- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- இறை நின்று கொல்லுமோ?
- காணும் பேறைத் தாரீரோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை
- நெஞ்சம் மறப்பதில்லை
- நிலவினும் நெடிது!
- இடம் மாறினும் மணம் மாறுமா?
- காவலும் தாண்டுவது காதல்
- பனிவிலகலில் அக்கரை வெண்மை
- எனக்கெனவே மலர்ந்தாயோ?
- விழியிலிருந்து நினைவுக்கு
- உள்ளும் புறத்தும் தனிமையே!
- காதல்மொழிகள் கடலலை போலே!
- கேட்டதும் கிடைத்ததும்
- துள்ளிவரும் வெள்ளலையே!
- இடம்பெயரும் புள்ளினங்காள்!
- மைக்குழற் செறிவன்ன காதல்
- துயரறுத்தலே துயரமோ?
- உள்ளத்தில் உள்ளேனா?
- தூவானமும் வெண்வானமும்
- ரகசியமானது காதல்
- உடைகளும் சுமையடி தனிமையிலே!
- காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!
- துன்பம் போக்குவதே தூயப்பணி
- எரிதழல் உள்ளம்
- துயர்சூழ் உலகில் தனிமை

மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
いにしへの
奈良の都の
八重桜
けふ九重に
にほひぬるかな
கனா எழுத்துருக்களில்
いにしへの
ならのみやこの
やへざくら
けふここのへに
にほひぬるかな
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: சேடிப்பெண் இசே
காலம்: கி.பி. 11ம் நூற்றாண்டின் நடுப்பகுதி. பிறப்பு இறப்பு தெரியவில்லை.
இத்தொடரின் 49வது பாடலை (விளக்கன்ன ஒளிர்தலும் தணிதலும்) இயற்றிய புலவர் யொஷினொபுவின் பேத்தி இவர். 19வது பாடலை (எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?) இயற்றிய பட்டத்தரசி இசேவும் இவரும் வெவ்வேறானவர்கள். 57வது பாடலின் ஆசிரியரான முராசாகி ஷிகிபுவை அடுத்துப் பேரரசர் இச்சிஜோவின் அரண்மனையில் பட்டத்தரசிக்குச் சேடிப்பெண்ணாக இருந்தார். அப்போதெல்லாம் அறிவிற் சிறந்தவர்களை அரசியர் தம் பணிப்பெண்களாக அமர்த்திக்கொள்வது வழக்கமாக இருந்தது. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 51 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்கள் வரிசையிலும் 36 பிற்காலப் புலவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
பாடுபொருள்: நராவிலிருந்து கொண்டுவரப்பட்ட சக்குரா மலரின் சிறப்பு.
பாடலின் பொருள்: முந்தைய தலைநகர் நராவை அலங்கரித்துக் கொண்டிருந்த இந்த எட்டடுக்குகள் சக்குரா மலர் தற்போது ஒன்பதடுக்குகள் கொண்ட இவ்வரண்மனையை மணம் மாறாமல் அலங்கரிக்கிறது.
கி.பி 784ல் தலைநகரானது நராவிலிருந்து கியோத்தோவுக்கு மாற்றப்பட்டது. பேரரசர் இச்சிஜோ ஆண்டுகொண்டிருந்தபோது ஓர் அதிகாரி மன்னருக்குப் பரிசாக நராவிலிருந்து எட்டடுக்குகள் கொண்ட சக்குராவின் (செர்ரிப்பூ) மரத்தைக் கொண்டுவருகிறார். பெரும்பாலும் சக்குராவானது ஐந்து இதழ்களைக் கொண்டிருக்கும். எட்டு இதழ்களைக் கொண்ட சக்குராவும் ஆங்காங்கே உண்டு.
அப்போது அந்தப் பரிசை அரண்மனையில் யார் பெற்றுக்கொள்வது என்ற கேள்வி வந்தபோது அப்போதுதான் புதிதாகப் பணியிலமர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசவையிலிருந்த அமைச்சர் மிச்சிநாகா இதைப்பற்றிக் கவிதை புனையுமாறு கூறினார். சற்றே அதிர்ச்சியுற்ற இவர் துணிந்து உடனடியாக சக்குராவின் எட்டடுக்குகளை அரண்மனையின் ஒன்பதடுக்குகளுடன் இணைத்து இப்பாடலை இயற்றி அனைவரது பாராட்டையும் பெற்றார். தலைநகரானது ஒன்பதடுக்குப் பாதுகாப்பால் சூழப்பெற்றுள்ளது என்றும் அரண்மனை ஒன்பது வாயில்களைக் கொண்டுள்ளது என்றும் இருவிதமாகப் பொருள்கொள்கிறார்கள்.
