வெ.சா. – குறிப்பு

“உண்மை ஏன் அதிரடியாக இருக்க வேண்டும்? அதிரடியாகத்தான் ஒரு சமூகத்தின் மேல் அது விழுகிறதென்றால் அது எப்படிப்பட்ட சமூகம்? நாம், தமிழர் இது பற்றி யோசிக்க வேண்டும்” என்றும், “தமிழனின் வீட்டு ஜன்னல் காலம் காலமாக திறந்துதான் இருந்தது. தமிழனைத் தட்டி எழுப்பியவர்கள்தான் அவன் வீட்டுக் கதவையும் ஜன்னலையும் “வெ.சா. – குறிப்பு”

வாதங்களும் விவாதங்களும்: வெசா ஏற்புரை

வெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1950 களில் “எழுத்து” இதழ் மூலமாக தமிழ் கலை-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்த வெ.சா. அவர்களின் அறுபதாண்டு கால எழுத்துக்களை இன்று திரும்பிப் பார்க்கும்போது, தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழல் மீதான அவரது செயற்பாட்டுக் களம் “வாதங்களும் விவாதங்களும்: வெசா ஏற்புரை”

மகரந்தம்

முதலியத்தின் முடியரசனான மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸின் தொண்டு நிறுவனம் வழியாக செயல்பட்டுவருவது செய்தியல்ல. பல்லாண்டுகளாக அவரது பில் கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் எயிட்ஸ் ஆராய்ச்சி முதல் ஆப்ரிக்க குழந்தை நலன் வரை பல காரியங்களுக்குக்காகப் பணம் கொடுக்கிறார்கள். ஆனால், இப்போது முதலியம் மட்டுமே உலகப்பிரச்சனைகளுக்கு முற்றானத் தேர்வாக இருக்க முடியாது எனும் முடிவுக்கு பில் கேட்ஸ் வந்திருப்பதாகத் தெரிகிறது. தனியார் மையம் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகவைத்திருக்கும் கெடுபிடியான இடம் எனும் தெளிவுக்குப் பிறரும் வரலாமோ?

குளக்கரை

உத்தரப் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளாக முன்னூறு பொறியாளர்கள் அரசு அலுவலகத்துக்குப் போய் மேஜையைத் தூசி தட்டி வைத்து விட்டு, சும்மா நாற்காலியில் அமர்ந்து விட்டு வீட்டுக்குப் போகிறார்கள். ஒரு மாதம், ஒரு வருடம் இல்லை, பத்து வருடங்கள். சும்மாக் கூட இல்லை, இவர்களின் சங்கம் அரசுக்குப் பத்து வருடங்களாக விண்ணப்பம் கொடுத்து வந்திருக்கிறது. இவர்களுக்கு ஏதாவது வேலை கொடுங்கள் என்று. அரசோ, உயரதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ ஏதாவது காது கொடுத்துக் கேட்டார்களா என்றால்…

மகரந்தம்

ஒரு புத்தகம் ஜாரெட் டயமண்டின் புத்தகத் தலைப்பு போலவே ஒலிக்கிறது. ரோபாட்கள், கிருமிகள், வெட்டுநர்கள், ட்ரோன்கள் என்று இவை எல்லாமே மேற்கிற்குச் சாவு மணி அடிக்க உலகெங்கும் புற்றீசலாகப் புறப்பட்டிருக்கிற பயங்கரவாதிகள், குற்றக் கும்பல்கள் ஆகியோர் பயன்படுத்தக் கூடிய கருவிகளாக மாறி விட்டன, இவற்றை மேற்கால் இனி கட்டுப்படுத்த முடியாததால் விளைவுகள் படு நாசமாக இருக்கப் போகின்றன என்று பெஞ்சமின் விட்ஸும், காப்ரெயெலா ப்ளுமும் ஒரு புத்தகம் எழுதுகிறார்கள்.

உலக இலக்கியத்தின் 2015 ஆம் வருடத்து நோபெல் பரிசு பற்றி

இவர் அளிப்பது உண்மையிலேயே ஒரு உணர்ச்சி ஊறியெழும் உலகம், எனவே இவர் தன் பல புத்தகங்களில் அளிக்கும் வரலாற்று நிகழ்வுகள், உதாரணமாக செர்னோபில் பேரழிவு, ஆஃப்கனிஸ்தானில் சோவியத் யூனியனின் போர், ஆகியன எல்லாம் சோவியத் மற்றும் சோவியத்துக்குப் பின் வந்த காலத்துத் தனி நபர்களைத்தான் ஆழ நோக்குகின்றன. இவர் சிறு குழந்தைகளோடும், பெண்களோடும், ஆண்களோடும் ஆயிரக்கணக்கில் பேட்டிகளை எடுத்திருக்கிறார். நமக்கு அதிகம் தெரிய வராத மனிதத் துயரங்களின் வரலாற்றை அளிக்கிறார். .. அதே நேரம் இவர் நமக்கு உணர்ச்சிகளின் வரலாற்றையும், ஆன்மாவின் வரலாற்றையும் கொடுக்கிறார்

