உலக ஒளிப்படப் போட்டி – 2012

ஒவ்வொரு வருடமும் உலகின் சிறந்த ஒளிப்படங்களுக்கான ‘World Press Photo Competition’ போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஜப்பான், கொரியா, செனகல், அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறந்த படங்கள், பல்வேறு பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

‘ஆற்றேன் அடியேன்’ கட்டுரைக்கு இரண்டு மறுவினைகள்

தமிழ் விக்கிப்பீடியா, வரலாறு காணாத அளவுக்கு இலங்கைத் தமிழர்களும், சிறிய எண்ணிக்கையில் மலேசியத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களுமாக ஒன்றிணைந்து உருவாக்கி வரும் பெரிய ஆக்கம். அத்தனையும் இலவசம். ஏராளமான படங்கள், மிக அரிய ஆயிரக்கணக்கான அறிவுச் செய்திகள் கொண்ட பெரும் தொகுப்பு. அதில் உள்ள குறைகள் மிக ஏராளம் மறுக்கவே இல்லை, எனினும் ஒரு வரலாறு படைக்கும் படைப்பு என்பது அதில் உள்ள அரிய செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால் தெரியும்.

2012-ஆம் ஆண்டின் இரும்பு மனிதர்

மானுடம் பல விண்ணைத் தொடும் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களை சாதித்துள்ளது. ஆனால், இந்த தொழில்நுட்பங்களை அனுபவித்துக் கொண்டே தன்னுடைய குறைபட்ட அறிவையும் மானுடம் அவ்வப்போது வெளிப்படுத்தும். அத்தகைய கோணங்கித்தனம் ஒன்றை இந்த புகைப்படத் தொகுப்பு ஆவணப்படுத்துகிறது. தங்களை வலுவானவர்களாக முன்னிருத்த மனித இனம் தான் எத்தனை பாடுபடுகிறது? இதனூடேயே “2012-ஆம் ஆண்டின் இரும்பு மனிதர்”

வாசகர் மறுவினை

காலஞ்சென்ற இசை கலைஞர் திரு. வீருசாமி பிள்ளையும் சரி திரு. ஜெயராம நாயுடுவும் சரி இருவருமே திருவிடைமருதூரில் சிறு வயது முதல் அடி மட்டத்திலிருந்து தங்களது வாழ்க்கையில் சிறுக சிறுக வளர்ந்து ஒரு வளமான நாணயமான ஒரு வாழ்க்கையினை அமைத்து கொண்டவர்கள். அதுவும் தங்களது உழைப்பையே மட்டுமே மூலதனமாக வைத்து.

மகரந்தம்

ஒரு பெரும் யுத்தத்தில் அமெரிக்கா அதன் அத்தனை வளங்களை அழித்த பின்னும் எஞ்சி இருப்பது இத்தனை என்றால் எவ்வளவு பெரும் நிதியை ஆப்பிரிக்க, ஆசிய, லத்தின் அமெரிக்க மக்களிடமிருந்து சுரண்டி இருக்க வேண்டும் என்பதை மேற்கின் மக்களோ, அறிஞர்களோ, அரசியலாளர்களோ அதிகம் பேசுவது இல்லை. ஆனால், சமூக/ அரசியல் ஆய்வாளர்களில் பலரும் காலனியம் உலக மக்களுக்கு நல்லதே செய்தது என்று கூட எதிர்ப் பிரசாரம் செய்யத் தலைப்பட்டிருக்கின்றனர்.

GRAPHENE – ஒரு அதிசய உலகம்

ஒரு பென்சிலைக் கொண்டு ஒரு வெள்ளைத்தாளின் மீது சர்வசாதாரணமாக கிறுக்கிவிடமுடியும். ஆனால் அந்த கிறுக்கல்களுக்கு கீழ் உள்ள உலகத்தை நீங்கள் அறிவீர்களா?

மகரந்தம்

உலக வரலாற்றில் 72 மொழிகள் பேசத் தெரிந்தவர் இருந்திருக்கிறார். ஆனால் அவரது ஜீனியசில் எந்த மர்மமும் இல்லை – நம் மழலைகள் பயன்படுத்தும் பிளாஷ் கார்டுகளைத்தன பயன்படுத்தி இருக்கிறார். ஐம்பது மொழிகளைப் பேசத் தெரிந்த ஒருவர் ஹெல்சின்கிக்கு விமானத்தில் பயன்பப்படுகையில் பின்னிஷ் மொழியைக் கற்றாராம். ஆனால் அவரது மகன், தன் தந்தை கூச்சப்படும் இயல்பு கொண்டவரென்றும், தன் சுபாவத்தை மறைத்துக் கொள்ளவே வெவ்வேறு மொழிகள் கற்றார் என்றும் சொல்கிறார்.

