குந்தர் வில்ஹெம் கிராஸ் ஜெர்மன் நாவலாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், ஓவியர், வரைகலைஞர், சிற்பி. 1999ல் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றவர். அவருடைய சுய சரிதையான Peeling the Onion (2007) எழுதியபோது எடுத்த பேட்டி:
Author: பதிப்புக் குழு
குளக்கரை
சக மனிதர்களின் வற்புறுத்தலால் உலக மனிதர்களின் புத்தியே மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இது நடக்கிறது. சக மனிதர்கள் இத்தனைக்கும் ஒருவரின் அண்டைப் பக்கமோ, அன்றாட வாழ்வின் பல அம்சங்களிலோ பங்கெடுப்பாரே இல்லை. இது வாழ்வில் பெருகி வரும் ஊடக இடையீட்டால் நேர்வது என்றெல்லாம் பேசுகிறது இந்தக் கட்டுரை. இதை எத்தனை தூரம் நாம் பொருட்படுத்த வேண்டும்? வாசகர்களின் கருத்து இந்தக் கட்டுரை பற்றி என்ன என்று சொல்வனத்துக்கு எழுதித் தெரிவிப்பார்களா?
குளக்கரை
காமிக் புத்தகங்கள் இந்தியாவில் பல காலமாகவே பிரபலமானவை. ஆனால் இந்திய காமிக் புத்தகங்கள் பெரும்பாலும் புராணங்கள், இந்திய வரலாற்றின் நாயகர்கள், சில மர்மக்கதை/ சாகசக்கதைகள் என்ற வகையோடு நின்று விடுகின்றன. சாகச/ மர்மக் கதைகள் எக்கச் சக்கமாக விற்கின்றன என்பதைச் சமீபத்து புத்தகக் கண்காட்சியில் தெரிந்து கொண்டேன். ஒரு கடையில் அவர்கள் கொண்டு வந்த பிரதிகள் எல்லாம் தீர்ந்து அடுத்த கட்டுப் பிரதிகளுக்கு முன்பணம் செலுத்தத் தயாரானவர்கள் கூட இருந்தார்களாம், நண்பர் சொன்னார்.
மகரந்தம்
இருபதாண்டுகள் முன்பு வரை எதுவாக இருந்தாலும் தொலைபேசி வழியாகவே சாத்தியப்பட்டது. அதன் பிறகு இணையம் மூலமாக, எந்தக் கணினியில் இருந்து வேண்டுமானாலும், இது போன்ற காரியங்களை சாதிக்க முடிந்தது. இப்பொழுது எல்லோருடைய கைபேசியிலும் நூற்றுக்கணக்கான Apps எனப்படும் செயலிகள், இதே விஷயத்தை எளிதாக முடித்துக் கொடுக்கின்றன. ஆனால், வெகு விரைவில் ஆப்பிள் ஐபோன் முதல் ஆண்டிராய்ட் கருவிகள் வரை, எதை எடுத்தாலும் ஃபேஸ்புக் மூலமாகவே பாட்டுக் கேட்பது முதல் பங்கு வர்த்தகம் வரை செய்ய முடியும். இணையம் எளிதாகக் கிடைக்காத ஆப்பிரிக்கா போன்ற இடங்களிலும்
எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் ஜெயகாந்தன்- காணொளி
மகரந்தம்
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் ருஷியப் படைவீரர்கள் நூற்றாயிரக்கணக்கான பெண்களை ஆஸ்திரியாவிலும் ஜெர்மனியிலும் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள். இந்த நடத்தையை சோவியத் அரசின் ஒரு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கண்டித்தார். அதற்குப் பதிலடியாக அன்றைய தலைவரான ஸ்டாலின், “உனக்குப் போர் வீரனின் மனம் புரியவே புரியாதா? அவன் அவனுடைய தாய் மண்ணை விட்டு ஆயிரக்கணக்கான மைல் தூரம் தள்ளி இருக்கிறான். நெருப்பிலும் இரத்தகளறியிலும் மரணத்திலும் புரண்டு வருகிறான். வரும் வழியில் பெண்களோடு சல்லாபிக்கும் சப்பை சங்கதி இது! இந்தக் கொண்டாட்டத்தை உணராவிட்டால் நீ கம்யூனிஸ்ட்டே அல்ல!” 1945-’46ல் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ருஷியக் குழந்தைகள் ஜெர்மனியில் பிறந்து இருக்கிறார்கள்.