காகித விமான சேமிப்பாளர்

ஹாரி எவரெட் ஸ்மித் ஒரு ஓவியர்; திரைப்படகர்த்தா; வித்தியாசமானப் பொருள்களை சேமிப்பவர். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை மானுடவியலாளராக உணர்ந்தவர். ஈஸ்டர் பண்டிகையின் போது ஒளித்து வைக்கப்படும் முட்டைகளில் துவங்கி பல்வேறு விஷயங்களை கர்மசிரத்தையாகத் தொகுத்தவர். நியு யார்க்கரில் அவர் சேமித்த காகித விமானங்களைப் பார்க்கலாம். விண்ணைத்தொடும் நியு யார்க்கின் “காகித விமான சேமிப்பாளர்”

கண்களும் கவி பாடுதே

நியு யார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு சிறப்புப் படைப்பாக கலைஞர்களையும் வித்தியாசமானக் காட்சியாக்கங்களையும் திரையிடுகிறார்கள். கீழே பல்வேறு கலாச்சாரங்களில் இருந்தும் வெவ்வேறு நாடுகளில் இருந்தும் கண் சிமிட்டுகிறது. நீங்கள், அவர்களைப் கண்காணிப்பது போலவே, அந்தக் கண்களும் உங்களை கவனிக்கின்றன. Midnight Moment: "Eyes on “கண்களும் கவி பாடுதே”

குளக்கரை

ஜெர்மனியில் அகதிகளாக வந்திருப்பவர்களில் கணிசமானவர் சிரியர்களோ, மேற்காசியர்களோ இல்லை. பாகிஸ்தானியரும், ஆஃப்கனிஸ்தான் நாட்டவரும்தானாம். அட பாகிஸ்தான் தான் சொர்க்க பூமி, அமைதிப் பூங்கா, சமத்துவ சூரிய ஒளி வீசும் அற்புத நாடாயிற்றே என்று கேட்டீர்களானால் நீங்கள் சூஸான்னாவின் நண்பராகத்தான் இருக்க வேண்டும். இந்தியாவை ஃபாசிஸ்டு நாடு என்றும் பாகிஸ்தான் ஒப்பீட்டில் சொர்க்க பூமி என்றும்தானே சுஸான்னா சொன்னார். அதையும் வெட்கமே இல்லாது பிரசுரித்து மகிழ்ந்தன இந்தியச் செய்தித்தாள்கள். அந்த சுஸான்னா இதைப் படித்தால் என்ன செய்வார் என்று யோசனை வந்தது. வெட்கமெல்லாம் பட மாட்டார், அதையெல்லாம் துடைத்து விட்டுத்தானே கருப்பு சாக்கு இல்லாமல் பெண்கள் வெளியே உலவக் கூடாது என்று சொல்கிற அமைதி மார்க்கத்தின் பயங்கரவாதக் கூடாரமான பாகிஸ்தானை அமைதிப் பூங்கா என்று அவரால் சொல்லி விட முடிந்தது.

மகரந்தம்

மேற்கும் கிழக்கும் எப்படியெல்லாம் பண்பாட்டில் வேறுபடுகின்றன என்று நாம் பலபேர் சொல்லி, எழுதி அறிந்து இருக்கிறோம். நம்மில் பலருக்கும் இது பற்றி ஒரு குத்து மதிப்பான கருத்தும் இருக்கும். ஒரு சீனக் டிஸைனர் இந்த வேறுபாடுகளைத் தான் உணர்ந்த விதத்தில் சிறு சித்திரங்களாகப் போட்டு வைத்திருந்தாராம். 13 வயதில் பெர்லினுக்குச் செல்ல நேர்ந்த யாங் லியு, சில வருடங்களுக்கு யூரோப்பிய பண்பாட்டோடு தான் கொண்ட உறவில் பற்பல அதிர்ச்சிகளைச் சந்தித்திருக்கிறார். அவற்றை அவ்வப்போது வரைந்த படங்களால் …

மகரந்தம்

50களில் துவ்ங்கி உலக சினிமாவைப் புரட்டிப் போட்ட ஃப்ரெஞ்சுப் புது அலை என்கிற திரைப்பட ‘இயக்கம்’ ஒரு முனைத்தானது அல்ல என்று நிறைய பேர் எழுதிப் படித்திருப்பீர்கள். ரோமர் இந்த அலையில் ஒரு முக்கியப் புள்ளி, ஆண் பெண் உறவுகளில் அறவுணர்வைப் பற்றி நுண்மையான கவனிப்புகள் கொண்ட மென்மையான படங்களை எடுத்தவர் என்று அவர் புகழப்படுகிறார். இவர் பலரைப் போல ஏதேதோ கருக்களைக் கொண்ட படங்களை எடுக்காமல் அனேகமாக நம்பிக்கைக்குரிய உறவுக்கும், தூண்டுதலுக்கு இரையாகி பாதை மாறுவதற்கும் இடையே உள்ள இழுபறியைப் பற்றிய பல கதைகளையே தொடர்ந்து படமாக்கி இருக்கிறார். ரோமர் (அல்லது க்ஹோமேஹ்!!) தன் படங்களை சில கருக்களின் பல கோணங்களையே திரும்பத் திரும்பக் கலைத்துப் போட்டு உருவாக்கியவர் என்று ஒரு புறம் வருணிக்கப்பட்டாலும், அறச்சிக்கல்களைப் பல கால கட்டங்களில் பொதிந்த கதைகள் மூலம் யோசித்துப் பார்த்திருக்கிறார் என்பதை நாம் கருதலாம்.

