ஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி

This entry is part 1 of 13 in the series வங்கம்

சிறப்பிதழ் என்பதே ஒரு பெரும் கூட்டுமுயற்சி. அதை “எடிட்” செய்வது சில சமயங்களில் நொந்து கொள்ளும்படியாக இருந்தாலும் பெரும்பாலும் ஒரு திறப்பாகவே இருந்தது. இவ்விதழின் பல கட்டுரைகளுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் நூற்றுக்கணக்கான திருத்தங்களையும் கருத்துகளையும் அளித்திருப்பது பெருமையளித்தாலும் அவற்றின் மூலமே பல வங்க இலக்கியப் படைப்புகளையும் நான் கண்டறிந்தேன் என்பதையும் இங்கு பதிவுசெய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

வி. ராமஸ்வாமி: நேர்காணல்

This entry is part 2 of 13 in the series வங்கம்

1. உங்கள் பின்னணி பற்றி கொஞ்சம் பகிர்ந்துகொள்ள முடியுமா? நீங்கள் எப்போது வங்க இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினீர்கள்? நான் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றேன், அதன் பிறகு கல்கத்தாவின் வீடற்றவர்களின் வீட்டு உரிமைகளுக்காக சமூக செயற்பாட்டில் என்னை நான் அமிழ்த்திக் கொண்டேன். உயர்நிலை வகுப்பு, கல்லூரி, பட்ட மேற்படிப்பு “வி. ராமஸ்வாமி: நேர்காணல்”

நேர்காணல்: மல்லிகா சென்குப்தா

பெரும்பாலானவை சிற்றிதழ்களே; அதாவது சாதாரண நிலைமையில் இருப்பவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து கொண்டுவருபவை. மேற்கு வங்கத்தில் மிக வளமான சிற்றிதழ் பாரம்பரியத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். ஆண்டு முழுவதும் வெளிவரும் ஆயிரக்கணக்கான சிற்றிதழ்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து நடத்தும் சிற்றிதழ் கண்காட்சி இங்குண்டு. ஆக … நாங்கள் எல்லோரும், எல்லாக் கவிஞர்களும் பெரும்பாலும் சிற்றிதழ்களில்தாம் எழுதுகிறோம், ஐந்தாறு அல்லது எட்டு பத்து கவிதைகள் மட்டுமே பெரிய இதழ்களில் ஆண்டுதோறும் வெளியாகும். ஆக பெரிய இதழ்கள் என்று பார்த்தால் வெகு சில இதழ்கள்தாம் உண்டு. ஒரு வகையில் தேஷ் ஏகபோகமாகச் செயல்படுகிறது. பெரிய இதழ்களுக்கும் அவர்களுக்கேயான அரசியல் உண்டு. [படைப்புகளை வெளியிட] உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால், கவிதை சிற்றிதழ்கள் மூலம் வாழ்கிறது

மேதையுடன் ஒரு நேர்காணல்

This entry is part 3 of 13 in the series வங்கம்

மானுடத்திற்கு நன்மை பயப்பதே அதன் முதல் நோக்கமாக இருந்தாக வேண்டும். ஒருவேளை நீங்கள் மானுட அபிமானம் கொண்ட படைப்பை உருவாக்காவிடில் அது நிச்சயம் கலைப்படைப்பு ஆகாது. கலை முதலில் சத்தியத்திற்கும் அடுத்ததாக அழகிற்கும் விசுவாசமுடையதாக இருக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் சொல்கிறார். இந்த சத்தியமானது கலைஞனின் சொந்த பார்வையிலிருந்தும் த்யானத்திலிருந்தும் விளைந்ததாக இருக்கிறது.

நீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை

This entry is part 12 of 13 in the series வங்கம்

மதவெறியாலும் சுயநலத்தாலும் இயக்கப்பட்டு இந்த விரோதம் பகிரங்க யுத்தமாக ஆக நேரமாகவில்லை. ‘முஸ்லீம் குடியானவர்கள் ஆனந்தமயீ கோயிலுக்கடுத்த நிலத்தில் தொழுகை நடத்தப் போகிறார்களாம்.’ அது மசூதியல்ல. அது ஒரு பண்டைய கால இடிந்த கோட்டை – அது ஈசாகானுடையதாக இருக்கலாம் அல்லது சாந்தராயோ கேதார்ராயோ கட்டியதாகவுமிருக்கலாம். அந்த இடததில் தொழுகை நடத்தும்படி முஸ்லீம்கள் தூண்டப் படுகிறார்கள்.
…. நாவல் முன்னேற முன்னேற இன்னும் பல அழகிய காட்சிகள் தம் கண் முன்னே விரிகின்றன. தர்முஜ் வயல், பாக்குப்பழம், சீதலக்ஷா நதியின் நீர், அந்த நீருடன் உவமிக்கத் தக்க வானத்தின் பிரவாகம், பறவைகளின் கூட்டிசை, மிருகங்கள்… அது ஒரு தனி உலகம்.

