ஜெனீவா கார் கண்காட்சி

கீழே பார்க்கக் கிடைப்பது கார் தான். நம்புங்கள். இதை நீங்கள் 3டி அச்சுப்பொறி கொண்டே தயாரிக்கலாம். சின்னச் சின்னப் பொருட்களாக முப்பரிமாணத்தில் அச்சிட்டு, ஒன்று சேர்ப்பது 2014 காலம்; மொத்தமாக முப்பரிமாண அச்செடுத்து வடிவமைப்பது தற்காலம் என்கிறார்கள். இது மாதிரி தானே உண்டாக்கும் கார்கள் தவிர மாசெராட்டியும் லம்போர்கினியும் “ஜெனீவா கார் கண்காட்சி”

உயிரூட்டப்பட்ட வாழ்வினங்கள் : கண்களுக்கப்பால் காணுதல்

இந்த அசைவூட்ட ஆவணப்படத்தில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிவியலாளரான ஆன்டனி (Antonie van Leeuwenhoek) கண்டறிந்த நுண்ணுயிரிகள் எவ்வாறு உயிரியல் துறையைப் புரட்டிப் போட்டது எனக் கொண்டாடுகிறார்கள். தயாரிப்பு: ஃப்ளோரா லிச்ட்மான் (Flora Lichtman) & ஷாரன் ஷாடக் (Sharon Shattuck) காணொலி குறித்த கட்டுரை வாசிக்க: http://nyti.ms/1wnXQcm

மகரந்தம்

பேரண்டமே மாயத்தோற்றமா என்றும் அகில உலகுமே ஹோலோகிரமா (hologram) என்று இயற்பியல் ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தேகம் வந்தது. தொலைக்காட்சியில் தெரியும் பிம்பங்களுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியும் என வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன எண்ணுவார்கள்? ‘டிவி பெட்டிக்குள் இருந்தாலும், நம்முடையது முப்பரிமாண உலகம்! நாம் அனைவருமே நிஜம்!!’ பூவுலகின் மனிதர்கள் கூட இப்படித்தான் கற்பனையில் வாழ்கிறோமா என்பதை சோதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். மென் இன் பிளாக், மேட்ரிக்ஸ் போன்ற திரைப்படங்களில் இது போன்ற கற்பனைகளைப் பார்த்து இருப்போம்.

சுதந்திர தினம் – 1947

இவை 1947ல் எடுத்த புகைப்படங்கள். மவுன்ட்பேட்டனும் இராஜாஜியும் இராஜேந்திர பிரசாத்தும் தென்படுகிறார்கள். மாபெரும் மைதானத்தில் தொலைந்த குழந்தைகளை தன்னுடைய சாரட்டில் ஏற்றிக் கொன்டாராம் நேரு. சின்னஞ்சிறுசுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்த பெற்றோர்களும், அவர்களை நேருவின் காரை வைத்து எளிதில் கண்டுகொண்டார்களாம். அந்தப் புகைப்படங்களும் இந்தத் தொகுப்பில் இருக்கிறது.

மகரந்தம்

மனிதருக்கு 25 வயதிலிருந்தே கடும் கண் நோய். 48 வயதுக்குள் அவருடைய இடது கண்ணில் 800 இல் ஒரு பங்குதான் செயல்பட்டதாம். இன்னொரு கண் 30 இல் ஒரு பங்குதான். அவருடைய கண்ணாடியின் சக்தி +17 இரண்டு கண்ணிலும். பிறர் எழுத்து, கடிதங்களை உருப்பெருக்கும் கண்ணாடி கொண்டுதான் அவரால் படிக்க முடிந்ததாம். வாழ்நாளில் பெரும்பகுதி நோய்வாய்ப்பட்டே காலம் கழித்திருக்கிறார் ஜேம்ஸ் ஜாய்ஸ். 58 வயதில் இறக்கும்போதும் வயிற்றுப் புண்ணால் இறந்திருக்கிறார். இத்தனை பிரச்சினைகளோடு அவர் எழுதியவையோ அசுர சாதனை என்று சொல்லப்படக் கூடிய வகை நாவல்கள், சிறுகதைகள்.