குளக்கரை

தாது வருடப் பஞ்ச காலத்தில் உயர்ஜாதி இந்தியர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு உணவளிப்பதைப் பற்றிக் கவலைப்படாது தம் நலனை மட்டும் கவனித்துக் கொண்டதாகவும், இந்துக்களின் அறமற்ற தன்மையை அது சுட்டுவதாகவும் சில தமிழ் நாவலாசிரியர்கள் ‘புரட்சி நோக்கோடு’ புத்தகங்கள் எழுதிப் பிரபலமான போது அது தவறு, இந்தியர்கள் தம் மக்களுக்கு உணவளிக்கச் செய்த பெரு முயற்சிகளைப் பிரிட்டிஷார் முனைந்து தோற்கடித்தனர் என்று சில சான்றுகளுடன் சுட்டிய ஒரு கட்டுரையைச் சொல்வனத்தில் பல மாதங்கள் முன்பு பிரசுரித்திருந்தோம். அந்தக் கட்டுரைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் பிரதமராக இருந்த, சர்ச்சில் வேண்டுமென்றே இந்தியரைப் பட்டினிக்கு ஆளாக்கிக் கொடுமையான இனப் படுகொலைகளைச் செய்திருக்கிறார் என்று நேரடியாகத் தகவல்கள் மூலம் ஆராய்கிறார் ராகேஷ் கிருஷ்ணன்.

விளக்கு விருது – 2014

தமிழில் கவனிக்கப்படும் விமர்சகரும், மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான சி.மோகன், கடந்த நாற்பது ஆண்டுகளாக இலக்கியம், கலை, சிந்தனை ஆகிய தளங்களில் ஊக்கத்துடன் செயல்படுகிறவர். படைப்பு மையப் பார்வையையும், சிறுபத்திரிகை இயக்கத்தின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தும் இவருடைய செயல்பாடு, சிறுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, உரையாடல், நூல் பதிப்பு எனப் பன்முகத் தன்மை கொண்டது. உலக இலக்கியங்களில் “விளக்கு விருது – 2014”

ஆறு நொடி ஆட்டங்கள்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்க்கும்போது சில தருணங்கள் எப்போதும் மனதில் நிற்கும். பாகிஸ்தானின் மிகச் சிறந்த மட்டை வீரர்களில் ஒருவர் என்று கருதப்படும் ஜாவேத் மியன்தாத், மரபை மீறிய நடவடிக்கைகள் கொண்டவராகத் தெரிய வந்தவர் என்பதால் ஒரு அளவு பாகிஸ்தானிலும், வேறு பல நாடுகளிலும் பிரபலமானவர். இவர் “ஆறு நொடி ஆட்டங்கள்”

மகரந்தம்

உள்ளடி தரகு என்பது பிரசித்தமானது. சுருக்கமாக இப்படி விவரிக்கலாம். நிறுவனங்கள் வாங்குவதையும் விற்பதையும் தொழிலாகக் கொண்ட வங்கியில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள். யாருடன் எப்பொழுது எந்த அமைப்பு இணைய வேண்டும் என்பதை பரிந்துரைப்பவர், அந்த இரகசியத்தை உங்கள் காதில் ஓதுவார். அதை ஒரு கைக்குட்டையில் கிறுக்கி, குறிப்பிட்ட முக்குசந்தில், பங்குத்தரகராகிய உங்களின் ஒன்றுவிட்ட சகோதரியிடம் கொடுப்பீர்கள். அவரும் அதைப் படித்துவிட்டு, அந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்கி வைத்துக் கொள்வார். குறிப்பிட்ட நிறுவனத்தின் செய்தி, தொலைக்காட்சியில் வந்தவுடன், அதன் பங்குகள் எகிறும். உடனடியாக, அந்த சகோதரி, நிறுவனத்தின் பங்குகளை விற்று இலாபம் அடைவார். உங்களுக்கு ஐம்பது சதவிகிதம் மாமூல் கொடுத்துவிடுவார். தெருமுக்கு என்றில்லை… இதை கோல்ஃப் விளையாட்டின் நடுவே கூட நிறைவேற்றலாம்.