குளக்கரை
தொழிலாளிகள் ஏன் தினம் வேலைக்குப் போகிறார்கள்? அவர்களைத்தான் யாரோ சுரண்டுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிகிறதே, பின் ஏன் வேலைக்குத் தினம் திரும்புகிறார்கள்? இப்படி ஒரு கேள்வி. இது மார்க்ஸைக் குடைந்ததாம், ஸ்பினோஸாவையும். இதை சிபாரிசு செய்யக் கொஞ்சம் தயக்கமாகவே இருக்கிறது. காரணம் இது தண்டம் என்பதால் அல்ல. நிறைய உருப்படியான விஷயங்களும், வாதங்களும், தகவல் தொடர்புகளும், சில தத்துவ விளக்கங்களும், வரலாற்று விளக்கங்களும் இருப்பதால் இது மதிப்புள்ள கட்டுரை. ஆனால் …
வாசகர் மறுவினை
கடலின் மையங்களில் எண்ணைத் தளங்களை பத்திரிகைகளில், படங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதில் எவ்வாறெல்லாம் பணிகள் இருக்கும், எப்படி பணிபுரிகிறார்கள், வெற்றி யினால் கிடைக்கும் மகிழ்ச்சி, தோல்வியின் போது எவ்வாறு மீண்டுவருகிறார்கள் என்பதெல்லாம் இது போன்று அங்கு பணியாற்றிய அனுபவத்தை பகிர்தலை படிக்கும் போது நமக்கு நிச்சயம் கிடைக்கும். அறிவியலை தமிழ் மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சொல்வனம் தளம் …
அப்பாக்களும் பிள்ளைகளும்
தன்னுடைய பன்னிரெண்டாம் வயதில் துவங்கி, அகவை 28 ஆகும் வரை, பதினாறு ஆண்டுகளாக, தன்னுடையப் பெற்றோருடன் உரையாடியதை, அவர்கள் அறியாமல், ரகசியமாக பதிவு செய்கிறார் மைக் கோஹன் (Mike Cohen) என்பவர். அந்த ஒலித்துண்டுகளில் இருந்து ஒரு சிறிய பகுதியை, கோஹனினின் தோழர் ராட் பெரி (Rodd Perry) “அப்பாக்களும் பிள்ளைகளும்”
நேர்மைக்கான போர்: மணல் கொள்ளை
தண்ணீருக்குப் பிறகு மிக அதிகமாக நுகரப்படும் இயற்கை வளமாக மணல் இருக்கிறது. எண்ணெய் கூட தோண்டத் தோண்டக் கிடைக்கிறது. ஆனால், பூமியில் உள்ள மணல் வளம் திட்டமான அளவிலேயே இருக்கிறது. கட்டிடம் கட்ட இன்றியமையாதப் பொருளாக, மணல் அமைகிறது. அந்தக் காலப் பாணியில் கட்டப்படும் சிறிய வீடுகளுக்கு இருநூறு “நேர்மைக்கான போர்: மணல் கொள்ளை”
டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர் – அஞ்சலிக்குறிப்பு
தூய்மையான ஸ்வீடிஷ் மொழியில் எந்தவித தேவையில்லாத ஒப்பனையும் இல்லாமல் அவர் எழுதினார். இயற்கையைப் பற்றிய அவருடைய விவரிப்புகள் ஜப்பானிய ஓவியம் போல் உயிர் ஊட்டத்தோடும் அதே சமயம் மட்டுப்படுத்திய மொழியும் வைத்திருந்தது. 1954ல் அவருடைய பதினேழு கவிதைகள் வெளியான தருணத்தில் இருந்தே அவருக்கு பல பரிசுகளும் பரவலான பாராட்டுகளும் வந்து சேர ஆரம்பித்தன.
குளக்கரை
திறந்த சமுதாயம் வேண்டும் என்று வாதிட்ட பாப்பர், இடது சாரிக் கொள்ளி எறும்புகளுக்குக் கடுமையான எதிரி. அவரை இழித்துரைக்காத இடது சாரியினர் அன்று குறைவு. ஆனால் அவருமே ஒரு ஜெர்மன் இடது சாரிதான். உதவாக்கரை லெனினிய இடது சாரிகளுக்கு எதிராகவும், தடாலடி மார்க்சியருக்கு எதிராகவும் நின்ற பாப்பர், அறிவியல் அணுகல் என்பதை உலக அணுகலாக்க முயன்றார். அவருடைய சமகால அடார்னோ பாப்பரின் அறிவியல் அணுகல் என்பது சாத்தியமற்ற சமூகவியல் ஆய்வுகள், அலசல்களில் இந்த அணுகல் ஒருவித அடாவடி சான்றடிப்படை வாதத்துக்குக் கோவில் கட்டுவதாக அமையும் என்றும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளுக்கு எதிரான முயற்சியாக அறிவியலைப் பயன்படுத்த விடாமல் போகும் என்றும் வாதிட்டாராம்.
