெளிவாக இயங்கியுள்ளது.
1. உண்மைகளை மறைப்பதை, நுகர்வோரை எச்சரிப்பதைவிட முக்கியமாகக் கருதுகிறது.
2. விற்பனையைப் பாதுகாப்பைவிட முக்கியமாகக் கருதுகிறது.
3. பணத்தை அறத்தைவிட முக்கியமாகக் கருதுகிறது.
இந்தத் தொழில் தெரிந்தும், ரகசியமாக, நுகர்வோரின் உடல்நலத்தை லாபத்திற்காகப் பகடையாக்குகிறது. சிகரெட் தொழில், உண்மைகளை மறைக்கும் விஷயத்தில் ராஜா.”

சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3

This entry is part 17 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

சிகரெட் நிறுவனங்கள், தங்களுடைய தயாரிப்புகள் அபாயகரமானவை அல்ல என்று சாதித்து வந்தனர். எட்டு ஆண்டுகள் வரை அமெரிக்க சர்ஜன் ஜென்ரலின் அறிக்கையைத் தங்களுடைய பணபலத்தால் தள்ளிப்போட வைத்தார்கள். 1964–ல் வெளிவந்த அந்த அறிக்கை, தெளிவாக, அமெரிக்கர்களுக்குப் புகைபிடிப்பதால் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பது அரசாங்கத்தால் தீர்மானமாய் அறிவிக்கப்பட்டது. இதை ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக எல்லோரும் பார்க்கிறோம்.

சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2

This entry is part 16 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

ஒவ்வொரு சிகரெட்டிலும் உடலுக்குக் கேடான 93 ரசாயனங்கள் உள்ளன. இவை அத்தனையும் சிகரெட் உற்பத்தியால் உருவானதா என்று கேட்டால் ‘பெரும்பாலும்’ என்றுதான் பதில் சொல்லவேண்டும். சிகரெட்டில் உள்ள ரசாயனங்கள், மூன்று படிகளில் உருவாகின்றன.

சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்

This entry is part 15 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

சிகரெட் தொழிலுக்கு, அதன் தயாரிப்பில் மனிதர்கள் அடிமையாவது மிக முக்கியம். ஒரு நாளைக்குப் 12 பாக்கெட் சிகரெட் பிடிப்பேன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் மனிதர்கள் அதற்கு மிகத் தேவை.

உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை

This entry is part 14 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

விஞ்ஞானக் கோட்பாடுகள், பொதுவெளிப் பத்திரிகைகளில் வரும் செய்திகள் போன்றவை அல்ல. கோட்பாடுகள், திறமை பெற்ற சக விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்படவேண்டும், அத்துடன், கோட்பாடுகள் ஊர்ஜிதப்படுத்தத் தகுந்த சோதனை முடிவுகளுடன் வெளிவரவேண்டும். அத்துடன், சில விஞ்ஞான அளவுகளை ஒரு நல்ல கோட்பாடு, கறாரான கணக்கீடுகள்கொண்டு ஊகிக்கவும் வேண்டும்.

ஓஸோன் அடுக்கில் ஓட்டை

This entry is part 13 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

வெளியேறிய குளோரின் அணு ஓஸோன் மூலக்கூறுடன் வினைபுரிந்து, ஓஸோன் மூலக்கூறை மீண்டும் ஆக்ஸிஜன் மற்றும் குளோரின் மோனாக்ஸைடாக மாற்றிவிடும். வெளியேறிய ஆக்ஸிஜனுடன் குளோரின் மோனாக்ஸைடு மீண்டும் வினைபுரிந்து, இன்னோர் ஆக்ஸிஜன் மூலக்கூறு மற்றும் குளோரின் அணு உருவாகும். ஒரு குளோரின் அணு ஒரு லட்சம் ஓஸோன் மூலக்கூறுகளை அழிக்கும் சக்தி வாய்ந்தது.

ராட்சச எண்ணெய்க் கசிவுகள்

This entry is part 12 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

எண்ணெய்த் தொழில் வழக்கப்படி Premex நிறுவனம், பாதி எண்ணெய் வெளிவந்தவுடன் எரித்துவிட்டோம், கொஞ்சம் ஆவியாகிவிட்டது, மற்றதைக் கவனத்துடன் அப்புறப்படுத்தி விட்டோம் என்று மார் தட்டிக்கொண்டது. இந்த எதையும் தனிப்பட்ட பாரபட்சமில்லாத எந்த ஓர் அமைப்பும் உறுதி செய்யவில்லை.

விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன

This entry is part 11 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

6. கடந்த 100 ஆண்டுகளாக நடந்துவரும் இதுபோன்ற நடவடிக்கைகளை, ஒரு எண்ணெய்த் தொழில் தில்லாலங்கடி என்றே சொல்லவேண்டும். விஞ்ஞான முறைப்படி அணுகினாலும் இவர்களுடைய அணுகுமுறையில் எந்தவிதமான பயனும் இல்லை. ஆயினும், இவர்கள் நடத்தும் நாடகம் ஒவ்வொரு முறையும் சற்று வேறுபட்டு இருந்தாலும் கடைசியில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள்.

விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன

This entry is part 10 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

எல்லாம் சரியாக இருப்பதாகத் தோன்றலாம். இத்தனை நல்ல பொருளாதார நன்மைகளைத் தரும் தொழில்நுட்பத்தில் அப்படி என்ன குறை இருக்கமுடியும்? உலகின் கடந்த 100 ஆண்டு காலத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எண்ணெய் மற்றும் எரிவாயு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு தொழில்நுட்பத்தின் ஆரம்ப காலங்களிலும் அதனால் விளையும் கெட்ட விளைவுகளை மனித குலம் தவிர்த்தே பார்த்து வந்துள்ளது.

விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்

This entry is part 9 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

ரவி நடராஜன் கனடாவின் மிகப் பெரிய தொழில் எது? கோதுமை, கனோலா எண்ணெய் ஏற்றுமதி மரங்கள் மற்றும் காட்டுப் பொருட்கள் (forestry products) கனிமப் பொருளகள் (minerals) மாட்டிறைச்சி (beef) திராட்சை மது (wine) எஃகு (steel) இதில் எதுவுமே கனடாவின் மிகப் பெரிய தொழில் அன்று. இவை “விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்”

பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2

This entry is part 8 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

பக்கத்துத் தெருவில் இருக்கும் நண்பனைச் சந்திக்கப் பெட்ரோல் பைக்கில் செல்லுவது என்பது நமது வழக்கமாகிவிட்டது
இந்தியா போன்ற நாடுகளில், டீசல் எரிபொருள் மற்றும் சமையல் வாயுவிற்கு மானியம் வழங்கப்படுவதால், டீசலில் மற்றும் எரிவாயுவில் இயங்கும் ஊர்த்திகளை மக்கள் அதிகமாக வாங்குகிறார்கள்.
வங்கிகள் மற்ற நிதி நிறுவனங்கள், கார் வாங்கக் கடனுதவி (car loans) மற்றும் குத்தகையைப் (vehicle leases) பெரிதாக நம்பியிருக்கின்றன.
புவி சூடேற்றம் பற்றி வாய் கிழியப் பேசும் அரசியல் தலைவர்கள், பேசி முடிந்தவுடன் தாய்நாட்டிற்கு திரும்பும் முன் அரபு நாட்டு வழியாக எண்ணெய் இறக்குமதி முடிவெடுத்துவிட்டுதான் வருகிறார்கள்.

பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1

This entry is part 7 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

உலகின் மிக மோசமான காற்றுத்தரம் உள்ள நகரங்களில் ஒன்று டில்லி. பல ஆண்டுகளாக, டில்லி அரசாங்கம் டீசல் பஸ்களை இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி, காற்று மாசைக் குறைக்க முற்பட்டு வெற்றி பெறவில்லை. டில்லியின் மெட்ரோ ரயில் இந்த முயற்சியின் ஒரு பங்கு. டில்லியைப்போல இந்திய நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னையின் நிலையும் இதேதான். ஆனால், டில்லியின் முக்கிய தோல்விக்கான காரணம் குளிர்காலத்தில், சுற்றியுள்ள வயல்கள் எரிக்கும் 500 மில்லியன் டன் பயிர்த்தூர்.

சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)

This entry is part 6 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது, அனல் மின் உற்பத்தியாளர்கள், ஏதோ சதிகாரர்கள் போலத் தோன்றலாம் – என் நோக்கம் அதுவல்ல. இவர்கள் விஞ்ஞானிகள் பார்க்காத சில கோணங்களில், இந்தப் பிரச்சினையை ஆராய்ந்தார்கள் என்பது உண்மை. உதாரணத்திற்கு, ஒரு அனல் மின் அமைப்பில், பல கொதிகலன்கள் இருக்கும். ஒவ்வொரு கொதிகலனையும், ஒரு தொழில்நுட்ப முன்னேற்ற மையமாக மாற்றினார்கள். சின்னச் சின்ன முதலீட்டில், எப்படி மாற்றங்களைக் கொண்டுவருவது என்பதும் இவர்களது வெற்றிச் சிந்தனை.

சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)

This entry is part 5 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

இது ஒன்றும் மனிதச் சோதனைச் சாலை அன்று. இந்த அமிலத்தன்மை மனிதனால், ஒரே நாளில் உருவாக்கப்பட்டதும் அன்று. உயிரினங்கள், மீண்டும் பழையபடி ஏரிகளில் வாழ, அந்த உணவுச் சங்கிலி உருவாக்கப்பட வேண்டும். அது நம்மால் இயலாத காரியம். அது இயற்கையின் டிபார்ட்மெண்ட்! நாம் அவசரமாகத் தலையிட்டதற்காக, இயற்கை ஒன்றும் உடனே சரி செய்யப் போவதுமில்லை.

சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை

This entry is part 4 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

1960 –களில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மண்ணியல் விஞ்ஞானி (soil scientist) ஸ்வென் ஓடன் (Sven Oden) தனது நாட்டில் மழையில் அமிலம், அதுவும் கந்தக மற்றும் நைட்ரிக் அமிலம் கூடுவதைப் பல்வேறு மண் சோதனைகள் வழியே ஆராய்ந்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். ..இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய ஐரோப்பிய அனல் மின்நிலையங்கள் கரியை எரிப்பதால், காற்று வழியாக, ஸ்வீடனின் காற்று மற்றும் மழை மாசுபடுவதை தகுந்த ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் கருத்தரங்கில் முன் வைத்தார்.

சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்

This entry is part 3 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

ராபர்ட் கெஹோ, சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆய்வுகளை நடத்தி வந்தார். இவருடைய ஆய்வகம், ஜி.எம்., டூபாண்ட் மற்றும் ஈதைல் நிறுவன அன்பளிப்பில் தொடங்கி, உதவித் தொகையில் இயங்கியது. அத்துடன், ராபர்ட், ஈதைல் நிறுவனத்தின் ஆலோசகர். ஈதைல் நிறுவனத்திற்குச் சாதகமான சோதனை முடிவுகள் தொடர்ந்து வெளிவந்ததன் பின்னணி இதுதான்…. விஞ்ஞானப் பித்தலாட்டத்தின் ஒரு வசீகர ஏற்பாடு இது. ராபர்ட், ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக வெளியுலகிற்குக் காட்சியளித்தார். இதனால், அவரது முடிவுகளுக்கு ஒரு நடுநிலை இருப்பதாக அனைவரும் நம்பினார்கள். இன்றும் இதுபோன்ற ஏற்பாடுகள் உலகப் பலகலைக்கழகங்களில், அதுவும் வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஏராளம்.

சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்

This entry is part 2 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

1970 –க்கு முந்தைய காலத்தில், இந்தியாவில் அதிக கார்கள் கிடையாது. இன்றைய இரு சக்கர ஊர்திகளின் எண்ணிக்கை, அன்றைய மக்கள் தொகையைவிட அதிகம். இரு சக்கர வாகனம் என்றால் பஜாஜ் ஸ்கூட்டர்கள் மட்டுமே உண்டு. பஜாஜ் ஸ்கூட்டர்கள் பால்காரர்களால், காலைப் பொழுதில், தாங்கள் கறந்த பாலை நகருக்குக் கொண்டு “சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்”

விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்

This entry is part 1 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

மிகப் பெரிய தனியார் நிறுவனங்கள்., அரசாங்க சட்டங்களை தங்களுடைய லாபத்திற்காக மாற்றக் குறுக்கு வழிகளில் ஈடுபடுவது மனித வரலாற்றில் என்றும் நிகழ்ந்த ஒரு விஷயம். ஆனால், விஞ்ஞானம் வளர வளர, மறைமுகமாக, தனியார் நிறுவனங்கள், விஞ்ஞானம் சார்ந்த சட்டங்களை தங்களுடைய லாபம் குறையாமல் இருக்கத் திரிக்கவும் முற்பட்டது கடந்த 120 வருட வரலாறு. இதனால், பல விஞ்ஞான ஆராய்ச்சிகளில், தனியார் லாபமா, அல்லது பொது நலமா என்ற மிகப் பெரிய அறப்போர் நம்முடைய சமுதாயத்தில் நடந்த வண்ணம் இருக்கிறது.

வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5

This entry is part 5 of 5 in the series வேகமாய் நின்றாய் காளி!

பழுதுபார்க்கும் மையங்களுக்குச், சில வரிச் சலுகைகள், முதலில் வழங்கப்பட வேண்டும். இது தொலைநோக்குடன் அணுகப்பட வேண்டும். மறுபயன்பாட்டில் அதிக முதலீடு செய்வதும் இதுவும் ஒன்றே. வருமுன் காக்கும் செயல் இது

வேகமாய் நின்றாய் காளி- 4

This entry is part 4 of 5 in the series வேகமாய் நின்றாய் காளி!

