ஏழு வயதிலே கடற்கரையில் மணலிலே வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறார் கால்வின் செபர்ட் (Calvin Seibert). விளையாட்டாக ஆரம்பித்த பொழுதுபோக்கு இப்போது நவீனத்துவ பிரதிகளாக, ஆஸ்கார் அரங்குகளாக, மீன்பிடி கிராமங்களாக மணல் சிற்பங்களாக மாறி இருக்கிறது. கால்வினுடன் ஆன பேட்டியும் அவரின் மணல் ஆக்கங்களையும் இங்கே பார்க்கலாம்.
Category: இதழ்-133
மல்லிகைப் பூவின் திகட்டாத மகிமை
கோடையின் வரவேற்கத்தக்க அம்சங்களில் ஒன்று, மல்லிகைப்பூ சீசன். சாலைகளில் ஆங்காங்கே ஒரு மரப் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு பூத்தொடுத்துக்கொண்டு இருக்கும் பெண்கள் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. வருடம் முழுவதுமே ஓரளவு கிடைக்கும் மலரென்றாலும், இந்த சீசனில் கிடைக்கும் மல்லிகையின் – அதுவும் குண்டு மல்லிகையின் – அதிலும் மதுரை மல்லியின் வாசனையே அலாதி. தெருவில் “மல்லிகைப் பூவின் திகட்டாத மகிமை”
தமிழ் இசை மரபு – இறுதிப் பகுதி
தெற்குக்கு அதன் சரித்திரம் முழுவதிலும் நீடித்து இருந்த ஒரு விஷயம் அதன் அறுபடாத மரபு, அம்மரபின் மேல் அது கட்டி எழுப்பிக் கொண்டு போக முடிந்தது, அதற்கு சாதகமாக இருந்தது வட இந்தியாவை ஒப்பிட்டு நோக்கும் போது, இங்கு நிலவிய அமைதி. கோவிலிலிருந்து பிரவாஹித்த பாடகர்களின், நாட்டிய கலைஞர்களின் இனிமையான இசை மற்றும் லயத்துடனான தாள சப்தங்கள் அப்பிரதேசம் முழுவதுமே எதிரொலித்தது. நாயக்கர்களுக்குப் பின்வந்த மராத்தா மன்னர்களும் இன்னும் அதிக அளவில் இம்மரபைத் தொடர்ந்தனர். சாலைகளிலும், கோவில்களின் நடைபாதைகளிலும் நிரம்பியிருந்த இசைக்கு பாமர மக்களும் (hoi polloi), நூற்றாண்டுகள் பலவாகத் தொடர்ந்து நிலவும் இத்தகைய சூழலில் இதற்கு அன்னியப்பட்ட பாமர மக்கள் இருந்திருப்பாராயின், அப்பாமர மக்களும் இச்சுழலில் மூழ்கி மகிழ்ந்தனர்.
நிஜத்தின் நிழல்
“இப்போது நான் சுகப்படும்படியாக சில காரியங்களை நீ செய்யப் போகிறாய்,” என்று கூறியபடி அவன் உதடுகள் அவள் உதடுகளை நோக்கி இறங்கின. கொடுங்கனவொன்றை அழிக்க முயற்சிப்பது போல் கண்களை இறுக்க மூடியிருந்தாள், பற்கள் கீழுதட்டைக் கவ்வியிருந்தன. முகத்தில் வழிந்த வியர்வையை அவன் நக்கியதால் ஏற்பட்ட அருவெறுப்பின் உந்துதலால் முட்டியை சட்டென உயர்த்தி அவன் குறியை பலம் கொண்ட மட்டும் தாக்கினாள். “பிட்ச்” என்று அலறியபடி அவள் உடலிலிருந்து சரிந்து வலப்பக்கம் உருண்டான்.