மகரந்தம்
அமெரிக்க நீதி முறை நிறைய வக்கிரங்களைக் கொண்டது. அதுவும் பெண்கள் தம் பாதுகாப்பை முன்னிட்டு நடவடிக்கைகள் எடுத்தால் அவற்றை அமெரிக்க நீதி முறை கடுமையாகத் தண்டிக்கிறது. இந்த லட்சணத்தில் பராக் ஒபாமா இந்தியாவுக்கு சகிப்புத் தன்மை பற்றி பாடம் போதிக்க முன்வருகிறார். மெரில் ஸ்ட்ரீப் என்னும் நடிகையும், ப்ரீடா பிண்டோவும் இந்தியாவுக்கு பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று லெக்சர் அடிக்க முன்வருகிறார்கள். இந்த வழக்கைப் பற்றிப் படித்தால் தெரியும் என்ன வகை வன்முறைகளை அமெரிக்க நீதி முறை கவனிக்காமல் அலட்சியம் செய்கிறது என்று. இதே போன்ற இன்னொரு வழக்கில் ஒரு கருப்புப் பெண் 20 வருடம் ஜெயில் தண்டனைக்கு ஆட்படுத்தப்பட்டார்.
லத்தின் அமெரிக்காவின் பாதை
லத்தின் அமெரிக்கா என்றழைக்கப்படும் தென் அமெரிக்கக் கண்டம் கடந்த நூற்றாண்டில் பெரு நேரமும் அமெரிக்கா, யூரொப்பிய நாடுகளின் கைப்பாவையாகச் செயல்பட்ட சர்வாதிகாரிகள், இனவெறியர்கள், கிருஸ்தவத் தீவிர வாதிகள், தவிர மோசமான ராணுவம் ஆகியவற்றிடம் சிக்கித் திண்டாடியது. மக்கள் அந்தக் கண்டம் முழுதும் வறுமையில் வாடினார்கள், கடும் வன்முறையில் சிக்கித் “லத்தின் அமெரிக்காவின் பாதை”
வாசகர் மறுவினை
ஆனால் வாசிக்கும் சில நூறு பேரில் பலர் இதையெல்லாம் இங்கிலிஷில் சுலபமாகப் படித்து விடலாமே எதற்குத் தமிழில் எழுதுவது என்று கூட நினைப்பாராயிருக்கும். நம்மில் பலருக்கு இதையெல்லாம் தமிழில் கொணர்வதின் சமூகக் கட்டாயம் என்னவென்று இன்னும் தெளிவாயில்லை. மாணவரும், இளைஞரும் இரட்டை மொழிப் பரிச்சயம் உள்ளவரென்பதால் அதில் உலகளாவிய ஒரு மொழி இன்னொன்றை அடித்துப் போட்டு விடுகிறது. அந்த மனத் தடையையும் நாம் உடைத்து முன்னேக வேண்டி இருக்கிறது.
மார்க்சிய அடிப்படை: சொல்வது ஒன்று செய்வது ஒன்று
ஒரு பத்தி இந்தக் கட்டுரை இறுதியில் இப்படி முடிகிறது. இதில் வரும் மார்க்ஸ் என்ற பெயர் தவறான திக்கில் நம்மைச் செலுத்தக் கூடும். மேற்கில் எழுத்தாளர்கள் சில சமயம் ஒரு மனிதரின் ‘கடைசிப் பெயர்’ என்று அழைக்கப்படும் குடும்பப் பெயர்/ குழுப் பெயரையே அம்மனிதரின் பெயராகப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக “மார்க்சிய அடிப்படை: சொல்வது ஒன்று செய்வது ஒன்று”
2014 ஆஸ்கார் – சிறந்த குறும்-அசைபடம்
இந்த வருடத்திற்கான சிறந்த குறும்-அசைப்படம் (ஆறு நிமிட அனிமேஷன்) ஆக ஆஸ்கார் விருதை இந்தப் படம் தட்டிச் சென்று இருக்கிறது. பாஸ்டன் டெர்ரியர் நாய்க்குட்டியின் கதையைக் இங்கே பார்க்கலாம்.