ஃபைபர் ஆப்டிக் இழைகள்

கீழே தரப்பட்டிருக்கும் வீடியோவில் ஃபைபர் ஆப்டிக் இழைகள் எவ்வாறு செய்தியை எடுத்துச் செல்கின்றன என்று அருமையாக எளிதில் புரியும்படி விளக்கப்பட்டிருக்கிறது. ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்துக்கு பெருங்கடல்களுக்குக் கீழே செல்லும் இதுபோன்ற இழைகள்தான் இன்று நம் இணையத் தொடர்பையும், தொலைதூர தொலைபேசித் தொடர்பையும் நிர்ணயிக்கின்றன.

2012 புத்தகக் கண்காட்சியில் சொல்வனம் வெளியீடுகள்

நண்பர்களுக்கு, இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை புத்தகக் கண்காட்சி, புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது.  இந்தப் பள்ளி பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் உள்ளது. இக்கண்காட்சியில் சொல்வனம் வெளியீடாக வந்திருக்கும் புத்தகங்கள் கிடைக்கும். தாயார் சன்னதி – இரண்டாம் “2012 புத்தகக் கண்காட்சியில் சொல்வனம் வெளியீடுகள்”

‘மூங்கில் மூச்சு’ புத்தக வடிவில்

தமிழ்ச் சமூகத்தில் நடந்த பல்வேறு காலச்சார மாற்றங்களையும் போகிற போக்கில் சுகா பதிவு செய்து கொண்டு போகிறார். இது மூங்கில் விடும் மூச்சு மட்டுமே அல்ல….ஓர் இளைஞனின், காலத்தின், ஒரு தலைமுறையின் சுவாசம்!

மகரந்தம்

உலக வரைப்படத்தில் சீனாவை பார்க்கும் போது ஒரு பெரிய விரிந்த அரங்கு போலத் தோன்றும். இந்த பரந்த அரங்கில் சீனா தன் மக்களையே ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு துரத்திஅடிக்கிறது. இது ஒருவகை சமூக கால்பந்தாட்டம் ஆனால் இங்கு இந்தக் கட்டுரை பேசுவது கால்பந்தாட்ட விளையாட்டு குறித்து.

3rd Letter – குறும்படம்

நீங்கள் வருங்கால உலகின் மேன்மைகள் குறித்த கற்பனாவாதியாக இருக்கலாம். இல்லை உலகின் சூடேற்றம் குறித்தும், மனித இனத்தின் இருப்பு குறித்தும் கவலை கொண்டவராக இருக்கலாம். யாராக இருந்தாலும் நீங்கள் தவறவிடக் கூடாத அறிவியல்-புனைவு குறும்படம் இது. இருண்ட எதிர்காலம், மரணித்துவிட்ட இயற்கை, கேள்விக்குள்ளாகும் மனித இருப்பு. இப்பின்னணியில் ஒரு “3rd Letter – குறும்படம்”

சோவியத் என்றொரு கலைந்த கனவு

சோவியத் என்றொரு புவி அமைப்பு இருந்தது. அது உலகெங்கும் பல மக்களின் கனவாகவும் இருந்தது. 20 வருடங்களுக்கு முன் அந்தக் கனவு கலைந்தது. ஒரு சித்தாந்தத்தின் வீழ்ச்சியாக அது கருதப்பட்டது. தனி மனித அளவில் பலருக்கு அது அளித்த ஏமாற்றம் அளப்பெரியது. ஏமாற்றம், அதைத் தொடர்ந்து வெற்றிடம். அந்த “சோவியத் என்றொரு கலைந்த கனவு”

‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பு – இப்போது விற்பனையில்

எழுத்தாளர் சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை சொல்வனம் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தை இணையம் மூலமாக வாங்க முடியும்.

’பனுவல் போற்றுதும்’ – புத்தக வடிவில்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்வனம் இதழில் ‘பனுவல் போற்றுதும்’ என்ற தொடரில் அரிய புத்தகங்களை அறிமுகப்படுத்தி வந்தார். அந்தத் தொடர் இப்போது புத்தக வடிவில் ‘தமிழினி’ வெளியீடாக வெளிவருகிறது.

