யமுனை சீராகப் பாய்கிறது

“ரவி, உங்களுடைய அந்த நேர்மையான கோபத்தைப் பார்த்து உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒரு விமர்சகர், ஒரு கவிஞர். வாழ்க்கையை நீதி ,அநீதி என்று பிரித்துப் பார்ப்பீர்கள். அவசியமற்ற மதிப்புகளை வாழ்க்கையோடு இணைத்துப் பார்ப்பீர்கள். நான் விமர்சகன் இல்லை. வாழ்க்கையை நான் அப்படியே எதிர் கொள்வேன் ; அதனோடு ஒட்டிக் கொள்வேன் ; நான்தான் வாழ்க்கை. ரவி, உங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்”

வெள்ளைக் குழந்தை

அம்மாவின் குரல் தன் காதுகளில் எதிரொலிப்பது போல அவன் உணர்ந்தான்.எழுந்து உட்கார்ந்து காதுகளைத் தேய்த்துக் கொண்டு விட்டு மீண்டும் படுத்தான். வீடு, சுற்றுப்புறம், மாஸ்டர், எஜமானி என்று அவர்கள் மனதில் வந்துபோய்க் கொண்டிருந்தனர். மனம் போராடிக் கொண்டிருந்தது. எப்படித் தப்பிப்பது என்று இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு வழியும் கிடைக்கவில்லை.

அந்தக் கீழ்நிலைப் பெண் பணியாளர்

அவள் உடலுக்குச் சாப்பாடு தேவையாக இருந்தது; ஆனால் வேறு ஏதோவும் தேவையாக இருந்தது —அன்பு, வாத்சல்யம்— மனதுக்கும், உடலுக்கும் தேவைப்பட்டன. அந்தப் பாட்டியிடமிருந்து அவையும் அவளுக்குக் கிடைத்தன. அவளுடைய இடத்தில் வேறொருவர் இருந்தால், அந்த நிறைவேற்றத்தின் விளைவுகள் முழுமையாக வெறுக்கத் தக்கவை என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் ஒருவர் பசியால் வாடும் போது, ஒருவர் விஷம் கலந்த உணவு தந்தால் அதைச் சாப்பிட்டு இறப்பது பரவாயில்லை.

சோற்றுப் பொட்டலம்

பசியையும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வியர்க்க, விறுவிறுக்க தங்கள் வகுப்பறைகளுக்குள் வந்தனர். கஞ்சி அல்லது சோறு சாப்பிட்டு விட்டு வந்திருந்த அதிர்ஷ்டவசமான குழந்தைகள், வீட்டில் எதுவும் அன்று சமைக்கவில்லை என்று தெரிந்தே வந்திருந்த அதிர்ஷ்டமற்ற குழந்தைகள் என்று எல்லோரும் உட்கார, பெஞ்சுகள் நிரம்பின. சோற்றுப் பொட்டலங்களச் சாப்பிட்ட குழந்தைகள் திருப்தியாகவும், சாப்பாடு இல்லாத குழந்தைகள் பக்கத்திலுள்ள கிணற்றுத் தண்ணீரில் வயிற்றை நிரப்பிக் கொண்டும், தங்களிடத்தில் உட்கார்ந்து கொண்டனர்.

சகுனம்

எனக்கு முன்னால், நடைபாதையில்,ஓர் இளம் ஜோடி. அந்த இளைஞன் பேசிக் கொண்டிருந்தான். அவன் நல்ல உயரம். அவளுடைய நீண்ட கழுத்து.. வட்டமான கழுத்து, அவன் உதடுகளால் அதை எட்ட முடியவில்லை. அவன் என்ன சொல்கிறானென்று அவள் கவனிக்கவில்லை. பஸ் இன்னும் கொஞ்சம் முன்னால் நின்றிருக்கலாம். அவர்களால் இன்னும் கொஞ்சம் இந்தப் பக்கம் நகர்ந்திருக்க முடியும். அப்படியிருந்திருந்தால், அவன் என்ன பேசினான் என்பதை நானும் கேட்டிருக்க முடியும்

இலக்கு – சேது

நீ என்ன அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் ’ரத்தத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் ’ என்பது போலான வார்த்தைகளைச் சொல்லும் போது நீ மிகக் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாட்களில் எல்லாவற்றிற்கும் இயந்திரம் இருக்கிறது. ஒருவேளை சிறிய அளவு ரத்தம் இரண்டு பேரிடமும் எடுக்கப்பட்டு, இயந்திரம் மூலம் சோதிக்கப்படுகையில் இரண்டு பேரும் வெவ்வேறு குல மரபினர் என்று கண்டறியப்பட்டால் என்னாகும்?

 உங்கள் கதை [ என்னுடையதும் ]

அந்த வார்த்தைகளே எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அது உண்மைதான். அவன் மீது அன்பு காட்ட யாருமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே தாய் இறந்து விட்டாள். அவன் தந்தை, மத்தாய் மாப்பில்லா ஒரு குடிகாரன். அவருக்கு இன்னொரு மனைவியும், குழந்தையுமுண்டு. அவர்களுக்குப் பவுலோசைப் பிடிக்காது. அப்பா குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, அவனை விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து தாறுமாறாக அடிப்பார் என்று என்னிடம் சொல்லியிருக்கிறான்.