கொன் சாதோஷ் – ஜப்பானியச் சித்திரப் பட இயக்குநர்

கொன் சதோஷியின் தேர்வு அனிமேஷன் படங்கள்தாம். முழு நீளப் படங்களில் மற்ற சாதாரணப் படங்கள் போன்றவற்றை ஏன் நீங்கள் தயாரிக்கக் கூடாது, உங்கள் படத் தொகுப்பு முறை அசாதாரண நிபுணத்துவம் கொண்டதாக இருக்கிறதே என்று கேட்கப்பட்ட போது கொன் சொன்னது குறிப்பிடத்தக்கது. அனிமேஷன் படத் தொகுப்பில் தான் மிகச் சிக்கனமாக, ஆனால் வெகு துரிதமாகக் கதை சொல்ல முடிகிறது, இந்தத் துரிதம் உயிருள்ள நடிகர்களை வைத்து எடுக்கும் படங்களில் தனக்குக் கிட்டாது என்றிருக்கிறார்.

மகரந்தம்

ஒசாமா பின் லாடனைத் துரத்திக் கொண்டு டோரா போரா மலைக்கு சென்றவர் டால்டன் ஃப்யூரி. இப்பொழுது அரசாங்கத்தின் பாதுகாப்பு சறுக்கல்களை ஆய்ந்து கொண்டிருக்கிறார். மின் உற்பத்தி நிலையங்களுக்கு எவ்வாறு எல்லாம் தீங்கு விளையலாம் என்பதை வைத்து நாவல் எழுதி இருக்கிறார். அடிதடி வீடியோ விளையாட்டுகளை வடிவமைப்பதற்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். கூடவே, அமெரிக்காவில் இருக்கும் 61 அணு நிலையங்களில் நாற்பதில் அத்துமீறி, தடைசெய்யப்பட்ட பிரதேசங்களுக்குள் நுழைந்திருக்கிறார். கதிரியக்க நாசகாரச் செயலை முடிக்குமளவு பதினாறு தடவை முன்னேறியிருக்கிறார். கூடங்குளத்திற்கு இன்னும் வரவில்லையாம்.

வண்ணம் பெற்ற வரலாறு

சார்லி சாப்ளின், 27 வயதில்! வருடம் : 1916 கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் மனிதர்களையும் நிகழ்வுகளையும் சரித்திரத்தின் மாற்றமற்ற சந்துகளில் உறைய வைத்துவிடுகின்றன. அவற்றிற்கு கொஞ்சம் வண்ணம் சேர்க்கும்போது, அவற்றிலிருக்கும் மர்மங்கள் மறைகின்றன. ஆனால், உயிரும் சதையுமாக அவை நம்மிடம் இன்னும் நெருக்கமாக பேசுகின்றன. கருப்பு-வெள்ளையிலிருந்து வண்ணப்படங்களாக மாற்றப்பட்ட அபாரமான “வண்ணம் பெற்ற வரலாறு”

கொல்லைப்புறத் தோட்டங்கள்

சுபேந்து ஷர்மா பொறியியலாளராக டொயோட்டாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது உங்கள் வீட்டின் பின்புறத்தில் காடுகளை வடிவமைத்து உருவாக்கித் தருகிறார். அதிகம் பராமரிப்பு தேவைப்படாத சுயமாக தழைத்தோங்கும் பச்சைமயமாக உங்களின் கொல்லைப்புறம் எப்படி மாறும் என்பதை அறியலாம்.

