யானைகளுடன் பேசுபவன் நூல் அறிமுகக்கட்டுரையைப் படித்தேன். ஒரு புனைகதையைப் படிக்கும்போது கிடைக்கக்கூடிய மன எழுச்சியை இக்கட்டுரை வழங்கியது. அருணகிரி விவரிக்கும் துண்டுதுண்டான சம்பவங்கள் புத்ததகத்தைப் படிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது.
Author: ஆசிரியர் குழு
மகரந்தம்
நார்வேயில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பும் துப்பாக்கி சூடும் பலரது உயிரை குடித்துள்ளது. இந்த நிகழ்த்திய அந்த மூடனின் 1500 பக்கங்களைக் கொண்டு கையேடு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த கையேட்டின் ஒரு சில பகுதிகள் கீழே இருக்கும் பக்கத்தில் படிக்கக் கிடைக்கின்றன. மத அடிப்படைவாதம் நிரம்பிய, சக மனிதனை நேசிக்கத் தெரியாத ஒரு முட்டாளின் உளறல்கள் என்று இதைப் படிப்பவர்களால் நிச்சயம் சொல்லிவிட முடியும்.
உங்களுக்காக சில புத்தகங்கள்…
வாசகர்களுக்காக சில புத்தக அறிமுகங்கள்.
உயிரின் நெடுஞ்சாலை
உயிரின் தோற்றம் குறித்த ஒரு காட்சிப் படம் கீழே. பல பகுதிகளை கொண்ட இந்தப் மொத்தப் படத்தின் முதல் பகுதி கடந்த 4 பில்லியன் வருடங்களை குறித்து மட்டும் எளிமையாக பேசுகிறது. மற்றப் பாகங்களுக்கு இந்தப் பக்கத்திற்கு செல்லுங்கள்.
ஸ்டீவ் மக்கரி
ஸ்டீவ் மக்கரி உலகமெங்கும் புகழப்படும் புகைப்படக் கலைஞர். மனிதர்கள், அவர்களது அவலங்கள், தினசரி நடப்புகளை உள்ளடக்கியது அவரது கலை. அவரது ”ஆப்கன் சிறுமி”(Afghan Girl) எனும் புகைப்படம் உலகை உலுக்கிய ஒன்று. அவரது இன்ன பிற சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு இங்கே.
வாசகர் மறுவினை
பொருளாதாரம் குறித்த கட்டுரைகள் பொதுவாக தமிழ் இதழ்களில் காணக்கிடைக்காதது. அப்படியே அத்தகைய கட்டுரைகள் வெளியானாலும் மிக மேலோட்டமாகவும், வாசகர்களுக்கு அந்நியமான மொழியிலும் இருக்கும். இவரின் கட்டுரைகள் அப்படியில்லாமல், வாசகனை முன்வைத்து எழுதப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் குறித்த வரலாற்றுப் பார்வையை இவரது கட்டுரைகள் முன்வைக்கின்றன.
மகரந்தம்
’சைபர் வார்’ எனப்படும் தகவல் தளத்தில் நடத்தப்படும் போர். இதைச் சீனா உலகெங்கும் நடத்தி வருவதைக் கனடிய ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். சீன ராணுவம் இதற்காக ஒரு பல்கலையையே நிறுவி இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர். சீனா கனடிய ஆய்வாளர்கள் சொல்வதை மறுப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் மேற்கின் பல அரசுகள் சமீபத்து ஆண்டுகளில் தம் நிறுவனங்கள் கடுமை
மின்ணணு பாடப்புத்தகம்
அடுத்த தலைமுறைக்கான மின்ணணு பாடப்புத்தகம் எப்படி இருக்கும்? நிச்சயம் மட்டமான காகிதத்தில் அச்சடிக்கப்பட்டதாக இருக்காது என்று இவர் உறுதியளிக்கிறார். பாடப் புத்தகங்களின் மோசமான மொழி நடைக்கு இவரிடம் நாம் பதில் எதிர்பார்க்க முடியாது தான்.
இணையதள அறிமுகம்
பொதுவாக அறியப்படாத இணையத்தளங்களை அறிமுகப்படுத்தும் பகுதி.
