புவிச் சூடேற்றத்தால், நிலம் வறண்டு, தாவரங்கள் காய்ந்து, தீ பரவ அதிக சூழல் தோன்றுகிறது. முன்னம், நதிகள் பகுதியில் பார்த்ததை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். வழக்கத்தைவிட முன்னதாக வந்த வசந்த காலம், முன்னமே முடிவதால் நீள்கிற கோடைப் பருவ காலத்தால், நதிகள் நீரின்றி ஆகி, காடுகளை வறண்ட நிலமாக்கிவிடுகின்றன. வறண்ட காடுகள், தீ பரவத் தோதானதாக மாறிவிடுகின்றன.
Author: ரவி நடராஜன்
விஞ்ஞான ரீதியான குற்றச்சாட்டுகள்
செயற்கை கோள் தரவுகள் மூலம், இந்தியா, சைனா, தென்கிழக்கு ஆஸ்ட்ரேலியா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளில், பசுமை நிலங்கள் அதிகரித்துள்ளன. இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? இந்த நாடுகளில், காடுகள், விவசாயத்திற்காக அழிக்கப்படுகின்றன. அதே போல, செயற்கை கோள் தரவுகள் மூலம், வடக்கு ஐரோப்பா, ஆசியா, தென் மேற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் காங்கோ நதி டெல்டா பகுதி, இவை யாவும் பாலைவனமாகி வருகிறது. பசுமைப் பகுதிகள், காடுகளை அழிப்பதால் அதிகமாவதால், இன்றைய தரவு சரியாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், 1970 –க்கு முன், அமெரிக்க தென் மேற்குப் பகுதிகள் பசுமையாக இருந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்
கடலில் வாழும் உயிரினங்கள், இந்தச் சூடான கடலில் வாழப் பழக்கப்படுத்திக் கொள்கின்றன. இல்லையேல் மடிய வேண்டியது தான். சில சின்ன உயிரனங்கள், பெரியவற்றை விட, மிகவும் பாதிக்கப்படுகின்றன. துருவப் பகுதிகளில் வாழும் krill போன்ற சின்ன உயிரினங்கள், இந்தச் சூடேற்றத்தால், 80% வரை மறைந்து வருகின்றன. இந்தக் கடல் உணவுச் சங்கிலியின் ஆரம்பத்தை, மனிதன், வெற்றிகரமாக அதனருகே கூடப் போகாமல், அறுத்து விட்டான்
புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5
மனிதனின் மிகப் பெரிய தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜனத் தொகைக்கு உணவு உற்பத்தி செய்வது. நிலத்தில் உள்ள நீரில் 70% விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் உணவில் 25% முதல் 30% வரை, பயனில்லாமல் போகிறது. குறிப்பாக, சமைத்த உணவு, பயனில்லாமல் போவது சுற்றுச்சூழலுக்கு நல்லது அல்ல. அதிலிருந்து உருவாகும் மீதேன் போன்ற வாயுக்கள் மேலும், புவி சூடேற உந்துகின்றன
பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்
காற்றுமண்டலத்தின் ஒவ்வொரு அடுக்கையும் வைத்துப் பார்த்தால், நம்முடைய நிலத்தளவு வெப்பம் சராசரி -15 டிகிரியாக இருக்க வேண்டும். எப்படி 15 டிகிரியானது? இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம், உலகின் மிக முக்கிய சூடேற்றும் வாயுவான நீராவி. மேகங்கள் (நீராவி) நம் பூமி, உறையாமல் இருக்க முக்கிய காரணம்.
புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3
நதிகளின் வண்டல்படிவுகள் (sediment deposits) , பயிர்கள் செழிக்க மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அணைகள், நீர்பாசனத்திற்கு உதவினாலும், அதன் மிகப் பெரிய பின்விளைவு வண்டல்படிவுகளில் கை வைப்பதுதான்.
பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?
ஆர்க்டிக் பகுதிகளில் ஜூன் மாதத்தில் கடல், பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கும். செப்டம்பர் மாதம்தான் இங்கு அதிகமாகப் பனி உருகும். மீண்டும் அக்டோபர் கடைசியிலிருந்து உறையத் தொடங்கும். 1967 முதல் 2018 வரை, ஜூன் மாதப் பனியுறைப் பகுதி குறைந்துகொண்டே வந்துள்ளது. 1967–ல் இருந்த உறைந்த பகுதியிலிருந்து, 2018–ல் நாம் இழந்த பனியுறைப் பகுதி 2.5 மில்லியன் சதுர கி.மீ. இது சாதாரண இழப்பன்று. இது இந்தியாவின் நிலப்பரப்பில் 76%-திற்குச் சம்மானது!இந்த இழப்பைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை. ஆனால் ஏன் கவலைப்படுவதில்லை?