தன் வெளிப்பாடு – முன்னுரை

This entry is part 13 of 13 in the series வங்கம்

நாவலின் கருப்பொருள் நமக்கு நாலா பக்கத்திலும் இருக்கிறது என்பதை முதன் முதலில் உணர்த்தியது. … அவருடைய உறுதியற்ற, தயக்கம் நிறைந்த கண்ணியமான ஆண்பாத்திரங்களுக்கு மாறாக அவர் படைத்த, உயிர்த் துடிப்பு மிக்க பெண்பாத்திரங்கள் விதிக்கு சவால் விடுபவர்களாக இருக்கிறார்கள் … இந்தியத் தன்மை என்பது இந்துத் தன்மை அல்லது பிராமணியம் அல்ல; அது மனிதத்துவத்தின் சுயநிறைவு பெற்ற இந்தியப் பகுதி.

வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்

This entry is part 4 of 13 in the series வங்கம்

வங்காளி என்ற சொல்லுக்கு, ஒரு மொழிக்குழுவின் அடையாளம் என்ற நிலையைத் தாண்டி, ஒரு வசீகரத் தொனியைக் கொண்டு வந்ததற்குக் காரணமாக, 1890-1910 கால இடைவெளியில் வங்காளத்தில் கிளைத்தெழுந்த காலனிய எதிர்ப்பு நோக்கம் கொண்ட, புத்தெழுச்சிக் கற்பனையுடன் உருவான தேசியம் என்ற பெரு நிகழ்வுதான். அதன் உச்சகட்டம், ஸ்வதேஷி இயக்கம் (1905-08) என்று அழைக்கப்பட்ட திரட்சி.

என்றும் புதிய புதுமையான தாகூரின் நித்திய ஒளி!

தாகூர் விரிவாகச் சொல்கிறார்: “நம்முடைய ஆன்மாவின் வளர்ச்சி என்பது கச்சிதமான ஒரு கவிதையைப் போன்றது. அது எல்லையற்ற கருத்துருக்களைக் கொண்டிருக்கிறது; இது ஒருமுறை உணரப்படும்போது, அனைத்து இயக்கங்களையும் அர்த்தமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக்குகிறது.”

விஷ்வ சாந்தி

பல வருடங்களுக்குப் பிறகு தாகூரை மீண்டும் படிப்பது பதட்டமாகத்தானிருந்தது. என்னால் அதை அணுகிப் படிக்க முடியுமா? என்னை அது ஈர்த்தால் மட்டுமே படிக்க வேண்டுமென்று எனக்கு நானே நிபந்தனை விதித்துக் கொண்டேன். முடிக்க வேண்டிய அவசியத்திற்காகப் படிப்பது என்பது எனக்கு ஒத்து வராதது. என்னிடம் அந்தளவு பொறுமை மீதமில்லை.

சத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு

This entry is part 5 of 13 in the series வங்கம்

இந்தப் படத்தில் ஒப்பு மின்சாரத்தை முதல் முறையாக எதிர்கொள்கிறான். (கல்கத்தாவில் அவனுடைய அறையில் ஒரு மின்சார பல்பு பொருத்தப்பட்டிருக்கிறது, அதை அவன் தன் அம்மாவுக்கு மகிழ்ச்சியோடு எழுதுகிறான்.) முதல் படத்தில் எதிர்காலத்திலிருந்து வந்த மாயாஜாலப் போக்குவரத்து சாதனங்களாகத் தெரிந்த ரயில் வண்டிகள் இப்போது ஒப்புவின் அன்றாட வாழ்வில் பகுதியாகி விட்டிருக்கின்றன.

கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை

This entry is part 9 of 72 in the series நூறு நூல்கள்

14, 16 மே 1976 தேதிகளில் நடந்த இடதுசாரி அரச பயங்கரவாதமானது சுதந்தர இந்தியாவில் நடந்த மிக மிகக் கொடூரமான மனித உரிமை மீறல் வன்முறையாக ஆகிப்போனது. மேற்கு வங்க அரசு சுமார் பத்தாயிரம் பேரை அல்லது அதற்கும் மிக அதிகமான எண்ணிக்கையிலானவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது. பாலியல் வன்கொடுமை, கொலை, குடி நீரில் விஷம் கலப்பது, குடிசைகளுக்குத் தீவைப்பது என அனைத்து பயங்கரங்களும் அரசால் நிகழ்த்தப்பட்டது.

