Author: ஆசிரியர் குழு
மகரந்தம்
சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்திற்கு சென்று அங்கிருக்கும் புத்த மடாலயங்களில் தங்கிய அனுபவத்தை ஜெஃப்ரி பதிவாக்கி இருக்கிறார். உயிர் வதையே கூடாது எனும் கொள்கையில் நம்பிக்கையுடைய புத்த பிக்குகள் ஏன் தீக்குளிக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் ஆராய்கிறார்.
கருத்துப் படம்!
"இதற்குத் தற்கொலையே மேல்!”: கட்டாயத் திருமணத்தில் இருந்து தப்பியோடிய 11 வயது சிறுமியின் பேட்டி
ஷ்ர்மிளா தாகூர் எடுத்த சத்யஜித்ரே பேட்டி
சத்யஜித்ரே எடுத்த சிக்கிம்: ஆவணப்படம்
ஓவியமாகத் தீட்டப்பெறும் நிலவெளி
கோடு வந்ததும் ஓவியம் வந்ததா? ஓவியம் வரைந்ததால் கோடுகள் உருவானதா (கொடி அசைந்ததும் காற்று வந்ததா மெட்டில் பாடிக் கொள்ளவும்). இவை மிக எளிமையானப் புகைப்படங்கள். தீட்டப்பட்ட ஓவியங்கள் போல் காட்சியளிக்கின்றன. எல்லாமே ஜெருமானிய புகைப்படக் கலைஞர் டோபியால் ஹஸ்லரின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்டவை. நிலப்பரப்பில் காணப்படும் மிக நீளமான “ஓவியமாகத் தீட்டப்பெறும் நிலவெளி”
2013 நேஷனல் ஜியாகிரபி பயணியர் புகைப்பட போட்டி
இருபத்தைந்தாவது ஆண்டுகளாக நடக்கும் பயணப்புகைப்படங்களுக்கான நேஷனல் ஜியாகிரபியின் போட்டி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 15,500 ஒளிப்படங்கள் பங்குபெற்றன. பிரேசில், கென்யா, இந்தியா என உலகமெங்கும் சுற்றிய படக்கருவிகளின் சஞ்சாரத்தின் இறுதியில் எந்தப் படம் வெற்றி பெற்றது என்பதை இங்கே பாருங்கள். கீழே இருப்பது இரண்டாம் பரிசை வென்ற “2013 நேஷனல் ஜியாகிரபி பயணியர் புகைப்பட போட்டி”
மகரந்தம்
நார்வேயை சேர்ந்த பெண்மணிக்கு பதினாறு மாதம் கடுங்காவல் தண்டனையை துபாய் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. வேலை விஷயமாக மார்ச் மாதம் துபாய் வந்திருக்கிறார். உடன் பணியாற்றுபவரின் பாலியல் வல்லுறவில் இருந்து தப்பியோடி உதவி கேட்டிருக்கிறார்.
மஞ்சள் நதியின் மணல் குளியல்
இது ஃபோட்டோஷாப் அல்ல. முப்பது மில்லியன் டன் வண்டலை தன்னோடு அழைத்து வரும் சீனாவின் மஞ்சள் நதியில் படிவங்களால் நிறைய சிக்கல்கள் குடியேற்றங்களுக்கு நேர்கிறது. அதனால் சில ஆண்டுகளுக்கொரு முறை அவற்றை கடும் வேகத்தில் துளைத்து நீரால் அகற்றுகிறது சீன அரசாங்கம். அப்படி வெடித்துத் துளைத்துப் போகும் வண்டலைப் “மஞ்சள் நதியின் மணல் குளியல்”
டோக்கியோ கனவுகள்: சன்செட் படவிழா-2013 -பரிசு பெற்ற குறும்படம்
பருவங்கள் – ருஷிய அசைபடம்
மகரந்தம்
ஒரு பக்கம் சீனாவின் ‘வெட்டர் படை’யின் தாக்குதல்கள், இன்னொரு பக்கம் அமெரிக்காவின் ‘தோண்டுவார் படையின்’ தாக்குதல்கள். இதற்குத் துணை போகும் ரஷ்ய அரசின் உளவு நிறுவனங்கள், ரஷ்யாவின் பிரத்தியேக அளிப்பு- உலகுக்கு- குற்றக்கும்பல்களும் அவற்றுக்கு வேலை செய்யும் டெக்கி கும்பல்களும், பின் பிரிட்டிஷ், யூரோப்பிய உளவு நிறுவனங்கள், கொரியாவின் உளவு அமைப்புகள், ஏன் இந்தியாவின் சொத்தை அரசு கூட உளவு பார்க்கிறதாமே?
