விஜய பாஸ்கரன் முற்போக்கு குழாத்தில் அடையாளம் காணப்படுபவர். சரஸ்வதி பத்திரிகையில் அதிகம் எழுதுபவர்கள் முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். பத்திரிகையும் ஜனசக்தி அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியினராலும் மற்ற முற்போக்கு எழுத்தாளர்களாலும் மிகவும் மதிக்கப்படுபவர் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் லிட்டரரி கமிஸாராக அதிகாரம் வகித்து வந்த, கொஞ்சம் மென்மையாகவும், நம் மரபு ஒழுகியும் சொல்வதென்றால் தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு கொள்கை வழிகாட்டும் குரு எனச் சொல்லத்தக்க அந்த சிதம்பர ரகுநாதனை எழுத்து பத்திரிகையில் சமீபத்தில்தான் நான் மிகவும் கடுமையாகவும் கிண்டலாகவும் எதிர்த்து எழுதியிருந்தேன். அந்த சாமிநாதனையாக்கும் விஜய பாஸ்கரன் சரஸ்வதியில் எழுதச் சொல்கிறார். இது தகுமா ஒரு முற்போக்கு பத்திரிகையாளருக்கு?
Category: அஞ்சலி
‘கான வன மயூரி’ – கல்பகம் சுவாமிநாதன்
தஞ்சாவூர் பாணியின் மிகச் சிறந்த கலைஞர். தஞ்சாவூர் பாணியில் வீணையைப் பொருத்தவரையில் கமகங்களின் சுத்தம், கமகங்களை வாசிக்கும் வழிமுறைகள், உத்திகள் இவற்றை அனுபவபூர்வமாக நன்கு கற்றறிந்தவர். அவர் வாசிக்கையில் பல முறை அவரே பாடியும் வாசித்திருக்கிறார். பல சமயம் அப்படிப் பாடாமல் இருக்கும் நேரத்திலும் நமக்கு யாரோ உடன் பாடுவது போலவே தோன்றும். ‘காயகி முறை’ எனப்படும் வாத்தியத்தில் வாய்ப்பட்டைப் போன்றே ஒலிக்க வைக்கும் நேர்த்தியை அவர் செவ்வனே அறிந்திருந்தார்.
தம்புராவின் மெளனம்
தஞ்சை இசைச்சூழல் தமிழகத்தின் தொன்மையான கலாசாரப் பின்னணியை உயிர்ப்போடு வைத்திருந்த ஒன்று. தஞ்சை இசைச்சூழலில் எஞ்சியிருந்த வளமான இசைக்கலைஞர்களில் ஒருவரான தஞ்சை வெங்கடேசய்யங்கார் சென்ற வாரம் தன்னுடைய 85-ஆவது வயதில் மறைந்தார். அவரைக் குறித்தும், தஞ்சை இசைச்சூழலைக் குறித்தும், தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்ட தஞ்சை K.சிவசுப்ரமணியன் அவர்களிடம் ஒரு பேட்டி கண்டோம்.
அண்ணன்களின் பாடகன்
வாசுதேவனின் பாடல்களை எனக்கு நிறைய அறிமுகப்படுத்தியவன் யாரென்று யோசித்துப் பார்த்தால் கணேசண்ணன்தான் நினைவுக்கு வருகிறான். கணேசண்ணன் அப்போது ஐ.டி படித்து முடித்துவிட்டு கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எந்த ஒரு புதிய பாடலையும் கணேசண்ணன் குரலில்தான் நாங்கள் முதலில் கேட்போம். ‘முடிவல்ல ஆரம்பம்’ திரைப்படப்பாடலான ‘தென்னங்கீற்றும் தென்றல்காற்றும்’ பாடலில் ‘வண்ணாத்திப் பாறைக்கு வரவேணும் நாளைக்கு’ என்னும் வரியை கணேசண்ணன் யாரையோ நினைத்தபடி ரசித்துப் பாடுவான். ‘கோழி கூவுது’ படத்தின் ‘பூவே இளைய பூவே’ பாடலின் ’காமாட்சி’ என்று துவங்கும் வசனத்திலிருந்தே ஆரம்பித்து விடுவான். அதுவும் ‘தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று சுற்றி அமர்ந்திருக்கும் எங்களில் யாரையாவது பார்த்துச் சொல்லுவான்.