வாசகர் மறுவினை
தெரிந்தவர்களைக் கதாபாத்திரமாக ஆக்குவதில் இருக்கிற சிக்கல் குறித்துப் பலபேர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அப்படிச் சொன்ன யாரும் ”அம்மா வந்தாள்” மாதிரி ஒரு கதை எழுதியதில்லை. மரப்பசுவைக் குறித்த ஜானகிராமனின் அந்த ஒருவரித் தீர்மானம் தூக்கிவாரிப் போடச் செய்துவிட்டது. இறுதிவரை திறக்கப்படாத அவர் மனத்தின் இன்னொரு பெரும் அறையை மானசீகத்தில் திறந்து பார்க்கத் தூண்டிய பத்தி அது.
சிலியை மூடிய எரிமலை வெடிப்பு
சிலியில் நிகழ்ந்த சமீபத்திய எரிமலை வெடிப்பு, அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. விமானத்தின் நேர தாமதங்களை மட்டும் பேசும் ஊடகங்களிலிருந்து விலகி சாதாரண மக்களின் துன்பத்தையும் பதிவு செய்திருக்கிறது இந்த புகைப்படத் தொகுப்பு.
மகரந்தம்
பொதுவாக பூமியின் மிகவும் ஆழமான பகுதிகளில் பல செல் உயிரினங்கள் வாழ முடியாது என்றுதான் அறிவியலாளர்கள் இன்று வரை கருதி வந்தனர் இந்த சூழல்களில் பாக்டீரியங்கள் போன்ற ஒற்றை செல் உயிரினங்களே காணப்படுவது உண்டு. ஆனால் முதன் முறியாக தென் ஆப்பிரிக்க ஆழ்-சுரங்கங்களிலிருந்து பூமியின் அடியாழங்களில் பலசெல்கள் கொண்ட நுண்புழுக்கள் (nematodes) இருப்பது அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தி.ஜானகிராமன் சிறப்பிதழ் குறித்து…
இது சொல்வனத்தின் ஐம்பதாவது இதழ். இந்த இதழை தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமன் குறித்த சிறப்பிதழாகக் கொண்டு வர விரும்பினோம். ஜானகிராமன் வாழ்ந்த காலத்தில் பெரிய கவனத்தையும், மதிப்பையும் பெற்றவராயினும், அவர் மறைந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகிவிட்ட நிலையில் அவரைக் குறித்து சில நினைவுகளையும், மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கவேண்டும் என்று தோன்றியது. இந்த இதழ் தயாரிப்பில் வெங்கட் சாமிநாதன் அவர்கள் காட்டிய அக்கறை மிகவும் நெகிழ வைத்த ஒன்று. இந்த இதழை அவருக்குச் சமர்ப்பிக்கிறோம். சொல்வனத்தைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, விமர்சனம் செய்து, அக்கறை காட்டிவரும் அத்தனை நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் ஐம்பதாவது இதழைத் தொட்டிருக்கும் இத்தருணத்தில் எங்கள் நன்றிகள்.
“இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது?
என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரஸனையை எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை. என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகிறேன்.
சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத்தான் நான் பகிர்ந்து கொள்கிறேன் – எழுத்து மூலம்.
– தி.ஜானகிராமன்”
Rotationplasty – கால் இழந்தோர்க்கு ஒரு வரம்
புற்றுநோய் போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு மனிதர் தன்னுடைய கால் முட்டியை இழக்க நேரிட்டால் தன்னுடைய இயல்பான வாழ்க்கையை இழக்க நேரிடுகிறது. ஆனால் மருத்துவம் Rotationplasty எனும் ஒரு புதுவித அணுகுமுறையால் அந்த குறையை போக்குகிறது.
மகரந்தம்
உயிரியல் சமீபகாலங்களில் நிறைய தொழில் துறை நுட்பங்களுக்கு உதவுகிறது. தேனீக்களின் கொட்டு நமக்கு நிறைய கடுக்கும் என்பதைக் கொட்டு வாங்கியவர்கள் அறிவர். சிலருக்கு இந்தத் தேனீக்களின் ‘விஷம்’ ஒவ்வாததால் துரிதமாக எதிர் மருந்து ஏதும் கொடுக்கப்படாவிட்டால் ஆள் உயிருக்கே கூட ஆபத்து நேரும். இந்த ‘விஷத்தை’ என்ன விதங்களில் பயன்படுத்தலாம் என்று அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகையில் இதை வைத்து வெடிமருந்துகள் இருப்பதைக் கண்டறிய ஒரு கருவி செய்ய முடியும் என்று அறிந்தனர்.