இயற்கை என்னும் கலை
புகைப்படக் கலைஞர் நீல்ஸ் (Nils-Udo) குளத்தில் வெகு பொறுமையாக போதிய இடைவெளி விட்டு இலைகளைத் தூவுகிறார். அதன் ஓட்டத்தை படம் எடுக்கிறார். வேறு இடத்தில் கிளைகள், பழங்கள், காய்கள் எனக் கொத்து கொத்தாக இருப்பதை ஒருங்கிணைத்து கலையாக மிளிர வைக்கிறார். காலப்போக்கில் மாறும் சூழலையும் மரங்களின் அணிவகுப்பும் தாவரங்களின் “இயற்கை என்னும் கலை”
மகரந்தம்
எமோடிகான் எனப்படும் ஸ்மைலி உருக்கள் கணனி வழியே எதையும் எழுதுவோர்கள் பயன்படுத்தும் ஒரு உத்தியாகிப் பல வருடங்களாகின்றன. ஆனால் இவை எப்படிப் புரிந்து கொள்ளப்படுகின்றன என்பது அனேகருக்குத் தெளிவாக இல்லை. குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறை, நீதித்துறையினருக்கு இவை குழப்பத்தைக் கொடுக்கின்றன என்று அமெரிக்காவில் இப்போது நடந்த சில சம்பவங்கள் தெரிவிக்கின்றன.
குளக்கரை
அதே நேரம் இஸ்ரேலில் என்னவென்று பார்த்தால், அங்கு ஆட்சி புரிந்த வலது சாரி அரசுடைய அரசியலை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் சொல்கிறார், பயத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தை வெல்லும் அரசியலை ஒழித்துக் கட்டி, மக்கள் சுதந்திரமாக உலவும் அரசியலைப் பீடமேற்றுவோம் என்று குரல் கொடுக்கிறார். அதாவது இஸ்ரேலைப் பயங்கரவாதிகளுக்கும், இஸ்லாமிசத்தின் யூத வெறுப்பு அரசியலுக்கும் தாரை வார்ப்போம் என்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.
மகரந்தம்
நாம் எங்கிருந்து வந்தோம்? நான் என்பது எது? நாம் எங்கே போகிறோம்? – தத்துவவியலும் இறைநம்பிக்கையும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடை கொடுக்க முயல்கின்றன. மற்ற இனக்குழுக்களை விட, தான் சார்ந்த மதத்தின் விடையே சிறப்பானது என்பதை நிறுவ, அதிசக்தியாளர்களை ஒவ்வொரு மதமும் முன்னிறுத்துகிறது. அமெரிக்கத் தேர்தலில் வெல்ல வேண்டுமானால், தனக்கு தெய்வ விசுவாசம் இருப்பதாக பறைசாற்ற வேண்டும். அந்த நம்பிக்கை எவ்வளவு வினோதமாக இருந்தாலும், ஏதாவது ஒரு மதத்தை சொல்லியே ஆக வேண்டும்.
தற்காலத்திற்கும் டிம்பக்டூவிற்கும் இடையே
கர்ட் வானகட் கதைகளை அடிப்படையாகக் கொண்டு Between Time and Timbuktu: A Space Fantasy திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். கவிதை பாடும் விண்வெளி வீரரை வானவெளிக்கு அனுப்புகிறார்கள். அவர் உலகெங்கும் தன்னை பிரதியெடுக்கிறார். படத்தை இங்கு பார்க்கலாம்:
தற்கால இராமாயணம்
இராமாயணம் எங்கெல்லாம் நடந்ததோ அங்கெல்லாம் வசந்தா யோகநாதன் பயணிக்கிறார். அந்தப் பயணத்தின் வழியாக இந்தியாவின் ஆன்மாவையும் ராமாயணக் கதையையும் ஒருங்கிணைக்கும் காட்சிகளைப் பதிவு செய்து கோர்க்கிறார். எந்தப் புகைப்படத்திற்கும் நடிகர்களோ, செட்டப்புகளோ செய்வதில்லை. தற்கால கோலத்தையும் காலாகலத்திற்கும் நிலைத்த இதிகாசத்தையும் இணைக்கும் ஒளிப்படத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
குளக்கரை
இப்போது யூரோப்பில் பரவலாகத் தெரிய வரும் சொல் – பாகனியம். எப்போதோ கிருஸ்தவம் தன் இரும்பு ஆணி கொண்ட காலணிகளால் நசுக்கிக் கொன்றுவிட்ட ஒரு இசம் இது. ஆனால் குற்றுயிரும் குலையுயிருமாகப் பல மூலைகளில் இருந்திருக்கிறது. சமீபத்து ஹாலிவுட் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களின் உபயமா அல்லது உலகில் பெரும் பணபலத்துடன் பரப்பப்படும் எவாஞ்சலியக் கிருஸ்தவத்துக்கு ஒரு எதிர் வினையா என்று சொல்ல முடியவில்லை. ஐஸ்லாந்தில் மறுபடி பழைய பாகன் தெய்வமான தோர் என்பாருக்குப் பெரும் செலவில் ஆலயம் ஒன்று கட்டப் போகிறார்கள்.
