சர்ச்சில் இந்தியாவை எப்படிப் பட்டினிபோட்டார்!

கடும் பஞ்சம் ஏற்பட்டதற்கு, யுத்த அரங்குகளில் பயன்படுத்தவும் பிரிட்டனின் நுகர்வுக்காகவும் இந்தியாவிலிருந்து மிகப் பெரும் அளவிலான உணவு ஏற்றுமதி செய்யப்பட்டதே காரணம் என்று முகர்ஜி குறிப்பிடுகிறார். பஞ்சம் ஏற்பட்டிருந்தும் இந்தியா 1943 வருடம் ஜனவரியிலிருந்து ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 70,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. அந்த உணவு கிட்டத்தட்ட 4 லட்சம் மக்களை ஒரு முழு ஆண்டுக்கு உயிருடன் வைத்திருக்கும்.