ஓவிய வியாபாரியின் கண்காட்சி

மோனே, ரெனாய்ர், டீகாஸ், மானே, பிஸாரோ போன்ற ஓவியர்களின் படைப்புகளை கண்காட்சியாக வைப்பார்கள். ஆனால், இவர்களை எல்லாம் விற்பவரின் கண்காட்சியை ஃபிலடெல்ஃபியாவில் வைக்கிறார்கள். எந்தக் கலைஞருக்குமே முதன் முதல் விற்பனை என்பது முக்கியமானது. அதை சாத்தியமாக்கியவர் பால் டியுரண்ட்-ரூல் (Paul Durand-Ruel). ஆயிரம் மோனெ ஓவியங்கள், 1,500 ரெனாயிர் “ஓவிய வியாபாரியின் கண்காட்சி”

குவாண்டம் கணி

தற்போதைய கணினிகளில் எல்லாம் இருமையான நிலைகளைக் கொண்டவை – உண்டு (1) அல்லது இல்லை (0) என்னும் நிலையில் இருப்பவை. இப்பொழுது துளித்துளியாக, தொடர்ச்சியான மாற்றநிலைகளை அடிப்படையாகக் கொண்ட துளிமம் (க்வாண்டம்) கணினிகள் ஸ்திரமான, பொது பயன்பாட்டிற்கு வரத்தொடங்கியுள்ளன. அலைகள் போல் மாறும் பல்வேறு கூறுகளுக்கு எப்படி நிரலி “குவாண்டம் கணி”

வாசகர் மறுவினை

தமிழ் இசை மரபு கட்டுரை சிறப்பாக இருக்கிறது. நல்ல மொழி பெயர்ப்பு. பல சொல்லாக்கங்கள் பல பத்தாண்டுகளுக்கு முந்தைய மொழிப் புழக்கத்திலிருந்து வந்தவை, அதெல்லாம் மொழிபெயர்ப்பாளர் உஷா வைத்யநாதனின் பிரக்ஞையில் இன்னும் இருக்கின்றன என்பதே எனக்கு அதிசயமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. ‘பாரிய மனோவசியம்’ என்பது அப்படி ஒரு சொல். திரு.வெ.சா இதை எல்லாம் என்றோ தமிழுக்கு மாற்றி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவருக்குக் கிட்டி இருக்கும் பிம்பமே மாறி இருக்கும்.

சரடு விடுவது

கையில் ஒரு சுத்தியலும் சில ஆணிகளும் இருந்தாலும் என்ன செய்வீர்கள்? Zenyk Palagniuk இதை படைத்திருக்கிறார். இருநூறு மணி நேரம் உழைத்து இதை உருவாக்குவதற்கு 24 கி.மீ. நீளத்திற்கான இழைநூல்களும், பதின்மூன்றாயிரம் ஆணிகளும் தேவைப்பட்டிருக்கிறது.

குளக்கரை

ஸிலிகான் பள்ளத்தாக்கு உலகத்தின் போக்கை வெகுவாக மாற்றி அமைத்து இருபது, முப்பது ஆண்டுகள் ஆகி விட்டன. உலகம் வெறி கொண்ட சூறாவளி போல எங்கோ தலைதெறிக்க ஓடுகிறது போல ஒரு பிம்பம் நம் மனதில் தோன்றினால் நாம் வயது அதிகமானவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். தலை தெறிக்க ஓடினால்தான் ‘முன்னேற’ முடியும் என்று ஸிலிகானின் பக்தர்கள் பூரணமாக நம்புகிறார்கள். அந்த பக்தர்கள் நடுவே ஒரு புதுக் கூட்டம் எழத் துவங்கி இருக்கிறது. இந்தக் கூட்டம் என்ன வகைத்தது என்று இந்தக் கட்டுரை நுணுகி ஆராய்கிறது. படித்துப் பார்த்து …..ஹ்ம்… ஆமாம், அச்சப்படுங்கள்…

மண்டாலா ஓவியங்கள்

மண்டாலா என்றால் சமஸ்கிருதத்தில் “வட்டம்” என்று அர்த்தமாகும். காலச்சக்கரம் என்றும் மண்டாலா ஓவியங்களை அழைக்கிறார்கள். இந்து மதத்திலும் பௌத்தத்திலும் இவை வழிபாட்டு முக்கியத்துவம் பெற்றவை. மிகுந்த பொறுமையுடன் கணித சாஸ்திரங்களையும் தியான நியமங்ளையும் பின்பற்றி பத்து நாள்களில் இவை முழுமையடைகின்றன. காலை முதல் மாலை வரை ஏழு புத்த “மண்டாலா ஓவியங்கள்”

மகரந்தம்

உங்களுக்கு மட்டுறுத்தனர்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது? வலைவெளியில் நம்முடைய கருத்துகளும் புகைப்படங்களும் மறுமொழிகளும் கண்காணிக்கப்பட்டு தணிக்கைக்கு உள்ளாகின்றன என்று அறியாத வரைக்கும் மட்டுறுத்தலில் நமக்கு எந்தவிதமான எதிர்ப்பும் இருக்காது. நமக்கு எதிரான எண்ணங்கள் தங்குதடையின்றி வெளியானாலோ, நம்மை அவதூறு செய்யும் பதிவுகள் ஓரிடத்தில் உலாவினாலோ, அந்த இடத்தில் மட்டுறுத்தலைக் கோருவோம்; முன்வைப்போம். அதே சமயம் நம்முடைய எழுத்துக்களோ, படங்களோ, பின்னூட்டங்களோ வெளியாகாமல் தடை செய்யப்பட்டால், சென்ஸாருக்கு உள்ளானால் சுதந்திரவெளியை முழங்குவோம்; கட்டற்ற இணையவெளியை நாடுவோம்.

