தமிழ் சூழலின் ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வாக தற்போது நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியை நாம் கருதமுடியும். புத்தக விற்பனையை மக்களின் நுகர்வு கலாச்சாரம் பெருமளவில் முடிவு செய்கிறது. அரசியல், சமூகம், வரலாறு உள்ளிட்ட புத்தகங்களுடன் ஒப்பிடுகையில் சமையல், சுயமுன்னேற்றம் குறித்த புத்தகங்களே அதிக அளவில் விற்பனையாகின்றன. தீவிர “நியாண்டர்தல் யுக மின் புத்தகங்கள்”
Author: ஆசிரியர் குழு
தாயார் சன்னதி, சிலிக்கான் கடவுள் – சொல்வனம் புத்தக வெளியீடுகள்
இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகவிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். சொல்வனம் இதழிலும், வார்த்தை சிற்றிதழிலும் சுகா எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘தாயார் சன்னதி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. சொல்வனம் இதழில் ராமன் ராஜா எழுதிய கட்டுரைகள் ‘சிலிக்கான் கடவுள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. எங்களுடைய இந்தப் புதிய முயற்சிக்கும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் – நூல் வெளியீட்டு விழா
நாள்: 07-01-2011 வெள்ளி
நேரம்: மாலை 6 மணி
இடம்: பாரதிய வித்யா பவன், மினி ஹால்,
கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4.
வரவேற்புரை: அ. கணேசன், நூலாசிரியர்
தலைமை & நூல் வெளியிடுபவர்: முனைவர் தியாக. சத்தியமூர்த்தி
முன்னாள் இயக்குநர், கேரள மாநில தொல்லியல் துறை
தமிழினி – புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் புத்தகங்கள்
தமிழின் பல முக்கியமான கலை, இலக்கியப் புத்தகங்களை வெளியிட்டு வரும் தமிழினி பதிப்பகம் 2011 புத்தகக் கண்காட்சியில் கீழ்க்கண்ட புத்தகங்களை வெளியிடுகிறது. இவற்றைக் கண்காட்சியில் அரங்க எண்: 354-55, 29 ஆகியவற்றில் வாங்கலாம்.
மகரந்தம்
உலகில் ஐந்தில் ஒருவர் மின்சாரம் இல்லாமல் வாழ்கிறார். இதற்கு முக்கியமான காரணங்கள் அரசியலும் வறுமையும். இவர்களுக்கு அரசாங்கத்தைச் சாராத தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் கிடைக்க வைத்தால் அவர்களுக்கு அது வரப்பிரசாதம். மேலும் அசாத்திய சமுதாய மாற்றங்களும் ஏற்படும். இந்த சந்தை பல பரிமாணங்கள் கொண்டது. இதனை சரியாகவே சீனா பிடித்துவிட்டது.
கெளஷிகியின் ‘தும்ரி’
கெளஷிகி சக்ரபர்த்தி வளர்ந்து வரும் ஹிந்துஸ்தானி பாடகி. இவரது தந்தை அஜோய் சக்ரபர்த்தி பிரபல ஹிந்துஸ்தானி கலைஞர். புதாபெஸ்டில்(Budapest) நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சியில் அவர் பாடிய ‘தும்ரி’ வகை செவ்வியல் இசையை கீழே கேட்கலாம். அந்த இனிய குரலை, அதன் துல்லிய, பிசகில்லாத ஏற்ற இறக்கங்களை அனுபவிக்க “கெளஷிகியின் ‘தும்ரி’”
2011 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
புதிய திறப்பு, புது துவக்கம் குறித்த மானுடத்தின் காதல் அளவற்றது. கடந்த கால நிகழ்வுகளில் பெற்ற பாடங்களிலிருந்து பெற்ற புதிய கண்ணோட்டங்கள், வருங்காலத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வகைசெய்கிறது. அத்தகைய ஒரு புதிய துவக்கத்தை மானுடம் மிக கோலகலமாக கொண்டாடியுள்ளது. அதன் புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம். வாசகர்களுக்கு புத்தாண்டு “2011 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்”