எஸ்.வி.ராமகிருஷ்ணன்
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு, என் கைபேசியில் இருக்கும் எண்களைச் சரிபார்க்கும் போது எஸ்.வி.ராமகிருஷ்ணன் என்ற பெயர் பார்த்து, “அட இவரிடம் பேசி ரொம்ப நாள் ஆச்சே. பேச வேண்டும்” என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் பேசவில்லை. “பேசியிருக்கலாமே” என்று இனி ஆயுளுக்கும் வருத்தப்படப்போகிறேன். இலக்கியச் சர்ச்சை, மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தேவையில்லாத விமர்சனம் போன்றவை அவரிடம் கிடையாது. அவருடன் பேசிய சமயங்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். அவருடையவை, தொப்புள் சமாசாரம் இல்லாத இதழ்களில் பெரும்பாலும் கடந்தகால இந்தியாவைச் சித்தரிக்கும் வகைக் கட்டுரைகளும், nostalgia-வையும் சார்ந்தவை.
எஸ்.வி.ராமகிருஷ்ணன்
ஹைதராபாதில் வசித்துவந்த எழுத்தாளர் திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் நேற்று (09-02-2011) காலை காலமானார். சுங்க ஆணையளாராக இந்தியாவின் பல பகுதிகளிலும் வேலை பார்த்து ஓய்வு பெற்ற திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். இந்தியாவின் வரலாற்றை சுவாரசியமான நடையில் தன்னுடைய செறிவான அனுபவத்தோடு பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். சொல்வனத்தின் வளர்ச்சியிலும், தரத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த எஸ்.வி.ராமகிருஷ்ணன் பல “எஸ்.வி.ராமகிருஷ்ணன்”
பீம்சென் ஜோஷி
எனக்கு நினைவு தெரிய முதன்முதலாய் நான் கேட்ட ‘ஹிந்துஸ்தானி’ குரல் பீம்சென் ஜோஷியுடையதாகத்தான் இருக்கும். ‘மிலே ஸுர் மேரா தும்ஹாரா’ என்ற குரலைக் கேட்கும்போதுதான் ஞாயிறு காலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானதாக அர்த்தம். பல இந்திய மொழிகளும் ஒலிக்கும் அந்தப்பாடலில் தமிழ்ப்பாடலைக் கேட்கும்போது, சுற்றியிருக்கும் எல்லோரிடமும் ஏதோ தாங்களே பாடுவதுபோல ஒரு “பீம்சென் ஜோஷி”
மார்ட்டின் கார்ட்னர் என்றொரு மாயப்புதிர்
‘சயிண்டிஃபிக் அமெரிக்கன்’ பத்தி ஒரு புரட்சியையே செய்தது எனலாம். அதில் அவர் ஒவ்வொரு இதழிலும் ஒரு புதிரைக் கேட்பார். அப்புதிர் கணிதம் தொடர்பானதாகவோ, ஜியாமெட்ரி தொடர்பானதாகவோ, வார்த்தை விளையாட்டாகவோ இல்லை வித்தியாசமான யோசிப்புமுறையைக் கோருவதாகவோ இருக்கும். அப்புதிருக்கான விடையை அதற்கு அடுத்த இதழில் வாசகர்கள் எழுதி அனுப்புவார்கள். புதிருக்கான விடையை கார்ட்னரும் விளக்கி பதிலெழுதுவார்.