அமிர்தம் என்னும் நஞ்சு
பதேர் பாஞ்சாலி : மழை Pather Panchali the rain scene from சத்யஜித் ரே on பதேர் பாஞ்சாலி.
சூப்பர் பௌர்ணமி
2013 ம் ஆண்டில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்த தேதி ஜூன் 22. 23ம் தேதிதான் பௌர்ணமி என்றாலும் 22 அன்றுதான் சந்திரன் அத்தனை பெரிதாய் முழு நிலவாய் காணப்பட்டது. இனி இத்தகைய நிகழ்வு 2014 ஆகஸ்ட் மாதத்தில்தான். சூப்பர் மூன் என்று பெயர் சூட்டப்பட்ட இந்தப் “சூப்பர் பௌர்ணமி”
மகரந்தம்
ஷேன் வார்னின் முதல் பந்து – லெக் ஸ்டெம்பிற்கு வெளியே விழுந்தது. கேட்டிங்கும் மற்ற ஃபீல்டர்களும் அந்தத் திசையை நோக்கினார்கள்; நகர்ந்தார்கள். விழுந்த பந்து எழுந்த போது, நம்பவே முடியாத அளவிற்கு எதிர் திசைக்குத் திரும்பி ஆஃப் ஸ்டம்பைத் தொட்டது…
சொல்வனம் ஐந்தாவது ஆண்டில்..
சொல்வனத்தின் துவக்கத்திற்கும், இருப்பிற்கும், தொடர்ந்த வளர்ச்சிக்கும் உறுதுணையாய் இருக்கும் , புதிய வரத்துக் கால்வாய்களைச் சாத்தியமாக்கிக் கொண்டே இருக்கும் எழுத்தாளர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் குறிப்பாக – பல சமயங்களில் தாமதமான வெளியீடு, மேம்படுத்த வேண்டிய பிழை திருத்துதல் போன்ற களையப்பட வேண்டிய குறைகள் இருந்தும் – தொடர்ந்த ஆதரவு தரும் வாசகர்களுக்கு எங்கள் நன்றி.
மகரந்தம்
நாய் வளர்ப்பவரா நீங்கள்? என்ன வகை நாய் உங்களுக்குப் பிரியமானது என்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? சின்ன உருவுள்ள நாய்கள் வாழும் காலம் கொஞ்சம் அதிகம். பெரிய நாய்களின் ஆயுள் காலம் குறைவு. இதை மட்டும் கருதாமல், வாழும்போது வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது என்றும் கருதினால் என்ன ஆகும்? சிறு நாய்கள் ஆரோக்கியமாக வாழும் இடைவெளி பல வருடங்கள் கூடுதல். பெரிய உரு நாய்களின் ஆரோக்கியம் தொடர்ந்த நிதானமான சரிவாக உள்ளது.
வாசகர் மறுவினை
வைரம் பட்டை தீட்டப் படுவதைப்போல் என் கட்டுரையும் சிறப்பாக படங்கள் சேர்க்கப்பட்டு மிக அழகாகிவிட்டது.
முகப்பில் அந்த டிராகனின் கோர முகமும், முடிவில் அந்த சதுரங்கப் பலகையில் எதிரெதிராக நிற்கும் குதிரைகள் படமும் அருமை.
ரசனை மிக்க ஆசிரியர் குழுவுக்கு என் வந்தனங்கள்.
பூமியைச் சுற்றி
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ‘Time Lapse’ புகைப்படக்கலை நுட்பம் மூலம் சேகரிக்கப்பட்ட பூமியின் படக்கோர்வை.
வெடிக்கும் நொடி
அதி வேக புகைப்படக்கலையில் பல்வேறு பரீக்ஷார்த்தங்கள் செய்துவரும் ஜான் ஸ்மித், இங்கு பலவேறு பொருட்கள் திணிக்கப்பட்ட ‘பல்பு’களை தன் காமிரா முன் வெடிக்க வைத்து, சரியாக அவை வெடிக்கும் நொடிகளைப் பதிவு செய்திருக்கிறார்!
