மறு ஒருமுறை, காலம்

பெருந் தோல்விகளோ சிறு வெற்றியோ கூடக் கண்டு உணர்ச்சிகள் இனி எழாதபடி மரத்துப் போகட்டுமே!
என் அஞ்சாமை அதனால் என்னை விட்டுப் போய்விடுமா?
மறு ஒருமுறை எழுந்து விடமாட்டேனோ?
ஆழ் இருளையும் போராடி வென்றுவிடமாட்டேனோ?

அகாலம்

யாருடைய நடுக்கமோ
யாருடைய பிறழ்வோ
யாருடைய பயமோ
யாருடைய வாழ்வோ
ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டிக்குள்
உறைந்து
போய் கிடக்கிறது
கடைசியாய் வந்தமர்ந்த
ஈயோடு

பூட்டிய வீடு

அந்தப் பையன் கவனம் சிதறிய ஒரு கணத்தைத் தேர்ந்தெடுத்து எழுந்து சரேலென்று கதவை நோக்கி ஓடினாள். அவள் கை தாழ்ப்பாளைத் தொட்டு இழுப்பதற்குள் அந்தப் பையன் சுதாரித்து விட்டிருந்தான்.  அவளைத் தடுத்து அவள் முடியைப் பிடித்திழுத்து தரையில் தள்ளிவிட்டான். அவள் முகம் சுவரில் மோதி நிலை தடுமாறிக் கீழே விழுந்தாள். ‘அம்மா..’

அடையாளம்

‘ஏய்’களுக்கு அவள் எந்த ஏவல்களும் செய்வதில்லை. அப்படியும் வித்து முளைத்து எழுந்தது. மருத்துவ மனையில், சீமந்த விழாவில். எங்கெங்கு நோக்கினும் அவள் மிசஸ். சரவணன். அது ஒரு மரியாதை என்று கூட அவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள். அவள் ஆறு மாத கர்ப்பம். சரவணன் தன் வணிகத்தில் படு தோல்வி அடைந்தார். விட்டதைப் பிடிக்கிறேன் என்று சூது, மாது, குடி என்று அழிய ஆரம்பித்தார். வருண் பிறந்தான்.

கரவுப் பழி

வானம் நீல நிறத்திலிருந்து   கருமையாக மாற ஆரம்பித்த மாலை நேரத்தில் மூன்று பெண்களும் வேணியம்மை கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். இரு புறமும் வேலிக்கிலுவைகளும் கழியந்தட்டையும் வளர்ந்து எல்லையமைக்க, நீண்டு சென்ற  ஒழுங்கையில் ஊருணியைக் கடந்து நடந்தார்கள்.   ஊருணிக் கரையிலிருந்த ஆலமரத்தில் சாக்குகளில் கட்டப்பட்டிருந்த ஈன்ற “கரவுப் பழி”

புண்ணியம்

ஆனா, பள்ளிக்கூட வேலை போனபிறகு ரெண்டு மாசம் ரொம்ப கஷ்டப்பட்டேன். எந்த ஸ்கூலிலும் பணிநியமனம் என்பதே கிடையாது. இருக்கும் வாத்தியார்களுக்கே அரை சம்பளம்; சில ஸ்கூல்களில் அந்த அரை சம்பளம்கூட ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை. அப்படி இருக்கச்சே, புதுசா வாத்தியார்களை ஏன் நியமிக்கப்போறா? அஞ்சுபேரு — அம்மா, ஆம்படையா, ரெண்டு குழந்தைகள், நான் — ரெண்டு வேளையாவது சாப்பிடணும் இல்லையா?’