கவி பாஸன் எழுதிய ஸ்வப்ன வாசவ தத்தா – 2

This entry is part 1 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

என் மகளை பெண் கேட்டு வரும் இந்த அரசர்கள் காலில் விழுந்து வணங்க  கூட தயாராக இருக்கிறார்கள். ஏனோ அதில் என் மனம் மகிழ்வதில்லை. வத்ஸராஜன் வருவதைத் தான் எதிர் நோக்கி இருக்கிறேன். குணவான், யானைகளின் பரி பாஷை அறிந்தவன், அறிவுள்ளவன். அவன் தான் எனக்கு மருமகனாக ஆக தகுதியுடையவன். 

கவிஞர் பாசனின் ஸ்வப்ன வாசவதத்தா – 1

This entry is part 2 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

ஸ்வப்ன வாஸவ தத்தா என்ற இந்த நாடகம், அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த ஒரு கதையின் அடிப்படையில் எழுதப் பட்டது என்று அறிகிறோம். உதயனன், பத்மாவதி என்ற இருவரின் கதை இது. அவர்களின் சந்திப்பும், வாழ்க்கையுமே கதையின் அடிப்படை.   வத்ஸ என்ற ப்ரதேசத்து ராஜா உதயனன். அவன் மனவி வாஸவதத்தா. யௌகந்தராயன் என்ற மந்திரி.  இந்த நூலுக்கு முன்னோடியாக யௌகந்தராயன் என்ற பெயரில் ஒரு நாடகம் இந்த கவியே எழுதியுள்ளார்

ஸ்வப்ன வாசவ தத்தா – 3

This entry is part 3 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

சகே, ருமன்வான், வாசவதத்தா இல்லாமல் அரசர் கௌசாம்பி வர மாட்டார். இந்த வேஷம் இருக்கட்டும். நாம் சாதாரண பிரஜைகள். அரசரிடம் கொண்ட அபிமானத்தால் யோசிக்கிறோம். புல் படுக்கையில் படுப்பவன் அரச போகங்களை உயர் தர சயனாசனங்களை நினைத்து பார்க்க கூட முடியுமா? அரசனுக்குரிய பட்டு ஆடைகளை, விரிப்புகளை எண்ணித் தான் பார்ப்பானா? நம் வரையில் திட்டமிட்டோம். ஸ்வாமி ஜாதி- செல்வந்தர்கள் வழி.  சிறைக்குள் இருப்பவனுக்கு மோகம் வரச் செய்வதில் கந்தர்ப்பனுக்கு என்ன ஆனந்தம் ? 

ஸ்வப்ன வாசவ தத்தா – 4

This entry is part 4 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

எங்கள் வத்ஸ ராஜன் பிரசித்தமான ராஜ குலத்தில் வந்தவன்.  ராஜ தர்மம் அறிந்தவன். யுவதியான ஏதோ ஒரு பெண்ணை மாணவியாக ஏற்று, பின்  அவளை பாணிக்ரஹணம் செய்து கொண்டால் அபவாதம் வரும் என்று அறியாதவரா?  பாரத வம்சத்தினன்.  தான் மணமகளாக கை பிடித்த பெண்ணிடம் விசுவாசமாக இருக்கும் தீர புருஷன். 

ஸ்வப்ன வாசவ தத்தா – 5

This entry is part 5 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

யௌகந்தராயன் என்ற அந்த மந்திரி அந்தணர் வேஷத்தில் இருந்தவர் அருகில் வந்தார். வாஸவதத்தாவும் திகைப்புடனே அவரை பார்த்தாள். ராஜ குமாரியின் அருகில் சென்றவர், தேவி! தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.    கஞ்சுகி அருகில் வந்தவள், ஓ நீங்கள்  புதியவரா, சற்று முன் வந்தீர்களே என்றாள். பத்மாவதியும் மரியாதையுடன் ஐயா, சொல்லுங்கள். நானே எதுவானாலும் தருவதாக வாக்களித்து விட்டு மறுப்பேனா, தயங்காமல் சொல்லுங்கள், என்றாள். 

தன் கணவர் மற்றொரு பெண்ணிற்கு உரியவனாக ஆகப் போகிறான்

This entry is part 6 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

கூடை நிறைய பூக்களுடன் ஒரு பணிப் பெண் வந்தாள்.  அம்மா அவந்திகே! உங்களைத் தான் தேடினேன். இந்த பூக்களைக் கொண்டு மணமகளுக்கான வர மாலையை உங்கள் கையால் கட்டிச் தரச் சொன்னார்கள். உற்ற உறவினர் அல்லது சகிகள் தான் செய்ய வேண்டும். பத்மாவதி ராஜ குமாரிக்கு நீங்கள் தானே உற்ற தோழி.

பாரிஜாத புஷ்பங்கள் எனக்கும் பிடிக்கும்

This entry is part 7 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

பணிப்பெண், இளவரசி,  அவந்திகா கண்கள் கலங்குகின்றன, என்ன காரணம்? திரும்பிப் பார்த்த பத்மாவதியும் விசாரித்தாள். அவந்திகா சமாளித்தாள், இந்த வண்டுகளை கிளப்பி விட்டதில் தூசியை தட்டி விட்டு விட்டது. என் கண்களில் விழுந்திருக்கும் போல.  வேறு ஒன்றுமில்லை.  இருக்கலாம் என்று பத்மாவதியும் ஆமோதித்தாள்.

ஸ்வப்ன வாசவ தத்தா – 8

This entry is part 8 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

அவந்திகா, வேகமாக கட்டிலை விட்டு இறங்கி கை கூப்பி மனதால் வணங்கி விட்டு வெளியேறினாள். இவ்வளவு கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு முதன் மந்திரி செய்த திட்டங்களுக்கு ஒத்துக் கொண்டு இங்கு வந்து பணிப்பெண் போல இருந்து வருகிறேன், அனைத்தும் வீணாகும் என்ற எண்ணம் அவளை உந்தித் தள்ளியது. இருந்தும் கட்டிலில் தேடுவது போல இருந்த உதயணனின் கையை எடுத்து  அருகில் படுக்கையில் வைத்து விட்டு, யாரும் பார்க்கும் முன் போய் விட வேண்டும் என்ற பரபரப்புடன் வெளியேறவும்.  உதயணன் விழித்துக் கொண்டு யாரது,  வாசவதத்தே என்று அழைக்கவும் சரியாக இருந்தது.  

ஸ்வப்ன வாசவ தத்தா – 9

This entry is part 9 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

‘என் மகள் வாசவதத்தா மறைந்து விட்டாள்.  எனக்கும், மகா சேனருக்கும் எங்கள் மகன்கள் கோபால, காபாலிகர்கள் போலவே தான் நீங்களும். நாங்களே முன்னால் தீர்மானித்து விட்டிருந்தோம். எங்கள் மருமகன் உதயணன் தான் என்று.    உஜ்ஜயினிக்கு உங்களை அழைத்து வந்த காரணமும் அதுவே.  அக்னி சாக்ஷியாக விவாக நடை முறைகள் இன்றி வீணை கற்றுக் கொள்ள என்று உங்களிடம் அனுமதித்த பொழுதே உங்களுக்கு என்றே கையளித்து கொடுக்கப் பட்டவள் போலத்தான்.