ஒளி விளையாட்டு
இயற்கை விளையாட்டின் ஒவ்வொரு துளியுமே பிரம்மாண்டம்தான். அந்த துளியின் ஏதோவொரு தெறிப்புதான் மானுடம் என்று கருத இடமுண்டு. Aurora borealis எனப்படும் இயற்கை நிகழ்த்தும் ஒளியின் அற்புத நிகழ்வை நீங்கள் அறிந்திருக்கலாம். மிக நீண்ட தூரத்திற்கு மேகத்தில் ஒளி தன்னுடைய பரப்பை நிகழ்த்திக் காட்டும். சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டில் “ஒளி விளையாட்டு”
எல்.சுப்பிரமணியத்தின் ஸ்பானிய இசை
பிரபல வயலின் இசைக் கலைஞரான எல்.சுப்பிரமணியம் வழங்கும் ஸ்பானிய இசைக் கோர்வை ஒன்று கீழே :
மகரந்தம்
உலகில் என்னென்னவோ இயற்கை வளங்கள் தீர்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஆழ்கடலில் மீன்கள் பெரிதும் குறைந்து விட்டன. முத்துச் சிப்பிகள் எங்கே போயின? பல நகரங்களில் உலகெங்கும் சிட்டுக் குருவிகளே காணோம். தேனீககள் பல நாடுகளிலும் பெரும் கூட்டங்களாக அழிந்து போகின்றன. பல காட்டு மிருகங்கள் உலகில் இல்லாமல் போய் விட்டன. தவிர எரிபொருள்கள் தீர்ந்து வருகின்றன. வரும் ஐம்பதாண்டுகளில் குடிநீருக்குப் பெரும் பஞ்சம் எழும் என்று நீர் வள ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்தப் பட்டியலில் இன்னொரு பொருளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஹீலியம் வாயு.
துயில், தோள்சீலைக்கலகம் – புத்தக வெளியீடுகள்
திரு.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய துயில் நாவல், ஆய்வாளர்கள் எஸ்.இராமச்சந்திரன், அ.கணேசன் எழுதியுள்ள தோள்சீலைக்கலகம் என்ற வரலாற்றுநூல் இவற்றின் வெளியீடு குறித்த அறிவிப்புகள்.
மருத்துவத்தின் வரலாறு இன்று வரை நாம் முறையாக தொகுக்கப்படாதது. மதமும் மருத்துவமும் கொண்டுள்ள உறவும் அது சார்ந்த மனித நம்பிக்கைகளும் மிகப் புராதனமானவை, அவ்வகையில் நலமடைதல் என்ற அற்புதத்தின் மீதான விரிவான விசாரணையே இந்த நாவல்.
திலீப்குமார், ஆ.மாதவன் – சமகால அங்கீகாரங்கள்
தமிழின் தேர்ந்த இலக்கியவாதிகள் விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்படுவது தமிழ்ச்சூழலில் மிகவும் அரிதானதொரு விஷயமாகவே இருக்கிறது. இக்குறையை ஓரளவு நீக்கும் விதமாக இந்த வருடம் இரண்டு தேர்ந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலீப்குமார் ‘விளக்கு’ அமைப்பால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தால் இந்த வருடம் கெளரவிக்கப்படுகிறார். திலீப்குமார், ஆ.மாதவன் இருவருக்கும் சொல்வனம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
போதையில் சிதையும் ரியோ
போதை மருந்து அனைத்து நாட்டிலும் பிரச்சனை தான். ஆனால் போதை மருந்துக் கடத்தல்காரர்களின் இரண்டு குழுக்கள் தெருவில் துப்பாக்கியுடன் சண்டையிட துவங்கினால்? பிரஸிலின் ரியோ நகரில் கடந்த வாரம் இத்தகைய விஷயம் நிகழ்ந்தது. பொதுமக்களின் உயிரிழப்பை தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய அதிரடி சோதனையில் மேலும் “போதையில் சிதையும் ரியோ”
யானியின் ’புகழுரை’
யானி(Yanni) உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர். மேற்கத்திய செவ்வியல் சார்ந்த இவரது இசைக் கோர்வைகள் மூலம் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். மானுடத்தின் உள்ளுறைந்த உன்னதங்களை போற்றும் வகையில் “புகழுரை”(Tribute) எனும் மைய-நோக்கில் அமைக்கப்பட்ட இசைக் கோர்வை அவரது அற்புதமான ஆக்கங்களில் ஒன்று.