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், உலகின் மொத்த மின் கழிவில், வெறும் 16 சதவீதமே மீட்கப்படுகிறது. … இன்றைய கணிப்புபடி வருடம் ஒன்றுக்கு 40-50 மில்லியன் டன்கள் மின் கழிவை உலகம் முழுவதும் உருவாக்கி வருகிறோம். இதை வேறுவிதமாகச் சொல்லப்போனால் ஒவ்வொரு நொடியும், 800 மடிக்கணினிகளைத் தூக்கி எறிவதற்குச் சமமானது.

வேகமாகி நின்றாய் காளி – பகுதி 3

This entry is part 3 of 5 in the series வேகமாய் நின்றாய் காளி!

“ஏன் இப்படி தேவைக்கு ஏற்ப புதிய பாகங்களைச் சேர்ப்பதைக் கடினமாக்குகிறார்கள்?”, என்று கேட்டேன். அதற்கு அவர், “இப்பொழுது என்னிடம் எடுத்து வந்து உங்களால் குறைந்தபட்சம் புதிய வன்தட்டைச் சேர்க்க முடிகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அது உங்களால் முடியாது. ஏனென்றால் வன்தட்டை கணினியில் தாய் தட்டோடு (mother board) முழுவதும் சோல்டர் செய்து விடுவார்கள். உங்களது கணினியில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் வேறு ஒரு புதிய மாடலை வாங்குவதை விட்டால் வேறு வழி இருக்காது” என்றார்.

வேகமாகி நின்றாய் காளி! – பாகம் 2

This entry is part 2 of 5 in the series வேகமாய் நின்றாய் காளி!

வருடம் ஒரு செல்பேசி வாங்குவதை நாம் பெருமையாக நினைக்கிறோம். புதிய மாடலின் அதிவேக செயல்பாடு மற்றும் புதிய காமிரா போன்ற அம்சங்கள், நம்மை பழைய மாடலை தூக்கி எறியச் செய்கிறது. வேகம் மீது கொண்ட மோகத்தால் நாம் சகட்டுமேனிக்கு மின் கழிவை பொருப்பில்லாமல் உருவாக்கிக் கொண்டே போகிறோம். கடந்த 20 ஆண்டுகளாக, வளரும் நாடுகளில் கூட, எந்த ஒரு மின்னணு சாதனத்தையும் நாம் பழுது பார்ப்பதை நிறுத்தி விட்டோம். முன்னர் ஒரு ரேடியோவை அல்லது ஒலிநாடா எந்திரம் வாங்கினால், அதைப் பல ஆண்டுகள் பழுது பார்த்துப் பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று, புதிய மாடல்களைக் கண்டவுடன், பழைய மின்னணு சாதனங்களை சர்வ சாதாரணமாக தூக்கி எறிந்து விடுகிறோம்.

வேகமாய் நின்றாய் காளி! பகுதி-1

This entry is part 1 of 5 in the series வேகமாய் நின்றாய் காளி!

இது ஒரு நோய் என்று ஆரம்பத்தில் யாருமே நினைக்கைவில்லை. இன்றும் உலகில் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் இதை ஒரு வளர்ச்சி சார்ந்த விஷயமாகவே பார்க்கிறார்கள். சமிபத்தில், ஆப்பிள் நிறுவனம் செய்த தில்லாலங்கடியை யூரோப்பிய நீதிமன்றம் ஒன்று சுட்டிக்காட்டி ஆப்பிளை சரி செய்ய வைத்தது. ஆப்பிள், ஐஃபோனில் அடிப்படை நிலைபொருள் (firmware) புதுபித்தலில் வேண்டுமென்றே பழைய திறன்பேசிகளை மெதுவாக இயங்கும்படிச் செய்தது. வெறுத்து போன நுகர்வோர், புதிய ஐஃபோன்களை வாங்க வைக்க இந்த நிழல்வேலை செய்து மாட்டிக் கொண்ட்து, ஆப்பிள் நிறுவனம்.

சட்டம் யார் கையில் – பகுதி 2

ஒரு சொல்லைத் தனியாகப் பார்க்கக் கூடாது. அதனுடன் தொடர்புடைய வாக்கியத்தின் மற்ற சொற்களோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். இதுவே இதன் சாராம்சம். உதாரணத்திற்கு, I like to joke என்பது ஒரு வாக்கியம். I like the joke என்பது இன்னொரு வாக்கியம். முதல் வாக்கியம் சுயவிளக்கம். இரண்டாவது வாக்கியம் மற்றவரின் செயலின் தாக்கம். இரண்டிலும் joke என்ற சொல் இருந்தாலும், சுற்றியுள்ள வார்த்தைகளைப் பொறுத்து, அந்த சொல்லின் பொருள் மாறுபடும்.”
ப:. “நீங்க சொன்னவுடன் இதை எப்படி நாம் புரிந்து கொள்கிறோம் என்று வியப்பாக இருக்கிறது. எல்லாம் ஒரு context என்பதை மனித மூளை எப்படியோ புரிந்து கொள்கிறது.”