குடியரசு தின வாழ்த்துகள்
பனிச் சிலை விழாக் கொண்டாட்டம்
குளிரும் பனியும் அதிகமான இடங்களில் என்ன செய்யலாம்? பனிச்சறுக்கு விளையாடலாம். சீனாவில் பனிகளால் ஆன சிலைகளைச் செதுக்குகிறார்கள். டிசம்பரில் துவங்கி மூன்று மாதங்களுக்கு எல்லோரையும் வரவேற்கிறார்கள். வண்ணமயமாக விளக்குகளையும் வாணவேடிக்கைகளில் வெடிகளையும் கொளுத்தி வருகையாளர்களைக் கொண்டாட வைக்கிறார்கள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் செதுக்கிய சிற்பங்களை இங்கே பார்க்கலாம்.
வாசகர் மறுவினை
இரட்டைச் சுருள் வளைய ஆராய்ச்சியில் மிகப் பெரிய சர்ச்சை இன்று வரை, இந்த அமைப்பைக் கண்டு பிடித்தவர் யாரென்பது. 1962 –ஆம் ஆண்டு, மருத்துவ நோபல் பரிசு என்னவோ வாட்ஸன், க்ரிக் மற்றும் வில்கின்ஸ் ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டது. இதில் நான்காவது பெண் விஞ்ஞானி ஒருவர் ஒதுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு…
மகரந்தம்
அமைதி மார்க்கம் நமக்குப் புதுப்புது செய்திகளாகக் கொடுக்கத் தவறுவதே இல்லை. …..
இன்றைய செய்தி- மார்க்கத்தின் பாதுகாவலர்களான தாடிக்கிழவர்களை ஒருவர் விமர்சித்தார் என்று அவருக்கு அந்த நாட்டு அரசு 1000 கசையடிகளைப் பரிசாக வழங்கி இருக்கிறது. அன்னாருடைய மனைவி ‘தனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நீதி கிட்டும்’ என்று சொல்கிறார். பாதுகாவலத் தாடிக்கிழவர்கள் மார்க்கத்தின் புத்தகத்தை வைத்துக் கொண்டுதானே ‘நீதி’ வழங்கி இருக்கிறார்கள். அந்த ‘நீதி’தான் 1000 கசையடிகள்….
வாசகர் மறுவினை
தமிழ்நாட்டு இலக்கியங்களில் காணப்படும் மைதுன உறுப்புகளை இந்தப் பதிவு பட்டியலிடுகிறது. ஆனால், மைதுன உறுப்புகளின் பெயர் ஏன் “கெட்ட” வார்த்தையானது என்பது பற்றி பெருமாள் முருகனோ, இப்பதிவின் ஆசிரியரோ யோசிக்கவில்லை. கிராமங்களில் நடைமுறையில் சகஜமாகப் பேசப்படும் பாலியல் சொலவடைகள் பற்றி கி. ராஜநாராயணன் உட்படப் பல உண்மையான இலக்கியவாதிகள் பேசி இருக்கிறார்கள்.
காசியில் பாரதி நினைவாக…. ஒரு கோரிக்கை, ஒரு கடமை.
எனக்கு கடந்த வாரம் மூன்றாவது முறையாக காசி செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஏற்கனவே முதல் இரு முறைகளிலும் மகாகவி பாரதி காசியில் வாழ்ந்த இடத்தைப் பார்த்து வந்த எனக்கு இம்முறை பாரதியின் அத்தை குப்பம்மாள் (எ )ருக்மணி அம்மாள் அவர்களின் மகன் திரு .கே வி கிருஷ்ணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது…
அமைதிக்கான நோபல் பரிசு
அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும் அரச வன்முறைக்கு எதிராக வன்முறையற்ற வகையில் பாடுபட்டதற்காகவும் 1964 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மார்ட்டின் லூதர் கிங்குக்கு வழங்கப்பட்டது. அந்தப் பேச்சு இங்கே: ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களுக்கு அமெரிக்காவில் வாக்குரிமைகள் இருந்தும், அவர்களால் வாக்களிக்க முடியாத நிலை அமெரிக்காவில் நிலவியது. அந்த இழிநிலையை “அமைதிக்கான நோபல் பரிசு”
தேடல் முகப்பு
இணையத்தில் தேடுதல் என்றால் கூகுள்.காம் என்னும் வழக்கம் மலையேறி, பொதுவாகத் தேடுதல் என்பதற்கு இன்னொரு பெயர் ‘கூகுள்’ என்னும் காலகட்டத்தில் வாழ்கிறோம். அவர்களின் போட்டியாளர் மைக்ரோசாஃப்ட் வழங்கும் ‘பிங்’. அவர்களின் முகப்புப் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அழகிய ஒளிப்படத்தை வெளியிடுகிறார்கள். சென்ற 2014ம் ஆண்டின் சிறந்த புகைப்படங்களை “தேடல் முகப்பு”
மகரந்தம்
பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ, ராணுவம் போன்றன எப்படி வெறும் மாஃபியாக்கள், எப்படி பாகிஸ்தானிய மக்களை அவை அடக்கி ஆள்கின்றன என்று நியுயார்க்கரில் ஒரு கட்டுரை. இது ஒரு பயங்கர ஜோக். ஏனெனில் அமெரிக்க மக்களை அமெரிக்க தொலைக் காட்சிகளும், பத்திரிகைகளும், உளவு நிறுவனங்களும், கிருஸ்தவ சர்ச்சுகளும், இனவெறி அரசியல் நடத்தும் இரண்டு கட்சிகளும், இன்னும் ஏதேதோ பயங்கரங்களைக் கண்டுக்க ஆட்களே இல்லாமல் நடத்தும் பெரும் பன்னாட்டு (அமெரிக்க வேர் கொண்ட) நிறுவனங்களும் அமெரிக்கரை ‘அடக்கி’ ஆளவே செய்கின்றன. என்ன அடக்குதல் அங்கு மிகச் சிக்கலான வகையில் உடனே காணப்பட முடியாத வகைகளில் செய்யப்படுகிறது. ஆனாலும் அமெரிக்கப் பிரச்சார நோக்கங்களைத் தாண்டிய ஒரு அரை உண்மை இதற்கு உண்டு.