பசித்த பூமி
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த புகைப்பட வல்லுனர் பீடெர் மென்ஸெல், ‘Hungry Planet’ எனும் புத்தகத்துக்காக 24 நாடுகளுக்கு சென்று எடுத்த புகைப்படங்கள் இவை. சுடானில், நான்கு தலைமுறைகள் சாப்பிட 79 பவுண்டுகள் செலவு செய்யும் அபூபக்கர் குடும்பத்திலிருந்து 320 பவுண்டுகள் செலவு செய்யும் ஜெர்மானிய குடும்பம் வரை, உலகின் சராசரி “பசித்த பூமி”
சிறுவனும் அணுவும்
அணுக்களில் தகவல் சேமிக்கும் தொழில் நுட்பத்தைப் பற்றி ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கும் IBM ஆய்வகத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் ‘உலகின் மிகச் சிறிய’ படம் இது! இந்த தின் ஒவ்வொரு காட்சியையும், அணுக்களை ஒவ்வொன்றாக நகர்த்தி பல மில்லையன் அளவு பெரிதாக்கி உருவாக்கியிருக்கிறார்கள்.
வாசகர் மறுவினை
ஆரவார அரசியல், பகட்டான அடிமைத் தொழில் மோகம் என்று பலரும் சிந்தையற்றுக் கிடக்கையில் சிந்திக்க வைக்கின்ற கட்டுரை. இக்கட்டுரை ஆசிரியருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
மகரந்தம்
அச்சுப் புத்தகங்கள் நிறைய விற்கின்றன. இன்னமும் விற்கின்றன என்பது அதிசயம்தான் என நிறைய மேற்குலக கருத்தாளர்கள் அடிக்கடி சொல்கிறார்கள். அதே நேரம் முன்னெப்போதையும் விட ஏராளமான எழுத்தாளர்கள் இப்போது புத்தகங்களையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதித் தள்ளுகிறார்கள். நிறைய முழு நேர எழுத்தாளர்கள் இப்போதெல்லாம் புத்தகங்கள் எழுதித் தொழில் நடத்த முடியவில்லை, வேறு வேலைகள் செய்தபடி அவ்வப்போது ஒரு புத்தகம் எழுதலாம், அது ஏதோ சில ஆயிரம் பிரதி விற்றால் அதிகம். அதையும் பெரும் பிரசுரகர்த்தர்களிடம் கொடுத்தால் நமக்கு ஏதும் கிட்டுவதில்லை என்கிறார்கள். அதனால் நிறைய எழுத்தாளர்கள் புத்தகங்களைத் தாமே பிரசுரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
மாசுபடாத நீர்நிலைகள்
உலகின் அதிகரிக்கும் மக்கள் தொகையாலும் விரிவடைந்து கொண்டே போகும் விவசாய நிலங்களாலும், நாம் இழந்து வருவது நமது சுத்தமான நன்னீர் நிலைகளை ஆகும். அழிந்து வரும் நீர் நிலைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க, மைக்கேல் ரோகோ என்பவர் உலகின் பல இடங்களில் இன்னும் மாசுபடாது இருக்கும் நீர் நிலைகளை “மாசுபடாத நீர்நிலைகள்”
சத்தத்தின் நடனம்
கோயமுத்தூரில் ஒரு சிகிச்சைக்காக ஆர்ய வைத்யசாலாவில் தங்கி இருக்கையில் லால்குடி ஜயராமன் இயற்றிய யமன் கல்யாணி தில்லானா இது. இது உருவாகியதும் அந்த சந்தோஷத்தில் தனது சிஷ்யர்களுக்கெல்லாம் போஸ்ட் கார்டில் பாடல் வரிகளை அனுப்பினாராம். பின்பு 2011 ல் சௌடையா ஹாலில் அவரது மகள் விஜயலக்ஷ்மி லால்குடியின் தில்லானாக்களைக் “சத்தத்தின் நடனம்”
வாசகர் மறுவினை
சிவா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய ‘மணியம் செல்வன்’ சிறுகதை மிக நன்றாக இருந்தது. வர்ணணைகள் அனைத்தும் அருமை. மன ஓட்டத்தை அப்படியே படம் பிடித்து அவருடன் கூடவே பயணம் செய்தவர்போல உணர வைத்துவிட்டார். படைப்புகள் தொடர்ந்து எழுதவேண்டும்.
