நாவலாய் நீடுவிரியும்  நெஞ்சையள்ளும் கவித்துவம்

யதார்த்தமும் மாயமும் நெடுக இழைந்து, ஒரு மாய யதார்த்தவாத ரீதியில் நாவல் நகர்கிறது.  நாவலில் பயிலும்  மாய யதார்த்தச் சித்தரிப்புகளோடு,  ஒருவர் ஒன்று வினவ, இன்னொருவர் அதை வேறுவிதமாய்க் கேட்க, பதிலுக்கு அவர் ஒன்று வினவ முன்வினவியவர் அதை வேறுவிதமாய்க் கேட்க- இப்படி மாறி மாறித் தொடரும்  வித்தியாசமான உரையாடல்களும்  சேர்ந்து, நாவலில் நெடுக ஒரு புதிய உத்தியாய் வந்து  நாவலின் மாய யதார்த்தவாதத்தை நாவலில் மேலும் வலுக்கூட்டுகின்றன.