சென்னை புத்தக கண்காட்சி 2015
சென்னை புத்தக கண்காட்சி 2015 – சில காட்சிகள் [espro-slider id=37932]
வாசகர் மறுவினை
எதை நோக்கிச் செல்கிறோம் என்ற நினைவாவது உள்ளதா? மனித உணர்வுகளும், உறவுகளும் மாறி – வெறும் பணம் பண்ணும் ஜடங்கள் மட்டுமே மிஞ்சும்.
2014ன் 14 புத்தகங்கள்
சென்ற ஆண்டின் சிறந்த தத்துவம் சார்ந்த புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறார்கள். விவேகமும், படைப்பூக்கமும் கொண்டு அர்த்தமுள்ளதாக வாழ்க்கையை வாழ அழைக்கும் உளவியல் நூல்களை அறிமுகம் செய்கிறார்கள்.
பரபரப்பான ஊழியர்: கிவா ரோபோ
அமேசான்.காம்-இல் அதிகம் உழைப்பவர் இவர்தான். இருபத்து நான்கு மணி நேரமும் ஓய்வின்றி சுழல்கிறார். இண்டு இடுக்கெல்லாம் நுழைகிறார். கேட்டதைத் தருகிறார். கீழே போடுவதில்லை. உடம்பு சரியில்லையென்று படுத்துக் கொள்வதில்லை. தொழிற்சங்கம் துவங்கி போராடமாட்டார். ஒரு வினாடிக்கு 426 பொருள்களை விற்கும் அமேசானுக்கு உறுதுணையாக இயங்குகிறார்.
மகரந்தம்
எண்களை எப்படிப் பார்க்கிறோம்? ’க’ என்றால் தமிழில் ஒன்று; ரோமன் எழுத்துக்களில் ஆங்கில ஐ (I) போட்டால் ஒன்று; எல்லோருக்கும் தெரிந்த எண் ”1”. அதே எண் 1, 10 என்னும் எண்ணில் இருந்தால் பத்தைக் குறிக்கும். ரோமன் எழுத்தில் X (எக்ஸ்). நேரத்தை எப்படி கணக்கிடுகிறோம்? ஒரு வினாடி; இரண்டு நிமிடம்; மூன்று மணி நேரம். உடலுக்கு இந்த கணக்கெல்லாம் தெரிவதில்லை. மூளைக்குத்தான் இந்த கடிகார நேரம். அதே போல் இசையும் வேறொரு உலகத்தில் இயங்குகிறதா? நேரம் உணர்தலை இயல்பாகவே அகநிலையாக -நம் வாழ்வில் ஒரு அங்கம் என்பதை இசை நிரூபிக்கிறது. நம் மூளையில் இசையின் மாய வேலை எப்படி நடக்கிறது என்பதைப் பற்றி இசையமைப்பாளர் ஜோனதன் பெர்கர் விவரிக்கிறார்.