இதழ் குறித்து…

துவக்கத்திலிருந்து ’சொல்வனம்’ இலக்கியம் மட்டுமல்லாமல் பல்துறை சார்ந்த கட்டுரைகளையும், புனைவுகளையும் வெளியிட்டுவருகிறது. இவற்றுக்கு வாசகர்களிடமிருந்து கிடைக்கும் மறுவினைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கின்றன. தொடர்ந்து சொல்வனம் இதே திசையில் செல்லும். சமீபத்தில் பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோருக்கு அவர்களின் பல பத்தாண்டு கால இலக்கிய இயக்கத்தைக் கௌரவிக்கும் வகையில் பொருத்தமான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களை எம் பங்குக்குக் கெளரவப்படுத்தும் விதமாக, இந்த இதழில் எப்போதும் போல் பல்துறை சார்ந்த கட்டுரைகளுடன், அவர்கள் சம்பந்தப் பட்ட சில படைப்புகளையும் வெளியிட்டுள்ளோம்.

மனிதர் என்றென்றுமாக வாழ முடியுமா?

மனிதர் என்றென்றுமாக வாழ முடியுமா? அதற்கு என்ன தடைகள்? என்ன செய்து இவற்றில் பலவற்றை நாம் விலக்க முடியும்? துவக்கத்தில் சாவைப் பற்றி நாம் நினைப்பதையே நாம் மாற்ற வேண்டும். மூப்பு என்பதை எப்படி அணுகுகிறோம் என்பதில் இருந்து துவங்க வேண்டும். வெறும் மூப்பு என்பது அத்தனை நல்ல “மனிதர் என்றென்றுமாக வாழ முடியுமா?”

2011 – ஒரு பார்வை

இந்த வருடமும் வழக்கம்போல் மகிழ்ச்சிகள், நிறைவேறாத எதிர்பார்ப்புகள், சோகங்களுக்கிடையே கழிந்தது. பல இடங்களில் நடந்த பல்வேறு இது போன்ற நடவடிக்கைகளை காட்சிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு இங்கே : மேலும் புகைப்படங்கள் : 1. http://www.theatlantic.com/infocus/2011/12/2011-the-year-in-photos-part-1-of-3/100203/ 2. http://www.theatlantic.com/infocus/2011/12/2011-the-year-in-photos-part-2-of-3/100204/

இலக்கிய அங்கீகாரங்கள்

சமீபத்தில் இரு இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டும் தகுதியான படைப்பாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன. 2011-ஆம் ஆண்டிற்கான ‘சாரல்’ விருதிற்கு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும், வண்ணதாசனுக்கும் அளிக்கப்படுகின்றன. 2011-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் பூமணிக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள். தகுதி வாய்ந்த படைப்பாளிகளைத் தொடர்ந்து கெளரவித்து வரும் சாரல் விருது அமைப்புக்கும், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் சொல்வனம் தெரிவித்துக் கொள்கிறது.

மகரந்தம்

கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் கையாளும் தரவுகள் அளவில் மிகப்பெரியவை. அவை இந்த தரவுகளை எப்படி கையாளுகின்றன போன்ற தகவல்கள் பொதுவாக வெளியில் வருவதில்லை. ஏதோ ஒரு ரகசிய இடத்தில் இந்த தரவுகளும், அதன் சர்வர்களும் கையாளப்படுகின்றன. ஆனால் முதன் முறையாக ஒரு கட்டுரை உங்களை அந்த ரகசிய இடத்திற்கு கொஞ்சம் அருகில் அழைத்து செல்கிறது.

துருவநட்சத்திரம் – புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு, லலிதா ராம் மிருதங்க மேதை பழநி சுப்ரமணிய பிள்ளை குறித்து எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இசை வரலாற்றுப் புத்தகம் டிசம்பர் மாதத்தில் சொல்வனம் வெளியீடாக வெளிவரவிருக்கிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். துருவ நட்சத்திரம் புத்தகத்தின் வெளியீட்டு விழா 11.12.2011 அன்று சென்னை ராகசுதா “துருவநட்சத்திரம் – புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்”

மகரந்தம்

பணம் பாதாளம் வரை பாயும் என்று சொன்னவர்கள் அதை சக்தியைக் குறிக்கச் சொல்லவில்லை, அது தொடர்ந்து மனிதரை எத்திசையில் அனுப்பும் என்று குறித்தார்கள் போலிருக்கிறது. ஏதோ ரஷ்யா, சீனாவின் முதலியம்தான் கம்யூனிஸ்டு என்று பெயர் தாங்கிய குற்றக் கும்பல்களின் விளையாட்டரங்கு என்று நினைக்கத் தேவையில்லை. உலகெங்கும் இதே கதைதான்.