மர பொம்மைகள்

“இல்லை, ஆனால் ஏன்  மிக அற்புதமான அழகு என்று நீங்கள் சொன்னீர்கள்? அவை விற்பனைக்காக இல்லை. அவை என்றாவது ஒரு நாள் பயன்படலாம். என்னைப் பற்றி தெரியாதவர்கள் கையில் இந்த பொம்மைகள் கிடைக்கும் போது விலைமாதால் காட்சிப்படுத்தப் பட்ட பொருட்கள் என்று அவர்கள் அவற்றைப் பரிகாசம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்”

கருப்பு எஜமானி

இலக்கின்றி நடந்தாள்; தாழ்வாரம், அறைகள், சமையலறை என்று
எங்கும். ..கண்கள் பொறுமையின்றி கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தன,
அதற்கு அப்பாலும். சூரிய கதிர்கள் நடனமாடுகிற வயல் வெளியிலும்,
அதற்கு அப்பாலும், அவள் மனம் மட்டுமே போகிற இடமாய் ;
சிறுமியின் பாதங்கள் சிறு அடி எடுத்து வைக்கும் நடைபாதைக்கு
அப்பால், வேலிக்கு அப்பால் பரந்திருக்கும் வயல் வெளியில், தொலை
தூரத்தில் தன் மகள் நடந்து வருவதை பார்க்க முடிந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும்.

ஹெட்மாஸ்டர்

கமலா பெட்ரூமைத் தாளிட்டு விட்டு படுத்திருந்தாள். சோர்வோடும்,
நடுக்கத்தோடும், சாவின் விளிம்பை உரசிவிட்டு வீடு திரும்பியிருந்த
அவருக்கு ஓர் அருமையான வரவேற்பைத்தான் அவர் மனைவி
தந்திருக்கிறாள். முழு இரவும் ஹாலிலேயே படுத்திருந்தார். அந்த
அமைதியான குற்றச்சாட்டு அவரை வறுத்தியெடுத்தது. அவருடன் பணி
புரியும் அந்தப் பெண்ணிற்கு உடல் நலமில்லை. நடுங்கிக் கொண்டிருக்கும்
அந்தப் பெண்ணை அவர் அணைத்தபடி அழைத்து வந்தார்

ஏங்குதல்

அவளுடன் வெகுகாலம் உரையாடிய போதிலும்
இன்னும் சில காலம் உரையாடிக் கொண்டிருந்திருக்க எனக்கு ஆசை,
ஏற்கெனவே தான் பெருக்கி முடித்திருந்த
வீட்டின் முற்றத்தையும், சுற்றுப் புறத்தையும்
இரண்டு மூன்று முறைகளுக்கும் மேலாய் பாட்டி
பெருக்கிக் கொண்டிருந்ததைப் போல.

ஏழாவது மலர்

இளம்பருவத்தில் ஒரு கன்று குட்டியின் மீதேறி சவாரி செய்த கதையைச் சொன்ன போது அவள் சிரிப்பில் குலுங்கினாள். வெளிநாட்டில் வேலை தேடிய போது அடைந்த துயரங்களைச் சொன்ன போது அவள் கண்கள் கலங்கின.தன் பத்திரிக்கை துறை அலுவலகத்திலுள்ள நீண்ட கூந்தலை உடைய இளம்பெண்ணின் மீதான காதலைச் சொன்ன போது கீழுதட்டைக் உதட்டை கடித்துக் கொண்டாள்.லேசாக இரத்தம் வந்தது.

மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு

என் அப்பா அப்படிப்பட்டவரில்லை. பெரிய நகரங்களிலிருந்து வரும் தொழில் வல்லுனர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உண்டியலில் போடும் பணத்தை ஒவ்வொரு காசாக எண்ணி, சரிபார்த்து கோயில்
நிர்வாகிகளிடம் ஒப்படைத்து விடுவார். நிர்வாகிகள் அந்தப் பணத்தில்விளைச்சல் நிலங்களும், பெரிய பங்களாக்களும் வாங்கிச் செல்வந்தர் ஆனார்கள். பணத்தைக் கண்டு எரிச்சலடையும் என் அப்பா வறுமையான பூசாரியாகவே இருந்து விட்டார். தான் இறக்கும் கடைசி நாள்வரைஅவர் பூஜை செய்தார்.

விற்பனை

எம்.டி வாசுதேவன் நாயர் தமிழில்: தி.இரா.மீனா அந்தப் பெரிய நகரத்தின் பூகோளம் அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. .போனில் தரப்பட்டிருந்த விவரங்களைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதாக இல்லை.சித்தி விநாயகர் கோவிலின் அருகிலிருந்த பஸ் நிலையத்தில் இறங்கிய பிறகு, கடற்கரைக்கு அருகிலுள்ள சாலை அதுதானா என்பதைப் பொருத்தமான சில கேள்விகளால் “விற்பனை”