மணல் கோட்டைகள்

ஏழு வயதிலே கடற்கரையில் மணலிலே வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறார் கால்வின் செபர்ட் (Calvin Seibert). விளையாட்டாக ஆரம்பித்த பொழுதுபோக்கு இப்போது நவீனத்துவ பிரதிகளாக, ஆஸ்கார் அரங்குகளாக, மீன்பிடி கிராமங்களாக மணல் சிற்பங்களாக மாறி இருக்கிறது. கால்வினுடன் ஆன பேட்டியும் அவரின் மணல் ஆக்கங்களையும் இங்கே பார்க்கலாம்.

அப்துல் கலாம் – சிக்கல்களை சமாளிப்பது

“ஒரு உத்தமமான இந்தியராய் வாழ்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மறைவில் அனைவரோடும் சொல்வனம் துக்கத்தையும், அவர் பால் மரியாதையையும்,   மனமார்ந்த அஞ்சலியையும் பகிர்ந்து கொள்கிறது.”

மகரந்தம்

ஏதாவது செய்து கொண்டிருந்தால், உருப்படியாக முன்னேறுகிறோம் என நினைப்பது சகஜம். சும்மா வெட்டியாகப் பொழுதைப் போக்காமல், வேலையில் பிஸியாக இருந்தால், சாதிக்கிறோம் என அர்த்தமாகி விடுமா? அந்தக் கேள்வியை எடுத்துக் கொண்டு இந்தக் கட்டுரை கணித்துறை செயல்பாடுகளைப் பொறுத்திப் பார்க்கிறது.

குளக்கரை

பொது இடங்களில் குண்டு வைத்து மக்களைக் கொல்பவர்களை எப்படி அனுதாபத்தோடு அணுக முடியும்? அது சரியா? என்னதான் சொந்த வாழ்வில் பிரச்சினைகள் இருந்தாலும், முகம் தெரியாத, தன் வாழ்வோடு ஒரு சம்பந்தமும் இல்லாத சாதாரண மக்களைக் கொல்பவர்களுக்கு எதற்கு அனுதாபம் காட்டுவது? இத்தகைய கேள்விகளுக்கு அவரவர் அரசியல் சாய்வுகளைப் பொறுத்து விடைகள் எழும் என்பது ஒரு பக்கம் இருக்க, இதில் ஒரு சமுதாயத்தை அழிவிலிருந்தும், பெரும் சீரழிவிலிருந்தும் காக்க ஓர் அரசு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதும் இருக்கிறது.

நூல் அறிமுகம் மற்றும் நாஞ்சில் நாடன் அவர்களுக்குப் பாராட்டு விழா.

இடம்: சிருஷ்டி மஹால் கங்கா யமுனா திரையரங்கு எதிரில், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் பில்டிங் டாடாபாத் 8வது வீதி கோவை – 641 012. நாள்: 18.07.2015 சனிக்கிழமை காலை 9:30 மணி

மகரந்தம்

சென்ஸஸ் ஆஃப் சினிமா ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியானாலும் ஃபிரெஞ்சுப் படங்களைப் பற்றிக் கூட பேசும் பத்திரிகை. அவர்களின் எழுபத்தைந்தாவது இதழை தடபுடலாக வெளியிட்டிருக்கிறார்கள். பாகுபலி எடுத்த ராஜமௌலி போல் ஹாலிவுட் மைக்கேல் பே குறித்த அலசல்களையும் போடுகிறார்கள். கேன்ஸ் திரைப்பட விழா குறித்தும் எழுதுகிறார்கள். புத்தக விமர்சனங்கள், நேர்காணல்கள், கருப்பு-வெள்ளை படங்கள், மாற்று சினிமா என எதையும் விட்டுவைக்காமல் வெளியிட்டு இருக்கிறார்கள்.

குளக்கரை

இந்த இதழில் பல குறிப்புகளை யூரோஸீன் என்கிற வலைத்தளத்திலிருந்து எடுத்திருக்கிறோம். பல யூரோப்பிய நாடுகளின் கருத்து வளம் நிறைந்த பத்திரிகைகளின் கூட்டுச் சேமிப்பாக இந்தத் தளம் இயங்குகிறது. வாடிக்கையாக இந்தியரும், தமிழரும் அனேகமாக இங்கிலிஷ் பேசும் நாடுகளின் பத்திரிகைகளையோ, அல்லது அதிக பட்சமாக ஜெர்மன், ஃப்ரெஞ்சு, சில நேரம் ரஷ்யப் பத்திரிகைகளை மட்டும் பார்த்துப் பழகி இருப்போம்.