ஜோஹ்ரா ஸேகல் – பேட்டி

தனது 102வது வயதில் சமீபத்தில் மறைந்த ஜோரா ஸேகல் இந்திய நாடக/திரைப்பட உலகில் மிகவும் விரும்பப்பட்ட/ரசிக்கப்பட்ட கலைஞர். இவரது கலையுலகப் பயணத்தின் நீளம் ஏறக்குறைய 80 வருடங்கள் உதயசங்கரின் நாட்டியக் குழுவில் தொடங்கி, ப்ருத்விராஜ் கபூரின் ப்ரித்வி தியேட்டர் நாடங்களில் தொடர்ந்து, பிரிட்டனின் நாடக மேடைகளிலும், சின்னத்திரையிலும் பிரபலமான “ஜோஹ்ரா ஸேகல் – பேட்டி”

மகரந்தம்

கணித ஆசிரியர்களுக்கு உதவித் தொகை அளிப்பது மட்டுமல்லாமல், அவருக்கு பிடித்த தலைப்புகளான மரபணு புதிர்கள், வாழ்க்கை தோற்றம், மன இறுக்கத்தின் வேர்கள், கணித மற்றும் கணினி எல்லைகளை விரிவாக்குதல், அடிப்படை இயற்பியல் மற்றும் அகிலத்தின் துவக்க அமைப்பு என நிதிநல்கை நீள்கிறது. அவருக்கு மறதி இருந்தது. பதவி இறக்கம் செய்யப்பட்டார். அவரின் கணினி நிரலாக்கங்கள் பயனில்லாதது. கணிக் குறியீடுகளை மறக்கிறார். அதனால் வேலையை விட்டு நீக்கப்பட்டார். தனது வாழ்க்கை தோல்விகளுக்கு பின் அவரால் இதை செய்ய முடியும் என்றால், இன்றைய இளைஞர்கள் என்ன சாதிக்கலாம் என்னும் செய்தி தெளிவாக உள்ளதை விவரிக்கும் கட்டுரை.

'ஒரு பெண்ணைப் போல்’

‘ஒரு பெண்ணைப் போல்’ நடக்கவேண்டும். ‘ஒரு பொண்ணைப் போல்’ ஓட வேண்டும். ‘ஒரு பெண்ணைப் போல்’ பந்தை வீச வேண்டும் என பதின்ம வயதில் மகளிரின் மனவுறுதியை மட்டுப்படுத்தும் பிரயோகங்கள் குறித்த விழிப்புணர்ச்சி விளம்பரம்:

உலகம் சுற்றும் கால்பந்து

உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என்பதைப் பார்க்க எல்லோரும் பிரேசில் சென்றால், பிரேசில் சென்றோரின் ஒளிப்படங்கள் கால்பந்தை மேலும் சுவாரசியமாக்குகின்றன. மியான்மரில் கால்பந்து விளையாடும் சிறுவர்கள் முதல் பாலஸ்தீனப் பெண்கள் அணி வரை பல்வேறு முகங்களையும் ரசிகர்களையும் காணலாம்.

மகரந்தம்

இதை எப்படிக் கண்டு பிடித்தார். பின் அதைத் தன் நிறுவனத்து மேலாளர்களிடம் சொல்லுமுன் எத்தனை தயங்கினார். பலமுறை சோதித்த பின்னரே அறிவித்தார் என்பதெல்லாம் கீழ்க்கண்ட செய்திக் குறிப்பில் கிட்டுகின்றன. உலகில் உள்ள கொலைக் கருவிகளுக்கெல்லாம் தடுப்பான ஒரு மேலங்கியைத் தயாரித்துப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காக்க உதவியவர் ஒரு பெண் அறிவியலாளர் என்பது எத்தனை பொருத்தமான விஷயம்?!

மகரந்தம்

மூட நம்பிக்கைகளும், ஒற்றைத் திரிக் கருத்துகளுமே நிரம்பிய மதம் எதுவானாலும் அது வாழ்வுக்கு விஷத்தைத்தான் அதிக பட்சமாகக் கொடுக்கும் என்பதே உகாண்டாவிற்கு நேர்ந்த கதை பற்றிய கட்டுரையில் புரிகிறது. ஒரு நாட்டில் விஷம் கக்கும் மதம் இன்னொரு நாட்டில் சுதந்திர ஜோதியாகத் தெரிவது என்பது நிச்சயம் இரண்டாவது நாட்டில் அதன் பிரச்சாரத் தந்திரம் வெற்றி பெற்றதாலிருக்கலாம் அல்லது அந்நாட்டு அறிவாளர்களுக்கு நிஜமாகவே புத்தி மட்டு என்பதாலுமிருக்கலாம். விவிலியத்தில் சொல்லி இருக்கிறதில்லையா, சில காசுகளுக்கு கருணாளரையே விற்கக் கூடியவர் அவரருகேயே உண்டு என்று…