பிரான்சு: நிஜமும் நிழலும் -3
பிரெஞ்சு பண்பாட்டில் கைகுலுக்குவதென்பது முன்பின் தெரியாத ஒருவரை முதன் முறையாக சந்திக்கிறபோதும் விடைபெறுகிறபோதும் இடம்பெறும் குறிப்பாக வியாபாரம், அலுவலகம் அல்லது பொதுவிடங்களில் சந்திப்பு நிகழ்கிறபோது கைகுலுக்கிக்கொள்வதென்பது மரபு. முதன் முறையாக உருவாகும் இந்த அறிமுகம் வியாபாரம் அல்லது அலுவல் நிமித்தமாக எத்தனைமுறை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்கலே தொடரும். அதாவது அவர்கள் சந்திப்பு அலுவல் எல்லையைக் கடந்த நெருங்கிய நட்பு அல்லது உறவு என்ற வட்டத்திற்குள் பிரவேசிக்காதவரை
கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை
2015 –ன் ஆரம்பத்தில் நடந்த நுகர்வோர் கருத்தரங்கில், சாம்சுங்கின் தலைவர், ஒரு பி.எம்.டபிள்யு. காரை நுண்ணறிப்பேசியில் அழைக்க, அவரை நோக்கி விரைந்த, அந்தக் கார், அவர் முன் வந்து நின்றது. காரில் ஏறியவுடன், அவருடைய நுண்ணறிப்பேசி மூலம், சென்றடைய வேண்டிய இடத்தைச் சொல்ல, காரும் அங்கே செல்லத் தொடங்கியது. காரில் ஓட்டுனர் எவரும் இல்லை. 2015, ஜூலை மாதம் க்ரைஸ்லரின் ஜீப் வண்டிகளை இணையம் மூலம் ஓட்டுனரிடமிருந்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய விஷயம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன, ஓடும் காரை இன்னொருவர், இணையம் மூலம் கட்டுப்படுத்த முடியுமா?
கொற்கை – புத்தக அனுபவம்
ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்கு வலு ஏற்றிக் கொண்டே போகாததாலோ என்னவோ கதைத் தன்மை குறைவாகவும் ஆவணத் தன்மை மிகுந்தும் காணப்படுவதுபோல் தோன்றினாலும் இடையில் வரும் ஒரு கடற்கொள்ளைச் சம்பவம் நம்மை மீண்டும் கனவுலகுக்கு இட்டுச் செல்கிறது. பிலிப் பாத்திரம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. ஆரம்பத்தில் வீட்டைவிட்டு ஓடிவரும் சிறுவனாக அறிமுகமாகி, உழைப்பால் திறமை மிக்க தண்டலாகிக் கடைசி வரியில் நொய்ந்த கிழவனாக உயிர் துறக்கிறது. வருடங்களை மனதிற்கொண்டு சம்பவங்களுக்கிடையில் வாசிப்புத் தொடர்பை ஏற்படுத்த இயலாதவர்களுக்கு பிலிப் தண்டல் பாத்திரம் ஒரு reference line-ம் கூட.
ஹாட்டின் ராணி
படுத்துக் கிடந்த பிர்ஜூ ஆட்டுக்கிடாயைப் பிரம்பால் அடித்தான். பிர்ஜூவின் அம்மாவின் கோபம் அவன் பக்கம் திரும்பியது. எழுந்து போய் அதே பிரம்பினால் அவனை நையப் புடைத்து அவன் தலையில் ஏறி இருக்கும் பேயை விரட்டலாமா என்று எண்ணினாள். ஆனால், இதற்குள்ளாக வேப்பமரத்தடியிலே தண்ணீர் எடுக்க வந்த பெண்களின் பேச்சரவம் கேட்டு பிர்ஜூவை அடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவனைப் பார்த்துச் சொன்னாள்-“இரு, இரு! உங்கப்பன் உன்னைக் கைமிஞ்ச வச்சுட்டாரு, யாரைப் பார்த்தாலும் கைமிஞ்சறே! இரு பார்த்துக்குறேன்!”
அப்துல் கலாம் – சிக்கல்களை சமாளிப்பது
“ஒரு உத்தமமான இந்தியராய் வாழ்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மறைவில் அனைவரோடும் சொல்வனம் துக்கத்தையும், அவர் பால் மரியாதையையும், மனமார்ந்த அஞ்சலியையும் பகிர்ந்து கொள்கிறது.”
'திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி'ல் ஓர் உரை
அந்தக் ‘கொள்கலன்’ மிகவும் பெரியது. அதில் மிகப் பெரிய இடத்தை அடைத்துக் கொள்ளும் தன் முனைப்பு என்பகிற பொருளும் வேறு அடைத்துக் கொண்டிருக்கவில்லை. தகவல்கள், தமிழ், கிரஹிப்பு மட்டுமல்ல அந்தக் கொள்கலன் மிகப் பெரியதாய் இருப்பதால்தான் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், வாசகர்கள் என்கிற மிகப் பெரிய எண்ணிக்கையிலான மனிதர்களையும் அது கொள்கிறது. அதனால்தான் எல்லோருக்கும் ஒதுக்க நேரமும், கொடுக்க இடமும் அவரிடம் இருக்கிறது. அது ஒரு கனிந்த பரந்த தமிழ் இதயம்.
இவ்வளவு வாசகர்கள் இருந்த போதிலும் அவரது முதல் வாசகன், முதன்மை வாசகன் நான்தான். என்னடா இது இப்போதுதான் அகந்தையை, தன்முனைப்பைத் தாக்கி விட்டு இவ்வளவு தன் முனைப்பு கொப்புளிக்கும் ஒரு கூற்று என்று நீங்கள் நினைக்கலாம். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். சொல்வனத்துக்கு அவர் எழுதுபவற்றின் கையெழுத்துப் பிரதியை முதலில் வாசிப்பது நான்தான். பின்னர்தான் அவை தட்டச்சு செய்யப் பட்டு பிரசுரமாகும். ஆக ஒரு சில எழுத்துக்களுக்காவது நான் முதல் வாசகன். இந்த மாதிரி ‘ ப்ரொடெக்டிவ் க்ளாஸஸ்’ ‘டிஸ்க்ளெய்மர்ஸ்’ இல்லாமல் அவரது முதன்மை வாசகன் நான் தான். ஏன் என்று இதோ சொல்கிறேன்.
மகரந்தம்
ஏதாவது செய்து கொண்டிருந்தால், உருப்படியாக முன்னேறுகிறோம் என நினைப்பது சகஜம். சும்மா வெட்டியாகப் பொழுதைப் போக்காமல், வேலையில் பிஸியாக இருந்தால், சாதிக்கிறோம் என அர்த்தமாகி விடுமா? அந்தக் கேள்வியை எடுத்துக் கொண்டு இந்தக் கட்டுரை கணித்துறை செயல்பாடுகளைப் பொறுத்திப் பார்க்கிறது.
எம்எஸ்வி – 1 இசையும் காலமும்
ஒரு ராகத்தின் ஸ்வரூபத்தில் நிற்பதும், அந்த ராகத்தைத் தெளிவாக நிறுவுவதும்தான் செவ்வியல் இசையின் முக்கியமான தேவை. அந்த ராகத்தின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தவும் சாகித்யகர்த்தா முயற்சிப்பார். திரையில் தோன்றும் காட்சி பார்வையாளர் மனதில் எழுப்பக்கூடிய உணர்ச்சிதான் திரையிசைக்கு மையம், அதன்பின்தான் ராக வியாபகம் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்தான் ராக இலக்கணத்தில் இல்லாத சுவரங்களை திரை இசையமைப்பாளர் சேர்த்துக்கொள்ள முடிகிறது. இது தவிர ஒரு ராகத்தின் அத்தனை இயல்புகளையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை திரையிசையமைப்பாளருக்கு இல்லை. காட்சிக்குத் தேவைப்பட்ட உணர்வை வெளிப்படுத்தினால் போதும். விளங்கிக் கொள்ள, ஐம்பதுகளில் வெளியான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களைப் பார்த்தால் இவற்றுக்கு இடையிலான வேறுபாடு புலப்படும்.
கைவிளக்காம் கடவுள் திங்கள்
எத்தனையோ துடர்பாடுகளுக்கு, மனசஞ்சலங்களுக்கு பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு ஆறுதலானச் சொல், ஒரு கனிவான பார்வை, சரியான வழி காட்டும் கரம், சட்டென கண்களில் படும் தேவாலயச்சுவர்களில் தென்படும் நம்பிக்கை வாக்கியம் எதுவாகிலும் அது கடவுள் திங்கள்தான் இல்லையா?