அரேபியாவில் கொடூரக் கட்டிடங்கள்

அரபு நாடு என்றவுடன் மாட மாளிகைகளும், துபாய் நகரத்தின் அங்காடிகளும், கேளிக்கை மையங்களும், கத்தார் நாட்டின் கால்பந்து உலகக் கோப்பை மைதானங்களும் பிரமிப்பில் ஆழ்த்தி நினைவிற்கு வரும். அந்த பிரும்மாண்டங்கள் உருவாகக் கோடிக்கணக்கான தினக்கூலிகள் இந்தியாவில் இருந்தும் பங்களாதேஷில் இருந்தும் தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள். அரேபிய பாலைவனத்துக்கு “அரேபியாவில் கொடூரக் கட்டிடங்கள்”

குளக்கரை

உலகத்தின் பிணி என வருணிக்கப்படும் ஐரோப்பா இன்று வர்த்தகத்தில் நலிவடைந்து வருகிறது. ஒரு பக்கம், கடனை அடைக்கமுடியாது திண்டாடும் கிரேக்க நாடு ஐரோப்பிய யூனியனுக்குள் இருப்பதால் சலுகைகள் எதிர்பார்ப்பதை எதிர்த்து பிரஸல்ஸில் நடக்கும் ஐரோப்பிய சம்மேளனமும், மற்றொரு புறம், பிரான்சு எல்லையைக் கடந்து இங்கிலாந்துக்குள் நுழையப்பார்க்கும் அகதிகள் நடத்தும் துறைமுகப் போராட்டங்கள் என நலிவடைந்துவரும் ஐரோப்பிய நாடுகளின் இன்றைய பெரும் தலைவலிகளாக இவை மாறிவருகின்றன.

அடிமை வர்த்தகம்

அடிமை வர்த்தகத்தின் வளர்ச்சியைப் படம்பிடித்திருக்கும் காணொளி. குறிப்பாக, ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க கண்டத்துக்கு வளர்ந்த இந்த தொழிலைப் பற்றி இரண்டு நிமிடக்காணொளியை இங்கே பார்க்கலாம்

மகரந்தம்

ஒரு கோணத்தில் உலக மக்களுக்குப் பெரும் அமைதி கிட்ட வேண்டும் என்று முயலும் அமைதி மார்க்கத்தினரின் படுகொலைப் பட்டாளங்களுக்கும், உலக மக்களுக்கு ஈடில்லாத கருணை கிட்டவேண்டும் என்று முயலும் ஒரு திமிர்வாத ஏகாதிபத்தியத்தின் படைகளுக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியின் விளைவு இதெல்லாம். இரண்டும் உலக மக்களையும் உலக மனித நாகரீகத்தையும் யார் இறுதியாகக் குழி தோண்டிப் புதைப்பது என்ற போட்டியில் இறங்கி இருக்கிறார்கள்.

மோப்ப எலி

ஆப்பிரிக்காவில் இருக்கும் நிலக்கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க எலிகளைப் பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள். காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை தன்னுடைய மோப்ப சக்தியினால் எலிகள் கண்டுபிடித்து, அவர்களை குணப்படுத்த உதவின. இப்போது, அடுத்த கட்டமாக, கண்ணிவெடிகளை அடையாளம் காட்ட உதவுகிறது. மனிதர்களுக்கு நாள் முழுக்க எடுக்கும் சிரமமான வேலையை, நொடிப் பொழுதில் சுண்டெலி “மோப்ப எலி”

மரக்கலமும் நதியும்

நியு யார்க் நகரத்தில் இந்திய வம்சாவழி ஓவியர்களின் கலைப்படைப்புகளை கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள். அது குறித்த பதிவை நியுயார்க் டைம்ஸில் பார்க்கலாம். கீழே இருக்கும் படைப்பின் பெயர்: “கலத்தில் இருப்பதும் நதியில் கிடைக்காததும்” (What Does the Vessel Contain That the River Does Not?)

மகரந்தம்

மலம் கழிக்க உலகின் வளர்ந்த நாடுகளில் பெருவாரியில் மக்கள் பீங்கான் குடுவை ஒன்றின் மீது அமர்ந்து இருந்து கடனை முடிக்கின்றனர். இந்தியரில் பெருவாரியினர் இன்னும் தரை அளவில் குந்தி இருந்துதான் மலம் கழிக்கின்றனர். இந்தியாவிலும் நகரங்களில் மத்திய வர்க்கமும், உயர் நிலை மக்களும் நாற்காலியில் அமர்வதை ஒத்த நிலையில் இருந்து கழிப்பதைச் செய்வதை இப்போது வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர். முதியோர் நிறைந்த குடும்பங்கள் இப்போது அதிகரித்து வருவதால், அவர்களால் முன் காலம் போல குந்தி இருந்து மலம் கழிப்பது முடியாத நிலையில் இப்படி நாற்காலி அமர்வு முறை அவர்களுக்கும் பழகி அதுவே வசதி என்பது போல ஆகி விட்டது. இந்தச் செய்தியில் ப்ராக்டாலஜி என்கிற துறை சார்ந்த மருத்துவர்கள் மனிதக் குடல்வால், ஆசனவாய் ஆகியவற்றின் நலனைப் பராமரிக்க உதவும் மருத்துவர்கள். இவர்களில் சிலர் …