சட்டம் யார் கையில்?

“ரெண்டு பேரும் ரொம்ப தமிழ் சினிமா பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். ஷங்கர் சினிமா போல அவ்வளவு எளிதல்ல, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப உலகம். உடனே, ரோபோ நீதிமன்றத்தில் வாதாடுகின்றன என்று கற்பனை எல்லாம் வேண்டாம். இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு அது சாத்தியம் இல்லை. ஆனால், ரோபோக்கள் வழக்குத்துறையின் அடிமட்டத்திலிருந்து தங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.”

இசைபட வாழ்வோம்- 2

This entry is part 2 of 2 in the series இசைபட வாழ்வோம்

“அதாவது நான் முன்னமே சொன்னது போல, உன்னுடைய உடல் ரீதியான எம்.எஸ்.வி ரசாயன மாற்றங்களை சற்று மாற்றினால், செலின் டியானின் இசையை ரசித்து மெய் சிலிர்க்க வைக்க முடியும். அதே போல, கணேஷை டெய்லர் ஸ்விஃப்டின் இசையில் மெய் மறக்கச் செய்ய முடியும்.”

இசைபட வாழ்வோம்

This entry is part 1 of 2 in the series இசைபட வாழ்வோம்

“எம்.எஸ்.வி. காலத்தில் ஆங்காங்கே பெரிய குழுவிசை, அதாவது orchestra அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ராஜா காலத்தில், விஸ்வரூபம் எடுத்து, ஸ்டூடியோக்கள் நிரம்பி வழிந்தன. இன்று, வாத்திய இசை என்பது திரையிசையில் மிகவும் குறைந்து போய்விட்டது. ராஜாவும் ரஹ்மானும் மேற்கத்திய வாத்தியக் குழுக்களுடன் உறவு வைத்திருந்தாலும், இந்தியத் திரையிசையில் அதிக வாய்ப்புகள் இல்லை என்றாகிவிட்டது”

நம்ம கையில என்ன இருக்கு?

“ஒரு உதாரணம் சொன்றேன் உதய். உங்களது நாள்தோறும் போகிற பாதையில் ஏகமான நெரிசல்னு வைத்துக் கொள்வோம். வேஸ் வைத்திருக்கும் அனைவரையும் புதிய வழியில் அனுப்பினால், புதிய வழியில் நெரிசலாகிவிடும். சரி, பாதி வேஸ் பயன்பாட்டாளர்களை அங்கேயே இருக்கச் செய்து, மற்ற பாதி பயன்பாட்டாளர்களை புதிய வழியில் அனுப்பினால், இரு சாராரும் தங்களுடைய இலக்கை விரைவில் அடைய முடியும், இல்லையா? இதில் உங்களுக்குப் பழைய வழியா அல்லது புது வழியா என்று வேஸ் எப்படி முடிவு செய்கிறது? நீ மெச்சிய வேஸ் எப்படி உன்னை அழைத்துச் செல்லும்?”

கில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்

‘இந்து’ பத்திரிகையைத் தவிர, 1969 -ல் மிக முக்கியமான ஒரு செய்தி அறிந்து கொள்ளும் முறை, அகில இந்திய ரேடியோவில், காலை 7:15 மணிக்கு, “செய்திகள் வாசிப்பது விஜயம்” , என்று தொடங்கும் தமிழ் செய்தி நிகழ்ச்சி. முதல் ஐந்து நிமிடங்கள் அரசியல் செய்திகள் என்னைக் கவராது. பிறகு, அப்போலோ 11 ராக்கெட் நிலவரம் என்ன என்பதை சரியாக பாத்திரச் சத்தங்களை மீறிக் கேட்க, என்னுடைய காதை ரேடியோவுடன் ஒட்டிக் கொள்வதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தேன்.

டேடா மதம்!

என்னுடைய வயது அறுபதைத் தாண்டி விட்டது. என்னுடைய வழக்கமான மாலைப் பொழுது போக்கு, பக்கத்தில் உள்ள பூங்காவிற்குச் செல்லுவது. அங்கு விளையாடும் குழந்தைகளின் சத்தம், பறவைகளின் ஒலி, எதுவும் என்னை அதிகம் பாதிப்பதில்லை. அத்துடன், அங்கு வரும் பெரும்பாலானவர்களுடன் பேசுவதையும் தவிர்ப்பவன். சில மாலைப் பொழுதுகளில், அங்கு ஒரு “டேடா மதம்!”