நாலாயிரம் வருட மொழிபெயர்ப்பு

உலகில் எப்படி எட்டாயிரத்து சொச்சம் மொழிகள் உருவாகின? மொழியியலாளர்கள் எவ்வாறு மொழிக்குடும்பங்களை சேர்க்கிறார்கள் என்பதையும் நாம் பேசும் மொழிகளின் ஆதி இருக்கிறதா என்றும் அலெக்ஸ் ஜெண்ட்லர் இங்கே சொல்லிக் கொடுக்கிறார். நாலாயிரம் வருடம் பழைமையான சிந்து சமவெளி எழுத்துக்களை எப்படிப் புரிந்து கொள்வது? அவிழ்க்க முடியாத புதிர் போல் “நாலாயிரம் வருட மொழிபெயர்ப்பு”

மாயா ஏஞ்சலோ: அஞ்சலி

கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், திரைப்படத் தயாரிப்பாளர், மக்களின்  குடிஉரிமைப் போராளி எனப் பன்முகம் கொண்ட மாயா ஏஞ்செலோ தனது 86வது வயதில் மே மாதம் 29, 2014 அன்று காலமானார். தற்கால ஆஃப்ரிக்க அமெரிக்க எழுத்தாளர்களில் முக்கியமானவர், அனைத்து சமூகக் குழுக்களின் அபிமானத்தையும் பெற்றவர். அவருடைய மிகப் பிரசித்தமான “மாயா ஏஞ்சலோ: அஞ்சலி”

வாசகர் மறுவினை

சுகாவின் ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரை படிக்க சுளுவாக இருந்தது. பேரமைதி கவிதை நன்றாக இருந்த்து. மைத்ரேயனின் அர்சுலா லெ குவின் பேட்டி, ஜைன்சன் அனார்க்கியின் சிறுகதை போன்றவை நன்றாக இருந்தன்.

அகதெமி விருது பெற்ற புத்தகப் படம்

இரண்டு இயக்குநர்கள் இணைந்து தயாரித்த உயிரூட்டப்பட்ட சித்திரப் படம் இது. 2011 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற படம். வில்லியம் ஜாய்ஸும், ப்ராண்டன் ஓல்டன்பெர்க்கும் இயக்கிய படத்தில், பலவகை சித்திரப்படப் பாணிகள் பயன்பட்டிருக்கின்றன. இருபரிமாண உயிர்ப்பூட்டல், குறும்சித்திரங்கள், கணனி உயிர்ப்பூட்டல் என்று பலவிதங்கள் இவை. இந்தப் படத்திற்கான “அகதெமி விருது பெற்ற புத்தகப் படம்”

2014ன் இணையத்துக் குரல்கள்

ப்ளாக் ஹெர் (blogher.com) சார்பாக 2014ன் 110 பதிவர்களை 2014ன் இணையத்துக் குரல்களாகக் கொண்டாடுகிறார்கள். புகைப்படங்களுக்கு மட்டும் ஐந்து பிரிவுகள். உணவுகளையும் கலைப்பொருட்களையும் படம் பிடிப்பவர் ஒரு பிரிவு என்றால் செல்ஃபீ எடுப்பவர்களுக்குக் கூட இந்த வருட விருதுகளில் இடம் உண்டு. கீழே வாழ்க்கையின் ஒரு அங்கம் பகுதியில் “2014ன் இணையத்துக் குரல்கள்”