புவிச் சூடேற்றம்: ஒரு விஞ்ஞான அறிமுகம்
இதில் விந்தையான விஷயம் என்னவென்றால், ஏழை நாடுகள், இது என்னவோ பணக்கார நாடுகளின் சதி மற்றும் பிரச்சனை என்று நினைக்கின்றன. உண்மையோ முற்றிலும் வேறு. இது பூமி சம்பந்தப்பட்டது. இதில் மனிதனால் உருவாக்கப்பட்ட பணம், நாடு, எல்லைகள் இவற்றுக்குப் பங்கே கிடையாது. பணக்கார ஸ்வீடன் நாட்டையும் ஏழை பங்களாதேஷையும் வேறுபடுத்திப் பார்க்காத பிரச்சினை இது. சொல்லப் போனால், ஏழை நாடுகளை அதிகமாகப் பாதிக்கவல்ல ஒரு பிரச்சனை இது.
விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 2
எந்த ஒரு தேர்ந்த விஞ்ஞானியும் பறக்கும் தட்டுக்களைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனால், சிலர் இரவில் பார்த்ததாகக் கூறுவர். மேலும், இது வேற்றுக் கிரக ஊர்த்தி என்று கதை கட்டிவிடுவார்கள். இவர்களுக்குத் தனியாக இயக்கம், இணையதளங்கள் என்று ஒரு பெரிய இயக்கமே உள்ளது. சிலர் கொஞ்சம் ஓவராக, வேற்றுக் கிரக மனிதர்களைப் பார்த்ததாகவே கதை கட்டிவிடுவார்கள்.
ராஜாவின் கீதாஞ்சலி
இளையராஜா, ’கீதாஞ்சலி’ என்ற ஒரு தனிப்பட்ட இசை வெளியீடு ஒன்றைச் செய்துள்ளார். அதைப் பற்றியது அல்ல இந்தக் கட்டுரை. என்னைவிட அழகாக இந்த இசை வெளியீட்டை விமர்சிக்கப் பலர் உள்ளனர். திரையிசையமைப்பாளராக இருந்தும், எப்படியோ எனக்கு கீதையைப் புரிய வைத்து விட்டவர் இளையராஜா. எதற்கு கீதையைப் புரிந்து கொள்ள “ராஜாவின் கீதாஞ்சலி”
விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1
ஓர் அறம் நிறைந்த உலகம் இப்படியிருக்க, மறுபுறம் திரித்தல்காரர்களின் ஜாலங்களையும் நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம். இவர்கள், பல முறைகளைப் பல்லாண்டுகளாகப் பயன்படுத்திவந்துள்ளனர்.
விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று
லாப நோக்குடைய நிறுவனங்களும் விஞ்ஞான முறைகளைப் பின்பற்றுவதாகச் சொல்கின்றன. லாப நோக்கற்ற மற்றோர் அணியும் அதே முறைகளைப் பின்பற்றுவதாகச் சொல்கிறது. இதில் உள்ள வித்தியாசத்தை எப்படிக் கண்டுகொள்வது?
செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2
செயற்கைச் சர்க்கரை ரசாயனத்தை நாம் உட்கொண்டால், மூளை குழம்பிவிடுகிறது. ‘ஏராளமான சர்க்கரையை உண்கிறான் இந்த மனிதன்.’ இதைச் சமாளிக்க நிறைய கணையநீரை (insulin) உற்பத்தி செய்கிறது. இப்படி உற்பத்தி செய்யப்படும் அளவுக்குக் கணையநீர் தேவையில்லை. இதனால், அநாவசியமாக உணவைக் கொழுப்பாக மாற்றுகிறது. இதனாலேயே, செயற்கைச் சர்க்கரை ரசாயனம் பயன்படுத்தும் குளிர்பானங்களை அதிகமாக அருந்துபவர்கள் பருமானாகி விடுகிறார்கள்
செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1
முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கைச் சர்க்கரை ரசாயனம் சாக்கரீன் ஆகும். 1879–ஆம் ஆண்டு, கரித் தாரில் (coal tar) ஆராய்ச்சி செய்தபோது, கான்ஸ்டான்டீன் ஃபால்பெர்க் என்ற வேதியல் விஞ்ஞானியால் ஏதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தான் கண்டுபிடித்த ரசாயனத்திற்குச் சாக்கரீன் என்று ஓர் ஆண்டுக்குப் பின்னர் பெயரிட்டார்.
விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்
இன்று உயிரினத் தொழில்நுட்பம் வளர்ந்து, அடிப்படையில் மரபணுக்கள் எல்லா உயிரனங்களுக்கும் ஒன்றுதான் என்று தெரிய வந்ததோடு அல்லாமல், அவற்றை எப்படி மாற்றியமைப்பது என்றும் புதிய உத்திகள் வந்துள்ளன. இதன் பயனாகப் பல புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.
பாலுவை அரசியலில் சேர்த்தவர் எங்கப்பா!
போன வாரம் பாடும் நிலா பாலுவின் 75 –வது பிறந்த நாள். இந்தக் கட்டுரையின் காலகட்டம், அவருக்கு இந்தப் பெயர் வருவதற்குப் பல்லாண்டுகள் முன்பானது. அதாவது, அவருடைய ஆரம்ப வருடங்கள் – 1965 முதல் 1975 வரை. எங்கப்பா ஒரு தீவிர எம்.எஸ்.வி, மற்றும் சிவாஜி ரசிகர். அவருக்கு “பாலுவை அரசியலில் சேர்த்தவர் எங்கப்பா!”
டால்கம் பவுடர் – பகுதி 2
வழக்கம்போல, தன்னுடைய தயாரிப்பிற்கும் புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாய்மார்களை என்றும் நாங்கள் கைவிடமாட்டோம். அதுவும், சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்றை ஜா & ஜா என்றுமே தயாரிக்காது என்று ஒரேடியாக மறுத்தது.
டால்கம் பவுடர்
டால்க் (talc) என்பது மெக்னிஷியம் சிலிகேட் கலந்த களிமண்ணாக இயற்கையில் கிடைக்கிறது. (அட, களிமண்ணையா முகத்தில் இத்தனை நாள் பூசி அழகுபார்த்தோம்?) அத்துடன், சோளப் பொடியையும் கலந்து டால்க் உருவாகிறது.
விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்
ஆறு வகையான கனிமப் பொருள்களுக்குப் பொதுவான பெயர் ஆஸ்பெஸ்டாஸ். அதிக நார்கள்கொண்ட சிலிகேட்டினால் (silicates) உருவானவை இவை. ஆஸ்பெஸ்டாஸ், மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தாது. இதனால், பல நூறு ஆண்டுகளாக ஆஸ்பெஸ்டாஸ் ஒரு கட்டுமானப் பொருளாக வெற்றிநடை போட்டது உண்மை.
விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து
டிடிடி எப்படி வேலை செய்கிறது? தெளிக்கப்பட்ட பூச்சியின் மூளையில் உள்ள நரம்பணுவின் சோடியம் சானல்களை, சகட்டு மேனிக்குத் திறந்துவிடும். இதனால், பூச்சியின் பல கோடி நரம்பணுக்கள் ஒரே சமயத்தில் இயங்கத் தொடங்க, அதன் விளைவாக வலிப்பு ஏற்பட்டுப் பூச்சி இறந்துவிடும்.
மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2
மிக முக்கியமான இன்னொரு விஷயம், சிகரெட் எப்படி ஒருவரை அடிமைப்படுத்துகிறதோ, அதே அளவிற்கு மின் சிகரெட்டும் அடிமைப்படுத்துகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கத்திலிருந்து நுகர்வோரை விடுவிக்கிறேன் என்று முழங்கி, சந்தைக்கு வந்த மின் சிகரெட்டுகள் இன்னும் அதிக நிகோடினை உடலில் சேர்த்து, மேலும் நுகர்வோரை அடிமைப்படுத்துகிறது.
மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1
அதாவது, இவருடைய பார்வையில் சிகரெட்டில் உள்ள நிகோடின் தேவை. ஆனால், சிகரெட்டின் ஏனைய ரசாயனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த மற்ற ரசாயனங்கள் நுரையீரல் புற்றுநோய் விளைவிப்பதால், அவற்றிலிருந்து விடுபடவேண்டும். ஹானின் 2001 புரிதலே, இந்த மின் சிகரெட்டின் உருவாக்கப் பின்னணி.
சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4
1990–ல், அமெரிக்க நீதிபதி சரோகின், சிகரெட் தொழில் மீதுள்ள வழக்கின் முடிவில் மிக அழகாக இவ்வாறு கூறினார் (இதைக் கல்வெட்டாக ஒவ்வொரு ஊரிலும் பதிக்கவேண்டும்):
“நுகர்வோரின் உடல் நலனா அல்லது லாபமா என்ற கேள்வி எழும்போது, சிகரெட் தொழில், மிகத் தெளிவாக இயங்கியுள்ளது.
1. உண்மைகளை மறைப்பதை, நுகர்வோரை எச்சரிப்பதைவிட முக்கியமாகக் கருதுகிறது.
2. விற்பனையைப் பாதுகாப்பைவிட முக்கியமாகக் கருதுகிறது.
3. பணத்தை அறத்தைவிட முக்கியமாகக் கருதுகிறது.
இந்தத் தொழில் தெரிந்தும், ரகசியமாக, நுகர்வோரின் உடல்நலத்தை லாபத்திற்காகப் பகடையாக்குகிறது. சிகரெட் தொழில், உண்மைகளை மறைக்கும் விஷயத்தில் ராஜா.”
சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3
சிகரெட் நிறுவனங்கள், தங்களுடைய தயாரிப்புகள் அபாயகரமானவை அல்ல என்று சாதித்து வந்தனர். எட்டு ஆண்டுகள் வரை அமெரிக்க சர்ஜன் ஜென்ரலின் அறிக்கையைத் தங்களுடைய பணபலத்தால் தள்ளிப்போட வைத்தார்கள். 1964–ல் வெளிவந்த அந்த அறிக்கை, தெளிவாக, அமெரிக்கர்களுக்குப் புகைபிடிப்பதால் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பது அரசாங்கத்தால் தீர்மானமாய் அறிவிக்கப்பட்டது. இதை ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக எல்லோரும் பார்க்கிறோம்.
சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2
ஒவ்வொரு சிகரெட்டிலும் உடலுக்குக் கேடான 93 ரசாயனங்கள் உள்ளன. இவை அத்தனையும் சிகரெட் உற்பத்தியால் உருவானதா என்று கேட்டால் ‘பெரும்பாலும்’ என்றுதான் பதில் சொல்லவேண்டும். சிகரெட்டில் உள்ள ரசாயனங்கள், மூன்று படிகளில் உருவாகின்றன.
சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்
சிகரெட் தொழிலுக்கு, அதன் தயாரிப்பில் மனிதர்கள் அடிமையாவது மிக முக்கியம். ஒரு நாளைக்குப் 12 பாக்கெட் சிகரெட் பிடிப்பேன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் மனிதர்கள் அதற்கு மிகத் தேவை.
உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை
விஞ்ஞானக் கோட்பாடுகள், பொதுவெளிப் பத்திரிகைகளில் வரும் செய்திகள் போன்றவை அல்ல. கோட்பாடுகள், திறமை பெற்ற சக விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்படவேண்டும், அத்துடன், கோட்பாடுகள் ஊர்ஜிதப்படுத்தத் தகுந்த சோதனை முடிவுகளுடன் வெளிவரவேண்டும். அத்துடன், சில விஞ்ஞான அளவுகளை ஒரு நல்ல கோட்பாடு, கறாரான கணக்கீடுகள்கொண்டு ஊகிக்கவும் வேண்டும்.
ஓஸோன் அடுக்கில் ஓட்டை
வெளியேறிய குளோரின் அணு ஓஸோன் மூலக்கூறுடன் வினைபுரிந்து, ஓஸோன் மூலக்கூறை மீண்டும் ஆக்ஸிஜன் மற்றும் குளோரின் மோனாக்ஸைடாக மாற்றிவிடும். வெளியேறிய ஆக்ஸிஜனுடன் குளோரின் மோனாக்ஸைடு மீண்டும் வினைபுரிந்து, இன்னோர் ஆக்ஸிஜன் மூலக்கூறு மற்றும் குளோரின் அணு உருவாகும். ஒரு குளோரின் அணு ஒரு லட்சம் ஓஸோன் மூலக்கூறுகளை அழிக்கும் சக்தி வாய்ந்தது.