மகரந்தம்
இப்படி பள்ளி மாணவர்களை அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள் சில அமெரிக்கப் பல்கலைப் பேராசிரியர்கள். இந்த ஆய்வைப் பற்றிப் படித்தல் நமக்கு வியப்பு கூட எழலாம். இத்தனை எளிய கருத்து, இதை ஏன் வேறு யாரும் செய்யவில்லை?
வாசகர் மறுவினை
சி. சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு- பகுதி 8 இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டிகள் ஆசிரியருக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் அதே போன்று புதிய கண்டுபிடிப்பாளர்களை திறமையான இளைஞர்களை அறிமுகம் செய்து அவர்களையும் ஊக்கப் படுத்துங்கள்
மகரந்தம்
கடவுள் மன்னிக்கட்டும், தற்போது இந்தியா யுத்தத்தில் பங்கேற்க நேரிட்டால் அஸ்வினும் ஹர்பஜனும் போர் முனைக்கு செல்லுவார்களா என்பது சந்தேகமே.
ஆனால் இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின் பௌலர் யார்க்ஷையரின் ஹெட்லி வெரிட்டி (Hedley Verity) இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் தன்னிச்சையாக சேர்ந்தார்.
இந்தியாவின் பாரம்பரியக் கோவில்கள்
தமிழரின் பெருமைகளில் ஒன்றான 1000 ஆண்டு பழைமையான தஞ்சைப்பெரிய கோவிலின் கட்டுமானத்தை, சோழர் பாணி ஐம்பொன் நடராஜர் சிலை உருவாக்கத்தை, பெரியகோயிலின் உள்ளிருக்கும் பெரிய சுவரோவியத்தை, மகாபலிபுரம், ஸ்ரீரங்கம், என இந்திய கட்டட, சிற்பக்கலையை விளக்கும் ஆவண படம்.
பிஹு
அஸ்ஸாமிய புது வருடத்தையும் வசந்தத்தையும் வரவேற்கும் ரொங்காலி பிஹு கொண்டாட்டங்கள். பெங்கால், ஒரிசா, கேரளா, நேபால், பஞ்சாப், மணிப்பூர், தமிழ்நாடு என்று வெவ்வேறு மாநிலங்களில் இந்த புது வருட பிறப்பு வெவ்வேறு பெயர்களில் கொண்டாட படுகிறது. தமிழ்நாட்டில் இது சித்திரை முதல் தேதியில் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப் “பிஹு”
'டூடில்பக்' – க்ருஸ் நோலனின் குறும்படம்
ஒரு மனிதன், தன் அறையில் ஓடும் ஒரு பூச்சியை பிடிக்க பார்க்கிறான். தன் ஷூ-வை கழட்டி அதை அடிக்க முயல்கிறான். ஒருவழியாக அப்பூச்சி அகப்படுகிறது, ஆனால் அவன் தொடர தொடர காட்சி விபரீதமாக மாறுகிறது…
ஹோலி! – வண்ணங்களின் கொண்டாட்டம்
வசந்தத்தை வண்ணங்களைக் கொண்டு வரவேற்கும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களின் படங்கள் இங்கே.
மகரந்தம்
ஒரு புறம் ஆழ்கடலில் உள்ள மீன்களை கப்பல் கப்பலாக வாரி எடுத்து மாகடலில் உள்ள மீன் எண்ணிக்கையையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்ட உள்ள கடலேல்லாம் காலியான பின் பஸிபிக் மாகடல், இந்து மாக்கடல் என்று படையெடுக்கக் கிளம்பி இருக்கிறார்கள். இதன் நடுவில் யாரோ இரண்டு மூன்று அறிவியல் ஆய்வாளர்கள், நகர்களில் இருந்து நீர்நிலைகளில் கலக்கும் கழிவு நீரில் மனிதர் உட்கொண்ணும் மன அழுத்த நோய்க்கான மருந்துகளின் எச்ச சொச்சம் கலப்பது மீன்களைப் பாதிக்கிறது என்று அந்த மருந்துகளின் எச்சங்களை கழிவு நீரில் இருந்து அகற்ற வழி காண்கிறார்கள்.