மகரந்தம்
மீண்டும் ஒரு ஆண்டு முடியப்போகிறது. “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்; இப்பொழுது டிசம்பர் என்பது பட்டியல்களின் மாதம். இந்த ஆண்டின் முக்கியமான இருபத்தி ஐந்து தொழில்நுட்பத் தோன்றல்களை டைம் பத்திரிகை வரிசைப்படுத்துகிறது. செவ்வாய்க்கு ராக்கெட் விட்ட எவருமே முதல் தடவையே ஜெயித்ததாக சரித்திரம் கிடையாது. அமெரிக்காவால் முடியவில்லை. ருஷியாவும் தோற்றது. ஐரோப்பியர்களுடைய ஏவூர்தியும் செவ்வாய் கிரகத்தை கஜினி முகமது போல் சென்றடைந்தது. ஆனால், சீனாவிற்கு முன்பாகவே, எந்த ஒரு ஆசிய நாட்டிற்கும் முன்பே…
'அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா
திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த “அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தார் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் இந்தப் “'அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா”
கண்ணாடியின்றி படிக்கும் வழி
கண் பார்வைக்கோளாறை திருத்தக் கண்ணாடி அணிபவர்களுக்கு அசௌகரியம் உண்டு. தலையில் எப்பொழுதும் இடையூறாக இருப்பது ஒரு பக்கம். அதைத் தவிர்க்க கண் வில்லை (கான்டாக்ட் லென்ஸ்) போட்டால், தூங்குவதற்கு முன் கழற்றி வேறு வைக்கும் உபத்திரவமும் உண்டு. இந்த மாதிரி கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற பிரச்சினைகளை “கண்ணாடியின்றி படிக்கும் வழி”
மகரந்தம்
புயலினால் வீடிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதை விட தன்னுடைய மக்கள் தொடர்பு மேலும் மின்னவே செஞ்சிலுவை (ரெட் கிராஸ்) சங்கம் முயன்றதாக, அவர்களுடைய ஊழியர்களே தெரிவித்திருக்கிறார்கள். உடல்நிலை சரியில்லாதவர்களுக்காக செலுத்த வேண்டிய முதலுதவி வண்டிகளை, மருத்துவ வசதிக்காக பயன்படுத்தாமல், தொலைக்காட்சிப் பேட்டிகளுக்கு பின்னணியாக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். ஹரிகேன் சான்டி மட்டுமல்ல… லூயிசியானாவிலும், மிஸ்ஸிசிப்பியிலும் கூட இதே அலட்சியம் கலந்த கண்துடைப்புதான் கோலோச்சுவதாக செஞ்சிலுவைத் தொண்டர்களே வருந்தியிருக்கிறார்கள்.
பெருமைப்பட பத்து பெண் அறிவியலாளர்கள்
அக்டோபர் 14ம் தேதியை கணினிக்கும் கணினி மொழிக்கும் வித்திட்ட ஆடா லவ்லேஸ் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அந்த தினத்தை முன்னிட்டு நாற்பதுக்கும் மேற்பட்ட இந்தியப் பெண் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கான விக்கிப்பிடியா பக்கத்தில் குறிப்புகளை சேர்த்திருக்கிறார்கள். அவற்றில் இருந்து பத்து பேர் குறித்த அறிமுகத்தை இங்கே அறியலாம்.
எமிலி முல்லர்- ஓர் அற்புதம்
திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வருகிறார் எமிலி முல்லர். அவருக்கு முன் மூன்று பேர் தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். எமிலிக்கு இதுதான் முதல் திறன் தேர்வு. அவருடைய பையிலிருந்து பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து, அவற்றைப் பற்றிச் சொல்லுமாறு இயக்குநர் கேட்கிறார். எமிலிக்கு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததா? அவர் “எமிலி முல்லர்- ஓர் அற்புதம்”
மகரந்தம்
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெண்கள் என்றவுடன் இரண்டு சம்பவங்கள் நினைவிற்கு வருகிறது. போதைப் பொருள் வாங்க நகையை அடமானத்திற்கு தர மாட்டேன் என்று சொன்னதால் புருஷனால் மூக்கும் உதடுகளும் அறுபட்டவர் ஒருவர்; காவல்துறையில் பணியாற்றுவதால் சுட்டுக் கொல்லப்பட்ட நெகர் இன்னொருவர். அந்த மாதிரி சம்பவங்களே, கேட்டும் படித்தும் அலுத்த காலத்தில் கமாண்டர் புறாவை ஆபகானிஸ்தானுக்கே சென்று சந்தித்த ஜென் பெர்சி அறிமுகம் செய்கிறார். ருஷியாவிற்கு எதிராக 150க்கும் மேற்பட்ட போராளிகளை ஒன்றிணைத்து சண்டை போட்டவர். இப்பொழுதும் தாலிபானுக்கு எதிராக தன்னுடைய குறுநிலத்தை இரட்சிப்பவர். அறுபது வயதானாலும் மூட்டு வலி இருந்தாலும் ஏகே 47 பிடிப்பவர். எவ்வாறு உள்ளூர் மக்களுக்கு நாயகியாக வழிகாட்டுகிறார் என்பதன் நேரடி அனுபவத்தை பதிந்திருக்கிறார்.