லீனா ஹார்ன் (13.06.1917 – 09.05.2010)
சென்ற ஞாயிற்றுக்கிழமை (மே 09, 2010) தன்னுடைய 92 வயதில் மரணமடைந்த லீனா ஹார்ன் (Lean Horne) ஒரு சிறந்த அமெரிக்க ஜாஸ் இசைப்பாடகி. நிறவெறி உச்சத்தில் இருந்த காலத்தில் அதைத் தகர்த்தெறிந்து தனக்கென தவிர்க்க முடியாதொரு இடத்தை அடைந்தவர் லீனா ஹார்ன். வெள்ளை மேலாண்மையைத் தகர்த்து ஹாலிவுட்டில் “லீனா ஹார்ன் (13.06.1917 – 09.05.2010)”
நூலை மீறும் பொம்மைகள்
தெருவில் கோஷமிட்டபடிச் சென்ற போராளிகள் மீது, காவலர்கள் நாய்களை ஏவிவிட்டு கடிக்க வைப்பது, இரண்டு வெள்ளை இன ஆட்கள் கருப்பினப் பெண்களை உருட்டுக்கட்டையால் தலையில் அடிப்பது போன்ற புகைப்படங்கள் பலத்த அபாயங்களுக்கு நடுவே எடுக்கப்பட்டவை. சில வெள்ளை இன அதிகாரிகள், தங்கள் கல்லூரியில் சேரவிருக்கும் முதல் கருப்பு மாணவரை எப்படித் தாக்குவது என்று சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது மறைந்திருந்து எடுத்த புகைப்படமும் பிரபலமான ஒன்று.
பட்டம்மாள் – ஒரு சமூக நிகழ்வு
பட்டம்மாளின் முயற்சிக்குத் தன் பரிபூரண ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணசாமி தீட்சிதரே பட்டம்மாளின் கச்சேரிகளுக்குத் தம்பூராவும் மீட்டினார்! பட்டம்மாள் இறுதிவரை ஒரு பெரும் தேசியவாதியாகவே இருந்தார். 1947-இல் சுதந்திரதினத்தன்று ஆல் இந்தியா ரேடியோவில் அவர் பாரதியாரின் தேசபக்திப்பாடல்களைப் பாடினார். அதற்காக அவருக்குத் தரப்பட்ட சம்பளத்தை வலுக்கட்டாயமாக வாங்க மறுத்து விட்டார். அப்பாடல்களைப் பாடியதைத் தன் தேசக்கடமையாகக் கருதினார் பட்டம்மாள். ஆணாதிக்க சமூகத்திலிருந்து மீண்டெழுந்த பட்டம்மாள் தன் குடும்பத்திலேயே இசைக்கு ஒரு பெரிய குருவாக விளங்கினார். தன் சகோதரர்கள் டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் இருவரையும் தேர்ந்த இசைக் கலைஞர்களாக்கினார். பட்டம்மாளின் குரல் நமக்குக் கேட்கக் கிடக்காத ராஜம்மாளின் குரல்; சமையலறைக்குள்ளேயே சிறு முனகலாகவும், ஆலாபனையாகவும் முடங்கிப்போன பெண்களின் குரல்; சமூக மாற்றத்தை முன்வைத்ததொரு தலைமுறையின் எளிய மனிதர்களின் குரல்.
111
சமீபத்தில் மறைந்த நடுவர் டேவிட் ஷெபர்ட் குறித்த கட்டுரை இது: டேவிட் ஷெபர்ட் தன் சிறுவயதில் கிராமத்தில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே அவருக்கும் இந்த ‘நம்பிக்கை’ ஏற்பட்டிருக்கிறது. நெல்சன் நம்பரால் ஏற்பட்ட துரதிர்ஷ்டம் நீங்க வேண்டுமென்றால் செய்ய வேண்டிய பரிகாரம், பேட்டிங் அணியின் வீரர்கள் அனைவரும் ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு நிற்பது.
முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்
ராஜ மார்த்தாண்டனுக்கு பிடித்தமான உலகம், அவருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தரும் உலகம், மரங்களின், பறவைகளின், பூக்களின், குழந்தைகளின் உலகம் தான். அவரது சிறந்த கவிதைகள் இவற்றைப் பற்றியன தான். இந்த உலகில் அவர் ஆழ்ந்து விடும் போது அவரிடமிருந்து பிறக்கும் கவிதைகள் ஒரு ஜென் ஞானியின் உலகிற்கு நம்மை இட்டுச் செல்லும்.