நேஷனல் ஜியோகரபிக் புகைப்படப் போட்டி

பல்வேறு இயற்கை, மனிதர்கள், இடங்களை அழகிய முறையில் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள். தவறவிடக் கூடாதவை. அவற்றை இங்கே பார்க்கலாம்.

சொல்வனம் 2011 – புத்தக வெளியீடுகள்

லலிதா ராம் மிருதங்க மேதை பழநி சுப்ரமணிய பிள்ளை குறித்து எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இசை வரலாற்றுப் புத்தகமும், சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ நூலின் இரண்டாம் பதிப்பும் டிசம்பர் மாதத்தில் சொல்வனம் வெளியீடுகளாக வெளிவரக்கின்றன என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மகரந்தம்

சமீபத்தில் டோக்யோவில் பல இடங்களில் கதிர் வீச்சு அளவு ஏற்க முடியாத அளவு உயர்ந்திருப்பதாகத் தெரிய வந்ததும் ஜப்பானியர்கள் கொஞ்சம் அரண்டிருக்கிறார்கள். ஃபூகஷீமா அணு உலை உள்ள ஊரிலிருந்து டோக்யோ ஒன்றும் அருகில் இல்லை. பறவை பறக்கும் விதத்தில் 238.34 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சாலை வழியே சுமார் 274.10 கிலோமீட்டர் அல்லது 297.92 கிலோமீட்டர் தூரம். மைல் கணக்கில் இது 148.1 மைல். சாலை வழி தூரம் 170.31 மைல்களிலிருந்து 185.12 மைல்கள். இவ்வளவு தூரத்தில் எப்படிக் கதிர் வீச்சு கடந்தது என்று இப்போது தலைமுடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

7 பில்லியனும், மாசடைந்த சூழலும்

உலக ஜனத்தொகையின் எண்ணிக்கை 7 பில்லியனை தொட்டு, தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. ‘வருங்காலத்தில் இன்னும் ஜனத்தொகை அதிகமாகும். இவர்கள் அனைவருக்கும் நம்மால் உணவளிக்க முடியுமா?’ போன்ற வேள்விகள் 60-களிலேயே கேட்கப்பட்டு அந்த கேள்விகள் தற்போது அர்த்தமற்று போயுள்ளன. தற்போது நிலவி வரும் வறுமை நிச்சயம் விவசாயத்தின் குறைபாடல்ல. “7 பில்லியனும், மாசடைந்த சூழலும்”

பூபேன் ஹசாரிகா

சமீபத்தில் மறைந்த பிரபல இசைக் கலைஞர் மற்றும் பாடகரான பூபேன் ஹசாரிகாவின் காலத்தால் அழியாத பாடல். அவரின் மறைவிற்கு சொல்வனம் தனது இரங்கலை தெரிவிக்கிறது.

மகரந்தம்

உணவு வாங்கப் பணம் இல்லை, வீட்டுக் கடனுக்கு வட்டி கட்டப் பணம் இல்லை என்று தெருவில் வாழ நேர்கிற நிலையில் உள்ள முன்னாள் மத்திய வர்க்கத்தினர் இன்று ஏழைகளுக்கு இலவச உணவு கொடுக்கும் சூப் கிச்சன்களில் வரிசையில் நின்ற வண்ணம் தம் நிலையை நினைத்துக் கண்ணீர் சிந்துகிறார்கள். ஆனால் இன்னும் கோடீஸ்வரர்களுக்கு வரி விதிக்கக் கூடாது என்ற அரசியல் கொள்கையையே ஆதரிக்கிறார்கள் என்பதுதான் என்னே விசித்திரம்.

Quantum Levitation

அந்தரத்தில் மிதக்கும் வித்தையாளர்களைத் தான் பார்த்திருக்கிறோம். அடுத்த கட்ட இயற்பியலின் விதிகளை முன்னிருத்தும் இந்த கண்டுபிடிப்பை பாருங்கள்.