குளக்கரை

இப்பொழுது ஹைத்தி பூகம்ப நிவாரண நிதிக்காக ஐநூறு மில்லியன் (கிட்டத்தட்ட மூவாயிரத்து இருநூறு கோடி ரூபாய்) நன்கொடை பெற்ற செஞ்சிலுவைச் சங்கம், அந்த நாட்டில் வெறும் ஆறே ஆறு வீடுகளைக் கட்டிக் கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், கணக்கு காட்டும்போது ஒரு இலட்சத்தி முப்பதாயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்ததாக செஞ்சிலுவைச் சங்கம் சொல்லி இருக்கிறது. அப்படியானால், ஆயிரக்கணக்கான வீடுகளும், மருத்துவமனைகளும், பள்ளிகளும், இன்ன பிற கட்டமைப்புகளும் உருவாக்குவதற்காக சேகரித்த அரை பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்னவாயிற்று? ரெட் கிராஸ் நிறுவனம் பதில் சொல்ல மாட்டேன் என்று மறுத்து இருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கத்தைப் போலவே நிதி திரட்டிய பிற அமைப்புகள் 9,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்து இருப்பதையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஓகே கண்மணி: உரையாடல்

ஒ.கே. கண்மணி இரண்டாம் ரகம். ஐஃபோன் பிரியர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரி விஷயங்கள்தான் படம் முழுக்க உலா வரும். ஐஃபோனில் எல்லாமே வழுக்கிக் கொண்டு போகுமாறு அமைத்திருப்பார்கள். உயர்தர appகளை மூன்றாவது தரப்பைக் கொண்டு வழங்குவார்கள். ஒ… காதல் கண்மணியில் அந்த விஷயங்கள் எல்லாம் செமையாக உருவாக்க ஏ.ஆர் ரெஹ்மான், பி.சி. ஸ்ரீராம் போன்ற மூன்றாவது தரப்பு கட்டமைக்கிறது. காதுக்கினிய இசை, கண்ணுக்கினிய ஒளிப்பதிவு, சிந்திக்கவேத் தேவைப்படாத இடைமுகம் போல் ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பு – எல்லாம் எளிமைவிரும்பிகளுக்கு, இந்தக்கால ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு சொர்க்கம்.

பதாகை சிறுகதை போட்டி

பதாகை இலக்கியத்தளம் 2015க்கான சிறுகதைப் போட்டியை அறிவித்து இருக்கிறது. க. மோகனரங்கனும் பாவண்ணனும் நடுவர் குழுவில் இருக்கிறார்கள். சொல்வனம் வாசகர்களும் எழுத்தாளர்களும் இங்கே சென்று விவரங்களை அறியலாம்…

ஹிஜாப் அணிந்த பெண்ணின் பார்வையிலே…

முஸ்லீம் மதத்தில் அதற்கு பல்வேறு பெயர்கள் இருக்கின்றன. நிகப் எனலாம்; பர்க்கா எனவும் சொல்லலாம்; அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட ”ஹிஜாப்” எனவும் குறிப்பிடலாம். முக்காடு போட்டுக் கொண்டு, முகக்கண்ணை மறைத்துக் கொண்டு தன் குழந்தையையும் இந்த உலகையும் பார்க்கும் இஸ்லாமியப் பெண்ணின் பார்வை எப்படி இருக்கும். இங்கே படம் பிடித்து “ஹிஜாப் அணிந்த பெண்ணின் பார்வையிலே…”

தற்கொலை செய்து கொள்வதா? வேண்டாமா?

தத்துவம் விடை கொடுக்கும் பல கேள்விகளில், தலையாயது என்னவென்றால், ‘நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா… இல்லையா?’ என்பதுதான் என்றார் ஆல்பர்ட் காம்யூ. அவரைப் பற்றிய குறும்படம்:

மகரந்தம்

கடந்த நூற்றைம்பது வருடங்களாக அமெரிக்காவின் மேற்குப் புற மாநிலங்களில் ஏராளமான நகரங்கள் கட்டப்பட்டு, பெரும் மக்கள் திரள் அங்கு குடியேறியது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் இந்த மக்கள் திரள் சேர்ந்தது. இந்தத் திரள் நகரங்களில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், கலிஃபோர்னியாவைப் போன்ற அரைப் பாலை நிலங்களில் திசை திருப்பிக் கொணரப்பட்ட பெரும் ஆற்று நீரை வைத்து பெருமளவில் விவசாயம் நடந்தது. அமெரிக்காவில் இன்று விற்கப்படும் ஏராளமான காய்கறிகள், பழ வகைகளில் பெரும்பாலானவை கலிஃபோர்னியா அல்லது அது போன்ற மேற்குப் புற மாநிலங்களில் விளைந்தவை. சமீபத்தில் உலகெங்கும் திடீரென்று மாறி வருகிற தட்ப வெப்ப நிலைகளால் …

