1992 ம் வருடம் கம்போடிய நாட்டின் புகழ்பெற்ற புராதன கோவிலான அங்கோர் வாட்டில் பழுது பார்த்து சரி செய்யும் பணியை இந்திய தொல்லியல் ஆய்வகம் மேற்கொண்டிருந்தது. ஆனால் அந்த பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது. அதைப் பற்றி விசாரித்து எழுதும்படி ஒரு தினசரி என்னிடம் கேட்டிருந்தது.
Category: கலை
யாமினி – பகுதி 3
டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் மதிக்கப்படுபவர், மேற்கத்திய கலை உணர்வுகளில் பிறந்து வாழ்ந்தவராதலால் அதிலேயே ஊறியவர், பரத நாட்டியத்தின் இலக்கணத்துக்கும் நடன வெளிப்பாட்டு நுட்பங்களுக்கும் தொடர்பற்றவர். அவ்வளவாக ஆழ்ந்த பரிச்சயம் இல்லாதவர். ஒரு வேளை அந்த பரிச்சயமற்று இருந்ததே கூட ஒரு நல்லதுக்குத் தானோ என்னவோ, ஒரு கலைஞரை எதிர்கொள்ளும்போது கலைஞராக இனம் காண்பது அவருக்கு எளிதாகிறது.
ஸ்டெல்லா க்ராம்ரிஷ்: ஒரு கர்மவீரரின் கலைப் பயணம்
கால அனுமானங்களின் கச்சிதமின்மையைத் தாண்டிச் செல்லும் சீரிய உள்ளுணர்வும், சித்தாந்தங்களின் புரிதலுமே ஸ்டெல்லாவின் அக்காலத்து கலை-வரலாற்று நூல்களை இன்றளவும் இன்றியமையாதவையாக்குகின்றன. ப்ருஹத் சம்ஹிதை, மானசோல்லாசம், மயமதம் போன்ற பல்வேறு காலகட்டத்தின் வாஸ்து நூல்களையும் ஆராய்ந்து, சதபத-ப்ராஹ்மணம் போன்ற வைதீக ஏடுகளிலிருந்து கோயில் ஸ்தாபனத்தின் சடங்கு வழிமுறைகளையும் அடையாளப் படுத்தி அவர் தொகுத்த “இந்து கோயில்” நூல்களுக்கு ஆனந்த குமாரசுவாமி நேரடியான ஆய்வுரை…
மேற்கத்திய பெண் ஓவியர்கள்
வார்த்தைகளால் சொல்லி விட முடியுமென்றால், வரைவதற்கான அவசியமே இருக்காதே! – எட்வர்டு ஹாப்பர் [1882-1967] இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண் கலைஞர்கள் என்று தனித்து அறிமுகம் செய்ய வேண்டுமா? தற்கால விஷயங்களை மகளிர் எவ்வாறு கையாளுகிறார்கள்? மில்லியன்கள் புரளும் ஓவியச் சந்தையில் ஆண் ஓவியர்களோடு ஒப்பிட்டால், பெண் ஓவியர்களின் “மேற்கத்திய பெண் ஓவியர்கள்”
ஒலியன்றி வேறல்ல: இளையராஜாவின் ஆதார சுருதி
இசை, நடனம், இலக்கியம், ஓவியம் முதலிய நுண்கலைகளின் பின்னிருக்கும் ஆற்றல் எது? வேறு எந்த வகையிலும் புலப்படுத்த முடியாத உணர்ச்சிகளை ஆன்மாவின் அந்தரங்க உணர்வுகளாக வெளிப்படுத்தும் ஆற்றல்தான். இந்த இரு தனியிசைத் தொகுப்புகளும் இளையராஜாவின் சிந்தனையோட்டத்தை நாம் அறியக்கூடிய சாளரங்கள். இவற்றில் அவர் இசையைக் கொண்டு தன் அக உணர்வுகளுக்கு புற உருவம் தந்திருக்கிறார்.