மகரந்தம்
நம் ஊரில் படமெடுக்கும்போது சிரி சிரி என்று சொல்லித் தொல்லை கொடுப்பார்கள் இல்லையா? ஈன்னு சிரிடா என்று குழந்தைகளைச் சொல்வார்கள். பெரியவர்களை என்ன சொல்வது என்று தயங்கிக் கொஞ்சம் சிரிங்க சார், அம்மா என்பார்கள். மேற்கில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு விதமாகச் சிரிக்கச் சொல்கிறார்களாம்.
தனியே எங்கே போகிறாய்? – கேசர்பாய் கேர்கர்
3:38 நிமிடம் பாடக்கூடிய இந்தப் பாடலைப் பாடியவர் கேசர்பாய் கேர்கர். உஸ்தாத் அல்லாடியாகானிடம் பல வருடங்கள் இசை பயின்றவர். 1977-இல் வாயேஜர் ஓடம் வின்வெளிக்கு அனுப்பப்பட்டபோது கூடவே சில பாடல்கள் தொகுத்து அனுப்பப்பட்டன. அத்தொகுப்பில் இந்தியாவிலிருந்து சென்ற பாடல் இது. விக்கிபீடியாவில் கிடைத்த இன்னொரு தகவல்: The recording was recommended for “தனியே எங்கே போகிறாய்? – கேசர்பாய் கேர்கர்”
வாசகர் மறுவினை
தன்னை முழுதாக தொகுத்துக் கொண்டு சமூகம் முன்னகரும் போது, அதற்கான கோட்பாடுகளை அது உருவாக்கிக் கொள்கிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மனித குலம் தன் இருப்பை நீடித்துக் கொள்ள உதவும் கருவிகளை தேடி அலைகிறது. ஒரு கோட்பாட்டின் மூலம் அந்த கருவிகளை அடைய முடியும் என்று நம்பிக்கை போதும், சமூகத்தில் இந்த கோட்பாடு கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
மகரந்தம்
கடல் அமிலமாகிறது என்று ஆபத்தறிவிப்புகள் படித்திருப்பீர்கள், அதனாலென்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். அமிலமாகும் கடல் நீரில் உயிரினங்கள் வளர்வது மிகக் குறையும். உயிரினங்கள் இல்லாத கடல் உலக மக்களுக்குப் பெரும் நாசததைக் கொணரும், ஏனெனில் கடலிலிருந்து கிட்டும் உணவு உலக மக்கள் திரளுக்குப் பெரும் பங்கு ஊட்டத்தை அளிப்பது. இங்கு கொணரப்படும் செய்தி சொல்வது வேறு ஒரு விந்தையைப் பற்றியது.
இடப்பெயர்வு
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய, இன்று வரை நில்லாத மனித குலத்தின் இடப்பெயர்வை, அதன் விளைவுகளை வரலாறு மீள மீளப் பேசுகிறது. தன்னைச் சுற்றிய இயற்கையை அதன் நடவடிக்கைகளை, இயற்கையின் பகுதியான பிற உயிரினங்களின் நடவடிக்கைகளை தனது முதல் படியிலிருந்தே மனிதன் கவனித்து வருகிறான். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, “இடப்பெயர்வு”
மகரந்தம்
சொரய்யா என்றொரு இரானியப்பெண், அயத்துல்லா கொமேனியின் ஆட்சியின்போது, திருமணத்தை மீறிய தகாத உறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது ஏதோ வெஞ்சினத்தால் செய்யப்பட்ட கொலை அல்ல. அப்பெண் வசித்த கிராமத்து நிர்வாகமே தீர்ப்பாக எழுதிச் செய்த கொலை. அப்பெண்ணின் வயதான தந்தையே தன் மகளைக் கொல்வதற்கான முதல் கல்லை எடுத்து எறியும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். இப்போது அப்பெண்ணின் துயரமான கதை ஒரு விவரணப்படமாக வெளிவந்திருக்கிறது.