ராட்சச எண்ணெய்க் கசிவுகள்
எண்ணெய்த் தொழில் வழக்கப்படி Premex நிறுவனம், பாதி எண்ணெய் வெளிவந்தவுடன் எரித்துவிட்டோம், கொஞ்சம் ஆவியாகிவிட்டது, மற்றதைக் கவனத்துடன் அப்புறப்படுத்தி விட்டோம் என்று மார் தட்டிக்கொண்டது. இந்த எதையும் தனிப்பட்ட பாரபட்சமில்லாத எந்த ஓர் அமைப்பும் உறுதி செய்யவில்லை.
விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன
6. கடந்த 100 ஆண்டுகளாக நடந்துவரும் இதுபோன்ற நடவடிக்கைகளை, ஒரு எண்ணெய்த் தொழில் தில்லாலங்கடி என்றே சொல்லவேண்டும். விஞ்ஞான முறைப்படி அணுகினாலும் இவர்களுடைய அணுகுமுறையில் எந்தவிதமான பயனும் இல்லை. ஆயினும், இவர்கள் நடத்தும் நாடகம் ஒவ்வொரு முறையும் சற்று வேறுபட்டு இருந்தாலும் கடைசியில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள்.
விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன
எல்லாம் சரியாக இருப்பதாகத் தோன்றலாம். இத்தனை நல்ல பொருளாதார நன்மைகளைத் தரும் தொழில்நுட்பத்தில் அப்படி என்ன குறை இருக்கமுடியும்? உலகின் கடந்த 100 ஆண்டு காலத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எண்ணெய் மற்றும் எரிவாயு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு தொழில்நுட்பத்தின் ஆரம்ப காலங்களிலும் அதனால் விளையும் கெட்ட விளைவுகளை மனித குலம் தவிர்த்தே பார்த்து வந்துள்ளது.
விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்
ரவி நடராஜன் கனடாவின் மிகப் பெரிய தொழில் எது? கோதுமை, கனோலா எண்ணெய் ஏற்றுமதி மரங்கள் மற்றும் காட்டுப் பொருட்கள் (forestry products) கனிமப் பொருளகள் (minerals) மாட்டிறைச்சி (beef) திராட்சை மது (wine) எஃகு (steel) இதில் எதுவுமே கனடாவின் மிகப் பெரிய தொழில் அன்று. இவை “விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்”
பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2
பக்கத்துத் தெருவில் இருக்கும் நண்பனைச் சந்திக்கப் பெட்ரோல் பைக்கில் செல்லுவது என்பது நமது வழக்கமாகிவிட்டது
இந்தியா போன்ற நாடுகளில், டீசல் எரிபொருள் மற்றும் சமையல் வாயுவிற்கு மானியம் வழங்கப்படுவதால், டீசலில் மற்றும் எரிவாயுவில் இயங்கும் ஊர்த்திகளை மக்கள் அதிகமாக வாங்குகிறார்கள்.
வங்கிகள் மற்ற நிதி நிறுவனங்கள், கார் வாங்கக் கடனுதவி (car loans) மற்றும் குத்தகையைப் (vehicle leases) பெரிதாக நம்பியிருக்கின்றன.
புவி சூடேற்றம் பற்றி வாய் கிழியப் பேசும் அரசியல் தலைவர்கள், பேசி முடிந்தவுடன் தாய்நாட்டிற்கு திரும்பும் முன் அரபு நாட்டு வழியாக எண்ணெய் இறக்குமதி முடிவெடுத்துவிட்டுதான் வருகிறார்கள்.
பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1
உலகின் மிக மோசமான காற்றுத்தரம் உள்ள நகரங்களில் ஒன்று டில்லி. பல ஆண்டுகளாக, டில்லி அரசாங்கம் டீசல் பஸ்களை இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி, காற்று மாசைக் குறைக்க முற்பட்டு வெற்றி பெறவில்லை. டில்லியின் மெட்ரோ ரயில் இந்த முயற்சியின் ஒரு பங்கு. டில்லியைப்போல இந்திய நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னையின் நிலையும் இதேதான். ஆனால், டில்லியின் முக்கிய தோல்விக்கான காரணம் குளிர்காலத்தில், சுற்றியுள்ள வயல்கள் எரிக்கும் 500 மில்லியன் டன் பயிர்த்தூர்.
சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)
இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது, அனல் மின் உற்பத்தியாளர்கள், ஏதோ சதிகாரர்கள் போலத் தோன்றலாம் – என் நோக்கம் அதுவல்ல. இவர்கள் விஞ்ஞானிகள் பார்க்காத சில கோணங்களில், இந்தப் பிரச்சினையை ஆராய்ந்தார்கள் என்பது உண்மை. உதாரணத்திற்கு, ஒரு அனல் மின் அமைப்பில், பல கொதிகலன்கள் இருக்கும். ஒவ்வொரு கொதிகலனையும், ஒரு தொழில்நுட்ப முன்னேற்ற மையமாக மாற்றினார்கள். சின்னச் சின்ன முதலீட்டில், எப்படி மாற்றங்களைக் கொண்டுவருவது என்பதும் இவர்களது வெற்றிச் சிந்தனை.
சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)
இது ஒன்றும் மனிதச் சோதனைச் சாலை அன்று. இந்த அமிலத்தன்மை மனிதனால், ஒரே நாளில் உருவாக்கப்பட்டதும் அன்று. உயிரினங்கள், மீண்டும் பழையபடி ஏரிகளில் வாழ, அந்த உணவுச் சங்கிலி உருவாக்கப்பட வேண்டும். அது நம்மால் இயலாத காரியம். அது இயற்கையின் டிபார்ட்மெண்ட்! நாம் அவசரமாகத் தலையிட்டதற்காக, இயற்கை ஒன்றும் உடனே சரி செய்யப் போவதுமில்லை.
சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை
1960 –களில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மண்ணியல் விஞ்ஞானி (soil scientist) ஸ்வென் ஓடன் (Sven Oden) தனது நாட்டில் மழையில் அமிலம், அதுவும் கந்தக மற்றும் நைட்ரிக் அமிலம் கூடுவதைப் பல்வேறு மண் சோதனைகள் வழியே ஆராய்ந்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். ..இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய ஐரோப்பிய அனல் மின்நிலையங்கள் கரியை எரிப்பதால், காற்று வழியாக, ஸ்வீடனின் காற்று மற்றும் மழை மாசுபடுவதை தகுந்த ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் கருத்தரங்கில் முன் வைத்தார்.
சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்
ராபர்ட் கெஹோ, சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆய்வுகளை நடத்தி வந்தார். இவருடைய ஆய்வகம், ஜி.எம்., டூபாண்ட் மற்றும் ஈதைல் நிறுவன அன்பளிப்பில் தொடங்கி, உதவித் தொகையில் இயங்கியது. அத்துடன், ராபர்ட், ஈதைல் நிறுவனத்தின் ஆலோசகர். ஈதைல் நிறுவனத்திற்குச் சாதகமான சோதனை முடிவுகள் தொடர்ந்து வெளிவந்ததன் பின்னணி இதுதான்…. விஞ்ஞானப் பித்தலாட்டத்தின் ஒரு வசீகர ஏற்பாடு இது. ராபர்ட், ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக வெளியுலகிற்குக் காட்சியளித்தார். இதனால், அவரது முடிவுகளுக்கு ஒரு நடுநிலை இருப்பதாக அனைவரும் நம்பினார்கள். இன்றும் இதுபோன்ற ஏற்பாடுகள் உலகப் பலகலைக்கழகங்களில், அதுவும் வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஏராளம்.
சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்
1970 –க்கு முந்தைய காலத்தில், இந்தியாவில் அதிக கார்கள் கிடையாது. இன்றைய இரு சக்கர ஊர்திகளின் எண்ணிக்கை, அன்றைய மக்கள் தொகையைவிட அதிகம். இரு சக்கர வாகனம் என்றால் பஜாஜ் ஸ்கூட்டர்கள் மட்டுமே உண்டு. பஜாஜ் ஸ்கூட்டர்கள் பால்காரர்களால், காலைப் பொழுதில், தாங்கள் கறந்த பாலை நகருக்குக் கொண்டு “சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்”
விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்
மிகப் பெரிய தனியார் நிறுவனங்கள்., அரசாங்க சட்டங்களை தங்களுடைய லாபத்திற்காக மாற்றக் குறுக்கு வழிகளில் ஈடுபடுவது மனித வரலாற்றில் என்றும் நிகழ்ந்த ஒரு விஷயம். ஆனால், விஞ்ஞானம் வளர வளர, மறைமுகமாக, தனியார் நிறுவனங்கள், விஞ்ஞானம் சார்ந்த சட்டங்களை தங்களுடைய லாபம் குறையாமல் இருக்கத் திரிக்கவும் முற்பட்டது கடந்த 120 வருட வரலாறு. இதனால், பல விஞ்ஞான ஆராய்ச்சிகளில், தனியார் லாபமா, அல்லது பொது நலமா என்ற மிகப் பெரிய அறப்போர் நம்முடைய சமுதாயத்தில் நடந்த வண்ணம் இருக்கிறது.
வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5
பழுதுபார்க்கும் மையங்களுக்குச், சில வரிச் சலுகைகள், முதலில் வழங்கப்பட வேண்டும். இது தொலைநோக்குடன் அணுகப்பட வேண்டும். மறுபயன்பாட்டில் அதிக முதலீடு செய்வதும் இதுவும் ஒன்றே. வருமுன் காக்கும் செயல் இது
வேகமாய் நின்றாய் காளி- 4
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், உலகின் மொத்த மின் கழிவில், வெறும் 16 சதவீதமே மீட்கப்படுகிறது. … இன்றைய கணிப்புபடி வருடம் ஒன்றுக்கு 40-50 மில்லியன் டன்கள் மின் கழிவை உலகம் முழுவதும் உருவாக்கி வருகிறோம். இதை வேறுவிதமாகச் சொல்லப்போனால் ஒவ்வொரு நொடியும், 800 மடிக்கணினிகளைத் தூக்கி எறிவதற்குச் சமமானது.
வேகமாகி நின்றாய் காளி – பகுதி 3
“ஏன் இப்படி தேவைக்கு ஏற்ப புதிய பாகங்களைச் சேர்ப்பதைக் கடினமாக்குகிறார்கள்?”, என்று கேட்டேன். அதற்கு அவர், “இப்பொழுது என்னிடம் எடுத்து வந்து உங்களால் குறைந்தபட்சம் புதிய வன்தட்டைச் சேர்க்க முடிகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அது உங்களால் முடியாது. ஏனென்றால் வன்தட்டை கணினியில் தாய் தட்டோடு (mother board) முழுவதும் சோல்டர் செய்து விடுவார்கள். உங்களது கணினியில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் வேறு ஒரு புதிய மாடலை வாங்குவதை விட்டால் வேறு வழி இருக்காது” என்றார்.
வேகமாகி நின்றாய் காளி! – பாகம் 2
வருடம் ஒரு செல்பேசி வாங்குவதை நாம் பெருமையாக நினைக்கிறோம். புதிய மாடலின் அதிவேக செயல்பாடு மற்றும் புதிய காமிரா போன்ற அம்சங்கள், நம்மை பழைய மாடலை தூக்கி எறியச் செய்கிறது. வேகம் மீது கொண்ட மோகத்தால் நாம் சகட்டுமேனிக்கு மின் கழிவை பொருப்பில்லாமல் உருவாக்கிக் கொண்டே போகிறோம். கடந்த 20 ஆண்டுகளாக, வளரும் நாடுகளில் கூட, எந்த ஒரு மின்னணு சாதனத்தையும் நாம் பழுது பார்ப்பதை நிறுத்தி விட்டோம். முன்னர் ஒரு ரேடியோவை அல்லது ஒலிநாடா எந்திரம் வாங்கினால், அதைப் பல ஆண்டுகள் பழுது பார்த்துப் பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று, புதிய மாடல்களைக் கண்டவுடன், பழைய மின்னணு சாதனங்களை சர்வ சாதாரணமாக தூக்கி எறிந்து விடுகிறோம்.
வேகமாய் நின்றாய் காளி! பகுதி-1
இது ஒரு நோய் என்று ஆரம்பத்தில் யாருமே நினைக்கைவில்லை. இன்றும் உலகில் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் இதை ஒரு வளர்ச்சி சார்ந்த விஷயமாகவே பார்க்கிறார்கள். சமிபத்தில், ஆப்பிள் நிறுவனம் செய்த தில்லாலங்கடியை யூரோப்பிய நீதிமன்றம் ஒன்று சுட்டிக்காட்டி ஆப்பிளை சரி செய்ய வைத்தது. ஆப்பிள், ஐஃபோனில் அடிப்படை நிலைபொருள் (firmware) புதுபித்தலில் வேண்டுமென்றே பழைய திறன்பேசிகளை மெதுவாக இயங்கும்படிச் செய்தது. வெறுத்து போன நுகர்வோர், புதிய ஐஃபோன்களை வாங்க வைக்க இந்த நிழல்வேலை செய்து மாட்டிக் கொண்ட்து, ஆப்பிள் நிறுவனம்.