உலக அருங்காட்சியக தினம்
கடந்த மே 17 உலகமெங்கும் உலக அருங்காட்சியக தினமாக கருதப்படுகிறது. அதையொட்டி ஒரு புகைப்படத்தொகுப்பு இங்கே.
தி.ஜானகிராமன் – வாழ்க்கைக் குறிப்பும், புத்தகங்களும்
ஜானகிராமனின் தீவிர இலக்கியச் செயல்பாடு கு.ப.ராவின் அறிமுகத்துக்குப் பின்னரே நிகழ்ந்திருக்கிறது. தன்னுடைய 24-ஆவது வயதில் அமிர்தம் என்ற முதல் நாவலை எழுதியிருக்கிறார். பத்து நாவல்களும், இரண்டு குறுநாவல்களும், மூன்று நாடகங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், மூன்று பயண நூல்களும் எழுதியிருக்கிறார். கடைசி நாவலான நளபாகம் 1982-இல் வெளியானது. 1979-ஆம் வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக வழங்கப்பட்டது.
முப்பரிமாண ஒலி
உண்மை. காட்சி ஊடகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய தொழில்நுட்பம் இப்போது ஒலியிலும். எப்படிச் செயல்படுகிறது இந்தத் தொழில்நுட்பம்? கீழே இருக்கும் காட்சிப் படம் அதை விளக்குகிறது.
உலக ஊடக சுதந்திர தினம்
உலகமெங்கும் ஒவ்வொரு ஆண்டும் மே 3-ஆம் நாள் உலக ஊடக சுதந்திர தினம்(World Press Freedom Day) என்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி Slate இதழ் உலகமெங்கும் இருக்கும் பத்திரிக்கையாள நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக புகைப்படத் தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதை இங்கே காணலாம்.
மகரந்தம்
அமெரிக்கா பின்லாடனை கொல்ல இந்தப் பத்தாண்டுகளில் ஒதுக்கிய நிதி- 1.3 ட்ரிலியன் டாலர்கள். இது போர்ச்செலவு, நாடெங்கிலும் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், போரில் இறந்த, காயம்பட்ட வீரர்களுக்கான செலவுகள் போன்ற எல்லாவற்றையும் சேர்த்த கணக்கு. 1.3 ட்ரிலியன் என்ற எண்ணில் எத்தனை சைஃபர்கள்/ சுழிகள் உண்டு தெரியுமில்லையா? 1300,000,000,000 டாலர்கள்.
கி.கஸ்தூரி ரங்கன் (1933 – 2011)
சென்ற புதன் கிழமை, 4.5.2011 அன்று மறைந்த கி.கஸ்தூரி ரங்கன் தமிழ் இதழ் வரலாற்றில் மறக்கப்பட முடியாத பங்காற்றியவர். தி.ஜானகிராமன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகியவர்களுடன் இணைந்து கணையாழி இதழைத் துவங்கிய நாள் முதல் அவர் தன் பணத்தில்தான் இதழை நடத்தியிருக்கிறார். சுஜாதாவின் “கடைசி பக்கங்கள்”, தி ஜானகிராமன், ஆதவன், போன்றவர்களின் முக்கியமான நாவல்கள் கணையாழியில் வெளிவந்துள்ளன.
36 – குறும்படம்
ஸ்பானிய அரசு அலுவலகங்களை, அதன் அலுவலகர்களை மெல்லிய புன்னகையுடன் சாட்டையால் விளாசும் ஒரு குறும்படம். மொழி மற்றும் மனிதர்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்தியச் சூழலுக்கு எந்த உறுத்தலுமின்றி இந்தப் படம் பொருந்தும். சீனாவில் இடப்பெயர்வு குறித்து ஜெயந்தி சங்கரின் கட்டுரைத்தொடரைப் படித்துப் பார்த்தால், இந்தக் குறும்படம் சீனாவிற்கும் பொருந்துவது “36 – குறும்படம்”
’பறவைப் பார்வை’ ஒளிப்படங்களின் வரலாறு
உலக பூமி நாளை (World Earth Day – ஏப்ரல் 23) முன்னிட்டு ஸ்லேட் இணையதளம் ஒரு சுவாரசியமான ஒளிப்படங்களின் தொகுப்பைத் தந்திருக்கிறது. அதில் வான்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படங்களின் வரலாற்றை உதாரணப் படங்களோடு தந்திருக்கிறது. அதைப் பார்க்க, படிக்க இங்கே செல்லுங்கள்.