Surface – குறும்படம்
சமூகத்தின் நடவடிக்கைகளை நிலத்தடியிலிருந்து மேல் நோக்கி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? இந்த கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் குறும்படம் ஒன்று :
முகமது அலி
குத்துசண்டை மீதான ஈடுபாடு நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆக்ரோஷமான மோதல்களும், முகத்தில் வழியும் ரத்தமும், வலியில் துடிக்கும் வீரரும் நம்மை எந்தவகையிலும் உறுத்துவதில்லை. மாறாக ஒரு வித கிளர்ச்சியை அது அளிக்கிறது. அதற்கான பரிணாம/உளவியல் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கட்டும். நாம் உலகப் புகழ்பெற்ற குத்துசண்டை வீரர் முகமது அலி “முகமது அலி”
தனிமை- மேடை நாடகம் – அறிவிப்பு
கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் அமைந்துள்ள க்ரியா நாடக் குழுவும், பாரதி தமிழ்ச் சங்கமும் இணைந்து வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி “தனிமை” மேடை நாடகத்தினை அளிக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் வயதான பெற்றோர்களின் வாழ்க்கையையும் அமெரிக்காவில் புலம் பெயர்ந்து பிரிந்து வாழ நேரும் அவர்கள் பிள்ளைகளின் நிலைகளையும், தவிப்பினையும், குடும்பம், உறவு, பிரிவு ஆகிய நுட்பமான வாழ்க்கைக் கூறுகளையும் மிக அழகாகவும், நகைச்சுவை மிளிரவும் சித்தரிக்கின்ற ஒரு நாடகம் ‘தனிமை’.
இணையத்தில் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், கணிதம்
தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானோருக்கு இப்போது வலைத்தளம் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் வலைப்பக்கத்துக்கென்று பிரத்தியேகமாக எழுதுகிறார்கள். அச்சுப்பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளையும் இணைய வாசகர்கள் பயன்பெறும் வகையில் தங்கள் வலைப்பதிவுகளில் வெளியிடுகிறார்கள். இவர்களில் சமீபத்திய குறிப்பிடத்தக்க புதிய தளங்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன் இருவருடையதுமாகும்.
மாஃபியாக்களை எதிர்க்கும் சிஸிலிய மக்கள்
இத்தாலி என்றாலே நமக்கு மாஃபியா நினைவு வருவது சகஜம். மேலும் ஃபாசிஸம், முசோலினி இத்தியாதிகளோடு, ரோம், வாடிகனின் ஊழல்கள், டான் ப்ரௌன் நாவல்கள் என்று பல இருண்ட அத்தியாயங்கள் நினைவும் வரும். ஒரு காலத்தில் இத்தாலி என்றால் அழகுப் பெட்டகங்களான பெண்கள் – சோஃபியா லொரென், ஜினா லோலாப்ரிகெடா, “மாஃபியாக்களை எதிர்க்கும் சிஸிலிய மக்கள்”
மகரந்தம்
ஒரு விலங்குக்கு சுயபிரக்ஞை இருக்கிறதா என்று கண்டுபிடிக்கச் செய்யப்படும் பரிசோதனை அதன் சருமத்தில் ஒரு இடத்தில் வண்ணமடித்து அதன் முன் கண்ணாடியை வைப்பது. அந்த விலங்கு கண்ணாடியை பார்த்து தன் சருமத்தில் அந்த குறிப்பிட்ட வண்ணமடித்த பகுதியைத் தொட்டால் அதற்கு சுயபிரக்ஞை உண்டாம்.
வலைவெளியில்: உடுமலை.காம்
இணைய தளங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதிய பகுதி: தமிழில் நல்ல தரமான புத்தகங்களை வாங்குவதற்கான சிறந்த தளமாக இருக்கிறது உடுமலை.காம். உடுமலைப்பேட்டையிலிருந்து இந்நிறுவனம் இயங்குவதால் இத்தளத்திற்கு இப்பெயர். இத்தளத்தில் புத்தகங்களை எழுத்தாளர் வாரியாகவும் வகைகள் வாரியாகவும் தேட வசதியிருக்கிறது. இந்தியாவுக்குள் 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் தபால் செலவு ஏதும் இல்லாமல் இலவசமாகவே அனுப்பி வைக்கிறார்கள்.