மகரந்தம்

சீனர்களுக்கு எண்கள் மீது அப்படி ஒரு காதல். சீனாவில் கார் வாங்க, விற்க 92.காம்; வலையில் விளையாட 4399.காம். ஆங்கிலம் என்பது சீனர்களுக்கு விளக்கெண்ணெய் குடிப்பது என்றால், எண்கள் என்றால் வெண்ணெய் உண்பது போல் சுளுவானது. அதுவும் ஆங்கில இணைய முகவரிகளையும் அதில் உள்ள ஆங்கில எழுத்துக்களையும் ஹாட்மெயில்.காம் என நினைவில் வைத்திருப்பதை விட அதை ஒத்த சீன எண்களை ஞாபகம் வைப்பது சுலபம். அதிலும் ஒத்த ஒலியுடைய வார்த்தைகளும் எண்களும் இருப்பதால், சீனத்தை இணையத்தில் புழங்குபவர்கள் இடையே இது சுருக்கெழுத்தாகவே மாறிவிட்டது. 1 என்றால் “வேண்டும்”; 2 என்றால் “காதல்”

ஆலிஸின் அற்புத உலகம்

லூயிஸ் கரோலினால் எழுதப்பட்ட ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் (Alice in Wonderland) புனையப்பட்ட அற்புத உலகை ஓவியமாக்கி இருக்கிறார்கள். முயல் குழிக்குள் விழுந்து அங்கொரு புதுமையான உலகத்தைக் காணும் ஆலிஸ் சிறுமியின் கதையை மனமயக்கும் விதமாக வரைந்து அசல் கதையின் பூடகமான கேள்விகளை உணர்த்துமாறு வடிவமைத்து இருக்கிறார்கள்.

மகரந்தம்

உலகத்தின் பணக்கார நாடுகளில் ஒன்றாகவும், ஜனநாயக நாடாகவும் கருதப்படும், தன்னை அப்படியே உலகுக்கு முன் தொடர்ந்து சித்திரித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா உண்மையில் எப்படி இருக்கிறது? நடைமுறையில் ஒரு அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை வைத்துத்தான் இப்படிக் கேள்விகளுக்குப் பதில் காண முடியும். சில நடப்புகளை வைத்து ஒரு நாட்டையே எடை போட முடியாது என்பது உண்மைதான். ஆனால் இங்கு கொடுக்கப்படுவது ஏதோ சில நடப்புகள் மட்டும் அல்ல. பல லட்சம் பேர்களுக்கு இங்கு கொடுக்கப்படும் சில நடப்புகளைப் போன்றன ஏற்கனவே கடந்த சில வருடங்களில் நிகழ்ந்திருக்கின்றன என்பது அமெரிக்காவின் கடந்த சில வருட நிதி நிலைமையையும், அது சார்ந்த பல குளறுபடிகளையும் பற்றிய செய்திகளைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

என் தோட்டம் வளர்ந்த பிறகு

கடுமையான வறுமையையும் உலகின் எல்லாவிடங்களில் இருந்தும் பட்டினியை நீக்கவும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் முயல்கிறது. அதற்கான பொதுமக்களின் உரையாடலை பொதுப்பரப்பில் பரவலாக்க சண்டான்ஸ் நிறுவனமும் குறும்படங்களைக் வெளியிடுகிறது.. ஆவணப்படங்களைப் பரவலாகப் பலரிடமும் கொண்டு செல்வதிலும் சண்டான்ஸ் தீவிரமாக இயங்குகிறது. அப்படி எடுக்கப்பட்ட படங்களை இங்கு பார்க்கலாம். மேற்கு வங்காளத்தில் பெண்களை “என் தோட்டம் வளர்ந்த பிறகு”

ஆக்னெஸ் மார்டின்: மினிமலிஸம்

சமீபத்தில் இவருக்கான கூகுள் டூடுல் மூலமாகத்தான் பலர் அறிந்திருப்போம். ஆக்னெஸ் மார்டினின் இந்த நேர்காணலில், இவர் ஓவியங்களை உருவாக்குவதைப் பற்றிச் சொல்வதைக் கவிதைகளுடனும் பொருத்தி பார்க்கலாம்.

