ஏஐ என்றால் என்ன? சாட்ஜிபிடியா? நம் உருவத்தை மாற்றி ஏமாற்றும் ஒரு பொதியா?
ஏஐ – பல வருடங்களாகவே இருக்கிறதே!? ஐபிஎம்மின் டீப் ப்ளு செஸ் விளையாட்டில் 1997ல் மனிதர்களை தோற்கடித்தது. ஆனால் இப்ப சமீப 4-5 ஆண்டுகளில் ஏன் இந்த திடீர் சுறுசுறுப்பு?
சமிபத்தில் அநிருத் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ மூலம் மீள் உருவாக்கம் செய்திருந்தார். இதன் மூலம் வருங்காலம் இசை, அமைப்பாளர் பாடகர்கள் எல்லாருக்கும் என்ன பணி மீதம் இருக்கும்?
Tag: கணினி
”பலகை, டிவி எல்லாம் வருதுன்னு கேள்விப்பட்டேன்”
கம்ப்யூட்டர் ஒரு மெஷின். அதை சரிவர பயன்படுத்துவது நம் கையில் உள்ளது. அதன் திறனையும், தேவையையும் புரிந்து கொள்வதும் நம் வேலை. உதாரணத்திற்கு, உங்க சர்வீஸ் ஸ்டேஷன்ல, கார்களின் சக்கரங்களை அலைன் செய்வதற்கு இரண்டு மெஷின்கள் உள்ளது. ஒரு ஷிஃப்டில், 10 கார்களை அலைன் செய்ய முடியும் என்று வைத்துக் கொண்டால், இருபது வண்டிகளை மட்டுமே ஒரு நாளில் அலைன் செய்ய முடியும்.
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 3
அச்சடிக்கும் எந்திரம், திடீரென்று, பாதியில் நின்றுவிடும். உதாரணத்திற்கு, ஒரு 1,300 பக்கப் பட்டியலில் 780 பக்கம் வரை அச்சடித்து விட்டு நின்று விடும். பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில், இவ்வாறு நிகழ்வது கணினி மையத்திற்கு ஒரு மிகப் பெரிய தர்ம சங்கடம் மற்றும் இழப்பு. அந்த நாட்களில், 781 ஆம் பக்கத்திலிருந்து மீண்டும் அச்சடிக்க வசதி இல்லை. ஆரம்பத்திலிருந்து அச்சடித்தால், முழு 1,300 பக்கங்களும் அச்சடித்தது எந்திரம்! காகித மற்றும் நேர விரயம் என்பது கணினி மையத்திற்கு பிடிக்காத விஷயம்
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 1
இன்று, பள்ளி செல்லும் மாணவர்கள் கணினியுடன் விளையாடுகிறார்கள். ஆனால், 1980/90 -களில், இதற்கு ஏராளமான கல்வி தேவைப்பட்டதாக எண்ணப்பட்டது. என் பார்வையில், இது ஒரு மிகப் பெரிய அபத்தம். அந்நாளைய கணினி ராஜாவாகிய ஐ.பி.எம். (IBM) இந்த பிம்பத்தை வெற்றிகரமாக அரங்கேற்றி வெற்றி பெற்றது. பெரும்பாலான ஐ.பி.எம். ஆசாமிகள், ஐ.ஐ.டி. -யில் படித்து விட்டு சம்பளப் பட்டுவாடா மற்றும் கணக்குகள் பார்க்கும், உப்பு சப்பில்லாத நிரல்களை எழுதி தேவதூதர்கள் போல உலா வந்தார்கள்.
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
நீங்கள் திடுக்கிடுவீர்கள், திகைப்பீர்கள்; கணினியின் அத்தனைத் தகவல்களையும் மீள் கட்டமைப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல; கேட்பதைக் கொடுத்துவிட்டால் உங்கள் தொழில் தேங்காது முன்னே செல்லும். ஆயினும் நீங்கள் மன்றாடிவிட்டு, பிட்காயினாகவோ வேறேதும் கிரிப்டோ கரன்ஸியாகவோ, அனேகமாகப் பெரும்பாலும் ரஷ்யாவைச் சேர்ந்த அந்தக் கொந்தர்களுக்குத் தருவீர்கள். இந்த விவகாரத்தை நீங்கள் காவல் துறையில் கூட பதிவு செய்ய மாட்டீர்கள்- உங்களுக்குத் தெரியும் அது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாக பல நேரங்களில் ஆகிவிடும்…
எண்ணும் எழுத்தும் பெண்ணெனத் தகும்
கணினித் துறையில் சாதித்த பல பெண்களின் பெயரைப் பலரும் அறியக்கூட இல்லை. இக்கட்டுரையில் நாம் உரிய கவனம் பெறாத திறமைசாலிகளான சில பெண்களைப் பற்றிப் பார்ப்போம்.
புத்திசாலித்தனம் ஒரு சேவையாக..
நான் கல்லூரியில் படித்த காலத்தில் கணினித் திரையில் ஆரஞ்சு அல்லது பச்சை கலர் எழுத்துக்கள் மட்டும் தெரியும். பேராசிரியர்கள் உபயோகிக்கும் திரை ஒரு மாதிரி திருச்சி மைகேல் ஐஸ்கிரிம் வண்ணத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். கலர் கம்யூட்டர் ஆர்.இ.சி போன்ற கல்லூரிகளில் பார்த்திருக்கிறேன். கல்லூரியில் செயற்கை அறிவாற்றல் ( Artificial Intelligence ) மீது ஒரு எனக்கு ஒரு மோகம் இருந்தது.
உங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி?
நிஜ உலகில் தற்சார்பற்ற உண்மை இருக்கிறது; அதற்கு மாற்றாக, எதிர்ப்பதமாக – உங்களுக்கு மட்டுமேயான உண்மைகளும் இருக்கிறது. உதாரணத்தில் இதைப் பார்ப்போம். தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது தற்சார்பற்ற உண்மை. உலகிலேயே அதிசிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டும்தான் என்பது எனக்கு மட்டுமே தோன்றும் நிதர்சனமான உண்மை. தோனி இன்றும் நன்றாக, ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது புறவய அணுகுமுறை.