ஜீபனானந்தா தாஸ் கவிதைகள்

ஒரு பனிக்கால அந்தியில்,
பரிச்சயமானவரின் மரணப்படுக்கைக்கு அருகே
குளிர்ந்த கமலாப்பழத்தின் மிருதுவான சுளையாக
வருவேனா.

நவநீதா தேவ் சென்: ஐந்து கவிதைகள்

என் வனவாசம் முடிந்துவிட்டது, தாயே
வனம்
இப்போது
எனக்குள் வாழ்கிறது.

கிருஷ்ணா பாஸு கவிதைகள்

அம்மா, நீங்களாவது என்னிடம் சொல்லுங்கள்
என்னுடைய வீடு என்பது எங்கே?
பெண்கள் தங்களுடையது என்று ஒரு வீட்டை
எங்கேனும் கோர முடியுமா?

காஜி நசருல் இஸ்லாம் கவிதை

ஓ மாண்புமிகு நீதிபதியே, உயர்த்திப் பிடியுங்கள்
உங்களது நீதித்துறையின் கைச்சுத்தியை;
மகான்கள் இன்று மகான்களாய் இருக்கிறார்கள்
எளியவர்களின் செல்வத்தைக் களவாடிக் கொண்டு.
கொள்ளை, திருட்டு, வஞ்சகம், சுரண்டல் ஆகியன
எவ்வளவுக்கு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ
அவ்வளவு உயருகிறது இப்போது சமூக அந்தஸ்து !

கல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020

2020 கொல்கத்தா புத்தகச்சந்தைக்கு 44வது ஆண்டு. புத்தகச் சந்தையில் தரை மேவப்பட்ட மைதானத்தில், சில கூடாரங்கள், தெரு ஓரக்கடைகள் என்ற இரு மாதிரிகளில் கடைகள் உருவாக்கப்படுகின்றன. கட்டண வேறுபாடு உண்டு. தெருவோரக்கடைகளில நிரந்தரக் கடைகள் போல ஒவ்வொன்றிற்கும் பாதுகாப்புக்கு கிரில் கதவுகள் வைத்து உருவாக்கப்படுகின்றன.

20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்

This entry is part 6 of 13 in the series வங்கம்

சூரபுத்திகாரர்களின் புண்ணியத்தால், இந்த உலகத்தில் நிறைய பெரும் ஏரிகள் இருக்கின்றன. அந்தத் தடாகங்களில் குளித்தும் குடித்தும், சிந்தைக்கான நம் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். எனினும், அன்றாடத் தேவைக்கு குழாய்த் தண்ணீர் வசதியாக இருக்கிறது… செய்தித் தாள்கள், துணுக்கு விமர்சனக்கள் போன்ற க்ஷண சாஹித்யங்கள் — குழாய்த் தண்ணீரின் வேலையை செய்கின்றன.

சர்ச்சில் இந்தியாவை எப்படிப் பட்டினிபோட்டார்!

கடும் பஞ்சம் ஏற்பட்டதற்கு, யுத்த அரங்குகளில் பயன்படுத்தவும் பிரிட்டனின் நுகர்வுக்காகவும் இந்தியாவிலிருந்து மிகப் பெரும் அளவிலான உணவு ஏற்றுமதி செய்யப்பட்டதே காரணம் என்று முகர்ஜி குறிப்பிடுகிறார். பஞ்சம் ஏற்பட்டிருந்தும் இந்தியா 1943 வருடம் ஜனவரியிலிருந்து ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 70,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. அந்த உணவு கிட்டத்தட்ட 4 லட்சம் மக்களை ஒரு முழு ஆண்டுக்கு உயிருடன் வைத்திருக்கும்.

தமிழில் வங்க எழுத்துகள்

This entry is part 7 of 13 in the series வங்கம்

தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளும் படைப்பாளர்களும் வெள்ளை உறை (வங்க நாவல்): மோதி நந்தி – லக்ஷ்மி நாராயணன் (சாகித்திய அகாடெமி) மணி மகேஷ் (வங்காள பிரயாண நூல்) : உமா பிரசாத் முகோபாத்தியாய் – எஸ். கிருஷ்ணமூர்த்தி (சாகித்திய அகாடெமி) சாம்பன் (வங்க நாவல்) : சமரேஷ் “தமிழில் வங்க எழுத்துகள்”