மகரந்தம்

இவர்கள் பண்டைப் பண்பாடுகளையும், மரபுகளையும் இழித்துரைக்காத நாளே இல்லை என்பதுதான் அபத்த நாடகங்களின் உச்சம். அதுவும் இடது, முற்போக்கு என்ற முகமூடியை அணிந்து கொண்டு இவர்கள் ஆடும் அபத்த நாடகங்களில் பற்பலவும் வெறும் கேலிக் கூத்துகள். இங்கே ஒரு கேலிக்கூத்தை மேற்கின் ‘விளையாட்டு’ அமைப்புகள் ஆடியிருப்பதை ஒரு பெண் அம்பலப்படுத்துகிறார். விளையாட்டு என்ற சொல்லையே அபத்தமாக்கி இருப்பன பல நாட்டு ‘விளையாட்டு’ச் சீரமைப்பு நிறுவனங்கள். அவை கொணரும் சீர் என்ன வகைத்தது என்றால், பற்பல பெண்களின் உடல்களைச் சித்திரவதைக்குள்ளாக்கி, அவமதிப்பதுதான் என்று இவர் வாதிடுகிறார்.

ஆன்ட்ரி தர்கொஸ்கி: திரைப்பட சுவரொட்டிகள்

தன்னுடைய படங்களில் மட்டுமல்லாமல், புகைப்படங்களையும் போஸ்டர்களையும் கூட ஆன்ட்ரி தர்கொஸ்கி எவ்வாறு கலைநயத்துடன் மிளிர வைக்கிறார் என்பதைத் தொகுத்திருக்கிறார்கள்:

மகரந்தம்

சினிமாவைப் பற்றி என்பதை விட அதன் பின்னணியில் என்னென்ன கிறுக்குத் தனங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம். உலகெங்கும் பெண்கள் மீதான வன்முறை குறித்து ஏராளமான தகவல்களும், செய்திக் குறிப்புகளும், கடும் விமர்சனங்களும், பெண்களின் போராட்டங்களும் எழுந்துள்ள இந்தக் காலகட்டத்தில்தான் உலகெங்கும் பன்னாடுகளிலும் பெண்களுக்கெதிரான சட்டங்களும் அடக்கு முறையை நாடும் பழம்பெருமை இயக்கங்களும் தலையெடுத்திருக்கின்றன.

ஆலன் ரெனே – உலகத்தின் அத்தனை நினைவுகளும்

உலக சினிமாவில் அவ்வப்போது அந்தக் கலையை முன்னெடுத்துச் செல்லும் சில படங்கள் உருவாக்கப்பட்டு வெளியாகும். அவை பெரும் திரளான மக்களின் அபிமானப் படங்களாக இல்லாமல் போகலாம். ஆனால் துறை வல்லுநர்களால் மிகவும் கவனிக்கப்பட்ட படைப்புகளாகவோ, அல்லது ஏராளமான இளம் கலைஞர்களுக்கு உத்வேகம் கொடுப்பனவாகவோ அமைந்து துறையில் ஒரு புது “ஆலன் ரெனே – உலகத்தின் அத்தனை நினைவுகளும்”

உயிர் பெற்றெழச் செய்யும் பெண்கள்

பெண்கள் தினத்திற்காக கார்னெகி கவுன்சில் தங்களுடைய பேட்டிகளின் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். சிங்கப்பூர் முதல் சொமாலியா வரை உலகெங்கும் மாற்றத்திற்கு வித்தாக உள்ளவர்களையும் அவர்களின் பேட்டியையும் இங்கே காணலாம்.

2011 சாரல் விருது விழா

விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரியின் தந்தையர் ராபர்ட் – ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் 2011 ஆண்டுக்கான சாரல் விருது அசோகமித்திரன் என்கிற தியாகராஜனுக்கு வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்டது:

வாசகர் மறுவினை

அவள் அதை வைத்துக் கொண்டு காய்கறிகள் மட்டுமா நறுக்குவாள்,
தான் யார் யாரோடு என்ன பேச வேண்டுமென்று நினைக்கிறாளோ அந்தந்த மனிதர்கள் அந்த அருவாமணையாக உருவெடுத்து அவள் அன்பை, வசவுகளை, எரிச்சலை, சில வேளைகளில் அபூர்வமாக மன்னிப்பைத் தலை குனிந்து நின்று கேட்டுக் கொள்வதை அருகே இருந்து பார்த்திருக்கிறோம் இளவயதில்…

