தமிழ் இலக்கியத் தோட்டம்
தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு
தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.
2011 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். விண்ண்ப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியமில்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.
பரிந்துரைகளை சமர்ப்பிக்க இறுதி நாள் 12 மார்ச்சு 2011
பரிந்துரைகளை tcaward@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும்.
மேலதிக விபரங்களுக்கு – https://sites.google.com/site/tcaward/home/tamil
அன்புடன்
வெங்கட்
திருப்பூர் புத்தகக் கண்காட்சி அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்,
8 வது திருப்பூர் புத்தக கண்காட்சி அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன். தாங்களும், தங்களது நண்பர்களும் பங்கேற்க ஆவன செய்ய வேண்டுகிறேன். தமிழகத்தில் ஒரு பதிப்பகத்தின் முயற்சியில் 100 க்கணக்கன பதிப்பகங்கள் பங்கேற்று விரிவான ஒரு புத்தக கண்காட்சி நடப்பது இங்கு மட்டுமே. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடப்பது இங்கு மட்டுமே. இக்கண்காட்சி மேலும் வெற்றி பெற உங்கள் உதவியை நாடுகிறோம்.
க. நாகராஜன்
ஒருங்கிணைப்பாளர்,
திருப்பூர் புத்தக கண்காட்சி.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

