இந்தியாவில் சிலரது உயிருக்கு இன்று மதிப்பில்லை; அன்றாட வாழ்வை இவர்கள் பயத்துடனும் வேதனையுடனும் வெளிக்காட்ட முடியாத கோபத்துடனும்தான் கடத்த வேண்டியிருக்கிறது என்பதுதான் இந்தியாவின் இன்றைய மிகப் பெரிய சோகம்.இந்தப் புத்தகத்தில் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்ந்தவற்றை நினைவு கூர்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சிலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு சம்பவங்களை அலசி ஆராய்ந்து இந்திய வாழ்வின் அடிப்படை என காலங்காலமாகச் சொல்லப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வரும் சிலவற்றை கேள்விக்குள்ளாக்குகின்றார்கள்.