மகரந்தம்

சீன ஜனாதிபதியின் மருமகன் எங்கெல்லாம் சொத்து வைத்திருக்கிறார் என்னும் தகவல் கசிந்திருக்கிறது. அவர் மட்டுமல்ல. அவரைப் போல் அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களின் 21,000த்து சொச்ச சொந்தபந்தங்களும் வெளிநாடுகளில் எங்கெல்லாம் செல்வம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் எவ்வளவு பணம் என்பதையும் வெளியிட்டிருக்கிறார்கள். சீன நாட்டை விட்டு நான்கு ட்ரில்லியன் டாலர்கள் எப்படி சென்றது என்பது மட்டும் தெரியவில்லை. ஆனால், எவரிடம் சென்றடைந்திருக்கிறது என்பதை இப்போது அறிய முடிகிறது.

நேரத்தை வலைவீசுதல்

மீனவர்களின் வாழ்க்கையை குவெர்னிகா இதழுக்காக படம் பிடித்திருக்கிறார் கேண்டஸ். பஞ்சு மிட்டாய் விற்பவனில் ஆரம்பித்து வீட்டில் தொங்கும் லுங்கி வரை நிழற்பட வேட்டை ஆடியிருக்கிறார்.

இசைக்கு மயங்கும் மசாலா

மிளகும் மஞ்சளும் இஞ்சியும் மல்லியும் சீரகமும் கிலோ கிலோவாக இசைக்கேற்ப துள்ளியெழுகிறது. ஒவ்வொரு மசாலா எழும் போது ஒரேயொரு நாளம் ஒலிக்க, அதன் பிறகு அடுத்த வீணைத் தந்திக்கு ஏற்ப மெல்ல அசைகிறது… விளம்பரத்திற்காக.

மகரந்தம்

இணையம் வந்த பிறகு உலக இசையைக் கேட்பதில் எந்த வித சிக்கலும் இல்லை. ஆனாலும், இசையை திரையில் பார்ப்பதை விட நேரில் அனுபவிப்பது கிறங்க வைக்கும். சங்கீதத்திலேயே மூழ்க வைக்கும். ஆண்டிற்கொருமுறை உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் கலைஞர்கள் ஒரே மேடையில் தங்களின் புதிய ஆக்கங்களை ஒலிக்கிறார்கள். ஆப்பிரிக்க சேர்ந்திசையையும் வேகப் பாட்டையும் கலப்பவர்கள் முதல் பூர்வகுடி வாத்தியங்களையும் அறுபதுகளின் ஹிந்திப் பாடல்களையும் புத்துருவாக்குபவர்கள் வரை, எல்லோருக்குமே இடம் தருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் இருந்து சில பதிவுகளைக் இங்கே கேட்கலாம்.

வாசகர் மறுவினை

பைரப்பா பற்றிய குறிப்பிடத் தகுந்த நாவல் அறிமுகம். வம்ச விருட்சாவோடு இவருடைய ‘பருவம்’ நாவலும் பேசப்பட வேண்டியது. பைரப்பாவின் அரசியல் நிலைபாடு குறித்து மாற்றுக் கருத்து இருந்தாலும் அவருடைய எழுத்து நிராகரிக்க முடியாதது.

ஆறு பேர் ருசிக்கிறார்கள் – காஃபி

காப்பி என்றாலே என் நினைவில் வருவது சிறுவயதில் என் பாட்டி வீட்டில் பார்த்ததுதான். பீபெரிக்கொட்டையை வாங்கி வைத்துக்கொண்டு, வாரம் ஒரு முறை காப்பிக்கொட்டையை வறுத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி வைத்துக்கொள்வாள். மதியம் சரியாய் 2 30 மணிக்கு அதில் ஒரு கையளவு எடுத்து ஒரு காப்பிக்கொட்டை அறைக்கும் யந்திரத்தில் போட்டுப் சக்கரம் போன்ற ஒரு கைப்பிடியை சுற்றி அதைப் பொடி செய்வாள். நாங்கள் அதைச் செய்யப் போட்டி போடுவோம்.