மகரந்தம்
சீனா கட்டுமானத் துறையில் மிகையான அளவில் முதலீடு செய்திருப்பதன் பலனாக அங்கு புல்லட் ரயில்கள் காலியாக ஓடுகின்றன, சிறுநகர்களின் கட்டிடங்களில் குடியிருக்க ஆளில்லை, விமான நிலையங்களில் பயணிகள் இல்லை, அரசு கட்டிடங்களில் பணியாற்ற அலுவலகங்கள் இல்லை, தனியார் குடியிருப்புகளும் வாங்க ஆளின்றி கிடக்கின்றன. சீன அரசு தன் மக்கள் தங்களின் உழைப்பின் ஊதியத்தைப் பெற்று வசதிகளை அனுபவிப்பதைத் தடுப்பதேன்? உள்நாட்டு வளம் பணவீக்கத்தில் கொண்டு நிறுத்திவிடும் என்றும், அதனால் சீன பொருட்கள் உலகச் சந்தையில் போட்டியிட முடியாதென்றும் சீன ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள்.
பாரதி தமிழ்ச்சங்கம் – தமிழ்ப்புத்தாண்டு விழா
நாள்: 30-04-2011
நேரம்: மாலை 4 மணி முதல் 8 மணி வரை
இடம்: சன்னிவேல் ஹிந்து கோயில் கலையரங்கம்
மறுபக்கத்தின் மறுபக்கம்
மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும், பொன்னீலன் எழுதிய மறுபக்கம் நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். அன்புடன், எம்.எல்.மர்யம் ஆதாம் ஏவாள் பதிப்பகம் நாள்: 30 ஏப்ரல் 2011 சனிக்கிழமை நேரம்: மதியம் 2:30 – 5:30 “மறுபக்கத்தின் மறுபக்கம்”
வைரம் தேடிய மண்
மண் அனைத்தையும் வெற்றி கொள்ளும். மண், காலத்துடைப்பான். மண்ணின் நீரினும் சீரிய ஆற்றொழுக்குக்குக்கு கரைகள் கிடையாது, அணைபோட்டு மாளாது. மண்ணில் பிறந்தோம், மண்ணில் இருந்தோம், மண் நமக்கு இல்லிடமும் ஆகும். நம் காலடியில் கிடக்கும் மண்ணினும் வலியது எதுவும் இல்லை- அதன் உறுதியான வெற்றியைச் சுட்டுகிறது நமீபியாவின் கோல்மான்ஸ்கோப் “வைரம் தேடிய மண்”
மகரந்தம்
ஜப்பானியர்கள் அண்மையில் சந்தித்த பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்த ஆழிப் பேரலையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உயிரிழப்பு, பொருளாதார இழப்பு என்ற அளவில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் ஜிஷுக்கு என்ற சுய கட்டுப்பாடு கடைபிடிக்கும் வகையில் அனைத்து தளங்களிலும் ஆரவாரங்களைத் தவிர்க்கிறார்கள்.
எந்திரப் பறவை
FESTO எனும் நிறுவனம் ஒரு பறவை போலவே பறக்கும் எந்திரத்தை தயாரித்துள்ளது. கூடிய விரைவில் இது உளவு வேலைக்காக பயன்படுத்தப்படலாம்.
ஆப்பிரிக்க புஷ் யானைகள்
ஸ்மித்சொனியன் இன்ஸ்டிட்யூட்டின் இணைய தளம் ஸ்மித்சோனியன் வைல்ட். இங்கு உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் காமேராவைப் பொறியாக வைத்து எடுத்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை இணைத்திருக்கிறார்கள். இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் சிறப்பான வகைகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கென்யாவில் எடுக்கப்பட்ட ஆப்பிரிக்க புஷ் யானைகளின் புகைப்படங்கள் எவ்வளவு “ஆப்பிரிக்க புஷ் யானைகள்”
சக்தி சுரபி – இயற்கை எரி சக்தி
உங்கள் வீட்டுக் கழிவிலிருந்து கிடைக்கும் எரி சக்தியால் உங்கள் வீட்டு எல்பிஜியை உங்களால் குறைக்க முடிந்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது. ஆனால் இலவசங்களின் மயக்கத்தில் இருக்கும் சமூகம் இந்த தொழில்நுட்பம் குறித்து புரிந்து கொள்வது தற்போதைக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறிதான்.