வாசகர் மறுவினை
திரு பிரகாஷ் சங்கரனின் கட்டுரை தெளிவான மொழியில் மிகக் கடினமான ஒரு பொருளை திறமையுடன் தந்திருக்கிறது.
தமிழில் இத்தகைய கட்டுரைகள் தேவைகள் அதிகம், ஆனால் அரிதாகவே வருகின்றன. சமீபத்தில் ஒரு புத்தகத்தில் moving bodies என்ற ஆங்கிலச் சொற்கள் ‘இயங்கும் உடல்கள்’ என மொழிபெயர்க்கப்பட்டிருந்தன!
‘அடியிலிருந்து ஒளியூட்டுவது’ என்பது மிகப் பொருத்தமான சொற்றொடர். மொழிக்கும் அடியிலிருந்து ஒளியூட்டுவது மிகவும் அவசியம்.
வாசகர் மறுவினை
குமரன் எழுதிய “இசைபட வாழ்…”,அவரே குறிப்பது போல், நினைவுகளில் தோய்ந்த வண்ண ஓவியம் இதையே மீண்டும் மீண்டும் வாசிக்கையில், இதன் வடிவும் வண்ணமும் புதுப்புது முகம் காட்டும்.
2013 சோனி உலக புகைப்பட விருதுகள்
புகைப்படங்கள் 170 நாடுகளிலிருந்து வந்தன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
கடவுளை சந்திக்கிறார் ரிச்சார்ட் டாக்கின்ஸ்
ரிச்சார்ட் டாக்கின்ஸ் பிரபல நாத்திகர். அவர் இறந்த பிறகு கடவுளை சந்திக்கிறார். பிறகு…
மகரந்தம்
சமீபத்தில் ஃப்ரெஞ்சுப் படையினர், மாலி நாட்டிலிருந்து இந்தக் கும்பலை ஒழித்துக் கட்டவென்று ஒரு படையெடுப்பைச் செய்து அந்நாட்டின் பெரும் பகுதிகளிலிருந்து இவர்களை விரட்டி இருக்கின்றனர். கடந்த ஒரு வருடமாகப் பல நகரங்களைக் கைப்பற்றி இருந்த இஸ்லாமியவாதிகள் துரத்தப்பட்டு மக்கள் விடுதலை பெற்ற பின்னர் அந்த ஒரு வருட பயங்கரங்கள் வெளிவரத் துவங்கி இருக்கின்றன.
வாசகர் மறுவினை
உயிரின் அடிப்படை அலகான செல்கள் புதிய செல்களைத் தோற்றுவிப்பதற்காகப் பிளந்து பெருகுவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. புற்றுநோய்களில் செல்கள் இந்த ஆதாரமான கட்டுப்பாட்டை மீறி முடிவற்று பிளக்க ஆரம்பிக்கின்றன. இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களில் இந்த கட்டற்ற செல் பிளவு உண்டாகும் போது அது இரத்தப் புற்றுநோய் எனப்படுகிறது.
காலம், தேசம், புகைப்படம்
தினம் ஒரு புகைப்படமென்ற கணக்கில் உலகின் பல நாடுகளின் சுவரஸியமான தருணங்கள் இந்த பக்கத்தில் கிடைக்கின்றன. காலம், தேசம் கடந்த மக்களின் வாழ்க்கை இதில் பதிவாகியுள்ளது.