வாசகர் மறுவினை

தற்போது இந்தக்கலை முற்றிலுமாக அதன் தொன்மையை இழந்து நிற்கிறது. எல்லா வகை ஒலிகளையும் CD, DVD மற்றும் கணினியில் ஏற்றி கொண்டு வந்துவிடுகிறார்கள். அன்று காட்சிக்கு தேவையான ஒரு குறிப்பிட்ட ஒலியை ஒலிக்கலைஞன் ஏதோ ஒரு வழியில் உருவாக்கி தந்துவிட்டால் அவனுக்கு அந்த படத்தின் இயக்குனரும், ஒலிப்பதிவாளரும் தரும் “வாசகர் மறுவினை”

பெண்களின் படைப்புகளுக்கான ஆவணக்காப்பகம்- SPARROW Enters its Silver Jubilee Year

இது இந்தியப் பெண்களின் படைப்புகளைக் காக்கும் ஒரு அரிய கருவூலம். பல மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்களும், படைப்பாளிகளும் தன்னார்வலர்களும், கலைஞர்களும் ஆதரித்து, தம் படைப்புகளை நன்கொடையாகக் கொடுத்து, உழைப்பையும் நல்கிக் கட்டமைத்த ஒரு ஆவணக் காப்பகம் இது. அம்பை அவர்களும் இந்த அரிய அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இதன் 25 ஆண்டுகளிலும் அதன் கட்டமைப்புக்கும், பராமரிப்ப்புக்கும் மிக்க பாடுபட்டதோடு, தனது சலியா உழைப்பையும் இதற்கு நல்கியிருக்கிறார்.
இந்த ஆவணக்காப்பகத்தை நிலைநிறுத்தி அதன் தொடர்ந்த பராமரிப்புக்கும், தன் நடவடிக்கைகளை அது விஸ்திகரிக்கவும் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது இந்தியாவின் வரலாற்றை எழுத முற்படுவோருக்கு வருங்காலத்திலாவது நியாயமான ஆழமான முறையில் அதை எழுத, மிகுந்த உதவியாக இருக்கும்.
படிப்பறிவு பெற்ற ஒவ்வொரு இந்தியரும் இத்தகைய முயற்சிகளைத் தம்மால் ஆன வகைகளில் ஆதரிப்பது இந்தியாவின் எதிர்காலம் வளமாக அமைய நாம் செய்யக் கூடிய எளிய ஆனால் உருப்படியான செயலாக இருக்கும்.

தளம் – இலக்கிய காலாண்டிதழ்

தீவிர இலக்கியத்தின் தாய்வீடு என்பது எப்போதுமே சிறுபத்திரிகைகளாகவே இருந்து வருகிறது. வணிகம் சார்ந்த இயக்கமாகவோ, வணிக உதவிகளை நம்ப வேண்டி இருக்கும்போதோ பெரும்பான்மையோரின் ரசனைக்கு தீனி போடவேண்டிய கட்டாயம் சஞ்சிகைகளுக்கு வந்துவிடுகிறது. வணிக நோக்கில் செயல் பட்டு வந்தாலும் ஓரளவிற்கு இலக்கியங்களையும் உடன் சேர்த்துக்கொள்ள முடியுமா என்ற தயக்கத்துடனே பத்திரிகைகள் இயங்கி வருகின்றன. கேள்விகள் கேட்பதும் உடைத்துப் பார்ப்பதும் ஆழமாக செல்வதும் இங்கே சாத்தியமில்லை. சிறுபத்திரிகைகளுக்கு அந்த சுதந்திரமும் பரப்பும் கிடைக்கிறது. தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல சிற்றிதழ்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. தங்கள் குரலை எழுப்பி கொண்டே இருக்கின்றன. வெற்றுக் கற்பனைகள் அல்லது கேளிக்கைகளில் முயற்சிகளை செலவிடாமல் வாழ்வின் நிதரிசனங்களை முன்வைத்து நகருபவை சிற்றிதழ்கள். மூடி வைத்தபின் திறந்து கொள்ளும் கதவுகளை உடையவை அவை.