நீர் சூழ் பேங்காக்

பருவ மழையால் வெள்ளம் பெருகி பாங்காக் நீர் நிரம்பிக் கிடக்கிறது. அடுத்த ஒரு மாதத்திற்கு வெள்ள அளவு குறையாது என்று அரசு சொல்லிவிட்டது. இத்தகைய சூழலில் பாங்காக்கின் வெவ்வேறு தருணங்களை அழகாக நம்முன் வைக்கும் படத் தொகுப்பு. இங்கே. தவறாமல் பார்க்கவேண்டி தொகுப்பு.

காஷ்மீர்

காஷ்மீர் குறித்து இந்திய/உலக பிரக்ஞையில் பதிந்துள்ள பிம்பம் என்பது ரத்தம் சார்ந்தது. அது யாருடைய ரத்தமாகவும் இருக்கலம. அதன் இயற்கை அழகு பெரும்பாலும் யாருக்கும் நினைவிற்கு வருவதில்லை. இந்தப் புகைப்படங்கள் காஷ்மீரின் பல்வேறு அழகான தருணங்களை காட்சிப்படுத்துகிறது.. அதன் பதட்டத்தையும். இந்தியாவின் கிரீடமான காஷ்மீர் தனது அழிவுகளிலிருந்து மீண்டு “காஷ்மீர்”

மகரந்தம்

புவி ஈர்ப்பு விசை பற்றி நமக்குத் தெரிந்தவற்றை நாம் உறுதியாக நம்புகிறோம், இல்லையா? இயற்பியலாளர்கள் இப்படி எல்லாம் எதையும் ஒரேயடியாக நம்புவதில்லை. ஒரு பொருளை, அதுவும் இரும்புக் கம்பி வளைச் சுருள் ஒன்றைக் கீழே போட்டால் அது எப்படி விழும் என்று கேட்டால் நாம் எல்லாம் நேரே கீழே விழும் என்றுதான் நினைப்போம். ஆம், கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். அது உண்மையா என்றால் அது வேறு விஷயம்.

ஜீன் ஷார்ப் எனும் காந்தியவாதி

ஜீன் ஷார்ப் என்ற அமெரிக்கர் உலகெங்கும் இருக்கும் அடக்குமுறை சர்வாதிகார அரசுகளுக்கெதிராக அகிம்சை வழியிலான போராட்டத்தை முன்னிருத்துபவர். ”From Dictatorship to Democracy” என்ற இவரது பிரபல புத்தகம் அடக்குமுறைக்கெதிரான அற ரீதியான அகிம்சை வழி போராட்டங்களை ஊக்குவிப்பதில் உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. காந்தியின் கருத்துக்களால் “ஜீன் ஷார்ப் எனும் காந்தியவாதி”

பெரு எனும் நாடு

பெரு நாடு குறித்தும், அதன் புகழ்பெற்ற “மச்சு பிச்சு” குறித்தும் நீங்கள் அறிந்திருக்கலாம். அந்நாட்டை பல கோணங்களில் ஆவணப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு இங்கே.

யூலெக்சி மர்டாக்

பிரபல இசைக் கலைஞர் யூலெக்சி மர்டாகின் பிரபல பாடலொன்று. தன் அன்பை வெளிப்படுத்தும் ஒருவனது பாடல். மிக எளிமையான ஒரு பாடல். அதிரும் இசைக் கருவிகள் அல்லாத, மென்மை கசிந்தோடும் மெட்டு.

மகரந்தம்

ஆப்பிரிக்காவிற்கு முதன்முதலில் பயணம் மேற்கொண்டு மனிதர்கள் அந்நாட்டு காடுகள் குறித்தும், அதில் மறைந்திருக்கும் நுட்பங்களையும், மிருகங்களின் குணாதிசியங்களையும் மிக விரிவாக பதிவு செய்துள்ளனர். இத்தகைய பயண குறிப்புகள் சூழியல் பாதுகாப்பாளர்களுக்கு உதவும் பலவித தகவல்களை கொண்டிருப்பதாக அறிஞர்கள் பேசத் துவங்கியிருக்கின்றனர். காடுகள் குறித்தும், மிருகங்களின் செயல்பாடுகள் குறித்தும் வாய்வழி செய்திகளை விடவும், மிக விரிவான தகவல்களை தரும் இந்தக் குறிப்புகள், காடுகளை வரலாற்று நோக்கில் அணுக உதவுகின்றன என்றும் சொல்கின்றனர்.