மதுவிலக்கு சாத்தியங்களும் நிதர்சனங்களும்
கடந்த சில வருடங்களாகவே, பல சமூக ஆர்வலர்கள், சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து மதுவிலக்கு பற்றி பேசி வந்தாலும், தமிழ்ச் சமூகத்தில் சமீபத்தில் நடந்த பள்ளி மாணவி மதுவருந்தி மயங்கிக் கிடந்த வீடியோ, 4 வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் காட்சி இன்னும் வேறு சில காட்சிகளும் இந்த மதுவிலக்கு வேண்டும் எனும் எண்ணத்திற்குப் பெரும் வலுவைச் சேர்த்திருக்கிறது.
குளக்கரை
பொது இடங்களில் குண்டு வைத்து மக்களைக் கொல்பவர்களை எப்படி அனுதாபத்தோடு அணுக முடியும்? அது சரியா? என்னதான் சொந்த வாழ்வில் பிரச்சினைகள் இருந்தாலும், முகம் தெரியாத, தன் வாழ்வோடு ஒரு சம்பந்தமும் இல்லாத சாதாரண மக்களைக் கொல்பவர்களுக்கு எதற்கு அனுதாபம் காட்டுவது? இத்தகைய கேள்விகளுக்கு அவரவர் அரசியல் சாய்வுகளைப் பொறுத்து விடைகள் எழும் என்பது ஒரு பக்கம் இருக்க, இதில் ஒரு சமுதாயத்தை அழிவிலிருந்தும், பெரும் சீரழிவிலிருந்தும் காக்க ஓர் அரசு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதும் இருக்கிறது.
ஒரு எக்ஸும் ஒரு ஒய்யும்
இதுபோலச் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த சிந்தனைக் கிளியின் கழுத்தை யாரோ சொலுக்கென்று திருப்பினார்கள். அவர் தான் தலையைத் திருப்பி வேகமாகக் கீழே அமிழ்த்து வைத்தார். லேசாக வலித்தது.
இன்னும் கொஞ்சம் (நிறைய) எம்.எஸ்.வி – கேட்டவரெல்லாம் பாடலாம்
பாலக்காட்டுக்கு அருகே எலப்புள்ளி எனும் கிராமத்தில் பிறந்த எம்.எஸ்.வி. தனது 25வது வயதில் 1953ல் ‘ஜெனோவா’ என்கிற படத்துக்கு முதன் முதலாக இசை அமைத்தார். பாடல்களைக் கேட்ட கதாநாயகன் எம்.ஜி.ஆர்., ஆபீஸ் பையனாக இருந்து இசை அமைப்பாளர் ஆன எம்.எஸ்.வி.யை வாழ்த்தி மேலும் பல சந்தர்ப்பங்களை அளிப்பதாக உறுதி கூறினார். 1955ல் திரையிசையைக் கேட்க ஆரம்பித்த எனக்கு சி. ஆர். சுப்பராமன், எஸ். வி. வெங்கடராமன், ஜி. ராமநாதன், எஸ். எம். சுப்பையா நாயுடு, தட்சிணாமூர்த்தி, ஆர். சுதர்ஸனம், ஆர். ராஜேஸ்வர் ராவ், ஆதி நாராயணராவ், சலபதி ராவ், கே. வி. மஹாதேவன் மற்றும் பலரின் இசையில் இசைத் தேடல் தொடர்ந்தது.
மெலிதான மர்மம் & மழை – சில குறிப்புகள்
இந்த அடை மழையிலும் துயிலும் அவன் கனவில்
மழை பெய்கிறதா?
எந்த மழை நிஜம் அவனுக்கு?
எண்ணெய்யும் தண்ணீரும்: எரிவாயு பிரச்சினைகள்
பத்து வருடங்களுக்கு முன் வேலை நிமித்தமாக நானும் ஒரு பிரிட்டிஷ் சக ஊழியரும் டென்மார்கில் உள்ள ஒரு சின்ன ஊரில் சில நாட்கள் கேம்ப் அடித்திருந்தோம். ஓரிரவு ஏதோ ஒரு ரெஸ்டாரண்டில் உணவருந்தியபடி பேசிக்கொண்டிருந்த போது பேச்சு எங்கெங்கோ போய்விட்டு எண்ணெய் எரிவாயு பக்கம் திரும்பியது. வடகடலில் (North “எண்ணெய்யும் தண்ணீரும்: எரிவாயு பிரச்சினைகள்”