நிழல்களின் ஓலம்

முகப்புக் கண்ணாடியில் படர்ந்திருந்த நீர்திவலைகளின் நிழல்கள் தனது புறங்கைமேல் புள்ளிகளாய் அதிர்வதை, புழுக்களாய் நெளிவதைக் கண்ட முத்தப்பன் அரைக்கணம் விழிமூடி பெருமூச்செடுத்தான். பிறகு அவர் யாராக இருந்தாலும், அவரது நோக்கம் எத்தனை இருண்டதாக இருந்தாலும், இந்த சில நிமிடங்களை சகித்துக்கொள்வதே உகந்தது என்கிற முடிவை நிர்மாணித்து ஸ்திரப்படுத்திக் கொண்டான். இவரையும், இச்சூழலையும் விட்டு அகன்ற கணமே அகத்தின் அனைத்து நமைச்சலும் மறைந்துவிடும்.

ஓர் வார்த்தை & அன்பின் அளபெடைகள்

அத்தனை நியாயங்களையும்
அசாதாரணமாய் ஓர் வார்த்தை
எதிர்க்கும் ….

விரலிலிருந்தும் இதழிலிருந்தும்
விழும் முன் வார்த்தைகள்
விழுந்த பின் வெறும் எச்சங்கள்…

ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது

“ இவர்கள் இருவரையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தமிழில் தோன்றிய பக்தி இலக்கியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் கணேசா. பக்தி இலக்கியம் ஆரம்பித்தது பல்லவர் காலத்தில் இருந்து தான் என்று நான் நினைக்கிறேன். வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இலக்கியத்தின் மூலம் சமய மறு மலர்ச்சி ஏற்பட்டது. சமண, புத்த மத தாக்கங்களில் இருந்து, சைவ, வைணவ மதத்தை மறுமலர்ச்சி செய்ததில் தமிழ் பக்தி இலக்கியங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதில் முன்னோடியாக இருந்து ஆரம்பித்து வைத்தவர் அப்பர் என்று அழைக்கப் பட்ட இந்த திருநாவுக்கரசர் சுவாமிகள் தான்.

குடப்பாம்பில் கைவிட்டான்

முற்றத்தில் நுழைந்தவுடன் கண்ணெதிரில் சிறு மண்டபத்தில் சீதா சமேதராக இராமபிரான் கொலுவிருக்கப் பக்கத்தில் லட்சுமணனும், கீழே கைகட்டி வாய்பொத்தி மிக பவ்யமாக ஆஞ்சநேயரும் அருள் பாலித்தனர். நாள்தோறும் இடைவிடாமல் நடக்கும்  பூஜைகளும் அப்போது ஒலிக்கும் பாடல்களும் கண்ணுக்கும் செவிக்கும் இன்பமளித்துக் கொண்டே இருக்கும்.

ஜூலை பாடல்கள்

இமைகளைக்
காவல் வைத்தேன்.
ஆனாலும்
என் விழிகளுக்கு தெரியாத
என் விழிகள்
எனக்குத் தெரியாது
என்னைக் கண்காணிப்பது

உங்க வீட்ல தங்க விளைய..

போதும், கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா,   அழுகை. மேல படிக்கணும்னு. எட்டாவது  முடிச்சோன்னயே, படிப்பை நிறுத்திட்டு   கல்யாணம் பண்ணிடலாம் சொன்னேன். வேணாம்னு சொல்லிடாக. இப்ப பாருங்க. மாப்பிள தேடினா கிடைக்க மாட்டேங்குது. மளிகை கடை வச்சிருக்க நம்ம சொந்தகார பையனை முடிச்சிடலாம்னு பாத்தா, படிச்ச புள்ள மளிகை கடையில உக்காராதுனு என்கிட்டயே சொல்றான்.”

காதல்

அப்படி இல்லை. திமிர்த்தனம் மீதான என் பார்வை வேறு. அறிவு இருக்கும் இடத்தில் செருக்கு இருக்கும். ஆனால், இந்த செருக்கு தான் ஒரு கடிவாளம் போல செயல்படும். உன் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. நீ இத்தனை காலமும் கைபடாத ரோஜாவாக இருக்கிறாயெனில் அதற்குக் காரணம் அந்தக் கடிவாளம் தான். எனக்கு விர்ஜின் பயல்களைப் பிடிக்கும். தவிரவும், உன் போன்ற அதிபுத்திசாலிகளைக் கண்டால் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் அளவிற்குப் பிடிக்கும். விளைவுகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. தவிரவும், இன்னும் முப்பது வருடம் நாம் ஒன்றாக பயணிக்க இருக்கிறோம். உனக்கும் என்னை விட்டால் வேறு மார்க்கமில்லை. பேசாமல் காதலிக்கலாமே?” என்றாள் காமினி தொடர்ந்து