பொது பண்பாட்டுக்குள் நுழைந்த வானியல்
வேதாந்த துறவியாக இருந்த ஜான் டாப்ஸன் இரவு நேரங்களில் மடாலய சுவரேறி குதித்து தொலைநோக்கி வழியாக விண்மீன்களை பார்த்துக் கொண்டிருப்பார். இந்த தியானத்துக்காக மடாலயத்தை விட்டு செல்ல நேர்ந்தது. அறிவியல் ஒரு ஆன்மிக இசையாக முடியுமா என்றால் மானுடம் உருவாக்கிய எந்த ஆன்மிகக்குறியீட்டைக் காட்டிலும் வலுவான ஆன்ம உணர்வுகளை “பொது பண்பாட்டுக்குள் நுழைந்த வானியல்”
கார்ட்டூன் இதழ் 35
பியானோ
பியானோவுடனான கலைஞனின் உறவென்பது மிகவும் நெருக்கமானது. இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடலே இசையாக நிகழ்கிறது. பீத்தோவன் தன் காதலியின் நினைவாக உருவாக்கிய இந்த இசைக் கோர்வை தன் காதலியுடனான காலம் தாண்டியும் நிலைத்த உரையாடலாக கருதமுடியும். இசையின் நுணுக்கம் அறிந்தவர்கள் இந்த உரையாடலின் மெல்லிய அந்தரங்கங்களை ரசிக்க முடியும். “பியானோ”
மகரந்தம்
மானுட முயற்சிக்குப் பூமி அளவில் தாக்கம் இருப்பதால்தானே எத்தனையோ மிருகங்கள், ஜீவராசிகளை நாம் அழித்திருக்கிறோம், அது தெரிந்தும் மானுடரால் பூமி அளவில் பாதிப்பில்லை என்ற கருத்து இருக்க என்ன காரணம், எல்லாம் வல்ல கடவுள் என்ற ஒரு கற்பிதம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை இதில் எத்தனை பங்கு வகிக்கிறது?
Beatles – காலத்தில் சிறிது பின்னோக்கி….
1960-70 களில் உலகத்தை தங்கள் இசையால் மயக்கிய Beatles இசைக்குழுவினரின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. மக்களிடையே அவர்களுக்கு பெற்றிருந்த செல்வாக்கை பறைசாற்றும் படங்கள் இவை. குழு உறுப்பினர்களின் சில சுவரசியமான புகைப்படங்களைக் கொண்ட நல்லதொரு தொகுப்பை இங்கே பார்க்கலாம். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். Beatles குழுவின் பின்னால் “Beatles – காலத்தில் சிறிது பின்னோக்கி….”
பின்னணி இசை – தேசிய அங்கீகாரம்
இந்தியத் திரைப்படங்களுக்கான தேசியவிருதுப் பட்டியலில் இந்த வருடத்தில் புதியதாக சிறந்த பின்னணி இசைக்கான விருதும் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கும் திரைப்படங்களில் இசை என்றாலே பின்னணி இசை என்றிருக்கையில் இத்தனை வருடங்களாக தேசியவிருதுக்குழுவினர் வெறும் பாடல்களை மட்டுமே முன்வைத்து இசைக்காக விருது அளித்து வந்துள்ளனர். இப்போதாவது இதை அறிமுகப்படுத்தி முக்கியத்துவம் தருகிறார்களே “பின்னணி இசை – தேசிய அங்கீகாரம்”
Oktapodi – அனிமேஷன் குறும்படம்
இரு அழகிய ஆக்டபஸ்களின் காதல் வாழ்க்கையில் நேரும் திடீர் திருப்பம். பிரிந்த ஆக்டபஸ்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனவா? இந்திய வணிக சினிமாவுக்கு ஏற்ற கதை தான். இந்த கதையை அற்புதமான அனிமேஷனை கொண்டு உருவாக்கிய கலைஞர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்த குறும்படம் பல திரைப்பட விழாக்களில் கலந்து “Oktapodi – அனிமேஷன் குறும்படம்”
மகரந்தம்
ஒரு தனி உயிர் தன்னுடைய நேரத்தை தன் இனப்பெருக்க சாத்தியங்களை ஓரளவாவது துறந்து தன் உயிரினக் கூட்டத்துக்கு நேரத்தையும் தன் சக்தியையும் கொடுப்பதற்கு பின்னால் இயங்கும் ஆதாரமான பரிணாம விதிகள் என்ன? ஈ.ஓ.வில்ஸன் தன் வாழ்க்கையையே இந்த ஆராய்ச்சியில் செலவழித்திருக்கிறார்.
ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர்
ஒரு நாளின் எந்த மணித்துளியிலும் வெடிகுண்டு வெடிக்கலாம். கலவரம் நிகழலாம். நிச்சயமற்ற தருணங்கள். வலி கொடுக்கும் நிகழ்வுகள். இந்த புகைப்படங்களை பார்க்கையில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையின் பலியாடுகள் ஈராக்கியர்கள் மட்டுமல்ல என்று புரியும்.
ஐம்பது மனிதர்கள், ஒரு கேள்வி
பல்வேறு தளங்களைச் சேர்ந்த ஐம்பது மனிதர்களிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி. பதில்களில் தொனிக்கும் உணர்வுகளும் பலதரப்பட்டவை. அந்த கேள்விக்கான உங்கள் பதில் என்ன?
மகரந்தம்
தோரியத்தின் ஒரே பிரச்சினை அதில் மிஞ்சும் பொருள்களை வைத்து அணுகுண்டு தயாரிக்க முடியாது. இந்த ஒரு காரணத்துக்காகத்தான் உலக அணுசக்தியில் தேர்ச்சி பெற்ற நாட்டின் அரசுகள் தோரியத்தைப் பயன்படுத்தாமல், அதைவிட பன்மடங்கு கடினமான முயற்சியிலேயே கிட்டக் கூடிய யுரேனியத்தைத் துரத்தினார்கள். இப்போது நம் தேவை குண்டுகள் அல்ல, மின்சக்தி.
வார்த்தைகள் – குறும்படம்
நாம் வாழும் உலகில் நம்மை சூழ்ந்திருக்கும் பல்வேறு உயிர்கள் பேசும் வார்த்தைகள் குறித்த ஒரு குறும்படம்.
வாசகர் எதிர்வினை
பத்ரியின் கருத்துகள் சிலவற்றில் நான் மாறுபடலாம். மாறுபடும் கருத்துகளைக் கடுமையாகவே நான் முன்வைக்கவும் செய்யலாம். ஆனால் பத்ரி என்கிற தனிமனிதர் மீதும் அவரது ஆளுமை மீதும் எனக்கு மிகுந்த மரியாதைதான் இருக்கிறது. அவர் தமிழ்ப்பதிப்புத்துறையில் செய்து வரும் சாதனைகள் குறித்து எனக்கு என்றைக்குமே வியப்பும் மதிப்பும் உண்டு.
உலக நகரங்கள்
Foreign Policy இதழ் உலகின் பல்வேறு நகரங்களை தன்னளவில் வரிசைப்படுத்தியுள்ளது. இந்த வரிசையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாமல் போயினும், அதன் புகைப்படங்களுக்காக மட்டுமாவது இந்த வரிசையை ஒரு முறை பார்த்துவிட வேண்டும். அற்புதமான புகைப்படங்கள். வரிசை இங்கே.
மகரந்தம்
மேற்குலகம் தன்னுடைய கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளில் குவித்து வைக்கும். முதலில், குப்பைகள் ஏந்திய கப்பல்கள் வரும். அதைத் தொடர்ந்து வரும் சுகாதாரக் குழு அந்நாட்டு மக்களை சுகாதாரம் குறித்த பிரக்ஞை சிறிதுமில்லாதவர்கள் என்று அடையாளம் கண்டு அறிவிக்கும்.
புற்றுநோய் குறித்த குறும்படம்
புற்றுநோய் குறித்த நெகிழவைக்கும் குறும்படம் ஒன்று :
மகரந்தம்
அறிவியல் புனைவு படைப்புகள் கற்பனை என்ற சட்டகத்தை தாண்டிய வாசிப்பை கொண்டதாக இருக்கும். சமகால சமூக(அல்லது)அரசியல் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்தை தனக்குள் கொண்டிருக்கும். தான் வாழும் சமூகத்தில் நிலவும் கட்டுப்பாடுகள், புனைவின் வழியாக தன்னுடைய விமர்சனத்தை முன்வைக்கும் அவசியம் எழுத்தாளனுக்கு ஏற்படுகிறது.