தமிழினி கலை இதழ், உபு இணைய தளம்
தமிழறிஞர்கள், தமிழாராய்ச்சி, தத்துவம், சிற்பக்கலை, கல்வெட்டு ஆராய்ச்சி, சமூகம், சமகாலத் தமிழ்ச்சூழல் ஆகியவற்றைக் குறித்துத் தீவிரமான பல கட்டுரைகளை வெளியிட்டு வரும் சிறந்த சிற்றிதழான தமிழினியை இப்போது இணையத்திலும் படிக்கலாம். உபு டாட் காம் என்ற தளத்தில் ஏராளமான அரிய இசைத்தொகுப்புகளையும் திரைப்படங்களையும் பதிவிடுகிறார்கள். தொடர்ந்து புதிய படைப்புகளை இணைக்கிறார்கள்.
மகரந்தம்
வளி மண்டலத்திலிருந்து இது தவிர மின்னல் மூலமாகவும் நைட்ரஜன் பூமிக்கு வரும். இந்த நைட்ரஜன் புவியில் ஒரு சுழற்சியில் உள்ளது. வளி மண்டலத்திலிருந்து நிலம் நீர் என செல்லும் அச்சுழலில் இப்போது கடல்களில் உள்ள நைட்ரஜனில் துண்டு விழுகிறது என்கிறார்கள். உண்மையிலேயே துண்டு விழுகிறதா அல்லது அதன் சுழற்சியில் நாம் இன்னும் அறிந்திராத மர்மப் பாதைகள் இருக்கின்றனவா?
மகரந்தம்
மனித குலத்தின் தேவை வளர வளர, அதற்கு ஈடுகொடுத்து கணிணியின் வேகமும் வளர வேண்டும். இல்லையேல், எளிய மனிதர்களுக்கான நுகர்வோர் மின்ணணுவியல் துறை முதல் பெரும் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் அறிவியல் துறை வரை, பல்வேறு தளங்களில் பெரும் தேக்கம் ஏற்படும். அதனால், வேறு வழியே இல்லை, கணிணியின் வேகம் அதிகரித்தபடி இருக்க வேண்டும். ஆனால் எப்படி? கணிணி வல்லுநர்கள் முன்வைக்கப்பட்ட சவால் இது.
தொலைபேசி – ஒரு பரிணாமம்
90-களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் பொது தொலைபேசியகத்தில் ஒரு பெரிய வரிசை காத்திருக்கும். ஏனெனில் தொலைதூர அழைப்புகளுக்கு(STD) ஒன்பது மணிக்கு மேல் விலை சற்று குறைவு. ஓசி விகடன், ஓசி குமுதம் இவற்றோடு ஓசி டெலிபோன் வாய்ப்புக்காக கழுகாய் திரியும் பக்கத்துவீட்டுகாரர்கள் இன்னும் நினைவில் உள்ளனர். ஆனால் “தொலைபேசி – ஒரு பரிணாமம்”
பறவைகளின் இடம்பெயர்வு
பறவைகளின் இடம்பெயர்வு குறித்ததொரு அற்புதமான படத்தைப் பாருங்கள்:
ஜப்பானில் இயற்கை நடத்திய பேரழிவு
ஜப்பான் தேசம் அடுத்தடுத்து இயற்கை பேரழிவுகளை சந்தித்துள்ளது. மானுடத்தின் மிகப்பெரும் சோகங்களில் ஒன்றை உலகம் இந்த தருணத்தில் தரிசித்துள்ளது. தனது அனைத்து அடையாளங்களையும் துறந்து, மானுடம் இந்த பேரழிவில் இறந்த உயிர்களுக்காக மனம் இரங்குகிறது. இந்த துயர கணத்தில் மிகுந்த மனவேதனையுடன் ‘சொல்வனம்’ தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் “ஜப்பானில் இயற்கை நடத்திய பேரழிவு”
மகரந்தம்
எத்தனையோ தணிக்கைகளையும் மீறி சர்வதேச ஊடகங்கள் வழியே அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கசியும் இந்த தண்டனைகளை இத்தனை கொடூரமானவை என்றால், வெளியுலகம் அறியாமல் கிராமப் பஞ்சாயத்துகளால் கொலை செய்யப்பட்ட பெண்கள் எத்தனை, எத்தனை!