குளக்கரை

ஏப்ரல் மாத Words Without Borders தமிழுக்கான சிறப்பிதழாக வெளியாகி இருக்கிறது. சங்க காலத்தில் ஐந்திணைகளாக நிலவெளி சார்ந்து பார்க்கும் தமிழ் இலக்கியத்தில், தற்காலத்திற்கேற்ப புலம்பெயர்ந்தவர்களின் அடையாளச் சிதைவு, குடியுரிமையில்லாத் தன்மை, அந்நியப்படுதல், புலம்பெயர் வாழ்வு, சிறைப்பட்ட அயல் வாழ்க்கை ஆகியவற்றை அளிக்க முனைந்திருக்கிறார்கள். குட்டி ரேவதி, திலீப் குமார், சுந்தர ராமசாமி, மாலதி மைத்ரி, இமையம், அசோகமித்திரன், சுகுமாரன், ஷர்மிளா சயீத், க்ருஷாங்கினி, அ. முத்துலிங்கம் …

வாசகர் மறுவினை

சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பற்றிய நேர்காணலும் நல்ல தகவல்கள். தமிழின் சிறந்த படைப்புகள் சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டால் நிச்சயம் கவனத்தைப் பெறும். சோழகக்கொண்டலின் ஆடிகள் பற்றிய கவிதை நல்ல அனுபவம். கலையும் பிம்மபங்களின் பின்னுள்ள மௌனம்…

மகரந்தம்

இந்தக் கால காதலைப் பற்றி எழுதுமாறு நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரைப் போட்டி வைத்தார்கள். 489 கல்லூரிகளில் இருந்து 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள், இதில் பங்கெடுத்தார்கள். அவர்களில் வெற்றி பெற்றோரின் பதிவுகளை வெளியிட ஆரம்பித்து இருக்கிறார்கள். உறவு என்பதை திருமணம், கணவன், மனைவி போன்ற சிமிழ்களில் அடைக்க விரும்பாத தலைமுறையை இந்தக் கட்டுரைகள் அடையாளம் காட்டுகின்றன. அந்த மாதிரி பந்தம் என்றோ, நட்பு என்றோ, பாசம் என்றோ சொல்லிக் கொள்ளாததால் ஏற்படும் சிக்கல்களையும் பேசுகின்றன.

சித்திரக் கலைஞர் கோபுலு

விகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர், அமுதசுரபி எனத் தமிழின் முன்னணி வார இதழ்கள் அனைத்திலும் கோபுலு வரைந்தார். ஜெகசிற்பியனின் ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம், தேவனின் துப்பறியும் சாம்பு, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், ராவ்பகதூர் சிங்காரம், சுந்தாவின் யாருக்கு மாலை, சாவியின் வாஷிங்டனில் திருமணம், நா.பார்த்தசாரதியின் நித்திலவல்லி, “சித்திரக் கலைஞர் கோபுலு”

காணிக்கை

புத்தகத்தின் முதல் பக்கங்களில், நூலாசிரியரின் ‘காணிக்கை’கள் காணக்கிடைக்கும். தன்னுடைய புத்தகத்தை எழுத உதவியதற்காக சிலரை, அந்தப் பக்கத்தில் கௌரவிப்பார்கள். சிலர் மனைவிக்கு நன்றி வழங்கி இருப்பார்கள். அந்த மாதிரி 30 சுவாரசியமான டெடிகேஷன்களை இங்கேப் பார்க்கலாம்.

மகரந்தம்

சீனா 250 பிலியன் டாலர்களை லத்தின் அமெரிக்காவில் முதலீடு செய்வது ஏன் என்று அமெரிக்க வலதுசாரிப் பத்திரிகைகளில் ஒன்றான வாஷிங்டன் போஸ்ட் கேட்டுத் தன் பீதியை வெளிப்படுத்துகிறது. ஏகாதிபத்தியம் என்பது சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிப்பது என்பதுதான் யூரோப்பியரின் போர்த்தந்திரம், வியாபாரத் தந்திரம், காலனியத் தந்திரம். இப்படித்தான் ஆசிய, ஆஃப்ரிக்க மக்களை முன்னூறு வருடங்களாகச் சுரண்டிக் கொழுத்தனர் வெள்ளை மக்கள். சீனா அதே உத்தியைப் பயன்படுத்துகிறதா, இல்லையா என்பது அமெரிக்க வலது சாரிகளுக்குப் புரிபடாத மர்மம். சீனாவின் சின்ன மீன் 250 பிலியன் டாலர் என்றால் அது எதிர்பார்க்கும் பெரிய மீன் தான் என்ன? 1 ட்ரில்லியன் டாலர்களா? இது அமெரிக்கர்களின் அஸ்தியில் கூடப் புளியைக் கரைக்கும்.

பழங்குடிக் கொண்டாட்டம்

அஸ்ஸாம் மாநிலத்தின் பழங்குடியினர் சுவாரி திருவிழாவை, சென்ற வாரம் கொண்டாடினார்கள். வீரதீர விளையாட்டுகளும் ஆட்டமும் பாட்டமும் யானைகளும் நிறைந்த விழாக்காட்சிகளை இங்குப் பார்க்கலாம்.