சீனாவிலும் எண்ணெய்ச் சிதறல்
அமெரிக்காவை சகல விதத்திலும் சமமாக துடிக்கும் சீனா இந்த விஷயத்திலும் சந்தோஷப்படலாம். சீனாவின் டாலியன் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதாரம் மட்டுமன்றி, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் என்று சேதம் பல அடுக்குகளுக்கு பரவியிருக்கிறது. சிந்திய எண்ணெயை மீண்டும் அள்ளி இறைக்கும் பணி செவ்வனே “சீனாவிலும் எண்ணெய்ச் சிதறல்”
வாசகர் எதிர்வினை
திரு.நரசய்யா எழுதிய சிட்டி நினைவுமலர் வெளியீட்டு விழாவைக் குறித்துப் படித்தேன். மிக்க நன்றி. வீரராகவன் போன்றவர்கள்தான் நம் இலக்கியத்தின் தூண் போன்றவர்கள். வெளியீட்டுவிழாவின்போதே புத்தகத்தில் எச்சில் துப்பும் எழுத்தாள மேதைகளும், எழுத்தாளன் இருக்கும் வரை அவன் ரத்தத்தை ஒரு பைசா காபிரைட் காசு தராமல் உறிஞ்சிக் குடித்துவிட்டு செத்தபின் விழாவெடுப்பவர்களும் இல்லை.
இடம்பெயர்க்கப்படும் மாவோவின் பிள்ளைகள்
சீனாவின் அசுர வளர்ச்சி நம் பிரபல ஊடகங்களில் திரும்பத் திரும்ப சிலாகிப்பாக எழுதப்படுகிறது. வின்னை முட்டும் கட்டடங்களும், அதிவிரைவுச் சாலைகளும் சீனாவின் புதிய முகங்களாகக் காட்டப்படுகின்றன. ஆனால் இந்த அசுர வளர்ச்சிக்கு சீனாவின் நடுத்தர வர்க்க மக்களும், ஏழை மக்களும் தரும் விலை மிக மிக அதிகம். பல “இடம்பெயர்க்கப்படும் மாவோவின் பிள்ளைகள்”
செல்லோ இசைக்கலைஞர் யோ-யோ மா
சமீபத்திய சில பத்தாண்டுகளில் சீன மக்கள் அமெரிக்க செவ்வியலில் பெரும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். ஐரோப்பிய, அமெரிக்க ஆர்வலர்களைக் காட்டிலும் சீனர்கள் தேர்ந்த ஆர்வலர்களாகவும், கலைஞர்களாகவும் முன்னேறி வருகிறார்கள். இது சீனாவில் மட்டும் நிகழும் சூழல் இல்லை. அமெரிக்கா, ஐரோப்பாவில் வசிக்கும் சீனர்களும் மேற்கத்திய செவ்வியலில் பெரும் ஆர்வம் “செல்லோ இசைக்கலைஞர் யோ-யோ மா”
மகரந்தம்
தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா மூலமாக ‘தற்செயலாக’ வந்து இறங்கியிருக்கும் மாவுப்பூச்சி 2,00,000 ஹெக்டேர் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியை அழித்துவிடக் கூடுமென கணிக்கப்படுகிறது. ஒரு வழி இருக்கிறது. அமெரிக்கா வியட்நாம் காடுகளில் செய்த இராசயனப் போரை போல ப்ரோஃபனோபஸ்,அசாடிராக்டின் கெமிக்கல்களைத் தெளித்து புஷ் பாணியில் மாவுப்பூச்சிக்கு எதிரான போரில் இறங்கிவிடலாம். பெருச்சாளிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக மரவள்ளிக் கிழங்கு மாவில் விஷம் ஏறிவிடும்.
மகரந்தம்
ஹோமரின் காப்பியத்திலும் சரி, பல பண்டை இலக்கிய நூல்களிலும் சரி, வண்ணங்கள் பற்றிய விவரணை மிகக் குறைவாக இருப்பதால், மனிதக் கண்ணின் திறன் கடந்த 3000 – 4000 வருடங்களில்தான் வளர்ந்திருக்கிறது என்றும், நவீன காலத்தில்தான் வண்ணங்கள் நிறைய உருவாகி இருக்கின்றன என்றும் நிறைய முட்டாள்தனமான முடிவுகளுக்கெல்லாம் வந்திருக்கிறார்கள்.