இந்திய அடுக்கு – நிதிப் புரட்சியின் அடுத்த கட்டம்

பல நூறு ஆண்டுகளாக இங்கிலாந்து உருவாக்கிய உலகத்தர அமைப்புகள் (world class institutions) அந்த நாட்டை உலக அளவில் முக்கியமானதாக்குகிறது. பிரிட்டிஷ் உடல்நல முறைகள், பல்கலைக் கழகங்கள், அவர்களது சக்தி வாய்ந்த கப்பல்துறை, விஞ்ஞான ஆராய்ச்சி கழகங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். சுதந்திர இந்தியாவில், பல உலகத் தர அமைப்புகள் உருவாகியது உணமை. ஆனால், பெருவாரியான இந்தியர்களை பயனடைய இவை உதவவில்லை. என் பார்வையில் ‘இந்திய அடுக்கு’ நாம் உருவாக்கிய உலகத்தர அமைப்பு. நம்முடைய அரசியல் நோக்குகளை அதன் மேல் பூசாமல், தொடர்ந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதன் குறைகளை நீக்குவது மிகவும் முக்கியம். ஏனென்றால், இந்த இந்திய அடுக்கு முயற்சி, சாதாரண இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்

இந்திய அடுக்கு – எதிர்காலம், சர்ச்சைகள்

தன்னுடைய குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகள். இந்திய அடுக்கின் நோக்கம், இந்தியாவை ஒரு வல்லரசாக்குவதல்ல. மாறாக,, அதன் குடிமக்களுக்கு சரியான சந்தர்ப்பங்களை உருவாக்கும் முயற்சி. டாம் ஃப்ரீட்மேன் கூறியது போல, ”இந்திய மக்களின் பேரார்வத்தின் அளவு, ஒரு ஷாம்பெயின் பாட்டிலை 70 ஆண்டுகள் குலுக்கியதற்கு ஈடாகும். இந்த பாட்டில் திறக்கும் பொழுது, வெளிப்படும் வேகம் இவ்வுலகம் கண்டிராதது”

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி

மேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு. முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative). இன்னொன்று, மென்பொருளை விற்று பணம் பண்ணுவதை அறவே விட்டு, வசீகரமான இலவச இணைய “இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி”

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – விளக்கம்/ பயன்கள்

தங்க விஷயத்தை நாம் இங்கு விவாதிக்க மாட்டோம். ஆனால், மற்ற இரண்டு தடைகளுக்கும் வங்கிக் கணக்கு இல்லாமை மிகவும் முக்கிய காரணம். அத்துடன், வங்கிகள் படிவங்களாலேயே (forms) இந்தியர்களை பயமுறுத்தி வந்துள்ளனர். 2014 –ல் தனியார் வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்த அனுபவம் அலாதியானது. நான் இந்தியப் பிரஜையல்லாதது இந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்கியது. என் வாழ்வில் ஒரே நேரத்தில் ஏறக்குறைய 100 கையெழுத்துக்கள் போட்டது இந்த விஷயத்தில் தான்!

இந்திய டிஜிட்டல் புரட்சி

இந்திய அரசாங்கத்தின் நோக்கு, நாளொன்றிற்கு, 100 மில்லியன் ஆதார் அடையாளக் கோரிக்கைகளை 5 நொடிகளுக்குள் பதிலளிக்கும் சேவை. இத்தனைக்கும், இந்த 5 நொடிக்குள் நடக்கும் விஷயங்கள் மிகவும் நவீனமான ஒரு தொழில்நுட்பப் புரட்சி… முதலில், UDAI செய்த வேலை – முதல் ஆதார் எண் ஒதுக்குவதற்கு முன், ஆதாருடன் மின்னணு முறையில் எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை வெளியிட்டதுதான். பல்லாயிரம், சேவை நிறுவனங்கள் ஆப்பிள் ஆப்ஸ்டோர், மற்றும் கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு சின்ன நிரலை உருவாக்கினால், போதும். அந்த நிறுவனத்தின் நுகர்வோர் இந்த நிரல் மூலம் தங்களின் அடையாளத்தை எளிதில் நிறுவனத்துடன் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்

இந்தியர்கள், பொதுவாகத் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியுள்ளதைப் பற்றிச் சொல்லிக் கொள்வதே சுவாரசியமான விஷயம்.  ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும் இப்படிப்பட்ட விஷயங்கள் காதில் விழுவதுண்டு. “இன்ஃபோஸிஸ் – ல வேலைக்குச் சேர்ந்து, அமெரிக்கா போய், கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிட்டானாம். அதான் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் “இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்”

தானோட்டிக்கார்கள் – முடிவுரை

எந்திரக் கற்றலியலில், மிகவும் ஆராயப்பட்டுவரும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை (unsupervised learning algorithm) reinforced learning என்பது. இந்த நெறிமுறை, எதையும் சொல்லிக் கொடுக்காமல், ஒரு எந்திரத்தைத் தானாகவே கற்றுக் கொள்ளவைக்கும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை. இந்த நெறிமுறையில் உள்ள முக்கிய அம்சம், அதிக முயற்சிக்கு அதிக பரிசு என்பதாகும். அதிகமாக பொருட்களை விற்கும் விற்பனையாளருக்கு அதிக கமிஷன் கொடுப்பதைப் போன்ற விஷயம் இது. விடியோ விளையாட்டிற்குச் சரிப்பட்டுவரும் இந்த நெறிமுறை தானோட்டிக்காருக்குச் சரிப்பட்டுவருமா? அம்மா கட்டுப்பாடற்ற சிறுவனைப்போல, கார் இயங்கத் தொடங்கிவிடுமா? இதை Mobileye காரர்கள் சோதனை செய்து பார்த்தார்கள்.