கடைசி Kodachrome படச்சுருளும், ஸ்டீவ் மக்கரியும்
தற்போதைய டிஜிடல் புகைப்படக்கருவிகளின் மூதாதைகளை நாம் அறிந்திருப்போம். அந்த மூதாதைகளை உயிர்ப்புடன் வைத்திருந்தவை Kodachrome படச்சுருள்கள். Kodak நிறுவனம் இந்த Kodachrome படச்சுருள்களை தயாரிப்பை கைவிடுகிறது. தன்னுடய தொழிற்சாலையில் தயாரான் இத்தகைய படச்சுருளின் கடைசி சுருளை உலகின் பிரபலமான புகைப்படக் கலைஞரான ஸ்டீவ் மக்கரியிடம் அளித்து, அந்த கடைசி “கடைசி Kodachrome படச்சுருளும், ஸ்டீவ் மக்கரியும்”
மகரந்தம்
பல நூறாண்டுகளாக உலகில் பல வெள்ளையரல்லாத மக்களைக் கொன்று, மதம் மாற்றி, அடிமைகளாக்கி, கொடுங்கோல் ஆட்சி நடத்தி, எத்தி, சுரண்டிச் சேர்த்த பெரும் செல்வம் யூரோப்பியரைப் பாதுகாக்கவில்லை. உலகெங்கும் ஏகாதிபத்தியத் திமிரில் போர்களை நடத்தி, லத்தீன் அமெரிக்க மக்களைக் கொடுங்கோலர் ஆட்சியில் ஆழ்த்தி அந்நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டிச் சேமித்த பெருந்தனம் அமெரிக்கர்களைப் பாதுகாக்கவில்லை. சீனாவிலோ இன்று வேலையில்லாத் திண்டாட்டம் அல்ல பெரும் பிரச்சினை. அங்கு ‘Sectoral imbalance’ என்று பொருளாதாரத்தில் சொல்வார்கள். அதை ஒரு பிரச்சினையாகப் பார்க்க முடிகிறது.
மகரந்தம்
திராட்சைத் தோட்டங்களில் இருந்து உயர்தரத் திராட்சைகளைத் திருடுகிறார்கள். இவை மிக உயர்தர மது தயாரிக்கவென அரும்பாடுபட்டு வளர்க்கப்படுபவை. தவிர தேன் கூடுகளைத் திருடுகிறார்கள். அது தேனுக்காகவா? இல்லை. தேன் கூடுகளில் உள்ள தேனீக்களை அமெரிக்காவில் வாடகைக்கு விடுவார்கள். பழத் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கை இல்லாது மரங்களில் பழங்கள் விளையாதாமே, அதற்கு தேனீக்கள் தேவை.
சுவாமி விவேகானந்தர் – 150 வருடங்கள்
சென்ற 12-ஆம் தேதி (12-1-2013) அன்று சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளாகும். விவேகானந்தர் குறித்ததொரு அரிய ஆவணப்படத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.
அகச்சிவப்பு ஒளிப்படங்கள்
David Keochkerian என்பவர் எடுத்திருக்கும் அசாத்தியமான வண்ணச்சேர்க்கையை வெளிப்படுத்திய அகச்சிவப்பு ஒளிப்படங்களின் தொகுப்பை ஸ்லேட் இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.
இரு இலக்கிய விருதுகள் – 2012
மூத்த படைப்பாளிகளான நாஞ்சில் நாடன் அவர்களும், தேவதேவன் அவர்களும் முறையே கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ஆம் ஆண்டுக்கான இயல் விருதும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். நாஞ்சில் நாடன், தேவதேவன் இருவருக்கும் சொல்வனம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மூத்த படைப்பாளிகளைத் தொடர்ந்து கெளரவித்து வரும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இரு அமைப்புகளுக்கும் சொல்வனத்தின் வாழ்த்துகள்.
மகரந்தம்
சீனாவில் இருந்து தேன் அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகிறதாம். அதுவும் அதை இந்தியாவிலிருந்து கொணரப்படும் தேன் என்று பொருளின் மூலத்தை மாற்றி, மறு முத்திரையிட்டு, கடத்தப்படுகிறது. எதற்கு, தேனை திறந்த சந்தையில் விற்கத்தான் அனுமதி இருக்கிறதே, இதிலென்ன கடத்தல்? சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா இப்போது வரி விதிக்கிறது. இறக்குமதி வரியைக் கொடுக்க அமெரிக்க வியாபாரிகளும் தயாரில்லை, ஏற்றுமதியின் விலையை இப்படி அதிகரிக்க சீனர்களும் தயாரில்லை. விளைவு இந்தியாதானே ஏமாளி, அதன் பெயரைப் பயன்படுத்தி இந்தியாவின் தேனாக அமெரிக்கச் சந்தையில் சீனத் தேனை விற்க ஏற்பாடு.