World Press Photo போட்டியில் வென்ற ஒளிப்படங்கள்
உலகெங்கும் நன்றாக அறியப்பட்ட இப்போட்டிக்கு ஒரு லட்சத்து சொச்சம் ஒளிப்படங்கள் அனுப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து வெற்றிபெற்றிருக்கும் அந்த ஒரு படம்தான் எத்தனை விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது! இப்போட்டியில் கல்கத்தா நகர வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு படமும் வெற்றிபெற்றிருக்கிறது. படங்களை இங்கே காணலாம்: http://www.boston.com/bigpicture/2011/02/world_press_photo_winners.html
எறும்புகளின் ஜீனோம், யானை டாக்டர், செயற்கைக்கால் யானை
இங்கே கீழே தரப்பட்டிருக்கும் வீடியோவில் சில சுவாரசியங்கள் இருக்கின்றன. சென்ற வாரத்தில், அதீதமான நோயெதிர்ப்பாற்றல் கொண்டிருக்கும் அர்ஜெண்டீனிய எறும்புகளின் ஜீனோம்கள் படிக்கப்பட்டிருக்கின்றன. இதைக்குறித்து Calacadamey-யைச் சேர்ந்த எறும்பு நிபுணர் Dr.ப்ரையன் ஃபிஷர், இந்த எறும்புகளின் ஜீனோம்களைப் புரிந்துகொள்வதன் மூலம் மனிதர்களும் இந்த எறும்புகளைப் போல, தங்கள் வியாதிகளை எதிர்க்கும் “எறும்புகளின் ஜீனோம், யானை டாக்டர், செயற்கைக்கால் யானை”
எஸ்.வி.ராமகிருஷ்ணன்
ஹைதராபாதில் வசித்துவந்த எழுத்தாளர் திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் நேற்று (09-02-2011) காலை காலமானார். சுங்க ஆணையளாராக இந்தியாவின் பல பகுதிகளிலும் வேலை பார்த்து ஓய்வு பெற்ற திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். இந்தியாவின் வரலாற்றை சுவாரசியமான நடையில் தன்னுடைய செறிவான அனுபவத்தோடு பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். சொல்வனத்தின் வளர்ச்சியிலும், தரத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த எஸ்.வி.ராமகிருஷ்ணன் பல “எஸ்.வி.ராமகிருஷ்ணன்”
சொல்வனம் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்
சொல்வனம் வெளியீடுகளாக வந்த சுகாவின் ‘தாயார் சன்னதி’, ராமன்ராஜாவின் ‘சிலிக்கான் கடவுள்’ புத்தகங்களைக் கீழ்க்கண்ட புத்தகக்கடைகளில் வாங்கலாம். டிஸ்கவரி புக் பேலஸ் – சென்னை, இலக்கம் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, வெஸ்ட் கே.கே நகர், சென்னை – 600078. தமிழ்நாடு. (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை “சொல்வனம் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்”
இந்திய மீனவர்களைக் காப்போம்
இந்திய மீனவர்களின் உயிரைக் குடிக்கும் இலங்கை ராணுவத்தின் அடாவடிதனத்தையும், தனது குடிமக்களை காப்பாற்றத் தவறிய மத்திய அரசையும் சொல்வனம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருங்கிணைந்த இந்தியாவின் இறையாண்மையைக் காக்கவும், பிரிவினைவாதிகளின் கரம் வலுப்பெற்றுவிடாமல் இருக்கவும், இந்திய அரசு தனது குடிமக்களை காக்கும் முனைப்புடனும், உறுதியுடனும் செயல்பட வேண்டும். குறிப்பு : “இந்திய மீனவர்களைக் காப்போம்”
மத்தியக்கிழக்கில் வேகமாகப் பரவும் கலகம்
துனிஷியா, லெபனான், எகிப்து என்று தொடர்ந்து மக்கள் கலகம் மத்தியக் கிழக்கு நாடுகளில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிரச்சனை. சுதந்திரம், பொருளாதாரம், மதம், இன்னும். கீழே இந்த மூன்று நாடுகளிலும் நடைபெற்ற கலகத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
கம்யூனிஸ திரைத்தணிக்கை குறித்து கிரிஸ்தாஃப் கீஸ்லாஸ்கி
போலிஷ் திரைப்பட இயக்குநர் கிரிஸ்தாஃப் கீஸ்லாஸ்கி (Krzysztof Kieślowski) தனது திரைப்படங்கள் மூலமாக உலகத்தை கவர்ந்தவர். இவரது வண்ணங்கள்(Colors) திரைத்-தொடர், வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை திரைப்படங்களில் அழகியலையும், வாழ்க்கை குறித்த கண்ணோட்டங்களை ஒரு புதிய தளத்திற்கு கொண்டு சென்றவர். கம்யூனிச போலாந்தில் திரைத்துறையினர் சந்தித்த கட்டுப்பாடுகளை அறிந்து கொள்ளும் “கம்யூனிஸ திரைத்தணிக்கை குறித்து கிரிஸ்தாஃப் கீஸ்லாஸ்கி”
திருப்பூர் புத்தகக் கண்காட்சி, சுந்தர ராமசாமி விருது – அறிவிப்புகள்
தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது.
