சீட்டுக்கட்டு ராஜ்ஜியம்

இதனால், ஹார்ட்ஸ் ராணியின் தவறுகளைச் சரிசெய்ய அனைவரும் முயன்று கொண்டிருக்கையில், அவர்கள் தாமும் தவறுகளைச் செய்யத் தொடங்கினர். ஏஸ்கள் தங்களை ராஜாக்களால் ஒதுக்கப்படுவதை கண்டனர். ராஜாக்கள் நாவ்கள் பற்றிக்  குழப்பமடைந்தனர். ஒன்பதுகளும் பத்துகளும் தங்களை அரசச் சீட்டுக்களாகக் கருதும் போக்கைக் கொண்டனர். இரண்டுகளும் மூன்றுகளும் நான்குகளுக்கும் ஐந்துகளுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை ரகசியமாக பிடித்துக் கொண்டனர். இதுவரை இல்லாத அளவுக்கு குழப்பம் ஏற்பட்டது.