தானோட்டிக் கார்கள் – போக்குகள் மற்றும் எதிர்காலம்

இந்தத் தொழில்நுட்பம் எப்படி நம் சமூகங்களைப் பாதிக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆயினும், இன்று நமக்குத் தெரிந்த போக்குகள், சவால்களை வைத்துச், சில யூகங்களை முன் வைக்க முடியும். இதில் எத்தனை யூகங்கள் உண்மையாகும் என்று சொல்வது கடினம். நம்முடைய இந்தப் போக்கு பற்றிய யூகங்களைச் சில ஐந்து ஆண்டுகள் வாரியாகப் பிரித்துப் பார்த்தால், சற்று தெளிவு பிறக்கலாம். இதில் சொல்லியுள்ள யூகங்கள் ஒரு ஐந்து ஆண்டு இடைவெளியிலிருந்து அடுத்த ஐந்தோ அல்லது பத்தாண்டு இடைவெளிக்கோ நடைமுறை பிரச்னைகளைச் சார்ந்து மாறலாம்.

தானோட்டிக் கார்கள் – காப்பீடு மற்றும் காப்புப்பிணை

சென்ற பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி அலசினோம். அதைவிட மிக முக்கியமான விஷயம் வாகனக் காப்பீடு. தானோட்டிக் கார்களில் காப்பீடு ஒரு மிகப் பெரிய பிரச்னை. சொல்லப்போனால், தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வாகனக் காப்பீடு சமாச்சாரம். வாகனக் காப்பீடு வாகனத்தில் இல்லையேல், உங்களுக்குக் கார் ஓட்டும் உரிமம் இருந்தாலும், நீங்கள் கார் ஓட்டுவது சட்டப் புறம்பான விஷயம். இதற்குச் சட்டப்படி அபராதம் உண்டு. சரி, ஏன் வாகனக் காப்பீட்டிற்கு இவ்வளவு முக்கியத்துவம்?

தானோட்டிக் கார்கள் – சட்டங்களும் ஒழுங்குமுறைகளும்

ஒழுங்குமுறையிலிருந்து எதுவும் ஒரு சட்டமாக மாறுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு வாகன நிகழ்வு. உயிர் சம்பந்தப்பட்டிருப்பதால், தீர முழுவதும் விசாரித்து முடிவுக்கு வரும் வரை, பல மாநில, தேசிய சட்ட அமைப்புகளில் ஆமை வேகத்தில் நகர்ந்து சட்டமாக மலர்வதற்குள் பல்லாண்டுகள் ஆகி விடுகின்றன. இதே அமைப்புகள் மிக வேகமாக வளர்ந்து வரும் தானோட்டிக் கார்களை எப்படிச் சீரமைக்கப் போகின்றன? தானோட்டிக் கார்களுக்குச் சாலையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லையா? எப்படி கூகிள், டெஸ்லா மற்றும் பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய கார்களைப் பொதுச் சாலைகளில் சோதனை செய்கிறார்கள்?

விஞ்ஞான வளர்ச்சியினால் உங்கள் வேலை போகுமா?

முதலில் நடக்கக்கூடிய சமுதாய மாற்றம், தானோட்டிக் கார்களால், வாகனம் ஓட்டுபவர்களின் வாழ்வாதாரம். ஆண்டு முழுவதும் எளிதாகப் பயணிக்கவல்ல பகுதிகளில் இவ்வகைச் சரக்குப் போக்குவரத்து தானோட்டி லாரிகளுக்கு மாறும் வாய்ப்புள்ளது, இதே பகுதிகளில், ஊபர் மற்றும் சில டாக்ஸிச் சேவைகளும் தானோட்டிக் கார்களுக்கு மாறலாம். அரசாங்கங்கள், தொழிற்சங்க அமைப்புகள் என்று மிகவும் சிக்கலானப் பிரச்னையாக, இது மாறலாம். லாரி நிறுவனங்கள் மற்றும் ஊபர் போன்ற அமைப்புகளுக்கு, வாகனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். சரியான மேலாண்மையுடன், ஒவ்வொரு மணி நேரமும் காசு பண்ணலாம். தொழிலாளர்க் கொந்தளிப்பு இதனால், பல வருடங்கள் நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது. தானோட்டி வாகனங்களால், நிறைய லாபம் இருப்பதால்,

லாப்டாப் கொண்டு உங்கள் கார்களைத் தானோட்டிக் கார்களாக்கலாமா?

