ஆறு மொழிபெயர்ப்பாளர்கள், மூன்று கேள்விகள்

மொழிபெயர்ப்பு என்பது வெறும் மொழி மாற்றம் அல்ல, அது ஒரு பண்பாட்டு பரிமாற்றம். ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலின் வாயிலாக நாம் புதிய உலகங்களை கண்டுபிடிக்கிறோம்; புதிய யூகங்களை அணுகுகிறோம்;புதிய மனிதர்களை அறிந்தும் புரிந்தும் கொள்கிறோம்.

தாய்மையின் தவிப்பும், தனிமையின் துயரமும்

எல்லாக் கதைகளும் அதன் மையக்கதாபாத்திரம் ஒன்று ஏதோ ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரமாக விரும்புவதிலிருந்து துவங்குகின்றன. அந்தச் செயலுக்குத் வெளி சூழ்நிலைகளிலிருந்தும், மைய மாந்தரின் அகத்திலிருந்துமே தடைகள் வருகின்றன. அத்தடைகள் முரண்களை உருவாக்குகின்றன. அந்த முரண்களை தான் இருக்கும் சூழ் நிலையிலிருந்து வெற்றிகொள்ள இயலாமல் மையக் கதாபாத்திரம் முதலில் தடுமாறுகிறது. தான் நினைத்ததை அடைய முடியாதோ என்று மயங்குகிறது.

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பாசிரியர் இதழ்

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பிதழ் வெளியாகி இருக்கிறது.

தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி

This entry is part 43 of 72 in the series நூறு நூல்கள்

எதுவும் குற்றமே இல்லை என்று எண்ணுபவர்களுக்குக் குற்றவுணர்ச்சி எழும் சாத்தியங்கள் இல்லை.  இருப்பின் சமகாலச் சிக்கல் என்று இருண்மைகளை ஒரு கரிய இறகென சூடிக்கொண்டு விடுதல் எளிய இலக்கியத் தந்திரம். அந்த பாசாங்கைக் கீறி ஓர் ஒற்றையடிப்பாதையை தேடிக்கொண்டு உள்மனக்குரலுக்கு பதில் சொல்ல முடியுமா என்று தேடுபவன், அர்த்தமுள்ள மனிதனாக முயல்கிறான். இதை அவன் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.  தன்விருப்பப்படி ஒருவர் எப்படிவேண்டுமானாலும் நடக்கிறேன் என்று பயணிப்பது அவரவர் சுதந்திரம். அவரவர் தேர்வு.  ஆனால் யாரோ எப்போதோ நடந்த ஏதோ ஒரு பாதையின் வழியாகவே அவர்கள் செல்லநேர வேண்டி இருப்பதில், தெரிவுகள் குறைவு.