வெண்பா:
வேறிடம் சேரினும் சீர்மிகு செல்வமும்
சாறின்றி நல்லவும் சேர்க்கவே – ஆறினும்
நல்மங்கை அன்ன பிறப்பிடம் மாறினும்
நன்மணம் மாறா மலர்
சாறின்றி – குறைவின்றி
பொய்யால் அடையுந்தாழ்
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
夜をこめて
鳥のそらねは
はかるとも
よに逢坂の
関はゆるさじ
கனா எழுத்துருக்களில்
よをこめて
とりのそらねは
はかるとも
よにあふさかの
せきはゆるさじ
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: புலவர் செய்
காலம்: கி.பி. 966-1027 (கிபி 965-1025 என்றும் கூறுகிறார்கள்).
இத்தொடரின் 42வது பாடலை (மறவேன் பிரியேன் என்றவளே!) இயற்றிய புலவர் கியோஹராவின் மகளும் 36வது பாடலை (கோடைநிலா எங்கே?) இயற்றிய புலவர் ஃபுகாயபுவின் பேத்தியும் ஆவார். முந்தைய பாடல்களின் ஆசிரியர்கள் முராசாகி ஷிகிபு, இசே ஆகியோரை அடுத்துப் பேரரசர் இச்சிஜோவின் அரண்மனையில் பட்டத்தரசிக்குச் சேடிப்பெண்ணாக இருந்தார். இவரது சமகாலத்தில் மிகுந்த அறிவாளியாகப் போற்றப்பட்டவர். பல தலைமுறைகளாகப் புலவர்களாக இருந்த குடும்பத்தில் பிறந்தவர் ஆதலால் இவரது புலமை பல பாடல்களில் வெளிப்படும். முராசாகி ஷிகிபுவுக்கும் இவருக்கும் புலமைப்போட்டி இருந்துகொண்டே இருந்தது. ஷிகிபு தனது நாட்குறிப்பு இலக்கியத்திலும் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
இவர் புலமையும் அழகும் நிரம்பியவர் ஆதலால் இத்தொடரின் 9வது பாடலை இயற்றிய புலவர் கொமாச்சி ஓனோவுடன் ஒப்பிட்டு வந்தனர். ஒவ்வோர் ஆண்டின் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிறன்றும் ஹனேசு ஒதோரி என்றொரு நடனம் கொமாச்சியைப் போன்று அலங்காரம் செய்துகொண்ட பெண்களால் ஆடப்பட்டு வருகிறது என்று பார்த்தோமல்லவா? அதில் இவர் காலத்தில் கொமாச்சியாக நடித்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 15 பாடல்களும் ஒரு தனிப்பாடல் திரட்டும் தலையணைநூல் என்ற கவிதைகள், துணுக்குகள், கதைகள் அடங்கிய பல்சுவைத் தொகுப்பும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்கள் வரிசையிலும் 36 பிற்காலப் புலவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
பாடுபொருள்: காதலரின் பொய்யால் முடிவுற்ற காதல்.
பாடலின் பொருள்: என்னைப் பிரியும்பொருட்டு சேவல்போல் கூவி விடிந்துவிட்டது எனக்கூறியதால் சுங்கச்சாவடியின் கதவு வேண்டுமானால் திறக்கலாம்; ஆனால் என் இதயக்கதவு ஒருபோதும் உனக்காகத் திறவாது.
இந்தப்பாடல் ஒரு பழங்காலச் சீனக்கதையுடன் தொடர்புடையது. இளவரசன் மெங்லியாங்ஜுன் க்யின் மாகாணத்துக்குள் நுழைந்ததால் தன் வீரர்களுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அடுத்தநாள் காலை விடிவதற்கு முன்பாகவே வீரர் ஒருவர் சேவலைப்போல் கூவவே, சுங்கச்சாவடியின் அதிகாரி விடிந்துவிட்டது என எண்ணிக் கதவைத் திறந்துவைக்கிறார். இளவரசனும் வீரர்களும் அதன்வழியே தப்பி விடுகின்றனர்.
அரச குடும்பத்துக் காதல்களில் காதலியின் இல்லத்தில் காதலன் விடியும்வரை தங்கியிருப்பார் என்று பார்த்தோமல்லவா? ஆனால் யுக்கிநாரி என்னும் அதிகாரி இவரது இல்லத்தில் தங்குவதற்காக வந்தபோது கருத்து வேறுபாடு அல்லது வேறு ஏதோ காரணத்தால் நடு இரவிலேயே வெளியேற விரும்புகிறார். எனவே சேவலைப்போல் கூவி விடிந்துவிட்டது என்றுகூறி வெளியேறிவிடுகிறார். அடுத்தநாள் காலை அவர் அனுப்பிய நன்றிக்கவிதைக்குப் பதிலாக இப்பாடலை இயற்றினார் புலவர் செய். சேவல் கூவியதாகப் பொய் கூறியதால் உன்னை நான் மீண்டும் சந்திக்க விரும்பவில்லை என்கிறார்.
வெண்பா:
விடியல் வருகுதெனச் சேவலாய்க் கூவிக்
கடிதம் எழுதினை நின்பால் – ஒடியும்
இதயமே கொண்டேன் குலவ விரும்பிலேன்
பொய்யால் அடையும் கதவு
(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