படிக்கும் பலருக்குச் சற்றுக் கசப்பாக இருக்கக்கூடும். அதிகக் கம்பித் தொலைப்பேசிகள் சார்ந்த கட்டமைப்பு பெரிதாக இல்லாமல், செல்பேசி தொடர்பியலில் மேற்கத்திய நாடுகளை விட முன்னேறிய இந்தியா ஏன் இந்தத் தொழில்நுட்பத்திலும் முன்னேற முடியாது? விஷயம் தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; போக்குவரத்து ஒழுங்கு சார்ந்தது. அத்துடன், பல தரப்பட்ட போக்குவரத்து அமைப்புகள் (ஆட்டோ, பைக், ஸ்கூட்டர், மாட்டுவண்டி, ரிக்‌ஷா) ஒரே சாலையைப் பயன்படுத்தும் இந்தியாவில், கணினிகள் குழப்பமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. பல ஆண்டுகள் மேற்குலகில் சோதனைக்குப் பின்னரே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சோதிக்க முடியும். அப்படியே இந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், இந்தியாவில், இந்த ஒழுங்கு ஓரளவு உள்ள நெடுஞ்சாலைகளில் மட்டுமே பயன்படும்.

ஒரு படத்தைப் பார்த்து அது என்னவென்று எப்படி கணினி கண்டுபிடிக்கிறது?

இது சற்று நம்புவதற்குக் கடினமான விஷயம். ஆனால், சில வாகனங்களை மட்டுமே ஒரு பயிற்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டு புதிய வாகனப் படங்களை உட்கொண்டவுடன் செயற்கை நரம்பணு வலையமைப்பு வாகனம் என்று அடையாளம் காட்டக் கற்றால், மிகவும் எளிதாகிவிடும் அல்லவா? இதைத்தான் சில உயர்கணிமை மூலம் ஜெஃப் ஹிண்டன் மற்றும் யான் லகூன் என்ற இரு விஞ்ஞானிகளும் முன் வைத்தனர். புதிய வாகனங்களைக் கண்டவுடன், தன்னுடைய வலையமைப்பு சார்புத் தன்மையை (bias) மாற்றிக் கொண்டே இருக்கும். இதனால், புதிய விஷயங்களையும் இவ்வகை வலையமைப்புகள் வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய உலகில் கற்கின்றன. இதனாலேயே இந்தத் துறை எந்திரக் கற்றலியல் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் பற்றி வாசகர்கள் தீவிரம் காட்டினால், விவரமாகத் தமிழில் எழுத முடியும். இந்தத் தொடருக்கு இந்த அளவு போதும் என்பது என்னுடைய கணிப்பு.

குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் கம்ப்யூட்டருக்கு சொல்லித் தருவது எப்படி?

காரில் பயணம் செய்யும் பொழுது, இளையராஜாவின் பாடல்களில் அவருக்கு ஒரே குழப்பம். எந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடுகிறார், எந்தப் பாடலை யேசுதாஸ் பாடுகிறார் என்று எவ்வளவு முறை தெளிவுபடுத்தினாலும், அவருக்குச் சரிவரப் பிடிபடவேயில்லை. பத்து நாட்களுக்குப் பின் இந்தியா சென்று விட்டார். அவருக்குப் பழைய இந்திப் பாடல்கள் மிகவும் பிடிக்கும், மன்னாடே, ஹேமந்த் குமார் பாடல்களை யூடியூபில் கேட்ட வண்ணம் இருப்பார். எனக்கு, எந்தப் பாடல் மன்னாடே பாடியது, எது ஹேமந்த் பாடியது என்று அந்தப் பத்து நாட்களும் குழப்பம். இருவருக்கும் இசை மீது ஈர்ப்பு இருந்தும், ஒருவருக்குச் சட்டென்றுத் தெரிந்த குரல்கள், இன்னொருவருக்குப் பிடிபடவில்லை. ஏன்? எனக்கு, கேட்கும் மொழி இந்தி என்றும், அவருக்கு நான் இசைக்கும் பாடல்கள் தமிழ்ப் பாடல்கள் என்றும் தெரியும். ஆனாலும், இருவருக்கும் மொழி, இந்தச் செயலுக்கு உதவவில்லை…. அவரது மூளையும், என்னுடைய மூளையும் வெவ்வேறு முறையில் செயல்படுகிறது. இதை வேறு விதமாகவும் சொல்லலாம். அவருடைய மூளையும், என்னுடைய மூளையும், வெவ்வேறு முறைகளில், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.