சட்டம் யார் கையில் – பகுதி 2
ஒரு சொல்லைத் தனியாகப் பார்க்கக் கூடாது. அதனுடன் தொடர்புடைய வாக்கியத்தின் மற்ற சொற்களோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். இதுவே இதன் சாராம்சம். உதாரணத்திற்கு, I like to joke என்பது ஒரு வாக்கியம். I like the joke என்பது இன்னொரு வாக்கியம். முதல் வாக்கியம் சுயவிளக்கம். இரண்டாவது வாக்கியம் மற்றவரின் செயலின் தாக்கம். இரண்டிலும் joke என்ற சொல் இருந்தாலும், சுற்றியுள்ள வார்த்தைகளைப் பொறுத்து, அந்த சொல்லின் பொருள் மாறுபடும்.”
ப:. “நீங்க சொன்னவுடன் இதை எப்படி நாம் புரிந்து கொள்கிறோம் என்று வியப்பாக இருக்கிறது. எல்லாம் ஒரு context என்பதை மனித மூளை எப்படியோ புரிந்து கொள்கிறது.”
சட்டம் யார் கையில்?
“ரெண்டு பேரும் ரொம்ப தமிழ் சினிமா பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். ஷங்கர் சினிமா போல அவ்வளவு எளிதல்ல, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப உலகம். உடனே, ரோபோ நீதிமன்றத்தில் வாதாடுகின்றன என்று கற்பனை எல்லாம் வேண்டாம். இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு அது சாத்தியம் இல்லை. ஆனால், ரோபோக்கள் வழக்குத்துறையின் அடிமட்டத்திலிருந்து தங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.”
இசைபட வாழ்வோம்- 2
“அதாவது நான் முன்னமே சொன்னது போல, உன்னுடைய உடல் ரீதியான எம்.எஸ்.வி ரசாயன மாற்றங்களை சற்று மாற்றினால், செலின் டியானின் இசையை ரசித்து மெய் சிலிர்க்க வைக்க முடியும். அதே போல, கணேஷை டெய்லர் ஸ்விஃப்டின் இசையில் மெய் மறக்கச் செய்ய முடியும்.”
இசைபட வாழ்வோம்
“எம்.எஸ்.வி. காலத்தில் ஆங்காங்கே பெரிய குழுவிசை, அதாவது orchestra அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ராஜா காலத்தில், விஸ்வரூபம் எடுத்து, ஸ்டூடியோக்கள் நிரம்பி வழிந்தன. இன்று, வாத்திய இசை என்பது திரையிசையில் மிகவும் குறைந்து போய்விட்டது. ராஜாவும் ரஹ்மானும் மேற்கத்திய வாத்தியக் குழுக்களுடன் உறவு வைத்திருந்தாலும், இந்தியத் திரையிசையில் அதிக வாய்ப்புகள் இல்லை என்றாகிவிட்டது”
நம்ம கையில என்ன இருக்கு?
“ஒரு உதாரணம் சொன்றேன் உதய். உங்களது நாள்தோறும் போகிற பாதையில் ஏகமான நெரிசல்னு வைத்துக் கொள்வோம். வேஸ் வைத்திருக்கும் அனைவரையும் புதிய வழியில் அனுப்பினால், புதிய வழியில் நெரிசலாகிவிடும். சரி, பாதி வேஸ் பயன்பாட்டாளர்களை அங்கேயே இருக்கச் செய்து, மற்ற பாதி பயன்பாட்டாளர்களை புதிய வழியில் அனுப்பினால், இரு சாராரும் தங்களுடைய இலக்கை விரைவில் அடைய முடியும், இல்லையா? இதில் உங்களுக்குப் பழைய வழியா அல்லது புது வழியா என்று வேஸ் எப்படி முடிவு செய்கிறது? நீ மெச்சிய வேஸ் எப்படி உன்னை அழைத்துச் செல்லும்?”