மகரந்தம்
பர்மா, இலங்கை போன்ற தேசங்கள் கூட இந்தியாவை துளியும் மதிப்பதில்லை. உறுதியற்ற அரசும், சுயநலவாத தலைவர்களும் ஒரு தேசத்திற்கு பெற்று தரும் ஆகப்பெரும் மரியாதை இது. பிற அரசாங்கங்களை விட்டுத்தள்ளுங்கள். ஒரு ஆஸ்திரேலிய இசைக்குழு தனக்கு ”All India Radio” என்று பெயரில் உலவுகிறது. இந்திய அரசின் முக்கியமான அங்கமான, அதன் ஒலிபரப்புத் துறையின் பெயரை தனக்கு சூட்டிக்கொள்ளும் திமிர்த்தனத்தையும், இந்த பெயரை பதிவு செய்து தனக்கான உரிமையை உறுதி செய்யத் தெரியாத இந்திய அதிகார வர்க்கத்தின் அரியாமையையும் எண்ணி எண்ணி வியக்கத்தான் முடியும்.
சொல்வனம் பிரசுரம் – சுகா, ராமன்ராஜா புத்தகங்கள்
ஏற்கனவே அறிவித்தபடி, இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற சனிக்கிழமையன்று (08-01-2011) இவ்விரு புத்தகங்களும் ‘உடுமலை.காம்’ அரங்குக்கு வந்தன. ஞாயிற்றுக்கிழமை ஒரு நட்பார்ந்த புத்தகவெளியீடு நடந்தது. சொல்வனம் இதழிலும், வார்த்தை சிற்றிதழிலும் சுகா எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘தாயார் சன்னதி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சொல்வனம் இதழில் ராமன் ராஜா எழுதிய கட்டுரைகள் ‘சிலிக்கான் கடவுள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிருக்கிறது.
மகரந்தம்
ஒளி ஊடுருவும் சிமெண்ட், இது இருந்தால் நிறைய இருட்டு வீடுகள் சென்னையிலும், கல்கத்தாவிலும், பம்பாயிலும் ஒளி வீசும் கட்டிடங்களாகி விடும். எத்தனையோ கோடவுன்கள் இருட்டுக் கல்லறைகளாக இல்லாமல் மனிதர் நடமாடி வேலை செய்யும் இடங்களாகும். இந்த சிமெண்ட் சுவர்கள் வழியே காற்றும் வீசுமானால், என்னவொரு சுகமாக இருக்கும்? கொசுக்களையும், தூசியையும் மட்டும் வடிகட்டி அனுப்பும்படி வடிவமைக்கச் சொல்ல வேண்டும்.
டிராம் வண்டிகள்
டிராம் வண்டிகள் நவீன யுகத்தின் ஒரு முக்கியமான சின்னம். பல நாடுகளிலும் டிராம் வண்டிகள் பல பத்தாண்டுகளாக உபயோகத்தில் உள்ளன. காலத்தோடு அது பல வடிவங்களை அடைந்திருக்கிறது. பயணங்களின் அனுபவங்கள் நீடித்து நிற்பவை. பயணம் செய்த வாகனமும் அவ்வகையில் முக்கியமானவை. இங்கு பல்வேறு காலகட்டங்களில் பல நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்ட “டிராம் வண்டிகள்”