வீடியோ விளையாட்டுகளில் பெண் சித்திரிப்பு
அனிதா சர்க்கீஸியன் (Anita Sarkeesian) இராக்கில் பிறந்தவர். அர்மீனியர். ஐந்து வயதில் வீடியோ விளையாட்டுகளுக்கு அறிமுகமானவர். இன்றளவும் எல்லா விழியப் பந்தயங்களிலும் இறுதி நிலையை அனாயசமாக முடித்துவிடுபவர். இப்படித் தொடர்ச்சியாக பல்வேறு கணினி விளையாட்டுகளை, பல்லாண்டுகளாக ஆடிவரும்போது ஒரு விஷயத்தைத் அவதானிக்கிறார். எல்லா கணினி விளையாட்டுக்களிலும் பெண்களைப் போகப் “வீடியோ விளையாட்டுகளில் பெண் சித்திரிப்பு”
ஹாங்காங்: வருங்காலத்திற்கான போராட்டம்
2017ல் ஹாங் காங் தேர்தல் வரப்போகிறது. தங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான் வாக்குச்சீட்டில் இடம்பெற வேண்டும் என்று சீனா அறிவித்தது. தங்களுக்கான தலைவர்களை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை கோரும் போராட்டத்தை ஹாங்காங்வாசிகளும் மாணவர்களும் நடத்தி வருகிறார்கள். தொடர்புள்ள முந்தைய பதிவு: தடம் சொல்லும் கதைகள் – 5
புவி வெப்பமடைய யார் காரணம்?
கரிம உமிழ்வுகளினால் நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றத்திற்கு எந்த நாடுகள் பொறுப்பு? தி கார்டியன் கொடுக்கும் வரைபடத்தைக் கொண்டு மாசுபடுத்தும் சர்வதேச சக்திகள் யார் என்று கண்டுபிடிக்கலாம். சீனாவின் பசுமை இல்ல வாயு வெளிப்பாட்டை மற்ற நாடுகளோடு ஒப்பிடலாம். புவி வெப்பமடைதலின் தாக்கத்தினால் மிகவும் பாதிக்கப்படும் நாடுகளைக் கண்டறியலாம். “புவி வெப்பமடைய யார் காரணம்?”
மகரந்தம்
ஐஸிஸ் பயங்கரவாதக் கும்பலை ஒழிக்கிறோம் என்று கிளம்பியுள்ள அமெரிக்க அரசு முதல் சில தினங்களில் எத்தனை செலவழித்துள்ளது? முதல் நாள் சிரியாவில் வீசிய குண்டுகளுக்கு அமெரிக்க ராணுவத்துக்கு ஆன செலவு இந்தியாவின் சந்திராயன் சாடிலைட்டை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப ஆன பயணச் செலவை விட அதிகமாம். ஒரு நாள் குண்டு வீச்சுக்கு அமெரிக்காவுக்கு ஆன செலவு 79 மிலியன் டாலர்கள். இந்திய செவ்வாய் கிரகப் பயணச் செலவு $74 மிலியன் டாலர்கள். இந்தச் செலவைத் தவிர வேறு செலவுகளும் அமெரிக்க விமானப் படைக்கு உண்டு. அவற்றில் அந்த ஏவுகணைகளுக்கு ஆகும் செலவைக் கணக்கிலெடுத்தால் எப்படி இருக்கும்?
மகரந்தம்
தற்செயலாக நூலகத்திலிருந்து கொண்டு வந்த ஸர் ஜான் ப்ராங்கிளினின் ஆர்க்டிக் கடற்பயணம் பற்றிய புத்தகத்தினால்தான் துருவப் பயண சாகஸங்கள் பற்றி ஆர்வம் ஏற்பட்டது. இரு முறை, இந்த மனிதர் ஆர்க்டிக் நோக்கி வடமேற்கு திசையில் செல்வழியைத் தேடிப் பயணமானார். இந்த நடைப்பகுதியே கற்பனை; இரண்டாம் முறை திரும்ப வரவேயில்லை. காணாமல் போனவர்களைத் தேடிப் பல பயணங்கள் நடந்தன. கப்பல்கள் மூழ்கின என்று இனூயிட் மக்கள் சொல்ல, மூழ்கும் முன் மனிதர்கள் நடந்து போனதைப் பார்த்ததாகவும் சொல்ல, பின் வெகு சிலரின் சமாதிகளும் கண்களில் சிக்கினாலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் தலையெழுத்து என்ன என்பது மர்மமாகவே இருந்தது. உயிர் பிழைக்க, பலரும் நர மாமிசம் சாப்பிட்ட தடயங்களும் கிடைக்க…