பாசாவின் உறுபங்கம் – ஒரு பார்வை
வட மொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப் பட்டு அறிமுகம் செய்யப் பட்டன.பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளி தாசனுக்கு முற்பட்டவர் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாது. மாளவிகாகினிமித்திரத்தில் “பாசா ,கவிபுத்ரா போன்ற மிகச் சிறந்தவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா“ என்று காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு இதை உறுதி செய்கிறது. காளிதாசன் தன் படைப்புகளில் பாசாவின் உத்திகளைப் பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
திருமெய்யம் கல்வெட்டு: பரிவாதிநி
புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டம் மலையக்கோயில் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிற்குடைவரையின் கிழக்கு நோக்கிய நுழைவாயிலையொட்டி, தென்புறச் சுவரில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மேலே செவ்வக வடிவில் கட்டம் கட்டி, பல்லவ கிரந்த எழுத்துகளில் “பரிவாதிநிதா” எனப் பெரிய வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது. கீழே, சிறிய வடிவில் பல்லவ கிரந்தத்திலும், தமிழிலும்
” என்னே ப்ரமாணம்
செய்த வித்யா பரிவாதினி கற் [க] “
என்றும், அதனையடுத்துத் தமிழில் சற்றே பெரிய வடிவில்…
சகல கலா ஆசார்யர் – வித்வான் எஸ்.ராஜம் ஆவணப்படம்
எஸ்.ராஜம் கர்னாடக சங்கீதத்தின் ஒப்பற்ற கலைஞர், ஓவியர், சங்கீதக் களஞ்சியம் என பல முகங்கள் கொண்டவர் என்றாலும், நமது பாரம்பரியக் கலையின் கடைசி ஆன்மா என அவரது ஆவணப் படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது. கலையின் அணையாத கங்கு கலைஞர்களின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டில் அடங்கியுள்ளது. அது என்றும் நீடித்திருக்கும் பெரும் தீ. காலகாலத்துக்கும் கலையின் எண்ணிலடங்கா முகங்களை உயிர்ப்போடு வைத்திருப்பது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம்.
தூரிகைக்கலை
ஓவியத்தையும் தூரிகைக்கலையையும் ஒரே தாய்வயிற்றுப் பிள்ளைகள் என்று வருணிப்பர் சீனர். அவ்வந்த காலத்துக் கலைஞர் உருவாக்கிய முக்கிய பாணியிலிருந்தே படைப்பின் காலத்தைச் சொல்லிவிடக் கூடிய தூரிகைக் கலைஞர்கள் சீனாவிலும் சீனாவுக்கு வெளியிலும் இன்றும் உளர். சீனத்திலோ அரசர் முதல் ஆண்டி வரை பலரும் தூரிகை ஓவியங்களைக் காலங்காலமாக சேகரித்துப் பாதுகாத்திருக்கிறார்கள். சீனச் சமூகத்தில் வீடு, அறைகள், பெரிய கட்டங்கள், நீதிமன்றம், கைவிசிறிகள், சுவர்கள், நுழைவாயில்கள், அருங்காட்சியகம், அலுவலகம், நினைவுச் சின்னங்கள், கல்லறைகள், ஆலயங்கள் என்று எங்கெங்கு காணினும் தூரிகைக்கலையின் சுவடுகள் வாழ்த்து, முதுமொழிகள், அறிஞர் பொன்மொழிகள், கவிதை, பாடல், ஈரடிக்கவிதை, கடிதம் போன்ற பல்வேறு வடிவில் மிளிரும்.
நவீன ஓவியங்களில் பழைய குறியீடுகள்
நவீன ஓவியங்கள் கூறும் விஷயத்தைப் புரிந்து கொள்வதே தனிக்கலை. ஓவியத்தின் வரலாறு நாம் பேசும் மொழியைவிட பழமையானது. கணக்கில்லா மாற்றங்களை தன்னுள் அடக்கிய ஆழமான ஆற்றின் குறியீடாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் நவீன ஓவியங்களை அனுபவிக்க நம் அழகியல் நோக்கில் பல மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம்.ஒரு ஓவியத்தின் வண்ணம், வடிவம், அலங்காரம் என நமக்குத் தெரிந்த பலவகையான விவரங்களை நம்மால் ரசிக்க முடியும்.