மகரந்தம்

ஒரு புறம் பார்த்தால் மேற்கு- அமெரிக்கா/ யூரோப் ஆகியன பெரும் கூட்டணியாகச் சேர்ந்து பல வகைகளில் லிபியாவைத் தாக்கி கதாஃபியை ஒழிக்க முயன்றிருக்கின்றன. மேற்கு லிபியாவில் செலுத்தியுள்ள பராக்கிரமத்தின் விஸ்தீரணத்தைப் பார்த்தால் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பொறுமையாகவும், நீண்ட தயாரிப்புடனும் இருந்தாலே மேற்கின் அடாவடித்தனங்களை எதிர்கொள்ள முடியுமென்பது தெரிகிறது. மேற்கும், அமெரிக்காவும் தம் ஏகாதிபத்திய நோக்கங்களையோ, உலகம் தம் ஆளுமையின் கீழ்ப்பட்டதே என்ற கர்வத்தையும் சிறிதும் இழந்ததாகத் தெரியவில்லை.

பண்டிட் ரவிஷங்கர்

வாழும் காலத்திலேயே தங்கள் அசாத்திய திறமையால் சமூகத்தை தன்வசப்படுத்தி தனக்கு சேர வேண்டிய புகழை அடைந்தவர்கள் வெகு சிலர். அப்படிப்பட்ட ஒருவர் தான் பிரபல சிதார் இசைக் கலைஞர் ரவிஷங்கர். தன் மகளுடன் அவர் இணைந்து நடத்தும் இசை நிகழ்ச்சி இங்கே.

ஐரீன்

சமீபத்தில் அமெரிக்காவை தாக்கிய ஐரீன் புயலை ஒட்டி மக்களின் பதட்டங்களையும், மகிழ்ச்சிகளையும் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் இங்கே.

மகரந்தம்

இணையப் பயன்பாட்டாளர்கள் “cookie” குறித்து அறிந்திருக்கலாம். ஒரு தளத்தை முதன் முறை பார்த்துவிட்டு, சில நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாளோ அதே தளத்திற்கு செல்லும்போது உங்களை வரவேற்கும் வாசகம் ஒளிர்கிறதா? இது தான் குக்கீயின் பணி. குக்கீகளை இணைய உலாவிகள் மூலம் தடுக்கலாம். சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். சில தளங்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றின் மூலம் இணைய உலாவிகளால் கூட ஒன்றும் செய்யமுடியாத குக்கீக்களை உங்கள் கணிணியில் விதைத்துவிடுகின்றன.

தேசம், காலம், சிந்தனை

கீழே இருக்கும் இந்த ஒளிப்படம் மனிதர்கள் தங்கள் வாழ்வு மொத்தத்தையும் மூன்று காலநிலைகளில் கழிப்பதாக சொல்கிறது. கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம். உண்மை தான். ஆனால் ஒவ்வொரு தேசமும் கூட இப்படித்தான செயல்படுவதாக சொல்கிறது. இதன் தாக்கம் அந்தந்த மக்களின் சிந்தனை, மொழி, வாழ்க்கைமுறை ஆகியவற்றை கூட பாதிக்கிறது “தேசம், காலம், சிந்தனை”

இசை, கேளிக்கை, வாழ்க்கை

கடந்த சில வாரங்களாக உலகமெங்கும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மக்களின் கொண்டாட்டங்களை வண்ண மயமாக காட்சிப்படுத்திய புகைப்படங்கள் இங்கே.

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இந்தியர்கள் அனைவருக்கும் ’சொல்வனம்’ தன் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. மொத்த உலக மானுடத்துக்கும் இந்தியாவின் வளர்ச்சியும் வெற்றியும் உதவிபுரியட்டும்.

தெற்கு சூடான்

நீண்ட போராட்டத்திற்கு பிறகு தெற்கு சூடான் சுதந்திர காற்றை சுவாசிக்கிறது. தங்களுக்கென ஒரு நாட்டை பெற்ற அந்த மக்களின் மகிழ்ச்சி தருணங்கள் இங்கே புகைப்பட ஆவணமாய் :

அறிவியலும் மதமும்

இந்த இரண்டுக்கும் இடையே நடக்கும் மோதல் பல நூற்றாண்டு பாரம்பரியம் வாய்ந்தது. ஸ்டெம் செல்(stem-cell) ஆராய்ச்சி குறித்து மேற்குலகில் மதவாதிகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. கீழே இருக்கும் ஒளிப்படத்தில் மதவாதிகளின் வாதத்தை மறுத்துப் பேசுகிறார் சாம் ஹாரிஸ். இவர் பிரபல எழுத்தாளர். சமூகத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவர். “அறிவியலும் மதமும்”